திங்கள், டிசம்பர் 12, 2005

எனக்கு கேட்கத்தான் தெரியும்!

"நீ கேட்காதே - நானே கேட்கிறேன்! எனக்கு கேட்கத்தான் தெரியும்!"

திருவிளையாடலில் தருமி சொல்லும் பிரபலமான வசனம். நகைச்சுவையுடன் அலுவலகத்திலும், படிக்கும் போது பள்ளி/கல்லுரியிலும் உபயோகித்த வசனம். இப்போது அதற்கு ஒரு புது அர்த்தம் வந்திருக்கிறது! மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இந்த மாதிரி சொன்னால் அதற்கு காரணமே தனி!! ஒவ்வொரு கேள்வியும் வருமானம் தான்!

பிரச்சனைகளுக்கு தீர்வான பதில்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு, பிரச்சனைகளை எடுத்து வைக்குமாறு இருக்கும் கேள்விகளையே கேட்பதற்கு பணம் வாங்குவது ஒரு விதமான முன்னேற்றம்தான். இதில் எல்லாக் கட்சிக்காரர்களும் இருப்பதுதான் ஜனநாயகமோ?

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதையா?

கருத்துகள் இல்லை: