திங்கள், ஜூன் 06, 2005

நாணய மதிப்பிறக்கம்: 39 ஆண்டுகளுக்குப் பிறகு

6 - 6 - 1966

அப்படி என்ன விசேஷம் இந்த நாளுக்கு? 1966ல் இதே நாளில் தான் (ஜூன் ஆறு) இந்தியாவின் முதலாவது நாணய மதிப்பிறக்கம் (currency devaluation) நடந்தது. அந்த மதிப்பிறக்கத்திற்கு முன்னால் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 4.76 ஆக இருந்தது. 37.5 சதவிகித மதிப்பிறக்கத்திற்குப் பின்னால் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 7.50 ஆயிற்று. நிதிப் பற்றாக்குறை, வாணிபப் பற்றாக்குறை மற்றும் அன்னிய நாணய இருப்பு இந்த மதிப்பிறக்கத்திற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டன. (விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட இணைப்புகளுக்குச் செல்க!)

இன்று, அதே ஜூன் ஆறில் ஒரு அமெரிக்க டாலர் ரூபாய் 43.60! இந்த முப்பத்தியொன்பது வருடங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட பத்து மடங்கு குறைந்திருந்தாலும், எத்தனை மாற்றங்கள்?

66ல் உலக வங்கி நிதிக்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வாஷிங்டனுக்குச் சென்று பேசிய போது வேறு வழியில்லாமல், நிர்பந்தத்தினால் இந்த மதிப்பிறக்கத்தை செய்ய வேண்டியிருந்தது! http://www.ieo.org/world-c2-p3.html
இப்போது அதே உலக வங்கி இந்தியாவில் (சென்னை) தன் அலுவலகத்தை விரும்பி வைத்துள்ளது! http://www.elcot.com/cm/nfe160302.htm
http://www.domain-b.com/finance/banks/world_bank/20020316_office.html


இன்றைய நாளிதழில் தலைப்பிலிருந்து மூன்று செய்திகள்: நன்றி இந்துஸ்தான் டைம்ஸ்.

1. அமெரிக்காவில் இந்திய மாணாக்கர்களின் தேர்ச்சி http://www.hindustantimes.com/news/5967_1389319,00160006.htm
2. இந்திய அலுவலகங்களில் சேர அன்னிய நாட்டவர்கள் ஆர்வம் http://www.hindustantimes.com/news/181_1389630,001300460000.htm?headline=Indian~call~centers~to~swell~with~foreigners

3. இந்திய மருத்துவர்கள் மேல் ஐரோப்பிய நோயாளிகளின் நம்பிக்கை http://www.hindustantimes.com/news/181_1388714,0005.htm?headline=Brits~love~young~Indian~lady~docs

எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், இந்தியர்கள் பெருமைப் பட வேண்டிய விஷயம்.

இதர இணைப்புகள்:

http://www.ccsindia.org/Intern2002_12_devaluation.pdf
http://www.findarticles.com/p/articles/mi_qa3680/is_200010/ai_n8903841

4 கருத்துகள்:

Muthu சொன்னது…

ரங்கநாதன்,
நல்ல பதிவு.

jeevagv சொன்னது…

தகவலுக்கு நன்றி ரங்கநாதன்.

neyvelivichu.blogspot.com சொன்னது…

ranga,

very good article..


keep it up..

write about parallel thinking and logic book..

anbudan vichu

neyvelivichu.blogspot.com

ரங்கா - Ranga சொன்னது…

முத்து, ஜீவா, விச்சு,
பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
அன்புடன்,
ரங்கா.

விச்சு, எழுத எண்ணங்கள் இருந்தாலும், பொருந்தி அமர நேரமில்லை என்பதுதான் காரணம்.