செவ்வாய், டிசம்பர் 13, 2005

எலிக்குள் மனிதன்!

ஆராச்சிக்காக 2000-ம் ஆண்டில் விஞ்ஞானிகள் எலியின் மூளைக்குள் மனித செல்களைப் புகுத்தியிருக்கிறார்கள். ஸ்டெம் செல் ஆராச்சித் தடை அமெரிக்காவில் ஒரு முக்கியமான பிரச்சனை - கடந்த தேர்தலில் இது மிகவும் அதிகமாகப் பேசப்பட்ட ஒன்று. இப்போது சான் டியாகோவில் உள்ள சால்க் பல்கலைக் கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்த செய்தி ஒரு விட்டலாச்சார்யா படம் பார்ப்பது போல் இருக்கிறது.

இது சரியா தவறா என்ற வாதத்தை தவிர்த்து பல கேள்விகள் எழுகின்றன. ஒரு மூளை எப்போது 'எலி' யிலிருந்து 'மனிதன்' ஆகிறது? 50% - 50% எலி, மனித செல்கள் இருந்தால் அது என்ன? சதவீத கணக்கில் 10% மனிதன் 90% எலி செல்கள் மூளையில் இருப்பது, 100% எலி செல்கள் இருப்பதை விட எலிக்கு அதிகம் உதவுமா? உதாரணமாக எலிகள் பூனைக்கு பயப்படும். மனித செல்கள் இருந்தால் அந்த பயம் போய்விடுமா? அப்படிப் போய்விட்டால் அது எலிக்கு நல்லதா?

மூளைக்குள் மனித செல்கள் இருந்தால் அந்த எலியின் சிந்தனை மாறுமா? மனம் என்று ஒன்று வருமா? அல்லது மாறுமா? அந்த எலிக்கு ஒரு ஆண் மீதோ அல்லது பெண் மீதோ பாசம், காதல் வருமா?

ஒரு மனித மூளை எலியின் உடலில் மாட்டிக்கொள்வது நல்லதா? சரியா? இந்த மாதிரி ஆராய்ச்சிகளினால் வரும் நன்மை, தவிர்க்கமுடியாத பக்க விளைவுகளால் வரும் தீமைகளை விட அதிகமா?

பதில் தெரியவில்லை!

கருத்துகள் இல்லை: