புதன், ஜூன் 01, 2005

கர்னாடக இசைப் பாடல்கள் - தமிழ் எழுத்தில்

இந்தப் பகுதியில் என்னால் முடிந்த வரைக்கும் கர்னாடக இசைப் பாடல்களை தமிழ் எழுத்தில் தர உத்தேசம். ஏதாவது பிழை மற்றும் உரிமைப் பிரச்சனை (copyright) இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.


பாடல்: கான மழை
ராகம்: ராகமாலிகா
தாளம்: ஆதி
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
மொழி: தமிழ்

பல்லவி பேகாக்
கான மழை பொழிகின்றான் கண்ணன் யமுனா தீரத்தில் யாதவ குலம் செழிக்க

அனுபல்லவி
ஆனந்தமாகவே அருள் பெருகவே முனிவரும் மயங்கிடும் மோகன ரூபன்

சரணம் 1
தேன்சுவை இதழில் வைங்குழல் வைத்தே திகட்டா அமுதாய் தேவரும் விரும்பும் வேணு-

சரணம் 2 பெளளி
குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச
கோவலர் களித்திட கோபியர் ஆட கோவிந்தன் குழல் ஊதி

சரணம் 3 மணிரங்கு
அம்பரம் தனிலே தும்புரு நாரதர் அரம்பையரும் ஆடல் பாடல் மறந்திட
அச்சுதன் அனந்தன் ஆயர்குல திலகன் அம்புஜனாபன் ஆர்வமுடன் முரளி

-------------------------------------------------------

பாடல்: ஆடும் சிதம்பரமோ
ராகம்: பேகாக்
தாளம்: ஆதி
இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதியார்
மொழி: தமிழ்

பல்லவி

ஆடும் சிதம்பரமோ அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ(ஆடும்)

அனுபல்லவி

ஆடும் சிதம்பரம் அன்பர் களிக்கவே நாடும் சிதம்பரம் நமசிவாயவென்று (ஆடும்)

சரணம் 1

யாரும் அறியாமல் அம்பல வாணனார் ஸ்ரீரடியார் பார்க்க சேவடி தூக்கி நின்று (ஆடும்)

சரணம் 2

பாலகிருஷ்ணன் போற்றும் பனிமடி சடையினார் தாள மத்தளம் போட தா தை தித்தை என்று (ஆடும்)

கருத்துகள் இல்லை: