திங்கள், ஆகஸ்ட் 08, 2005

இரண்டு வரிக் கவிதைகள்?!

சென்ற வாரம் விச்சுவுடன் இரண்டு வரிக் கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு வரிகளில் துக்கடாவாக எழுதப் படும் இவைகளைக் கவிதைகள் என என்னால் கூற முடியவில்லை. எந்தப் பேரால் அழைத்தால் என்ன? ஹைக்கூ? புதுக்கவிதை? படிக்க இதமாகத்தான் இருக்கிறது. போன வார முடிவில் தோன்றிய நினைப்புகள் இங்கே - கவிதையா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்:

1. காதல்
நம்காதல் வளரத் தண்ணீர் வேண்டுமென
என்னைக் கண்ணீர் விடச் செய்தாயோ?

2. பயனென்ன?
என்றும் அடையாக் கதவாம்!
பின் இருந்தென்ன லாபம்?

3. 'கால் சென்டர்' முரண்பாடு
வேலைக்காக பொய்யுரை தொலைபேசியில்; மேஜையில்
பிறநாட்டு நேரம் காட்டும் கடிகாரம் சொன்னது: "நீ நீயாக இரு!"

கருத்துகள் இல்லை: