இந்த வருடமும் ரோடு போட்டாயிற்று. நியூஜெர்சி வந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமும் கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் போது இது ஒரு வேலை. வீட்டு கராஜிலிருந்து, சாலை வரை இருக்கும் 'டிரைவ் வே'க்கு (Drive way) 'சீலர்' (Sealer) (அதாங்க - தார்) போட வேண்டும். இது குளிர்காலத்தில் பனி படிந்து சாலை குலையாமல் இருக்க உதவும். இதை நாமே செய்தால், ஒருவிதமான திருப்தி (செலவும் குறைவு!); ஒரு உடற்பயிற்சி போலவும் ஆயிற்று என்று நான் தான் செய்வது வழக்கம். இதற்கு தேவையெல்லாம், இரண்டு டப்பா தார், ஒரு நீண்ட கழியின் முனையில் ரப்பர் சட்டம் (தமிழில் இழுப்பான் என்று சொல்ல ஆசை - சரியா என்று தெரியவில்லை).
இந்த முறை தார் போடுகையில், சண்டீகரில் தார் ரோடு போட்டுக் கொண்டிருந்த பணியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. 1993ல் சண்டீகரில் இருந்த போது, பஞ்சாபி தெரியாது, ஹிந்தியும் தட்டுத் தடுமாறித்தான் வரும். ஒரு ஞாயிறு வெளியே சென்று விட்டுத் திரும்பும் போது, சண்டீகருக்கு சற்று வெளியே, புது தார் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். காரெல்லாம் பக்கத்திலுள்ள குண்டுக் குழியுமாய் இருந்த மண் சாலையில் மெதுவாக ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது.
இந்தப் பணியாளர்களெல்லாம், பக்கத்திலேயே குடிசை போட்டுக் கொண்டு, வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாலை போட்டுக் கொண்டிருந்த பணியாளர்களில் ஒருவர் தமிழில் ஏதோ சொல்ல, ஒரே சந்தோஷம். வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு, இறங்கி, கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சேலம், திருநெல்வேலி பக்கத்திலிருந்து வந்தவர்கள்.
வேலை கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வந்தவர்கள். இவர்களில் சிலர் தமிழ்நாட்டிலிருந்து வெளியே வந்து 30 வருடங்கள் ஆகி விட்டன. கர்நாடகம், ஆந்திரா, மஹாராஷ்டிரம் என்றெல்லாம் இடம் பெயர்ந்து சண்டீகருக்கு வந்து விட்டார்கள். இந்தக் குழுவில் இருந்தவர்கள் ஒரு 7 அல்லது 8 குடும்பங்கள்; மற்றும் சிலர் இந்தக் குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டவர்கள். அனேகமாக நடுவயது பணியாளர்கள் (ஆண், பெண் இருவருமே) அனைவரும் ஆறு அல்லது ஏழு மொழிகளில் பேசுகிறார்கள். ரோடு போடுவது, கட்டிடம் (முக்கியமாக, அணை அல்லது ஒரு பெரிய கட்டிடம் கட்ட; குட்டி வீடு எல்லாம் கட்ட வருவதில்லை) கட்டுவது போன்றவற்றையே பணியாக ஏற்கிறார்கள்.
காண்டிராக்ட் எடுத்தவர்கள் இவர்களை அணுகி இரண்டிலிருந்து எட்டு மாதங்களுக்கு மொத்தமாய் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எப்போதும் ஒரு விதமாய் நகர்ந்து கொண்டே இருப்பதால், இவர்கள் குடியிருப்பில் இருக்கும் சாமான்களும் குறைவாக வைத்திருக்கிறார்கள். இரண்டு வேலைகளுக்கு இடையே சில சமயம் மூன்று மாதங்கள் வரை விடுப்பும் வருகிறது. அப்போதெல்லாம், சிலர் சொந்த ஊருக்கு சென்று அங்கு இருக்கும் மற்ற உறவினர்களைப் பார்த்து விட்டு வருகிறார்கள். இந்த மாதிரி விடுப்பில் செல்லும் போது சிலரின் திருமணமும் முடிந்து, குடும்பத்தோடு இந்தக் குழுவில் வந்து சேர்கிறார்கள். வேறு சிலர் பிற மாநிலங்களில் வேலை செய்யும் போது, அங்கு கூட வேலை செய்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கியும் விடுகிறார்கள்.
இவர்கள் குழந்தைகளும் இவர்களோடேயே இடம் இடமாய் மாறி வருவதால், தொடர்ந்து ஒரு பள்ளியில் படிப்பது என்பது அதிகம் இல்லை. இவர்கள் குழுவிலேயே சிலர் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறோம் என்றார்கள்; இருந்தும் இது மிகச் சீராக நடப்பதாகத் தெரியவில்லை. சண்டீகரில் சில குழந்தைகளும் இவர்களுக்கு வேலைக்குத் துணையாக இருப்பதைப் பார்த்தேன்; வருத்தமாக இருந்தது. இப்போது பதினான்கு வயது வரை சிறுவர்/சிறுமியரை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று சட்டம் வந்திருக்கிறது; இது இவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
மன்னார்குடியில் சாலை போடு பணியாளர்களுக்கு அனேகமாக காலில் செருப்பு இருக்காது; இருந்தாலும் வெறும் சான்டல் செருப்புதான். சிலர் சாக்குப் பைகளை காலில் சுற்றி கயிறால் கட்டி நடப்பார்கள். சூடான (கொதிக்கும்!) தார் தரையில் எப்படித்தான் நடப்பார்களோ என்று இருக்கும். சண்டீகரில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. செருப்பும், பூட்சுகளும் உபயோகத்தில் இருந்தன.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அருகே இருந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், காரில் இருந்த ஆரஞ்சுப் பழங்களை கொடுத்து விட்டு வந்தேன். தமிழ் மக்களைப் பார்த்து பேசிய மகிழ்ச்சி, வேலைக்காக மாநிலம் விட்டு வெகுதூரம் வந்து கஷ்டப் படுவதையும், குழந்தைகளுக்கு படிக்க முடியாமல் வேலை செய்வதையும் பார்த்ததில் வருத்தம், என்று ஒரு குழப்பமான உணர்வோடு என் ரூமுக்கு வந்து சேர்ந்தேன். மற்ற மக்களுக்கு நல்ல வழி (சாலை) ஏற்படுத்தி விட்டு, தங்களுக்கு ஒரு வழி கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஞாயிறு, அக்டோபர் 15, 2006
வெள்ளி, செப்டம்பர் 29, 2006
ஆறு வார்த்தைக் கவிதைகள்!
1. கோழி
கூண்டிலே கோழி
காய்ச்சலோ இல்லையோ
கொல்லத்தான் போகிறார்கள்!
2. வள்ளலின் கொடை
முல்லைக்குப் பெருமை
வள்ளலின் தேராம்.
தேருக்கோ வருத்தம்தான்!
3. ஜனநாயகப் போர்
போரிட்டு வென்ற ஜனநாயகம்
ஓட்டுக்கும் ஆட்சிக்கும் ஆள்தானில்லை.
பிகு: காப்பி குடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது. வித்தியாசமும் தெரியவில்லை; சபலமும் வரவில்லை.
கூண்டிலே கோழி
காய்ச்சலோ இல்லையோ
கொல்லத்தான் போகிறார்கள்!
2. வள்ளலின் கொடை
முல்லைக்குப் பெருமை
வள்ளலின் தேராம்.
தேருக்கோ வருத்தம்தான்!
3. ஜனநாயகப் போர்
போரிட்டு வென்ற ஜனநாயகம்
ஓட்டுக்கும் ஆட்சிக்கும் ஆள்தானில்லை.
பிகு: காப்பி குடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது. வித்தியாசமும் தெரியவில்லை; சபலமும் வரவில்லை.
ஞாயிறு, செப்டம்பர் 03, 2006
காப்பி – 9
காப்பியின் காரணமாக எனக்குள் எழுந்த உணர்ச்சிகள் அதிகம். முதலில் என்னை வெறுப்பேற்றும் சில விஷயங்கள். சிலர் காப்பி அருந்தும் போது 'சர்ர்ர்'ரென்று உறிஞ்சுவார்கள். எனக்கு, சிறு வயதில் மாதவனூர் கிராமத்தில், மாட்டுக்கு தவிட்டுத்தண்ணீர் காட்டுகையில் அது நாக்கை நீக்கி உறிஞ்சிக் குடிக்கும் நினைவுதான் வரும். நிச்சயம் எனக்கு கோபம் வரும்; கட்டுப் படுத்திக் கொள்வேன். இரண்டாவதாக சிலர் காப்பியை நிரம்பக் குடித்துவிட்டு, மிக அருகே நின்று பேசுவார்கள். அவர்கள் வார்த்தையெல்லாம் காப்பி மணம். இதுவும் எனக்கு கோபத்தை வரவழைக்கும் ஒரு விஷயம். இந்த இரண்டைத் தவிர இப்போதெல்லாம் வரும் மற்ற உணர்ச்சிகள் ஒரு விதமான சந்தோஷமும், ஆச்சரியமும் தான். நான் விரும்பிக் குடிக்கையிலே சந்தோஷம்; இந்தக் காப்பி சம்பந்தமான நினைவுகள் தரும் ஆச்சரியம்.
மன்னார்குடியில் இந்தக் காப்பிக்காக, சீக்கிரமே எழுந்து, பால் காரர் தெரு முனையில் வரும் போதே மடக்கி பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அவசரமாக வருவோம். காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பற்று (வெறி). இது எனக்கு மட்டுமல்ல; தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில் அந்த சொசைட்டி பால் தான். பால் வர கொஞ்சம் தாமதமாகிவிட்டால், தெரு முனையில் ஒரு பெரிய கும்பலே பாத்திரங்களோடு காத்திருக்கும்! எல்லொருக்கும், காலைக் காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பிடிப்பு. பண்டிகைக் காலங்களில், பால் தட்டுப் பாடு காரணமாக, பால் காரர் கொஞ்சம் கடுபிடியாக இருப்பார். மற்ற நாளில் அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைந்து, கோபம் தெரியும். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு வாசலில் தான் வந்து பால் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்! தெருவில் அனேகம் பேர் முகத்தில் கோபம் தான் தெரியும். அதைப் பார்க்கும் போது ஒரு டம்ளர் காப்பி எப்படி மனிதர்களை மாற்றுகிறது என்று மிக நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.
சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது காப்பி சூடாக இல்லை என்றலோ, அல்லது பாலோ, சக்கரையோ குறைவு (அல்லது அதிகம்) என்றோ அம்மாவோடு சண்டை போட்டிருக்கிறேன், கோபித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் குற்ற உணர்வும், அதிக வருத்தமும் வருகிறது - இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று. இப்போது, முதல் வேளை போட்ட காப்பி (சமயத்தில் முதல் நாள் மாலை பொட்டதாக் கூட இருக்கும்), அதிகமாக இருந்து விட்டால், அதிகம் யோசிக்காமல், அதை எடுத்து, பால் கலந்து, மைக்ரோவேவ் செய்து சாப்பிடுகிறேன். இதை 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்று எடுத்துக் கொள்வதா, அல்லது, நான் வளர்ந்து கொஞ்சம் மனிதனாயிருக்கிறேன் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.
அலுவலகத்தில் எத்தனை முறை “I am not in a good mood; I need coffee” என்று ஒரு சாக்கு வார்த்தையைக் கேட்டிருப்பேன்! சிறு குழந்தையாக் இருக்கையில் யாரும் காப்பி குடித்ததில்லை. அப்போது மட்டும் மூடு நன்றாக இல்லையா என்ன? இந்த காப்பி பழக்கமும், மூக்குப் பொடி அல்லது புகையிலை போடும் பழக்கமும் ஒன்றே! மனித உடம்பில், மனத்தில் ஒரு தேவையை ஏற்படுத்திக் கொண்டு, அந்த தேவைக்கு கடைசியில் அடிமை போலாகி, தேவை பூர்த்தியாகாத போது கோபம் வந்து, அதனால் கூட இருப்பவர்களின் நிம்மதியையும் குலைத்து தன்னையும் வருத்திக் கொள்வது ஒரு விதமான பைத்தியக்காரத்தனம். இதை நானும் செய்திருக்கிறேன். உணர்ந்து ஒப்புக் கொள்ள கொஞ்ச வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும், இந்த வஸ்து தந்த சந்தோஷங்களை பொய் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அதன் விளைவே இந்தத் தொடர்.
இப்போது மனம் கொஞ்சம் பக்குவப் பட்டு இருக்கிறது. இதற்காக 'வீட்டிலே யாருக்கும் காப்பி கிடையாது; இருந்தால் தானே குடிக்கிறோம்' என்றெல்லாம் கிளம்பப் போவதில்லை. அது 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்னும் நரியின் கதைதான். சென்ற பதினெட்டு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சக்கரையை நிறுத்தி, அளவையும் குறைத்து, இப்போது ஒரு நாளைக்கு ஒரு கோப்பை என்று வந்திருக்கிறேன். ஒரு முடிவுரை போல் காப்பியைப் பற்றி பதிந்து விட்டு, பழக்கத்தை விட்டு விடலாம் என்று எண்ணம். இந்தப் பதிவோடு, காப்பி தொடரும் முடிகிறது - ஒரு விதத்தில் என் காப்பிக் கடையும் மூடுகிறது. இதில் வருத்தம் இல்லை :-) உணர்ந்து, அறிந்து எடுத்த முடிவு - ஆகையால் ஒரு விதமான அமைதியும் முழுமையும் தெரிகிறது.
பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
முந்தைய பதிவுகள்
காப்பி - 8
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
மன்னார்குடியில் இந்தக் காப்பிக்காக, சீக்கிரமே எழுந்து, பால் காரர் தெரு முனையில் வரும் போதே மடக்கி பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அவசரமாக வருவோம். காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பற்று (வெறி). இது எனக்கு மட்டுமல்ல; தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில் அந்த சொசைட்டி பால் தான். பால் வர கொஞ்சம் தாமதமாகிவிட்டால், தெரு முனையில் ஒரு பெரிய கும்பலே பாத்திரங்களோடு காத்திருக்கும்! எல்லொருக்கும், காலைக் காப்பியின் மேல் அவ்வளவு ஒரு பிடிப்பு. பண்டிகைக் காலங்களில், பால் தட்டுப் பாடு காரணமாக, பால் காரர் கொஞ்சம் கடுபிடியாக இருப்பார். மற்ற நாளில் அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைந்து, கோபம் தெரியும். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு வாசலில் தான் வந்து பால் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்! தெருவில் அனேகம் பேர் முகத்தில் கோபம் தான் தெரியும். அதைப் பார்க்கும் போது ஒரு டம்ளர் காப்பி எப்படி மனிதர்களை மாற்றுகிறது என்று மிக நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.
சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது காப்பி சூடாக இல்லை என்றலோ, அல்லது பாலோ, சக்கரையோ குறைவு (அல்லது அதிகம்) என்றோ அம்மாவோடு சண்டை போட்டிருக்கிறேன், கோபித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் குற்ற உணர்வும், அதிக வருத்தமும் வருகிறது - இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று. இப்போது, முதல் வேளை போட்ட காப்பி (சமயத்தில் முதல் நாள் மாலை பொட்டதாக் கூட இருக்கும்), அதிகமாக இருந்து விட்டால், அதிகம் யோசிக்காமல், அதை எடுத்து, பால் கலந்து, மைக்ரோவேவ் செய்து சாப்பிடுகிறேன். இதை 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்று எடுத்துக் கொள்வதா, அல்லது, நான் வளர்ந்து கொஞ்சம் மனிதனாயிருக்கிறேன் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.
அலுவலகத்தில் எத்தனை முறை “I am not in a good mood; I need coffee” என்று ஒரு சாக்கு வார்த்தையைக் கேட்டிருப்பேன்! சிறு குழந்தையாக் இருக்கையில் யாரும் காப்பி குடித்ததில்லை. அப்போது மட்டும் மூடு நன்றாக இல்லையா என்ன? இந்த காப்பி பழக்கமும், மூக்குப் பொடி அல்லது புகையிலை போடும் பழக்கமும் ஒன்றே! மனித உடம்பில், மனத்தில் ஒரு தேவையை ஏற்படுத்திக் கொண்டு, அந்த தேவைக்கு கடைசியில் அடிமை போலாகி, தேவை பூர்த்தியாகாத போது கோபம் வந்து, அதனால் கூட இருப்பவர்களின் நிம்மதியையும் குலைத்து தன்னையும் வருத்திக் கொள்வது ஒரு விதமான பைத்தியக்காரத்தனம். இதை நானும் செய்திருக்கிறேன். உணர்ந்து ஒப்புக் கொள்ள கொஞ்ச வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும், இந்த வஸ்து தந்த சந்தோஷங்களை பொய் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அதன் விளைவே இந்தத் தொடர்.
இப்போது மனம் கொஞ்சம் பக்குவப் பட்டு இருக்கிறது. இதற்காக 'வீட்டிலே யாருக்கும் காப்பி கிடையாது; இருந்தால் தானே குடிக்கிறோம்' என்றெல்லாம் கிளம்பப் போவதில்லை. அது 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்னும் நரியின் கதைதான். சென்ற பதினெட்டு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சக்கரையை நிறுத்தி, அளவையும் குறைத்து, இப்போது ஒரு நாளைக்கு ஒரு கோப்பை என்று வந்திருக்கிறேன். ஒரு முடிவுரை போல் காப்பியைப் பற்றி பதிந்து விட்டு, பழக்கத்தை விட்டு விடலாம் என்று எண்ணம். இந்தப் பதிவோடு, காப்பி தொடரும் முடிகிறது - ஒரு விதத்தில் என் காப்பிக் கடையும் மூடுகிறது. இதில் வருத்தம் இல்லை :-) உணர்ந்து, அறிந்து எடுத்த முடிவு - ஆகையால் ஒரு விதமான அமைதியும் முழுமையும் தெரிகிறது.
பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
முந்தைய பதிவுகள்
காப்பி - 8
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
சனி, செப்டம்பர் 02, 2006
காப்பி – 8
இந்தக் காப்பி வெறும் குடிக்கும் திரவமாக மட்டும் இல்லை. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இது ஒரு சமூக கலாச்சார விஷயம். வீட்டுக்கு வருபவர்களுக்கு அனேகமாக முதல் உபசாரம் - 'காப்பி சாப்பிடுகிறீர்களா?' என்பது தான். கிராமங்களில் இன்னமும் நிறைய பேர் 'மோர் குடிக்கிறீகளா?' என்று கேட்டாலும், காப்பி குடிப்பதை விசாரிப்பவர்கள் அதிகம். காப்பி திரவமாதலால், 'குடி' என்கிற வார்த்தைதான் சரியானது. ஆனால் தமிழ்நாட்டில் காப்பிக்கு ஒரு முக்கியத்துவம் - அதனால் 'சாப்பிடு' என்கிற வார்த்தையை அதிகம் பேர் உபயோகிக்கிறார்கள். டீயையும் 'சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்பவர் அதிகம் இருப்பினும், விகிதாசாரத்தில் (என் கணக்குப் படி) காப்பியை விட அது குறைவுதான். சிறு வயதில் இந்த மாதிரி ஒரு உபசரிப்பில், மதுரையில் ஒரு வீட்டில், சுக்கு காப்பி குடித்திருக்கிறேன்; ஜிவ்வென்று மிக வித்தியாசமான ருசி.
கல்யாணப் பரிசு படத்தில் கூட, அக்கம் பக்கத்து பெண்களை மனைவி வீட்டிற்கு அழைத்தபோது டணால் தங்கவேலு இப்படித்தான் கூறுவார்: "காப்பி கீப்பி சாப்பிடறீங்களா? என்னத்துக்கு வீட்டில சாப்பிட்டு வந்திருப்பீங்க". தமிழ் திரைப்படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இரு கோடுகள் படக் கதையே ஜெமினி கணேசன் சௌகார் ஜானகியிடம் காப்பி கேட்டு வாங்காவிட்டால் வந்திருக்காது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடிய பாடலில் டி.ஏ. மதுரம் இந்த மாதிரி பதில் பாட்டு பாடுவார்:
"பட்டனத் தட்டி விட்டா
இரண்டு தட்டுல இட்டிலியும்,
காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்".
இது போல இன்னுமொரு பழைய பாடலில் (திரைப் படம் மறந்து விட்டது) இந்த வரிகள் வரும்:
“மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், மணியான மதறாசு மாப்பிள்ளை டோய்
காப்பியில பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய், கோப்பையில தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்"
இங்கே அமெரிக்காவில் பெரும்பான்மையானா வீட்டிலே உள்ள ஆண்களுக்கு இவ்வரிகள் பொருந்தும். இன்னும் எத்தனையோ படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.
காப்பி சம்பந்தப் பட்ட விளம்பரங்களில் மனதிற்கு மிகவும் பிடித்து, நினைவில் இன்னமும் பசுமையாக இருப்பது, உசிலை மணியின் "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு" நரசுஸ் காப்பிதான். இதைத் தவிர, 'பில்டர் காப்பியா?" என்று வியந்து கேட்கும் அம்மணியின் முகபாவம் (ப்ரூ), அரவிந்த்சாமி வரும் காப்பி விளம்பரம் (ப்ரூ?) இதெல்லாமும் நினைவில் இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு முறை தீபாவளி சமயத்தில் (எண்பதுகளில்), ஒரு பிரபலமான காப்பிக் கடையில், ஒவ்வொரு முறை காப்பி வாங்கியவுடன் ஒரு கூப்பன் தந்து (எடைக்குத் தகுந்த மாதிரி), ஒரு குறிப்பிட்ட அளவு கூப்பன் சேர்ந்தவுடன் 'எவர்சில்வர் டம்ளர் டபரா தருகிறோம்' என்று சொல்லி விளம்பரப்படுத்த, விடுமுறைக்காக கும்பகோணம் சென்றிருந்த நாங்கள் காப்பிப் பொடி வாங்கி, கூப்பனை உறவினரிடம் டம்ளருக்காகக் கொடுத்து வந்தது ஞாபகம் இருக்கிறது.
காப்பி முதன் முறையாக எப்போது மனிதர்களால் அருந்தப் பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. மறைந்த என் பாட்டி சிறுமியாக இருக்கும் போது அவர் தாத்தவே காப்பி குடித்திருக்கிறார் என்பது அவர் (பாட்டி) சொல்லித் தெரியும். சூடான காப்பி டம்ளரை, தன் அங்கவஸ்திரத்தால் (என் பாட்டியின் தாத்தா) பிடித்துக் கொண்டு சாப்பிடுவாராம். எனக்குத் தெரிந்த வரையில் வேறு எந்த ஒரு தாவரத்தையும் இப்படி சாப்பிடுவதில்லை. ஒரு பழத்தின் கொட்டையை எடுத்து, உலர்த்தி, வறுத்து, அரைத்து, அதில் வென்னீரை ஊற்றி, பின் அந்த கொட்டையின் பொடியை விலக்கி, வெறும் தண்ணீரை, அப்படியோ, அல்லது பால், சக்கரை கலந்தோ சாப்பிடுவது என்பது மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சான்று. மற்ற கொட்டைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் (உ.ம். பலாக் கொட்டை, மாங்கொட்டை) இது போன்று ஒரு விஸ்தாரமான முறையில் எந்தத் தாவரத்தையும் மனிதன் உண்பதாகத் தெரியவில்லை. டிகாஷன் போட்ட பொடித் தூளை, மற்ற தாவரத்துக்கு உரமாகவும், அல்லது பாத்திரம் தேய்ககவும் இப்போதும் நிறையப் பேர் உபயோகப் படுத்துகிறார்கள்.
இந்த காப்பி தாவரத்தில் எக்கச்சக்க வகைகள் இருந்தாலும், மூன்று பிரிவுகளாகப் பிரிப்பார்கள் - அந்தப் பயிர் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து. 'அராபிகா' என்னும் பிரிவு அதன் மணத்துக்காக உயர்ந்தது என்று கூறுவார்கள். கடல் மட்டத்திற்கு 600 - 2000 மீட்டர் உயரத்தில் வளரும். பதினைந்திலிருந்து இருபது டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் வளரும். 'ரொபஸ்டா' எனப்படும் பிரிவு கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை வளரும். 20 டிகிரி செல்ஸியஸ்க்கும் அதிகமான வெப்பம் தாங்கும். இந்த்ப் பிரிவு தான் இன்ஸ்டன்ட் பொடி தயாரிக்க மிகவும் உகந்தது. மூன்றாம் பிரிவில் 'லைபேரிகா' எனப்படும் மிகக் கசப்பான வகை; மழை வெப்பம், இரண்டும் தாங்கும். காப்பி வளரும் நாடுகளில் பிரேசில் தான் முதலிடம் என்று நினைவு.
இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. 1906ல் ஜ்யார்ஜ் சி. வாஷிங்டன் தான் கண்டு பிடித்தார் என்று சிலரும், 1901ல் சர்டோரி கடோ என்னும் ஜப்பானிய விஞ்ஞானி சிகாகோவில் இருக்கையில் கண்டு பிடித்தார் என்றும் சொல்கிறார்கள். எது சரி என்று எனக்குத் தெரியவில்லை; யாராயிருந்தாலும், அவர்களுக்கு என் நன்றி!
இந்த துக்கடா விஷயங்களே பதிவைப் பெரிதாக்கி விட்டதால், அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்களைத் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
கல்யாணப் பரிசு படத்தில் கூட, அக்கம் பக்கத்து பெண்களை மனைவி வீட்டிற்கு அழைத்தபோது டணால் தங்கவேலு இப்படித்தான் கூறுவார்: "காப்பி கீப்பி சாப்பிடறீங்களா? என்னத்துக்கு வீட்டில சாப்பிட்டு வந்திருப்பீங்க". தமிழ் திரைப்படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இரு கோடுகள் படக் கதையே ஜெமினி கணேசன் சௌகார் ஜானகியிடம் காப்பி கேட்டு வாங்காவிட்டால் வந்திருக்காது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடிய பாடலில் டி.ஏ. மதுரம் இந்த மாதிரி பதில் பாட்டு பாடுவார்:
"பட்டனத் தட்டி விட்டா
இரண்டு தட்டுல இட்டிலியும்,
காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்".
இது போல இன்னுமொரு பழைய பாடலில் (திரைப் படம் மறந்து விட்டது) இந்த வரிகள் வரும்:
“மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய், மணியான மதறாசு மாப்பிள்ளை டோய்
காப்பியில பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய், கோப்பையில தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்"
இங்கே அமெரிக்காவில் பெரும்பான்மையானா வீட்டிலே உள்ள ஆண்களுக்கு இவ்வரிகள் பொருந்தும். இன்னும் எத்தனையோ படங்களில் காப்பி ஒரு முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.
காப்பி சம்பந்தப் பட்ட விளம்பரங்களில் மனதிற்கு மிகவும் பிடித்து, நினைவில் இன்னமும் பசுமையாக இருப்பது, உசிலை மணியின் "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு" நரசுஸ் காப்பிதான். இதைத் தவிர, 'பில்டர் காப்பியா?" என்று வியந்து கேட்கும் அம்மணியின் முகபாவம் (ப்ரூ), அரவிந்த்சாமி வரும் காப்பி விளம்பரம் (ப்ரூ?) இதெல்லாமும் நினைவில் இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு முறை தீபாவளி சமயத்தில் (எண்பதுகளில்), ஒரு பிரபலமான காப்பிக் கடையில், ஒவ்வொரு முறை காப்பி வாங்கியவுடன் ஒரு கூப்பன் தந்து (எடைக்குத் தகுந்த மாதிரி), ஒரு குறிப்பிட்ட அளவு கூப்பன் சேர்ந்தவுடன் 'எவர்சில்வர் டம்ளர் டபரா தருகிறோம்' என்று சொல்லி விளம்பரப்படுத்த, விடுமுறைக்காக கும்பகோணம் சென்றிருந்த நாங்கள் காப்பிப் பொடி வாங்கி, கூப்பனை உறவினரிடம் டம்ளருக்காகக் கொடுத்து வந்தது ஞாபகம் இருக்கிறது.
காப்பி முதன் முறையாக எப்போது மனிதர்களால் அருந்தப் பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. மறைந்த என் பாட்டி சிறுமியாக இருக்கும் போது அவர் தாத்தவே காப்பி குடித்திருக்கிறார் என்பது அவர் (பாட்டி) சொல்லித் தெரியும். சூடான காப்பி டம்ளரை, தன் அங்கவஸ்திரத்தால் (என் பாட்டியின் தாத்தா) பிடித்துக் கொண்டு சாப்பிடுவாராம். எனக்குத் தெரிந்த வரையில் வேறு எந்த ஒரு தாவரத்தையும் இப்படி சாப்பிடுவதில்லை. ஒரு பழத்தின் கொட்டையை எடுத்து, உலர்த்தி, வறுத்து, அரைத்து, அதில் வென்னீரை ஊற்றி, பின் அந்த கொட்டையின் பொடியை விலக்கி, வெறும் தண்ணீரை, அப்படியோ, அல்லது பால், சக்கரை கலந்தோ சாப்பிடுவது என்பது மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சான்று. மற்ற கொட்டைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் (உ.ம். பலாக் கொட்டை, மாங்கொட்டை) இது போன்று ஒரு விஸ்தாரமான முறையில் எந்தத் தாவரத்தையும் மனிதன் உண்பதாகத் தெரியவில்லை. டிகாஷன் போட்ட பொடித் தூளை, மற்ற தாவரத்துக்கு உரமாகவும், அல்லது பாத்திரம் தேய்ககவும் இப்போதும் நிறையப் பேர் உபயோகப் படுத்துகிறார்கள்.
இந்த காப்பி தாவரத்தில் எக்கச்சக்க வகைகள் இருந்தாலும், மூன்று பிரிவுகளாகப் பிரிப்பார்கள் - அந்தப் பயிர் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து. 'அராபிகா' என்னும் பிரிவு அதன் மணத்துக்காக உயர்ந்தது என்று கூறுவார்கள். கடல் மட்டத்திற்கு 600 - 2000 மீட்டர் உயரத்தில் வளரும். பதினைந்திலிருந்து இருபது டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் வளரும். 'ரொபஸ்டா' எனப்படும் பிரிவு கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை வளரும். 20 டிகிரி செல்ஸியஸ்க்கும் அதிகமான வெப்பம் தாங்கும். இந்த்ப் பிரிவு தான் இன்ஸ்டன்ட் பொடி தயாரிக்க மிகவும் உகந்தது. மூன்றாம் பிரிவில் 'லைபேரிகா' எனப்படும் மிகக் கசப்பான வகை; மழை வெப்பம், இரண்டும் தாங்கும். காப்பி வளரும் நாடுகளில் பிரேசில் தான் முதலிடம் என்று நினைவு.
இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. 1906ல் ஜ்யார்ஜ் சி. வாஷிங்டன் தான் கண்டு பிடித்தார் என்று சிலரும், 1901ல் சர்டோரி கடோ என்னும் ஜப்பானிய விஞ்ஞானி சிகாகோவில் இருக்கையில் கண்டு பிடித்தார் என்றும் சொல்கிறார்கள். எது சரி என்று எனக்குத் தெரியவில்லை; யாராயிருந்தாலும், அவர்களுக்கு என் நன்றி!
இந்த துக்கடா விஷயங்களே பதிவைப் பெரிதாக்கி விட்டதால், அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்களைத் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 7
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
வியாழன், ஆகஸ்ட் 31, 2006
காப்பி – 7
அப்படி இப்படி என்று அமெரிக்கா வந்தது 1997ல். வந்த முதல் வருடத்தில் வெறும் இன்ஸ்டன்ட் காப்பிதான் - டேஸ்டர்ஸ் சாய்ஸ். சுலபமாக ஒரு பீங்கான் கப்பில் பாதி தண்ணீர், பாதி பால், முக்கால் ஸ்பூன் சக்கரை, முக்கால் ஸ்பூன் காப்பிப் பொடி போட்டு, மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்தால் காப்பி தயார். நானும் என் மனைவி மட்டும் தான் வீட்டில், வேலைக்கு போகும் அவசரம் வேறு. அதனால் பில்டர் என்றெல்லாம் யோசிக்கக் கூட இல்லை. இந்த திடீர் தயாரிப்பிலும், கொஞ்சம் மாற்றங்கள் செய்தால், சுவை கூட வருவது போலத் தோன்றும். முதலில் தண்ணீரில் காப்பிப் பொடியைப் போட்டு மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும். பின் தனிப் பாத்திரத்தில் (கண்ணாடி) பாலை கொஞ்சம் பொங்கும் வரை கொதிக்க வைத்து (ஒரு கப் பாலுக்கு கிட்டத்தட்ட மூன்று நிமிடம்), வெளியே எடுத்து ஆறியவுடன் பாலின் மேலிருக்கும் ஏட்டை எடுத்து விட வேண்டும். பின் இருக்கும் இன்ஸ்டன்ட் டிகாஷனையும், பாலையும் கலந்து சக்கரை போட்டு குடித்தால், கிட்டத்தட்ட பில்டர் காப்பி நினைவுக்கு வரும். இந்த முறை வார இறுதியில் பொழுது போகாமல் இருக்கும் போது தான் - மற்ற சமயங்களில் ஒரு நிமிடக் காப்பிதான்.
ஒரு வருடம் கழித்து இன்ஸ்டன்ட் போரடித்தவுடன், ஒரு காப்பி பில்டர் (மின்சார இயக்கம்) வாங்கினோம் - நான்கு கப் அளவில். பில்டரின் பின் பக்கம் மூடியைத் திறந்து தண்ணீர்; மேல்பக்கம் திறந்து, அங்கு இருக்கும் அறையில் முதலில் ஒரு தாளை வைத்து (பேப்பர் பில்டர்), வெறும் காப்பிப் பொடி (ஒரு கப்புக்கு ஒரு ஸ்பூன்) போட்டு, மறக்காமல் பில்டரின் அடியில் கண்ணாடிப் பாத்திரத்தையும் வைத்து, ஸ்விட்சைத் தட்டினால் மூன்று நிமிடங்களில் டிகாஷன் ரெடி. பின் அதில் பாலை ஊற்றி (பாலைக் காய்ச்சுவது நின்று போய், நேரே குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து ஊற்றுவது வந்து விட்டது), இன்னமும் சூடு வேண்டுமானால் முப்பது விநாடி மைக்ரோவேவ் செய்து குடிப்பது வழக்கத்திற்கு வந்தது. இந்த மின்சார பில்டரிலும் ஏகப்பட்ட வகைகள். ஒரு முறை கண்ணாடிப் பாத்திரம் தவறி விழுந்து உடைய வேறு ஒன்று வாங்கப் போனால், அந்த விலைக்கு புது பில்டரே வாங்களாம் என்று தோன்றி வேறு பில்டர் வாங்கினோம்.
இந்த மின்சார பில்டர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். ஐந்து டாலரிலிருந்து நூற்றைம்பது டாலர் வரை பில்டர்கள் பாத்திருக்கிறேன் - அதைவும் விட அதிகமான விலையில் இருக்கின்றன என்றார் நண்பரொருவர். சில வெறும் காப்பி மட்டும் தான், சில காப்பசினோ, எஸ்பிரசோ என்று தினுசு தினுசாகக் கொடுக்கும். பில்டரில் கீழே டிகாஷன், சில மிஷினில் மேலே டிகாஷன் என்றெல்லாம் வகைகள். சாதாரண பில்டர்களுக்கு அனேகமாக தாள் தான் (பேப்பர் பில்டர்). சில டாலர் கடைகளில் ஒரு டாலருக்கு சீனாவில் செய்த பிளாஸ்டிக் பில்டர்கள் கிடைக்கும். முக்கால் வாசி பிராண்ட் பில்டர்களுக்கு அந்த பிராண்ட் கண்ணாடிப் பாத்திரம் தான் வேண்டும், டிகாஷனை எடுத்துக் கொள்ள - அதில் நிறைய காசு பண்ணுகிறார்கள். இன்னம் சிலவற்றுக்கு தாள் கூட அதே பிராண்டில் தான் வாங்க வேண்டும் (விலை மற்ற சாதாரண தாள்களை விட அதிகம்). பில்டர் ரிப்பேர் செய்யும் இடம் என்று எங்கும் நான் பார்த்தது இல்லை. வேலை செய்யவில்லை என்றால் தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். கொஞ்ச நாட்களில் தண்ணீரில் இருக்கும் உப்பு படிந்து எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடத்துக்குள் மாற்ற வேண்டியிருக்கும் (உங்கள் வீட்டில் Water Softener இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக நாள் வரும்).
நடுவில் ஒரு ஐந்து ஆறு மாதத்திற்கு, கடையிலிருந்து வறுத்த காப்பிக் கொட்டை வாங்கி ஒரு குட்டி மின்சார அரவை இயந்திரத்தில் அரைத்து காப்பி போட்டுக் குடித்தோம். இரண்டு பேர்தான் என்பதால் அது கொஞ்சம் போரடித்து, மறுபடி பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அந்த அரவை இயந்திரத்தில் சமயலுக்கு வேண்டிய பருப்பு, மிளகாய் எல்லாம் அரைத்துக் கொண்டிருந்தோம், அது ஒரு ‘நாள் இயங்க மாட்டேன்’ என்று நிற்கும் வரை. வெவ்வேறு பிராண்ட் காப்பிப் பொடி - வெவ்வேறு நாட்டுப் பொடி என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்துவிட்டு, இப்போது காஸ்ட்கோவில் போய் கொலம்பியா பொடி (பெரிய டப்பா) வாங்கி வருவது என்று வழக்கமாகிவிட்டது.
வீட்டில் இப்படி என்றால் வெளியே காப்பி குடிப்பது என்பது முதலில் உற்சாகமாக இருந்தது. அமெரிக்காவில் முதல் முறையாக வெளியே கடையில் காப்பி குடித்தால் முதலில் தாக்குவது அளவுதான் - உண்மையிலேயே ரொம்பப் பெரிசு. அதுவும் முக்கால் வாசி இடங்களில் அவர்கள் தருவது வெறும் டிகாஷன் தான். அதுவும் விளிம்பு வரை தந்துவிடுவார்கள். தனியாக வெளியே நாமே போய் பாலும் (அல்லது கிரீமோ), சக்கரையும் போட்டு ஒரு குச்சியால் சுற்றி சுற்றிக் கரைத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எப்போது ஒரு கோப்பை வாங்கி இரண்டாகப் பகிர்ந்து தான் குடிப்பது வழக்கம். அதே சமயத்தில் கிட்டத்தட்ட அரை லிட்டர் காப்பி (அதுவும் கறுப்பு காப்பி - டிகாஷன்) குடிக்கும் பேர்வழிகளையும் பார்த்திருக்கிறேன்.
இதிலே காப்பியோடு கலந்து கொள்ள என்று எத்தனையோ சாமான்கள். சிலவற்றை (உ.ம். சின்னமன்) போட்டுக் கொண்டால், குடிப்பது காப்பியா, பாயசமா, அல்லது கஷாயமா என்று தெரியாமல் போய் விடும். நாங்கள் வந்த புதிதில் இந்த ஸ்டார்பக்ஸ் இவ்வளவு பிரபலம் இல்லை. இப்போது எங்கு பார்த்தாலும், அது தான். என்னவோ தெரியவில்லை நான்கு, ஐந்து முறை போய் குடித்த பிறகு (அப்பாடி என்ன விலை!) மறுமுறை போக ஆசை வரவில்லை.
நாங்கள் அரிசோனாவில் இருந்த போது நண்பர் ஒருவர் சொன்னது: "மாணவனாக வரும் போது டங்கின் டோனட், அல்லது தெருக் கடைகளில் காப்பி; பின் வீட்டிற்கு வந்தவுடன் இன்ஸ்டன்ட், அப்புறம் பில்டர், பின் கொட்டை அரைத்து பில்டர் காப்பி, கொஞ்ச நாளில் காடலாக் எல்லாம் பார்த்து, கூப்பன் சேகரித்து, கப்பசினோ மிஷின். இது ஒரு பரிணாம வளர்ச்சி. அப்புறம் டாக்டர் பார்த்து, ட்ரைகிளசரைட், சக்கரை என்றெல்லாம் பயமுறுத்த, சக்கரை இல்லாத காப்பி, ஒரு வேளை மட்டும் காப்பி, பின் மிஷினைப் பார்த்தாலே எரிச்சல் என்று முடியும்". இதற்காகவே நான் கப்பசினோ மிஷின் வாங்கவில்லை. ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் டாக்டர் ட்ரைகிளசரைட் என்று சொல்லிவிட்டார்! நானும் இந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து தப்ப முடியாதோ என்று தோன்றுகிறது!
அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்கள்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
ஒரு வருடம் கழித்து இன்ஸ்டன்ட் போரடித்தவுடன், ஒரு காப்பி பில்டர் (மின்சார இயக்கம்) வாங்கினோம் - நான்கு கப் அளவில். பில்டரின் பின் பக்கம் மூடியைத் திறந்து தண்ணீர்; மேல்பக்கம் திறந்து, அங்கு இருக்கும் அறையில் முதலில் ஒரு தாளை வைத்து (பேப்பர் பில்டர்), வெறும் காப்பிப் பொடி (ஒரு கப்புக்கு ஒரு ஸ்பூன்) போட்டு, மறக்காமல் பில்டரின் அடியில் கண்ணாடிப் பாத்திரத்தையும் வைத்து, ஸ்விட்சைத் தட்டினால் மூன்று நிமிடங்களில் டிகாஷன் ரெடி. பின் அதில் பாலை ஊற்றி (பாலைக் காய்ச்சுவது நின்று போய், நேரே குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து ஊற்றுவது வந்து விட்டது), இன்னமும் சூடு வேண்டுமானால் முப்பது விநாடி மைக்ரோவேவ் செய்து குடிப்பது வழக்கத்திற்கு வந்தது. இந்த மின்சார பில்டரிலும் ஏகப்பட்ட வகைகள். ஒரு முறை கண்ணாடிப் பாத்திரம் தவறி விழுந்து உடைய வேறு ஒன்று வாங்கப் போனால், அந்த விலைக்கு புது பில்டரே வாங்களாம் என்று தோன்றி வேறு பில்டர் வாங்கினோம்.
இந்த மின்சார பில்டர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். ஐந்து டாலரிலிருந்து நூற்றைம்பது டாலர் வரை பில்டர்கள் பாத்திருக்கிறேன் - அதைவும் விட அதிகமான விலையில் இருக்கின்றன என்றார் நண்பரொருவர். சில வெறும் காப்பி மட்டும் தான், சில காப்பசினோ, எஸ்பிரசோ என்று தினுசு தினுசாகக் கொடுக்கும். பில்டரில் கீழே டிகாஷன், சில மிஷினில் மேலே டிகாஷன் என்றெல்லாம் வகைகள். சாதாரண பில்டர்களுக்கு அனேகமாக தாள் தான் (பேப்பர் பில்டர்). சில டாலர் கடைகளில் ஒரு டாலருக்கு சீனாவில் செய்த பிளாஸ்டிக் பில்டர்கள் கிடைக்கும். முக்கால் வாசி பிராண்ட் பில்டர்களுக்கு அந்த பிராண்ட் கண்ணாடிப் பாத்திரம் தான் வேண்டும், டிகாஷனை எடுத்துக் கொள்ள - அதில் நிறைய காசு பண்ணுகிறார்கள். இன்னம் சிலவற்றுக்கு தாள் கூட அதே பிராண்டில் தான் வாங்க வேண்டும் (விலை மற்ற சாதாரண தாள்களை விட அதிகம்). பில்டர் ரிப்பேர் செய்யும் இடம் என்று எங்கும் நான் பார்த்தது இல்லை. வேலை செய்யவில்லை என்றால் தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். கொஞ்ச நாட்களில் தண்ணீரில் இருக்கும் உப்பு படிந்து எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடத்துக்குள் மாற்ற வேண்டியிருக்கும் (உங்கள் வீட்டில் Water Softener இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக நாள் வரும்).
நடுவில் ஒரு ஐந்து ஆறு மாதத்திற்கு, கடையிலிருந்து வறுத்த காப்பிக் கொட்டை வாங்கி ஒரு குட்டி மின்சார அரவை இயந்திரத்தில் அரைத்து காப்பி போட்டுக் குடித்தோம். இரண்டு பேர்தான் என்பதால் அது கொஞ்சம் போரடித்து, மறுபடி பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அந்த அரவை இயந்திரத்தில் சமயலுக்கு வேண்டிய பருப்பு, மிளகாய் எல்லாம் அரைத்துக் கொண்டிருந்தோம், அது ஒரு ‘நாள் இயங்க மாட்டேன்’ என்று நிற்கும் வரை. வெவ்வேறு பிராண்ட் காப்பிப் பொடி - வெவ்வேறு நாட்டுப் பொடி என்றெல்லாம் பரிசோதனை பண்ணிப் பார்த்துவிட்டு, இப்போது காஸ்ட்கோவில் போய் கொலம்பியா பொடி (பெரிய டப்பா) வாங்கி வருவது என்று வழக்கமாகிவிட்டது.
வீட்டில் இப்படி என்றால் வெளியே காப்பி குடிப்பது என்பது முதலில் உற்சாகமாக இருந்தது. அமெரிக்காவில் முதல் முறையாக வெளியே கடையில் காப்பி குடித்தால் முதலில் தாக்குவது அளவுதான் - உண்மையிலேயே ரொம்பப் பெரிசு. அதுவும் முக்கால் வாசி இடங்களில் அவர்கள் தருவது வெறும் டிகாஷன் தான். அதுவும் விளிம்பு வரை தந்துவிடுவார்கள். தனியாக வெளியே நாமே போய் பாலும் (அல்லது கிரீமோ), சக்கரையும் போட்டு ஒரு குச்சியால் சுற்றி சுற்றிக் கரைத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எப்போது ஒரு கோப்பை வாங்கி இரண்டாகப் பகிர்ந்து தான் குடிப்பது வழக்கம். அதே சமயத்தில் கிட்டத்தட்ட அரை லிட்டர் காப்பி (அதுவும் கறுப்பு காப்பி - டிகாஷன்) குடிக்கும் பேர்வழிகளையும் பார்த்திருக்கிறேன்.
இதிலே காப்பியோடு கலந்து கொள்ள என்று எத்தனையோ சாமான்கள். சிலவற்றை (உ.ம். சின்னமன்) போட்டுக் கொண்டால், குடிப்பது காப்பியா, பாயசமா, அல்லது கஷாயமா என்று தெரியாமல் போய் விடும். நாங்கள் வந்த புதிதில் இந்த ஸ்டார்பக்ஸ் இவ்வளவு பிரபலம் இல்லை. இப்போது எங்கு பார்த்தாலும், அது தான். என்னவோ தெரியவில்லை நான்கு, ஐந்து முறை போய் குடித்த பிறகு (அப்பாடி என்ன விலை!) மறுமுறை போக ஆசை வரவில்லை.
நாங்கள் அரிசோனாவில் இருந்த போது நண்பர் ஒருவர் சொன்னது: "மாணவனாக வரும் போது டங்கின் டோனட், அல்லது தெருக் கடைகளில் காப்பி; பின் வீட்டிற்கு வந்தவுடன் இன்ஸ்டன்ட், அப்புறம் பில்டர், பின் கொட்டை அரைத்து பில்டர் காப்பி, கொஞ்ச நாளில் காடலாக் எல்லாம் பார்த்து, கூப்பன் சேகரித்து, கப்பசினோ மிஷின். இது ஒரு பரிணாம வளர்ச்சி. அப்புறம் டாக்டர் பார்த்து, ட்ரைகிளசரைட், சக்கரை என்றெல்லாம் பயமுறுத்த, சக்கரை இல்லாத காப்பி, ஒரு வேளை மட்டும் காப்பி, பின் மிஷினைப் பார்த்தாலே எரிச்சல் என்று முடியும்". இதற்காகவே நான் கப்பசினோ மிஷின் வாங்கவில்லை. ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் டாக்டர் ட்ரைகிளசரைட் என்று சொல்லிவிட்டார்! நானும் இந்த பரிணாம வளர்ச்சியிலிருந்து தப்ப முடியாதோ என்று தோன்றுகிறது!
அடுத்த பதிவில் காப்பி குடிக்கும் மக்களைப் பார்த்து நான் பெற்ற அனுபவங்கள்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 6
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
புதன், ஆகஸ்ட் 30, 2006
காப்பி – 6
கல்லூரிப் படிப்பு முடித்து அக்கவுன்டன்சி (சிஏ) படிக்க ஆரம்பித்தேன். தணிக்கைக்காக வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பு வந்தது. சோளிங்கர், பொள்ளாச்சி, மும்பாய், தில்லி, மொராதாபாத், ராம்பூர், என்று பல இடங்கள் சென்றேன். ஒவ்வொரு இடத்திலும் காப்பியின் சுவை மாறுபட்டது. வடக்கே அதிகமாக இன்ஸ்டன்ட் தான். பின் வேலையில் சேர்ந்ததும், பிரயாணம் இன்னும் அதிகமாயிற்று. கல்கத்தா, பீகார், சண்டீகர், ஈடா (உ.பி.), ஹைதராபாத் (காட் கேசர்) என்று இன்னும் எத்தனையோ. ராம்பூர், ஈடா போன்ற இடங்களில் பெரிய லோட்டாவில் காப்பி; பீகாரில், கல்கத்தாவில் சில இடங்களில், மண்குடுவையில் காப்பி. இங்கேயெல்லாம் அதிகமாக கிடைப்பது தேனீர்தான். மசாலா, இஞ்சி எல்லாம் ஒரு துணியில் வைத்து குழவியால் நசுக்கி, அந்த துணியையும் டீயோடு கெட்டிலில் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். வித்தியாசமான சுவையோடு ஜிவ்வென்று நன்றாக இருக்கும். காப்பியை மட்டும் இந்த மாதிரி கலக்காமல் வெறும் காப்பியாகவே தருவார்கள்.
டீ குடிக்கும் கண்ணாடி டம்ளரிலோ, அல்லது லோட்டாவிலோ தந்துவிட்டால், சக்கரையைக் கரைப்பது ஒரு வித்தைதான். காப்பியும் சுடும்; டம்ளர்/லோட்டாவில் கிட்டத்தட்ட விளிம்பு வரை இருக்கும். அந்த மண்ணின் மைந்தர்கள் சாப்பிடும் விதத்தைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ‘எப்படி அந்த லோட்டாவைப் பிடித்து சுழற்றியவாறே சக்கரையைக் கரைப்பது’ என்பது தான். பூமத்திய ரேகைக்கு வடக்கே தண்ணீரின் சுழற்சி பிரதக்ஷணமானது (கடிகாரம் போல் - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு). அதனால் காப்பி லோட்டாவையும் அப்படியே பிரதக்ஷணமாக சுற்றினால் கீழேயும் சிந்த வாய்ப்பு குறைவு; சக்கரையும் கரையும். இந்த சுழற்சி விதியை கொரியோலிஸ் விசை - Coriolis Force - என்பார்கள்.
முதல் முறையாக சிட்னி சென்றதும், காப்பியை ஒரு டம்ளரில் எடுத்து வழக்கம் போல் சுற்றிப் பார்த்தேன்; பின் வலமிருந்து இடமாக - கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு - என்றும் சுற்றிப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசம் இருக்கத் தான் செய்தது. கடிகார சுழற்சியில் காப்பி சற்று தளும்பியது; ஆனால் வலமிருந்து இடமாக சுற்றிய போது சீராக இருந்தது. பூமத்திய ரேகைக்கு வடக்கேயும், தெற்கேயும் இருந்து பார்த்தவர்கள் (துளசி கோபால் போல) வேறு யாரேனும் இதை செய்து பார்த்து நான் சொன்னது எத்தனை தூரம் சரி என்று சொல்லவும். ஒருவர் என்னைப் போல், வலக்கைப் பழக்கம் உள்ளவரா அல்லது இடக்கைப் பழக்கம் உள்ளவரா, என்பதும் இந்த சுழற்சியை பாதிக்கும் என்று நினைக்கிறேன்; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த விதி பற்றி தெரியாமலேயே ராம்பூரில் இருந்த கிழவர் லோட்டாவை சுற்றி சுற்றி டீ சாப்பிட்டது இன்னமும் நினைவில் இருக்கிறது.
காட்கேசரில் (ஹைதராபாத்) ப்ரூக் பான்ட் (இப்போது லீவர் இந்தியா) ஆலைக்கு தணிக்கைக்காக சென்ற போது அங்கு இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறை பற்றி நேராகப் பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன். இரண்டு முறைகள் உண்டு – freeze drying and spray drying. இதில் காட்கேசரில் நடந்தது spray drying முறை. சுறுக்கமாக சொன்னால், முதலில் காப்பிக் கொட்டைகளை சுத்தம் செய்து, வறுத்து, ஒரு வகையில் டிகாஷன் போடுவார்கள் - மிகவும் அடர்த்தி மிகுந்ததாக இருக்கும். பின் இந்த டிகாஷனை ஒரு நன்கு பாதுகாக்கப்பட்ட, சுத்தமான (மூடியிருக்கும்; உள்ளே விட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்) அறையின் மேலிருந்து சிறு குழாய் வழியாக விடுவார்கள். பக்க சுவற்றில் இருக்கும் குழாய்களிலிருந்து வெப்பமான காற்று வரும். மேலிருந்து சொட்டும் திரவத்தில் இருக்கும் ஈரப்பதத்தை இந்தக் காற்று உறிஞ்சிவிட, போடி போல காப்பி கீழே அறையின் தரையில் படியும். இதை சேகரித்து, காற்று புகாதவண்ணம் பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். இந்த வர்ணனையில் நிறைய நுணுக்கமான விபரங்களை வேண்டுமென்றே விட்டு விட்டேன்; எனக்கு தெரியாத விஷயங்களும் மிக அதிகம். இந்த மாதிரி ஆலையை நிர்மாணிப்பது கடினமானது; செலவும் அதிகம். உலகிலேயே இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும், லாபம் தரும் சின்ன ஆலை இந்தியாவில் தான். வருடத்திற்கு ஆயிரம் டன் (அதாவது பத்து லட்சம் கிலோ) பொடி தயாரிக்கும் ஆலை.
சிட்னியில் அலுவலகத்தில் முக்கால் வாசிப் பேர் தங்கள் மேசையிலேயே குட்டி பில்டர் வைத்திருந்தார்கள். முதன் முதலாக பில்டரின் மேல் புறத்திலிருந்து டிகாஷன் எடுப்பதை அங்கேதான் பார்த்தேன் (மனதில் உறுதி வேண்டும் விவேக் போல: 'என்னடா இந்த விஞ்ஞான முன்னேற்றம்; அப்பல்லாம் பொடி மேல இருக்கும், டிகாஷன் கீழ இருக்கும். இங்க என்னடான்னா கீழ பொடி, மேல டிகாஷன்!’). பில்டர் வெறும் கண்ணாடி டம்ளர் - பொடியைப் பொட்டு, வென்னீரை விட்டு, கண்ணாடிப் டம்ளரோடு கொடுக்கப் பட்டிருக்கும் ஒரு ஜல்லடை தட்டை (நீண்ட தண்டோடு இருக்கும்) மெதுவாக டம்ளரில் அழுத்த, மேலே டிகாஷன், கீழே பொடி. பின்பு போய் பாலையோ, அல்லது பவுடரையோ கலந்தால் காப்பி ரெடி. இங்கேதான் முதன் முதலாக பாலை கொதிக்க வைத்து கலக்காமல், அப்படியே கலப்பதை பார்த்தேன்.
டிகாஷன் போடும் முறையில் தான் முன்னேற்றமே தவிர, சுவை கொஞ்சம் சுமார்தான். எனக்கு 'சிறு வயதிலிருந்தே பழகி விட்டதால் எனக்கு அதிகம் பிடிக்கவில்லை; கொஞ்ச நாள் இருந்து விட்டால் இதுதான் பிடிக்கும்' என்று சிட்னியிலே பல வருடம் தங்கிவிட்ட என் உறவினர் சொன்னார். எனக்கு என்னமோ அது நம்மூர் காப்பி போல இல்லை என்றுதான் தோன்றியது.
அடுத்த பதிவில் அமெரிக்க வாசத்தில் நான் அனுபவித்த காப்பி கணங்களைத் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
டீ குடிக்கும் கண்ணாடி டம்ளரிலோ, அல்லது லோட்டாவிலோ தந்துவிட்டால், சக்கரையைக் கரைப்பது ஒரு வித்தைதான். காப்பியும் சுடும்; டம்ளர்/லோட்டாவில் கிட்டத்தட்ட விளிம்பு வரை இருக்கும். அந்த மண்ணின் மைந்தர்கள் சாப்பிடும் விதத்தைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ‘எப்படி அந்த லோட்டாவைப் பிடித்து சுழற்றியவாறே சக்கரையைக் கரைப்பது’ என்பது தான். பூமத்திய ரேகைக்கு வடக்கே தண்ணீரின் சுழற்சி பிரதக்ஷணமானது (கடிகாரம் போல் - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு). அதனால் காப்பி லோட்டாவையும் அப்படியே பிரதக்ஷணமாக சுற்றினால் கீழேயும் சிந்த வாய்ப்பு குறைவு; சக்கரையும் கரையும். இந்த சுழற்சி விதியை கொரியோலிஸ் விசை - Coriolis Force - என்பார்கள்.
முதல் முறையாக சிட்னி சென்றதும், காப்பியை ஒரு டம்ளரில் எடுத்து வழக்கம் போல் சுற்றிப் பார்த்தேன்; பின் வலமிருந்து இடமாக - கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு - என்றும் சுற்றிப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசம் இருக்கத் தான் செய்தது. கடிகார சுழற்சியில் காப்பி சற்று தளும்பியது; ஆனால் வலமிருந்து இடமாக சுற்றிய போது சீராக இருந்தது. பூமத்திய ரேகைக்கு வடக்கேயும், தெற்கேயும் இருந்து பார்த்தவர்கள் (துளசி கோபால் போல) வேறு யாரேனும் இதை செய்து பார்த்து நான் சொன்னது எத்தனை தூரம் சரி என்று சொல்லவும். ஒருவர் என்னைப் போல், வலக்கைப் பழக்கம் உள்ளவரா அல்லது இடக்கைப் பழக்கம் உள்ளவரா, என்பதும் இந்த சுழற்சியை பாதிக்கும் என்று நினைக்கிறேன்; ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த விதி பற்றி தெரியாமலேயே ராம்பூரில் இருந்த கிழவர் லோட்டாவை சுற்றி சுற்றி டீ சாப்பிட்டது இன்னமும் நினைவில் இருக்கிறது.
காட்கேசரில் (ஹைதராபாத்) ப்ரூக் பான்ட் (இப்போது லீவர் இந்தியா) ஆலைக்கு தணிக்கைக்காக சென்ற போது அங்கு இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும் முறை பற்றி நேராகப் பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டேன். இரண்டு முறைகள் உண்டு – freeze drying and spray drying. இதில் காட்கேசரில் நடந்தது spray drying முறை. சுறுக்கமாக சொன்னால், முதலில் காப்பிக் கொட்டைகளை சுத்தம் செய்து, வறுத்து, ஒரு வகையில் டிகாஷன் போடுவார்கள் - மிகவும் அடர்த்தி மிகுந்ததாக இருக்கும். பின் இந்த டிகாஷனை ஒரு நன்கு பாதுகாக்கப்பட்ட, சுத்தமான (மூடியிருக்கும்; உள்ளே விட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்) அறையின் மேலிருந்து சிறு குழாய் வழியாக விடுவார்கள். பக்க சுவற்றில் இருக்கும் குழாய்களிலிருந்து வெப்பமான காற்று வரும். மேலிருந்து சொட்டும் திரவத்தில் இருக்கும் ஈரப்பதத்தை இந்தக் காற்று உறிஞ்சிவிட, போடி போல காப்பி கீழே அறையின் தரையில் படியும். இதை சேகரித்து, காற்று புகாதவண்ணம் பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். இந்த வர்ணனையில் நிறைய நுணுக்கமான விபரங்களை வேண்டுமென்றே விட்டு விட்டேன்; எனக்கு தெரியாத விஷயங்களும் மிக அதிகம். இந்த மாதிரி ஆலையை நிர்மாணிப்பது கடினமானது; செலவும் அதிகம். உலகிலேயே இன்ஸ்டன்ட் காப்பி தயாரிக்கும், லாபம் தரும் சின்ன ஆலை இந்தியாவில் தான். வருடத்திற்கு ஆயிரம் டன் (அதாவது பத்து லட்சம் கிலோ) பொடி தயாரிக்கும் ஆலை.
சிட்னியில் அலுவலகத்தில் முக்கால் வாசிப் பேர் தங்கள் மேசையிலேயே குட்டி பில்டர் வைத்திருந்தார்கள். முதன் முதலாக பில்டரின் மேல் புறத்திலிருந்து டிகாஷன் எடுப்பதை அங்கேதான் பார்த்தேன் (மனதில் உறுதி வேண்டும் விவேக் போல: 'என்னடா இந்த விஞ்ஞான முன்னேற்றம்; அப்பல்லாம் பொடி மேல இருக்கும், டிகாஷன் கீழ இருக்கும். இங்க என்னடான்னா கீழ பொடி, மேல டிகாஷன்!’). பில்டர் வெறும் கண்ணாடி டம்ளர் - பொடியைப் பொட்டு, வென்னீரை விட்டு, கண்ணாடிப் டம்ளரோடு கொடுக்கப் பட்டிருக்கும் ஒரு ஜல்லடை தட்டை (நீண்ட தண்டோடு இருக்கும்) மெதுவாக டம்ளரில் அழுத்த, மேலே டிகாஷன், கீழே பொடி. பின்பு போய் பாலையோ, அல்லது பவுடரையோ கலந்தால் காப்பி ரெடி. இங்கேதான் முதன் முதலாக பாலை கொதிக்க வைத்து கலக்காமல், அப்படியே கலப்பதை பார்த்தேன்.
டிகாஷன் போடும் முறையில் தான் முன்னேற்றமே தவிர, சுவை கொஞ்சம் சுமார்தான். எனக்கு 'சிறு வயதிலிருந்தே பழகி விட்டதால் எனக்கு அதிகம் பிடிக்கவில்லை; கொஞ்ச நாள் இருந்து விட்டால் இதுதான் பிடிக்கும்' என்று சிட்னியிலே பல வருடம் தங்கிவிட்ட என் உறவினர் சொன்னார். எனக்கு என்னமோ அது நம்மூர் காப்பி போல இல்லை என்றுதான் தோன்றியது.
அடுத்த பதிவில் அமெரிக்க வாசத்தில் நான் அனுபவித்த காப்பி கணங்களைத் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 5
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006
காப்பி – 5
சிறு வயதில் கல்யாணத்திற்கு போவதென்றால் படு குஷி. விதவிதமான சாப்பாடு, விளையாட்டு, முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் காப்பி! இந்தக் கல்யாணக் காப்பியின் ருசியே தனி. இருபது வருடங்களுக்கு முன்னால், தஞ்சாவூர் ஜில்லாவில் கல்யாணத்திற்கு கோட்டை அடுப்பு என்று ஒன்று போடுவார்கள். ஒன்று, ஒன்றரை அடி அகலமும், இரண்டு அடி ஆழமும் இருக்கும். நீளம் எத்தனை அண்டாக்களை வைத்து சமையல் நடக்கும் என்பதைப் பொறுத்து - ஒரு பத்து, பதினைந்தடியாவது இருக்கும். இந்த வாய்க்கால் போன்ற குழியின் மேல் அண்டா போன்ற பெரிய பாத்திரங்களை வைத்து, கீழே குழியில் விறகை எரித்து சமைப்பார்கள். அடுப்பில் முதலாவதாக ஆரம்பித்து, கடைசியாய் முடிப்பது காப்பியைத்தான். ஒரு அண்டாவில் வென்னீர் கொதிக்கும், அருகிலேயே பால். பெரிய பாத்திரத்தில், நல்ல வெள்ளைத்துணியைக் கட்டி, காப்பிப் பொடி போட்டு, டிகாஷன் இறங்கிக் கொண்டிருக்கும். சில சமயம் ஸ்பெஷலாக ஒரு பெரிய பித்தளை பில்டர் - ஒரே சமயத்தில் கால் கிலோ பொடி போடும் அளவு பெரிசு - ஒரு மூலையில் டிகாஷன் இறக்கிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் அது மாப்பிள்ளைக்கும், சம்பந்திக்கும் என்று சொல்வார்கள்.
இந்த கல்யாணக் காப்பியில் ஒரு பிரச்சனை என்னவென்றால், நமக்கு வேண்டிய தனிப் பாணியில் காப்பி கிடைக்காது. ஒரு வாளியிலோ, அல்லது கூஜாவிலோ போட்டு, எல்லோருக்கும் வினியோகம் செய்வார்கள். அதிலே ஏற்கனவே பாலும், சக்கரையும் கலந்திருப்பார்கள். கொஞ்சம் அதிகம் பாலோ, டிகாஷனோ வேண்டுமென்றால் அடுக்களையில் யாரையாவது தெரிந்து வைத்திருப்பது நல்லது. சிறு வயதிலேயே சட்ட திட்டங்களில் எங்கு ஓட்டை இருக்கிறது என்று பார்ப்பதில் நானும், என் ஒன்றுவிட்ட சகோதரனும் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். இருவருக்குமே காப்பி பிடிக்கும். இருவரும் யோசித்து, அடுக்களைக்கு சென்று, இல்லாத இரண்டு சம்பந்தி மாமாக்களுக்கு சக்கரை இல்லாத காப்பி வேண்டும் என்று கேட்டு, அவர்கள் அந்த ஸ்பெஷல் காப்பியைக் கொடுக்க, அதை நான் எடுத்து வந்தேன். இதே சமயத்தில் காப்பிக்கு கொஞ்சம் சக்கரை வேண்டும் என்று என் கஸின் வாங்கி வர, இருவருக்கும் சூப்பர் காப்பி. இந்த தகிடுதத்தம் எவரும் அறியாமல், குறைந்தது நான்கு கல்யாணங்களுக்கு தொடர்ந்தது.
புதிதாகப் போட்ட டிகாஷனில் கலந்த காப்பிக்கும், முன்னமேயே போட்டு அது ஆறிப் போய், மறுமுறை சுடவைக்கப்ப்பட்ட காப்பிக்கும் வித்தியாசம் உண்டு. கல்யாணத்தில், எப்போது பார்த்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருப்பதாலும், அவர்கள் சூடு செய்யும் முறை கொஞ்சம் வித்தியசமானதாலும், அதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். முன்னமேயே போட்ட காப்பி ஆறிவிட்டால், அதை நேரடியாக அடுப்பில் சுட வைக்கக் கூடாது. வென்னீரைக் கொதிக்க வைத்து, அதில் காப்பியிருக்கும் பாத்திரத்தை வைத்து காப்பியை சூடாக்க வேண்டும். கல்யாணத்தில், காப்பியைப் போட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து விடுவார்கள். வினியோகிக்க வருபவர் அந்தக் காப்பியை ஒரு வாளியிலோ, கூஜாவிலோ எடுத்துக் கொண்டு வருவார். சூடு ஆறாமலிருக்க, அந்தப் பாத்திரத்தை அதை விட ஒரு பெரிய அண்டாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, மூடி வைத்து விடுவார்கள். இந்த வென்னீர் அண்டா அடுப்பில் இருக்கும்; ஆகையால் காப்பியும் எப்போதும் சூடாக இருக்கும். இது ஓரளவு காப்பி மணத்தினைப் பாதுகாப்பதால் அவ்வளவாக வித்தியாசம் தெரியாது.
ஆனால் காப்பியை சாப்பிடுகையில் வித்தியாசம் கொஞ்சம் தெரியும் - சாப்பிடுபவருக்கு காப்பியின் வெவ்வேறு ருசிகள் புரிந்திருந்தால். புதிதாகப் போட்ட காப்பியின் சூடும் சுவையும் வாய் முழுதும், முக்கியமாக நாக்கின் நுனியிலிருந்து, அடி வரை தெரியும். மறுமுறை சுடவைக்கப் படும் போது, சுவை கொஞ்சம் குறையும்; சூடும் முழுவதுமாகப் பரவாது. முக்கியமாக நுனிநாக்கில் காப்பியின் சூடு தெரியும்; முழுங்குகையில், வாயில் இருக்கும் கடைசி காப்பி தொண்டைக்குள் இறங்குகையில், அடி நாக்கில் சூடு தெரியாது. இது கிட்டத்தட்ட காப்பியின் வெளிப்புறம் சுடுவது போலவும், உட்புறம் சூடு இழந்து விட்டது போலவும் தோன்றும் (காப்பி திரவம், அதனால் உள் - வெளி என்பது கிடையாது என்றாலும், இதை வேறு எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை). இது விறகு அடுப்பினால் மட்டும் வருகிறது என்றில்லை; இங்கு 'மைக்ரோவேவ்' ஓவனில் வைத்து எடுத்தாலும், அதே நிலை தான். இது காப்பியின் தன்மை என்று நினைக்கிறேன். காப்பிக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் டிகாஷன் கொஞ்ச நேரம் கழித்து வேறு நிலையை அடைகிறது; அதை மறு முறை மாற்ற இயலாது என்பது என் கருத்து. யாராவது விஞ்ஞானி ஆராச்சி செய்து சொன்னால் தேவலை.
காப்பி சாப்பிடுவதற்கு முன்னால் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் காப்பியின் சுவையை மாற்றுகிறது. இது முக்கியமாக கல்யாணத்திலும், ஓட்டல்களிலும் அனுபவித்திருக்கிறேன். காப்பிக்கு முன்பாக இனிப்பை சாப்பிட்டால், காப்பி அதிகம் கசக்கும் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். அதே போல காப்பிக்கு முன்னால் அதிகமான காரம் சாப்பிட்டிருந்தால், சூடான காப்பி நாக்கில் உள்ள சுவை உணரும் செல்களைத் தாக்கும். இது எரியும் உணர்ச்சியை ஏற்படுத்தும். சமயத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தால் இரண்டு மூன்று வேளைகளுக்கு காப்பியின் சுவை வேறுபட்டு இருக்கும். அதே போல அதிகமான சூடோடு காப்பியை குடித்தால், நுனி நாக்கில் சுட்டு விடும்; இதனால் சிறு கரும் புள்ளிகளை நுனிநாக்கில் பார்க்கலாம். இது சரியாக 24 மணி நேரம் ஆகலாம். அது வரை காப்பியின் சுவை கோவிந்தா!
காலைக் காப்பியின் சுவை, நீங்கள் என்ன பற்பொடி, அல்லது பற்பசை உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொருந்த்தது. நீங்கள் தினம் காலையில் பல் துலக்கிய பின்னால் தான் காப்பி குடிக்கிறீர்கள் என்றால் ஒரு நாள் இதை செய்து பாருங்கள். பற்பசையோ, பல் பொடியோ உபயோகிக்காமல், வாயை நன்கு தண்ணீரால் (முடிந்தால் வெது வெதுப்பான வென்னீரில்) கொப்பளித்து அலம்பி, பின் காப்பியை பருகிப் பாருங்கள். சுவை அதிகமாகத் தெரியும். பற்பசைகளில் இருக்கும் ப்ளோரைட் போன்ற சமாசாரங்கள், மற்றும் 'மௌத் பிரஷ்னர்' எனப்படும் வாசனை வஸ்துகள் வாயில் தங்கி விடுகின்றன. இவை நாக்கின் சுவையறியும் செல்களின் திறனை பாதிக்கிறது. ஆதலால், காப்பியின் சுவையும் மாறுகிறது. சிறு வயதில் ஒரு பரிசோதனை போல கோபால் பல்பொடி, வீக்கோ வஜ்ரதந்தி, கோல்கேட் பவுடர், கோல்கேட் பேஸ்ட், பினாகா (பின்னாளில் இதுவே சிபாகா), போர்ஹான்ஸ் என்றெல்லாம் உபயோகித்து காப்பி சாப்பிட்டு, வரும் வித்தியாசத்தை ஆராய்ந்திருக்கிறேன். இவைகளில் எதையாவது ஒன்றைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றால், வீக்கோ வஜ்ரதந்திக்குத் தான் என் ஓட்டு. இது எதுவுமே வேண்டாம் என்று வென்னீர் கொப்பளித்து காப்பி குடிப்பது அதை விட அருமை. குடித்து கொஞ்ச நேரம் கழித்து பல் துலக்கிக் கொள்ளலாம்.
அடுத்த பதிவில் இந்தியாவில் வேலை காரணமாக நான் சென்ற இடங்களில் குடித்த காப்பி பற்றியும், காப்பி பொடி (இன்ஸ்டன்ட்) தயார் செய்த ஒரு ஆலையில் தணிக்கைக்காக சென்றது பற்றியும் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
இந்த கல்யாணக் காப்பியில் ஒரு பிரச்சனை என்னவென்றால், நமக்கு வேண்டிய தனிப் பாணியில் காப்பி கிடைக்காது. ஒரு வாளியிலோ, அல்லது கூஜாவிலோ போட்டு, எல்லோருக்கும் வினியோகம் செய்வார்கள். அதிலே ஏற்கனவே பாலும், சக்கரையும் கலந்திருப்பார்கள். கொஞ்சம் அதிகம் பாலோ, டிகாஷனோ வேண்டுமென்றால் அடுக்களையில் யாரையாவது தெரிந்து வைத்திருப்பது நல்லது. சிறு வயதிலேயே சட்ட திட்டங்களில் எங்கு ஓட்டை இருக்கிறது என்று பார்ப்பதில் நானும், என் ஒன்றுவிட்ட சகோதரனும் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். இருவருக்குமே காப்பி பிடிக்கும். இருவரும் யோசித்து, அடுக்களைக்கு சென்று, இல்லாத இரண்டு சம்பந்தி மாமாக்களுக்கு சக்கரை இல்லாத காப்பி வேண்டும் என்று கேட்டு, அவர்கள் அந்த ஸ்பெஷல் காப்பியைக் கொடுக்க, அதை நான் எடுத்து வந்தேன். இதே சமயத்தில் காப்பிக்கு கொஞ்சம் சக்கரை வேண்டும் என்று என் கஸின் வாங்கி வர, இருவருக்கும் சூப்பர் காப்பி. இந்த தகிடுதத்தம் எவரும் அறியாமல், குறைந்தது நான்கு கல்யாணங்களுக்கு தொடர்ந்தது.
புதிதாகப் போட்ட டிகாஷனில் கலந்த காப்பிக்கும், முன்னமேயே போட்டு அது ஆறிப் போய், மறுமுறை சுடவைக்கப்ப்பட்ட காப்பிக்கும் வித்தியாசம் உண்டு. கல்யாணத்தில், எப்போது பார்த்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருப்பதாலும், அவர்கள் சூடு செய்யும் முறை கொஞ்சம் வித்தியசமானதாலும், அதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். முன்னமேயே போட்ட காப்பி ஆறிவிட்டால், அதை நேரடியாக அடுப்பில் சுட வைக்கக் கூடாது. வென்னீரைக் கொதிக்க வைத்து, அதில் காப்பியிருக்கும் பாத்திரத்தை வைத்து காப்பியை சூடாக்க வேண்டும். கல்யாணத்தில், காப்பியைப் போட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து விடுவார்கள். வினியோகிக்க வருபவர் அந்தக் காப்பியை ஒரு வாளியிலோ, கூஜாவிலோ எடுத்துக் கொண்டு வருவார். சூடு ஆறாமலிருக்க, அந்தப் பாத்திரத்தை அதை விட ஒரு பெரிய அண்டாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, மூடி வைத்து விடுவார்கள். இந்த வென்னீர் அண்டா அடுப்பில் இருக்கும்; ஆகையால் காப்பியும் எப்போதும் சூடாக இருக்கும். இது ஓரளவு காப்பி மணத்தினைப் பாதுகாப்பதால் அவ்வளவாக வித்தியாசம் தெரியாது.
ஆனால் காப்பியை சாப்பிடுகையில் வித்தியாசம் கொஞ்சம் தெரியும் - சாப்பிடுபவருக்கு காப்பியின் வெவ்வேறு ருசிகள் புரிந்திருந்தால். புதிதாகப் போட்ட காப்பியின் சூடும் சுவையும் வாய் முழுதும், முக்கியமாக நாக்கின் நுனியிலிருந்து, அடி வரை தெரியும். மறுமுறை சுடவைக்கப் படும் போது, சுவை கொஞ்சம் குறையும்; சூடும் முழுவதுமாகப் பரவாது. முக்கியமாக நுனிநாக்கில் காப்பியின் சூடு தெரியும்; முழுங்குகையில், வாயில் இருக்கும் கடைசி காப்பி தொண்டைக்குள் இறங்குகையில், அடி நாக்கில் சூடு தெரியாது. இது கிட்டத்தட்ட காப்பியின் வெளிப்புறம் சுடுவது போலவும், உட்புறம் சூடு இழந்து விட்டது போலவும் தோன்றும் (காப்பி திரவம், அதனால் உள் - வெளி என்பது கிடையாது என்றாலும், இதை வேறு எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை). இது விறகு அடுப்பினால் மட்டும் வருகிறது என்றில்லை; இங்கு 'மைக்ரோவேவ்' ஓவனில் வைத்து எடுத்தாலும், அதே நிலை தான். இது காப்பியின் தன்மை என்று நினைக்கிறேன். காப்பிக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் டிகாஷன் கொஞ்ச நேரம் கழித்து வேறு நிலையை அடைகிறது; அதை மறு முறை மாற்ற இயலாது என்பது என் கருத்து. யாராவது விஞ்ஞானி ஆராச்சி செய்து சொன்னால் தேவலை.
காப்பி சாப்பிடுவதற்கு முன்னால் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் காப்பியின் சுவையை மாற்றுகிறது. இது முக்கியமாக கல்யாணத்திலும், ஓட்டல்களிலும் அனுபவித்திருக்கிறேன். காப்பிக்கு முன்பாக இனிப்பை சாப்பிட்டால், காப்பி அதிகம் கசக்கும் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். அதே போல காப்பிக்கு முன்னால் அதிகமான காரம் சாப்பிட்டிருந்தால், சூடான காப்பி நாக்கில் உள்ள சுவை உணரும் செல்களைத் தாக்கும். இது எரியும் உணர்ச்சியை ஏற்படுத்தும். சமயத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தால் இரண்டு மூன்று வேளைகளுக்கு காப்பியின் சுவை வேறுபட்டு இருக்கும். அதே போல அதிகமான சூடோடு காப்பியை குடித்தால், நுனி நாக்கில் சுட்டு விடும்; இதனால் சிறு கரும் புள்ளிகளை நுனிநாக்கில் பார்க்கலாம். இது சரியாக 24 மணி நேரம் ஆகலாம். அது வரை காப்பியின் சுவை கோவிந்தா!
காலைக் காப்பியின் சுவை, நீங்கள் என்ன பற்பொடி, அல்லது பற்பசை உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொருந்த்தது. நீங்கள் தினம் காலையில் பல் துலக்கிய பின்னால் தான் காப்பி குடிக்கிறீர்கள் என்றால் ஒரு நாள் இதை செய்து பாருங்கள். பற்பசையோ, பல் பொடியோ உபயோகிக்காமல், வாயை நன்கு தண்ணீரால் (முடிந்தால் வெது வெதுப்பான வென்னீரில்) கொப்பளித்து அலம்பி, பின் காப்பியை பருகிப் பாருங்கள். சுவை அதிகமாகத் தெரியும். பற்பசைகளில் இருக்கும் ப்ளோரைட் போன்ற சமாசாரங்கள், மற்றும் 'மௌத் பிரஷ்னர்' எனப்படும் வாசனை வஸ்துகள் வாயில் தங்கி விடுகின்றன. இவை நாக்கின் சுவையறியும் செல்களின் திறனை பாதிக்கிறது. ஆதலால், காப்பியின் சுவையும் மாறுகிறது. சிறு வயதில் ஒரு பரிசோதனை போல கோபால் பல்பொடி, வீக்கோ வஜ்ரதந்தி, கோல்கேட் பவுடர், கோல்கேட் பேஸ்ட், பினாகா (பின்னாளில் இதுவே சிபாகா), போர்ஹான்ஸ் என்றெல்லாம் உபயோகித்து காப்பி சாப்பிட்டு, வரும் வித்தியாசத்தை ஆராய்ந்திருக்கிறேன். இவைகளில் எதையாவது ஒன்றைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றால், வீக்கோ வஜ்ரதந்திக்குத் தான் என் ஓட்டு. இது எதுவுமே வேண்டாம் என்று வென்னீர் கொப்பளித்து காப்பி குடிப்பது அதை விட அருமை. குடித்து கொஞ்ச நேரம் கழித்து பல் துலக்கிக் கொள்ளலாம்.
அடுத்த பதிவில் இந்தியாவில் வேலை காரணமாக நான் சென்ற இடங்களில் குடித்த காப்பி பற்றியும், காப்பி பொடி (இன்ஸ்டன்ட்) தயார் செய்த ஒரு ஆலையில் தணிக்கைக்காக சென்றது பற்றியும் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி - 4
காப்பி - 3
காப்பி - 2
காப்பி - 1
சனி, ஆகஸ்ட் 26, 2006
காப்பி – 4
ஓட்டல்களில் காப்பி என்றவுடன் நினைவுக்கு வருவது அளவுதான்! எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், பயணங்கள் அதிகமானதால் ஓட்டல்களில் சாப்பிடுவது அதிகமானது. தமிழ்நாட்டில் அதிகமான ஓட்டல்களில் உள்ள டம்ளர், டபரா மிக மிக சின்னது. சொல்லப் போனால் குழந்தைகள் விளையாடும் சொப்பு விளையாட்டில் இருக்கும் அளவுதான். போதாக்குறைக்கு, அந்த டம்ளரிலும், "இந்த டம்ளர் XXX ஓட்டலிலிருந்து திருடப்பட்டது" என்று பொறித்திருப்பார்கள். ஒரு முறை வேலூரில் சாப்பிட்ட ஒட்டலில் இருந்த டம்ளரில் வேறு ஒரு ஓட்டல் பெயர் இருந்தது. விசாரித்ததில் பில் கொண்டுவந்த பணியாளர், முதலில் அந்தப் பெயர் தான் இருந்ததாகவும், பின் உரிமையாளர் புதுப் பெயர் மாற்றியதால், வெளியே போர்டில் வேறு பெயரும், டம்ளரில் வேறு பெயரும் இருப்பதாகவும் விளக்கினார்.
சரி அளவு தான் சின்னதாக இருக்கிறதே என்று பார்த்தால், காப்பியை அவர்கள் தரும் முறையும் வித்தியாசமானது. முதலில் டம்ளர் நிறைய காப்பியை ஊற்றி, பின் டபராவை கவிழ்த்து டம்ளரை மூடி, மொத்தத்தையும் தலை கீழாக கவிழ்துக் கொண்டு வருவார்கள். நம்மிடம் வந்து இருப்பது ஒரு டபரா, அதில் தலைகீழாக ஒரு டம்ளர்; டம்ளருக்குள்ளே படு சூடாக காப்பி! எடுப்பது அவ்வளவு சுலபமில்லை. டம்ளர் முழுதும் காப்பியிருப்பதால் வெளியே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக விசையோடு தான் டம்ளரை எடுக்க வேண்டும் (வெறுப்பேற்றும் பௌதீக விதி). சூடு, வேகமாய் இழுப்பதால் காப்பி நம் சட்டை/வேட்டியில் கொட்டும் அபாயம், எல்லாம் தாண்டி எடுத்தால், சக்கரையை கரைப்பதற்காகவும், சூட்டைக் குறைப்பதற்காகவும், ஆற்ற வேண்டியிருக்கும். இந்த வேலையைகள் அனைத்தையும் செய்து முடித்து சாப்பிட ஆரம்பித்தால், இரண்டு வாயோடு காப்பி காலி! இந்த வேலைக் களைப்புக்கே இன்னுமொரு காப்பி சாப்பிட வேண்டும் போல் இருக்கும்.
அமெரிக்காவில் காப்பி சூடாக இருக்கிறது என்று சொல்லவில்லை; கப்பில் எழுதவில்லை என்று காரணம் காட்டி, வழக்குத் தொடுத்து, காசு பண்ணிவிட்டார்கள்! நம்மூரில் சூடான காப்பியைக் கொட்டிக் கொண்டால், எல்லோரும் நக்கலாச் சிரிப்பார்கள். அங்கே டம்ளரில் எந்த ஓட்டலில் திருடப்பட்டது என்று எழுதினால், இங்கே ‘குடிக்கும் பானம் சூடாக இருக்கும்; கொட்டிக் கொண்டால் வலிக்கும் என்று எழுதுகிறார்கள். அமெரிக்க சட்டங்கள் போல இந்தியாவிலும் வந்துவிட்டால், டம்ளரில் இந்த மாதிரி வாக்கியங்களையும் பார்க்க நேரிடலாம்: "எச்சரிக்கை: இந்த டம்ளரை வாயில் வைத்துக் குடித்தால், வாயில் எந்த பாகமும் அறுபட்டு ரத்தம் வரலாம்". காரணம் இந்த எவர்சில்வர் டம்ளர்களில் விளிபுகள் மிகவும் கூரானவை, சமயத்தில் வெட்டுப் பட்டும் இருக்கும். உதடோ, நாக்கோ அறுபடும் சாத்தியக்கூறு உண்டு.
இரயில் பயணத்தில் நிலையத்தில் கிடைக்கும் காப்பி ஒரு தனி வகை. இங்கு காப்பி மட்டும் அனேகமாக பீங்கான் கோப்பையில் தான் கிடைக்கும். ஆனால் டீ கண்ணாடி டம்ளரில் தான். இரயில் நிலையம் ஒரு முக்கியமான பெரிய ஜங்க்ஷனாக இருந்து விட்டால், காப்பி டிகாஷன் முறையிலும், இன்ஸ்டன்ட் முறையிலும் கிடைக்கும். ஒரு எவர்சில்வர் பாத்திரத்திலிருந்தோ, அல்லது ஒரு பெரிய கெட்டிலிலிருந்தோ கப்பில் ஊற்றிக் கொடுப்பார்கள். ஒரு வசதி என்னவென்றால், இதற்காக இரயிலிலிருந்து கீழே இறங்க வேண்டாம். இந்திய இரயில்வேயில் (ஏ சி பெட்டி தவிர), ஜன்னலின் இடையே இறுக்கும் குறுக்குக் கம்பிக்குள் இந்த கப்பும், சாசரும் (பீங்கான் தட்டு) வந்து விடும். இரயில் கிளம்புவதற்கும் முன் குடித்து கப்பை திரும்பத் தருவதற்கு வசதியாக, காப்பி அதிக சூடாக இருக்காது; தவிர சாசரில் காப்பியை ஊற்றி 'சர்'ரென்று உறிஞ்சிக் குடித்துவிடலாம். சமயத்தில் வண்டி கிளம்பிவிட்டால், பெட்டியோடு கூட ஓடி வந்து கப்பைப் பெற்றுக் கொள்ளும் புண்ணியவான்களும் உண்டு. இந்த காப்பியில் ஒரு விதமான கரி வாசனை வரும் - நான் பள்ளியில் படிக்கும் போது (பள்ளியில் படிக்கும் போது பயணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான்; வடமாநிலங்களில் அமைப்பு வேறு - அது பற்றி பின்னொரு பதிவில்) குறைந்த அளவு டீசல் வண்டிகள் தான்; பெரும்பான்மையானவை கரி எஞ்ஜின்கள். அது ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டில் குடும்பத்தோடு பயணம் செய்யும் போது, அப்பா அனேகமாக கீழே இறங்கிப் போய், ஒரு கூஜாவில் ஐந்து கோப்பை வாங்கி வருவார்.
பஸ் பயணங்களில், முக்கியமாக தொலைதூர, இரவுப் பயணங்களில், வழியில் இருக்கும் தெருவோர டீக் கடைகளில் இருக்கும் காப்பி அனேகமாக 'இன்ஸ்டன்ட்' வகை. அனேகம் பேர் தேனீர் தான் சாப்பிடுவதால், காப்பி டிகாஷன் போட்டு சரிப்படாது என்பதால் எளிதான வழியில் காப்பி. பெரும்பான்மையான கடைகளில் 'புரூ' தான். டீயை ஆற்றும் அதே தகர டப்பாவில் மேலிருந்து கீழே வேகமாக ஆற்றி, நுரையோடு தருவார்கள். டீயோ, காப்பியோ, இந்த ஆற்றும் முறையே அலாதியானது. புவியீர்ப்பு விசையின் தாக்கத்தை மிக அனாயாசமாக சமாளித்து, ஒரு சிறிய இடத்துக்குள் படு சூடான திரவத்தை ஊற்றுவது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். இந்த மாதிரி இரவுக் கடைகள் அனேகமாக பஸ் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் சலுகைகள் தருவதால், அவசரப் பட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. கடைக்காரரே சமயத்தில் நமக்கு வண்டி கிளம்புவதை அறிவிப்பதோடு, டிரைவருக்கும் ஒரு 'ரெகமண்டேஷன்' தருவார், கொஞ்சம் தாமதமாகக் கிளம்ப! இந்தக் காப்பியில் மிக மிக லேசான டீசல் வாசனை - இன்ஸ்டன்ட் என்பதால் அதிகமாகத் தெரியாது. பாலும் தண்ணியாக இருப்பதால், கொஞ்சம் டிகாஷன் சாப்பிடுவது போலத் தோன்றும்.
அடுத்த பதிவில் கல்யாணக் காப்பி பற்றியும், காப்பி குடிக்கும் முறையில் நான் பார்த்த விஷயங்களையும் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி – 3
காப்பி – 2
காப்பி – 1
சரி அளவு தான் சின்னதாக இருக்கிறதே என்று பார்த்தால், காப்பியை அவர்கள் தரும் முறையும் வித்தியாசமானது. முதலில் டம்ளர் நிறைய காப்பியை ஊற்றி, பின் டபராவை கவிழ்த்து டம்ளரை மூடி, மொத்தத்தையும் தலை கீழாக கவிழ்துக் கொண்டு வருவார்கள். நம்மிடம் வந்து இருப்பது ஒரு டபரா, அதில் தலைகீழாக ஒரு டம்ளர்; டம்ளருக்குள்ளே படு சூடாக காப்பி! எடுப்பது அவ்வளவு சுலபமில்லை. டம்ளர் முழுதும் காப்பியிருப்பதால் வெளியே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக விசையோடு தான் டம்ளரை எடுக்க வேண்டும் (வெறுப்பேற்றும் பௌதீக விதி). சூடு, வேகமாய் இழுப்பதால் காப்பி நம் சட்டை/வேட்டியில் கொட்டும் அபாயம், எல்லாம் தாண்டி எடுத்தால், சக்கரையை கரைப்பதற்காகவும், சூட்டைக் குறைப்பதற்காகவும், ஆற்ற வேண்டியிருக்கும். இந்த வேலையைகள் அனைத்தையும் செய்து முடித்து சாப்பிட ஆரம்பித்தால், இரண்டு வாயோடு காப்பி காலி! இந்த வேலைக் களைப்புக்கே இன்னுமொரு காப்பி சாப்பிட வேண்டும் போல் இருக்கும்.
அமெரிக்காவில் காப்பி சூடாக இருக்கிறது என்று சொல்லவில்லை; கப்பில் எழுதவில்லை என்று காரணம் காட்டி, வழக்குத் தொடுத்து, காசு பண்ணிவிட்டார்கள்! நம்மூரில் சூடான காப்பியைக் கொட்டிக் கொண்டால், எல்லோரும் நக்கலாச் சிரிப்பார்கள். அங்கே டம்ளரில் எந்த ஓட்டலில் திருடப்பட்டது என்று எழுதினால், இங்கே ‘குடிக்கும் பானம் சூடாக இருக்கும்; கொட்டிக் கொண்டால் வலிக்கும் என்று எழுதுகிறார்கள். அமெரிக்க சட்டங்கள் போல இந்தியாவிலும் வந்துவிட்டால், டம்ளரில் இந்த மாதிரி வாக்கியங்களையும் பார்க்க நேரிடலாம்: "எச்சரிக்கை: இந்த டம்ளரை வாயில் வைத்துக் குடித்தால், வாயில் எந்த பாகமும் அறுபட்டு ரத்தம் வரலாம்". காரணம் இந்த எவர்சில்வர் டம்ளர்களில் விளிபுகள் மிகவும் கூரானவை, சமயத்தில் வெட்டுப் பட்டும் இருக்கும். உதடோ, நாக்கோ அறுபடும் சாத்தியக்கூறு உண்டு.
இரயில் பயணத்தில் நிலையத்தில் கிடைக்கும் காப்பி ஒரு தனி வகை. இங்கு காப்பி மட்டும் அனேகமாக பீங்கான் கோப்பையில் தான் கிடைக்கும். ஆனால் டீ கண்ணாடி டம்ளரில் தான். இரயில் நிலையம் ஒரு முக்கியமான பெரிய ஜங்க்ஷனாக இருந்து விட்டால், காப்பி டிகாஷன் முறையிலும், இன்ஸ்டன்ட் முறையிலும் கிடைக்கும். ஒரு எவர்சில்வர் பாத்திரத்திலிருந்தோ, அல்லது ஒரு பெரிய கெட்டிலிலிருந்தோ கப்பில் ஊற்றிக் கொடுப்பார்கள். ஒரு வசதி என்னவென்றால், இதற்காக இரயிலிலிருந்து கீழே இறங்க வேண்டாம். இந்திய இரயில்வேயில் (ஏ சி பெட்டி தவிர), ஜன்னலின் இடையே இறுக்கும் குறுக்குக் கம்பிக்குள் இந்த கப்பும், சாசரும் (பீங்கான் தட்டு) வந்து விடும். இரயில் கிளம்புவதற்கும் முன் குடித்து கப்பை திரும்பத் தருவதற்கு வசதியாக, காப்பி அதிக சூடாக இருக்காது; தவிர சாசரில் காப்பியை ஊற்றி 'சர்'ரென்று உறிஞ்சிக் குடித்துவிடலாம். சமயத்தில் வண்டி கிளம்பிவிட்டால், பெட்டியோடு கூட ஓடி வந்து கப்பைப் பெற்றுக் கொள்ளும் புண்ணியவான்களும் உண்டு. இந்த காப்பியில் ஒரு விதமான கரி வாசனை வரும் - நான் பள்ளியில் படிக்கும் போது (பள்ளியில் படிக்கும் போது பயணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தான்; வடமாநிலங்களில் அமைப்பு வேறு - அது பற்றி பின்னொரு பதிவில்) குறைந்த அளவு டீசல் வண்டிகள் தான்; பெரும்பான்மையானவை கரி எஞ்ஜின்கள். அது ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டில் குடும்பத்தோடு பயணம் செய்யும் போது, அப்பா அனேகமாக கீழே இறங்கிப் போய், ஒரு கூஜாவில் ஐந்து கோப்பை வாங்கி வருவார்.
பஸ் பயணங்களில், முக்கியமாக தொலைதூர, இரவுப் பயணங்களில், வழியில் இருக்கும் தெருவோர டீக் கடைகளில் இருக்கும் காப்பி அனேகமாக 'இன்ஸ்டன்ட்' வகை. அனேகம் பேர் தேனீர் தான் சாப்பிடுவதால், காப்பி டிகாஷன் போட்டு சரிப்படாது என்பதால் எளிதான வழியில் காப்பி. பெரும்பான்மையான கடைகளில் 'புரூ' தான். டீயை ஆற்றும் அதே தகர டப்பாவில் மேலிருந்து கீழே வேகமாக ஆற்றி, நுரையோடு தருவார்கள். டீயோ, காப்பியோ, இந்த ஆற்றும் முறையே அலாதியானது. புவியீர்ப்பு விசையின் தாக்கத்தை மிக அனாயாசமாக சமாளித்து, ஒரு சிறிய இடத்துக்குள் படு சூடான திரவத்தை ஊற்றுவது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். இந்த மாதிரி இரவுக் கடைகள் அனேகமாக பஸ் டிரைவருக்கும், கண்டக்டருக்கும் சலுகைகள் தருவதால், அவசரப் பட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. கடைக்காரரே சமயத்தில் நமக்கு வண்டி கிளம்புவதை அறிவிப்பதோடு, டிரைவருக்கும் ஒரு 'ரெகமண்டேஷன்' தருவார், கொஞ்சம் தாமதமாகக் கிளம்ப! இந்தக் காப்பியில் மிக மிக லேசான டீசல் வாசனை - இன்ஸ்டன்ட் என்பதால் அதிகமாகத் தெரியாது. பாலும் தண்ணியாக இருப்பதால், கொஞ்சம் டிகாஷன் சாப்பிடுவது போலத் தோன்றும்.
அடுத்த பதிவில் கல்யாணக் காப்பி பற்றியும், காப்பி குடிக்கும் முறையில் நான் பார்த்த விஷயங்களையும் தருகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி – 3
காப்பி – 2
காப்பி – 1
செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006
காப்பி - 3
என்னுடைய ஆறாவது/ஏழாவது வகுப்புகள் பட்டுக்கோட்டையில், எட்டாவதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மன்னார்குடியில், வழக்கம் போல் அப்பாவின் உத்தியோக மாற்றம் காரணமாக. இந்த இரண்டு இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காப்பி முறை, ஆனால் சென்னையில் இருந்த முறையிலிருந்து பெரிய மாற்றம்.
பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்ற இடங்களில் பால் வருவது அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் சொசைட்டிகள் மூலமாக. சைக்கிள் காரியரில் ஒரு பெரிய பாத்திரத்தில் (குழாய் வைத்தது), காலையிலும், மாலையிலும் எடுத்து வருவார்கள். ஒவ்வொரு சைக்கிளுக்கும் ஒரு பெரிய மணி, சைக்கிள் பாரில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். காலால் பெடலை மிதித்துக் கொண்டே தெரு முனை வரும் போது, கால் முட்டியாலேயே அந்த மணியை அடிப்பார்கள். மணி சத்தத்தை வைத்துக் கொண்டே,‘எடமேலையூர் பால்’, ‘மதுக்கூர் பால்’, ‘சொசைட்டி பால்’ (மன்னார்குடி) என்றேல்லாம் சொல்லுவோம். இதில் மதுக்கூர் பாலும், எடமேலையூர் பாலும் பதப்படுத்தப் படாதவை - அருமையான வாசனை.
இந்த காரியரிலும் இரண்டு வகை. சாதாரண அளவுள்ள காரியரில் ஒரு பாத்திரம் தான் வரும். மன்னார்குடி சொசைட்டி பால் இந்த வகையைச் சார்ந்தது. மதுக்கூரிலிருந்து வரும் பால் காரியர்களில் சில சற்று வித்தியாசமானவை. இந்த சைக்கிள்களில் பின்புறக் காரியர் கொஞ்சம் பெரிசு (ஓகே சோப் விளம்பரம் போல: உண்மையிலேயே ரொம்பப் பெரிசு). சைக்கிளிலில் இருக்கும் இரும்புச்சட்டம் போதாதென்று, சில கட்டைகளையும் முட்டுக் கொடுத்து வைக்கப் பட்டிருக்கும். இதில் இரண்டு பால் பாத்திரங்கள் - ஒன்று வழக்கமான அளவு, மற்றொன்று கொஞ்சம் சிறிசு. அனேமாக எருமைப் பால் தான் பெரிய காரியரில் இருக்கும். பதப் படுத்தப் பட்டதென்றால் எருமைப் பாலும், பசும் பாலும் சேர்ந்த கலவை தான். இந்த சின்னப் பாத்திரத்தில் ஸ்பெஷல் பால் (பசும் பால்); சற்று விலையும் அதிகம். பால் வினியோகம் செய்து வரும் இவர்களிடம் சற்று பேச்சுக் கொடுத்தால் விசித்திரமான விஷயங்களும், சமயத்தில் வம்புகளும் கிடைக்கும்.
மதுக்கூரிலிருந்து மன்னார்குடி வரும் சாலை தார் ரோடு - ஆனால் ரொம்பவும் அகலமானது அல்ல. தார் ரோடுக்கு இரு புறமும் வெறும் மணலும், தூசியும் தான், எப்போதாவது கடினமான தரை. இரு பேருந்துகள் இந்தச் சாலையில் எதிரெதிராக வந்து விட்டால் எழுதாத சட்டம், ஒரு பக்க சக்கரங்கள் தார் ரோடிலும் மற்றொரு பக்க சக்கரங்கள் மணலிலும் தான் போக வேண்டும். இந்த எட்டு, பத்து கிலோமிட்டர் பயத்தில் பத்து முறையாவது, இந்த பால் சைக்கிள்கள் மணலில் இறங்க வேண்டியிருக்கும். சைக்கிளிலிருந்து இறங்கி தள்ளிக் கொண்டு, பேருந்து போன பின் மறுபடி உதைத்து ஏறி வர வேண்டியது தான். நிச்சயமாக எளிதானது இல்லை. அறுவடைக் காலத்தில், நெற்போர் அடிக்க அனேகமாக இந்த தார் சாலைகளைத்தான் உபயோகிப்பார்கள். காய்ந்த நெற்பயிரின் மேல் சைக்கிளை ஒட்டி வருவது, ஓட்டுபவருக்கு வெறுப்பேற்றும் விஷயம். கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் ஒரு பெரிய பித்தளை பாத்திரத்தில் பாலை எடுத்து வைத்துக் கொண்டு சைக்கிளை இப்படி லாவகமாக ஓட்டி வந்த அந்த பெரும் உழைப்பாளிகளை இப்போது நினைத்தாலும் மனதில் ஒரு மரியாதை வருகிறது!
நிறைய வீடுகளில் காப்பிக் கொட்டை வாங்கி அரைக்கும் வழக்கம் இருந்தது. பொடியாகவே கடையில் வாங்கி வருவது சுலபமானதாக இருந்ததாலும், சென்னையில் நான்கு ஆண்டுகள் பொடி வாங்கிப் பழகிவிட்டதாலும், எங்கள் வீட்டில் அரைப்பது பற்றி யோசிக்கக் கூட இல்லை. மன்னார்குடியில் நிறைய பிரபலமான காப்பிக் கடைகள் இருந்தாலும், தேசிய மேல் நிலைப் பள்ளிக்கு எதிரில் 'சுதர்ஸன் காபி' கடையில் தான் பொடி வாங்குவோம். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் நிரந்தர வாடிக்கைக்காரர்களுக்கு மட்டும் 'டெய்லி ஷீட்' காலண்டர் கிடைக்கும். 'ப்ளாண்டேஷன் ஏ', 'பீப்ரி' என்று இரண்டு வகைக் கொட்டைகள். தனியாகக் கேட்டு சிக்கரி கலந்து கொள்ளலாம். எங்கள் வீட்டில் சிக்கரி கிடையாது; எப்போதும் பீப்ரி கொட்டைகள் தான். இந்தக் காப்பிக்கும் மணம் உண்டு, கொஞ்சம் வித்தியாசமானது. பால் வாசனை தூக்கலாக தெரியும். அடுப்பு குமுட்டி இல்லை - அப்போது பிரபலமான 'நூதன்' ஸ்டவ்! எங்கள் உறவினர் டில்லி போய் வந்த போது வாங்கி வந்தது. கிரசின் வாசனை எல்லாம் இல்லை - வெறும் காப்பியும் பாலும் தான்; ஆகையால் போதை இல்லை! காப்பி பில்டரும் பித்தளையில் இருந்து எவர்சில்வருக்கு மொத்தமாக மாறியது; பித்தளை பில்டர் பரண் ஏறியது.
அடுத்த பதிவில் பயணங்களின் போது இரயில் நிலையத்தில், தெருவோரக் கடைகளில், ஒட்டல்களில் குடித்த காப்பியைப் பற்றி பதிகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி 1
காப்பி 2
பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்ற இடங்களில் பால் வருவது அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் சொசைட்டிகள் மூலமாக. சைக்கிள் காரியரில் ஒரு பெரிய பாத்திரத்தில் (குழாய் வைத்தது), காலையிலும், மாலையிலும் எடுத்து வருவார்கள். ஒவ்வொரு சைக்கிளுக்கும் ஒரு பெரிய மணி, சைக்கிள் பாரில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். காலால் பெடலை மிதித்துக் கொண்டே தெரு முனை வரும் போது, கால் முட்டியாலேயே அந்த மணியை அடிப்பார்கள். மணி சத்தத்தை வைத்துக் கொண்டே,‘எடமேலையூர் பால்’, ‘மதுக்கூர் பால்’, ‘சொசைட்டி பால்’ (மன்னார்குடி) என்றேல்லாம் சொல்லுவோம். இதில் மதுக்கூர் பாலும், எடமேலையூர் பாலும் பதப்படுத்தப் படாதவை - அருமையான வாசனை.
இந்த காரியரிலும் இரண்டு வகை. சாதாரண அளவுள்ள காரியரில் ஒரு பாத்திரம் தான் வரும். மன்னார்குடி சொசைட்டி பால் இந்த வகையைச் சார்ந்தது. மதுக்கூரிலிருந்து வரும் பால் காரியர்களில் சில சற்று வித்தியாசமானவை. இந்த சைக்கிள்களில் பின்புறக் காரியர் கொஞ்சம் பெரிசு (ஓகே சோப் விளம்பரம் போல: உண்மையிலேயே ரொம்பப் பெரிசு). சைக்கிளிலில் இருக்கும் இரும்புச்சட்டம் போதாதென்று, சில கட்டைகளையும் முட்டுக் கொடுத்து வைக்கப் பட்டிருக்கும். இதில் இரண்டு பால் பாத்திரங்கள் - ஒன்று வழக்கமான அளவு, மற்றொன்று கொஞ்சம் சிறிசு. அனேமாக எருமைப் பால் தான் பெரிய காரியரில் இருக்கும். பதப் படுத்தப் பட்டதென்றால் எருமைப் பாலும், பசும் பாலும் சேர்ந்த கலவை தான். இந்த சின்னப் பாத்திரத்தில் ஸ்பெஷல் பால் (பசும் பால்); சற்று விலையும் அதிகம். பால் வினியோகம் செய்து வரும் இவர்களிடம் சற்று பேச்சுக் கொடுத்தால் விசித்திரமான விஷயங்களும், சமயத்தில் வம்புகளும் கிடைக்கும்.
மதுக்கூரிலிருந்து மன்னார்குடி வரும் சாலை தார் ரோடு - ஆனால் ரொம்பவும் அகலமானது அல்ல. தார் ரோடுக்கு இரு புறமும் வெறும் மணலும், தூசியும் தான், எப்போதாவது கடினமான தரை. இரு பேருந்துகள் இந்தச் சாலையில் எதிரெதிராக வந்து விட்டால் எழுதாத சட்டம், ஒரு பக்க சக்கரங்கள் தார் ரோடிலும் மற்றொரு பக்க சக்கரங்கள் மணலிலும் தான் போக வேண்டும். இந்த எட்டு, பத்து கிலோமிட்டர் பயத்தில் பத்து முறையாவது, இந்த பால் சைக்கிள்கள் மணலில் இறங்க வேண்டியிருக்கும். சைக்கிளிலிருந்து இறங்கி தள்ளிக் கொண்டு, பேருந்து போன பின் மறுபடி உதைத்து ஏறி வர வேண்டியது தான். நிச்சயமாக எளிதானது இல்லை. அறுவடைக் காலத்தில், நெற்போர் அடிக்க அனேகமாக இந்த தார் சாலைகளைத்தான் உபயோகிப்பார்கள். காய்ந்த நெற்பயிரின் மேல் சைக்கிளை ஒட்டி வருவது, ஓட்டுபவருக்கு வெறுப்பேற்றும் விஷயம். கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் ஒரு பெரிய பித்தளை பாத்திரத்தில் பாலை எடுத்து வைத்துக் கொண்டு சைக்கிளை இப்படி லாவகமாக ஓட்டி வந்த அந்த பெரும் உழைப்பாளிகளை இப்போது நினைத்தாலும் மனதில் ஒரு மரியாதை வருகிறது!
நிறைய வீடுகளில் காப்பிக் கொட்டை வாங்கி அரைக்கும் வழக்கம் இருந்தது. பொடியாகவே கடையில் வாங்கி வருவது சுலபமானதாக இருந்ததாலும், சென்னையில் நான்கு ஆண்டுகள் பொடி வாங்கிப் பழகிவிட்டதாலும், எங்கள் வீட்டில் அரைப்பது பற்றி யோசிக்கக் கூட இல்லை. மன்னார்குடியில் நிறைய பிரபலமான காப்பிக் கடைகள் இருந்தாலும், தேசிய மேல் நிலைப் பள்ளிக்கு எதிரில் 'சுதர்ஸன் காபி' கடையில் தான் பொடி வாங்குவோம். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் நிரந்தர வாடிக்கைக்காரர்களுக்கு மட்டும் 'டெய்லி ஷீட்' காலண்டர் கிடைக்கும். 'ப்ளாண்டேஷன் ஏ', 'பீப்ரி' என்று இரண்டு வகைக் கொட்டைகள். தனியாகக் கேட்டு சிக்கரி கலந்து கொள்ளலாம். எங்கள் வீட்டில் சிக்கரி கிடையாது; எப்போதும் பீப்ரி கொட்டைகள் தான். இந்தக் காப்பிக்கும் மணம் உண்டு, கொஞ்சம் வித்தியாசமானது. பால் வாசனை தூக்கலாக தெரியும். அடுப்பு குமுட்டி இல்லை - அப்போது பிரபலமான 'நூதன்' ஸ்டவ்! எங்கள் உறவினர் டில்லி போய் வந்த போது வாங்கி வந்தது. கிரசின் வாசனை எல்லாம் இல்லை - வெறும் காப்பியும் பாலும் தான்; ஆகையால் போதை இல்லை! காப்பி பில்டரும் பித்தளையில் இருந்து எவர்சில்வருக்கு மொத்தமாக மாறியது; பித்தளை பில்டர் பரண் ஏறியது.
அடுத்த பதிவில் பயணங்களின் போது இரயில் நிலையத்தில், தெருவோரக் கடைகளில், ஒட்டல்களில் குடித்த காப்பியைப் பற்றி பதிகிறேன்.
முந்தைய பதிவுகள்
காப்பி 1
காப்பி 2
ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2006
காப்பி - 2
இராமநாதபுரத்தில் முதல் வகுப்பு முடித்தவுடன் சென்னை வந்தேன் - தந்தையாரின் உத்தியோக மாற்றம் காரணமாக. எல்லாமே புதுசு, காப்பிக்கு பால் உட்பட. அப்போதுதான் ஆவின் புட்டிப் பால் வந்திருந்த சமயம். வீட்டுக்கு ஒரு அட்டை - கலர் கலராக - ஒரு பாட்டிலா, இரண்டு பாட்டிலா என்று அடையாளம் காட்ட. எங்கள் தெருவில் நான்கு ஐந்து வீட்டுக்கு ஒரு அம்மாள் (பேர் தெரியாது; ஆயா என்றுதான் எல்லோரும் - அவரை விட வயதானவர் உட்பட- கூப்பிடுவோம்) மொத்தமாக அட்டையை எடுத்துக் கொண்டு போய் பாட்டில் அத்தனையும் இரண்டு பெரிய துணிப்பைகளில் போட்டு எடுத்து வந்து கொடுப்பார். பாட்டில் வெளியே அழுக்கு அதிகம், முதலில் பாட்டிலை தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான், மூடியையே திறப்போம். மூடி கலர் கலராக இருக்கும் அலுமினியத் தாள். அந்தக் காலத்தில் இந்த மூடியை எல்லாம் சேகரித்து, மாலையாகவோ, அல்லது நவராத்திரிக்கு கொலுவில் தோரணமாகவோ தொங்க விடாத வீடுகளே இல்லை; அப்படிப் பிரபலமான ஒரு மூடி.
புட்டிப் பாலின் வாசனை ஒரு விதமானது. பாட்டிலோடு, அதுவும் அதிக பாட்டில்கள் இருக்கும் பையோடு இருக்கையில் ஒரு வாசனை. பாட்டிலை அலம்பிவிட்டு, பாலை பாத்திரத்தில் விடும் போது வேறு விதமான வாசனை - கொஞ்சம் தாக்கம் குறைவாக. காய்ச்சியவுடன், மெல்லிய பால் வாசனை மட்டும் தான். அது மட்டுமல்ல, பாட்டிலுக்கு எவ்வளவு வேர்த்திருக்கிறது என்பதைப் பொறுத்தும் வாசனை கொஞ்சம் மாறும். பதப் படுத்தப்பட்டு, குளிர்வித்த பாலின் வாசனை (வேர்த்த பாட்டில்) கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆவின் அப்போதுதான் வந்திருந்தது என்பதால், அம்மா அதே தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் தினமும் கொஞ்சம் பால் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார் - ஒரு பிளான் B வேண்டாமா? அது கறந்த பால் என்பதால், வாங்கி வரும் பாத்திரத்தில் வேர்க்காது. ஔவையாருக்கு முருகன் கேட்ட 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' கேள்வி போல் 'வேர்த்த பால் வேண்டுமா? வேர்க்காத பால் வேண்டுமா'? என்று கேட்போம்! எந்தப் பால் என்பதைப் பொறுத்து காப்பியின் சுவை, வாசனை கொஞ்சம் மாறும்.
இந்த சமயத்தில் பில்டரும் பித்தளையிலிருந்து குட்டி எவர்சில்வருக்கு மாறியது. வீட்டிற்கு உறவினர் வந்தால் மட்டும் பித்தளை பில்டர் வந்தது - அதிகம் டிகாஷன் வேண்டுமே! காப்பிக் கொட்டை வாங்கி அரைப்பதும் குறைந்து, பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அப்பா தினம் வேலைக்காக பாரிஸ் கார்னர் சென்று வந்ததால் மாதத்தில் ஒரு முறை வாங்கி வருவார். குமுட்டி அடுப்பின் உபயோகமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது, கிரசின் ஸ்டவ் வந்ததால்.
நாங்கள் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வருவதற்கு சற்று முன்னால் புட்டிப் பாலோடு, பாலிதீன் பைகளில் பால் தருவதை ஆவின் ஆரம்பித்தது. இதில் ஆயாவுக்கு ரொம்ப சந்தோஷம். பைகளின் கனம் குறைந்தது, அதிக வீடுகளுக்கு பால் எடுத்து வர ஆரம்பித்ததால், ஆயாவுக்கும் வருமானம். மூடி சேர்ப்பது குறைந்தாலும், பழைய பால் கவர்களினால் வேறு உபயோகம் வந்ததால், அம்மாவுக்கும் சந்தோஷம்தான். பாலித்தீன் பையும் அழுக்குதான், அதனால் அதையும் முதலில் தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான் வெட்ட வேண்டும். ஆனால் பாலின் சுவையில் ஒரு மாறுதலும் இல்லை.
இதன் நடுவே, சென்னையிலேயே உறவினர் வீட்டுக்குப் (பெசன்ட் நகர் என்று நினைவு) போன போது, அவர்கள் வீட்டுக்கருகில் டோக்கன் போட்டால் பால் தரும் நிலையங்களைப் பார்த்து பிரமித்ததுண்டு. முதலில் ஒரு கவுண்டரில் பைசா கொடுத்து டோக்கன் வாங்க வேண்டும். பின் பாத்திரத்தை அருகில் உள்ள குழாய்க்கடியில் வைத்து பின்னர் அந்த டோக்கனை குழாய்க்கு அருகில் இருக்கும் ஒட்டையில் போட வேண்டும். பத்து செகண்டுக்குள் பால் குழாயிலிருந்து கீழேயுள்ள பாத்திரத்தில்! அந்த அறைக்குள் நின்று கொண்டு யாரோ டோக்கனைப் பெற்றுக் கொண்டு அளந்து பாலை குழாய் வழியாக விடுகிறார்கள் என்றும் நினைத்ததுண்டு. அது இயந்திரம் தான் என்று ஊர்ஜிதமானதும், சோடா பாட்டிலின் மூடியை தட்டை செய்து வெட்டிப் போட்டால் பால் வருமா என்று அந்த உறவினர் வீட்டுப் பையன்களோடு விவாதித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்தப் பாலில் புட்டிப் பாலில் வாசனை இருக்காது, அதே சமயம் வெளியே வாங்கும் பாலின் வாசனையும் இருக்காது. சொல்லப் போனால் தனித்த வாசனையே இல்லாத பால்.
இந்தப் பதிவே கொஞ்சம் பெரிதாகிவிட்டதால், தஞ்சை ஜில்லாவில் வசித்த போது இருந்த காப்பி முறையைப் அடுத்த பதிவில் தருகிறேன்.
முந்தைய பதிவு - காப்பி 1
புட்டிப் பாலின் வாசனை ஒரு விதமானது. பாட்டிலோடு, அதுவும் அதிக பாட்டில்கள் இருக்கும் பையோடு இருக்கையில் ஒரு வாசனை. பாட்டிலை அலம்பிவிட்டு, பாலை பாத்திரத்தில் விடும் போது வேறு விதமான வாசனை - கொஞ்சம் தாக்கம் குறைவாக. காய்ச்சியவுடன், மெல்லிய பால் வாசனை மட்டும் தான். அது மட்டுமல்ல, பாட்டிலுக்கு எவ்வளவு வேர்த்திருக்கிறது என்பதைப் பொறுத்தும் வாசனை கொஞ்சம் மாறும். பதப் படுத்தப்பட்டு, குளிர்வித்த பாலின் வாசனை (வேர்த்த பாட்டில்) கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆவின் அப்போதுதான் வந்திருந்தது என்பதால், அம்மா அதே தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் தினமும் கொஞ்சம் பால் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார் - ஒரு பிளான் B வேண்டாமா? அது கறந்த பால் என்பதால், வாங்கி வரும் பாத்திரத்தில் வேர்க்காது. ஔவையாருக்கு முருகன் கேட்ட 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' கேள்வி போல் 'வேர்த்த பால் வேண்டுமா? வேர்க்காத பால் வேண்டுமா'? என்று கேட்போம்! எந்தப் பால் என்பதைப் பொறுத்து காப்பியின் சுவை, வாசனை கொஞ்சம் மாறும்.
இந்த சமயத்தில் பில்டரும் பித்தளையிலிருந்து குட்டி எவர்சில்வருக்கு மாறியது. வீட்டிற்கு உறவினர் வந்தால் மட்டும் பித்தளை பில்டர் வந்தது - அதிகம் டிகாஷன் வேண்டுமே! காப்பிக் கொட்டை வாங்கி அரைப்பதும் குறைந்து, பொடியாகவே வாங்க ஆரம்பித்தோம். அப்பா தினம் வேலைக்காக பாரிஸ் கார்னர் சென்று வந்ததால் மாதத்தில் ஒரு முறை வாங்கி வருவார். குமுட்டி அடுப்பின் உபயோகமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது, கிரசின் ஸ்டவ் வந்ததால்.
நாங்கள் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வருவதற்கு சற்று முன்னால் புட்டிப் பாலோடு, பாலிதீன் பைகளில் பால் தருவதை ஆவின் ஆரம்பித்தது. இதில் ஆயாவுக்கு ரொம்ப சந்தோஷம். பைகளின் கனம் குறைந்தது, அதிக வீடுகளுக்கு பால் எடுத்து வர ஆரம்பித்ததால், ஆயாவுக்கும் வருமானம். மூடி சேர்ப்பது குறைந்தாலும், பழைய பால் கவர்களினால் வேறு உபயோகம் வந்ததால், அம்மாவுக்கும் சந்தோஷம்தான். பாலித்தீன் பையும் அழுக்குதான், அதனால் அதையும் முதலில் தண்ணீரால் அலம்பிவிட்டுத்தான் வெட்ட வேண்டும். ஆனால் பாலின் சுவையில் ஒரு மாறுதலும் இல்லை.
இதன் நடுவே, சென்னையிலேயே உறவினர் வீட்டுக்குப் (பெசன்ட் நகர் என்று நினைவு) போன போது, அவர்கள் வீட்டுக்கருகில் டோக்கன் போட்டால் பால் தரும் நிலையங்களைப் பார்த்து பிரமித்ததுண்டு. முதலில் ஒரு கவுண்டரில் பைசா கொடுத்து டோக்கன் வாங்க வேண்டும். பின் பாத்திரத்தை அருகில் உள்ள குழாய்க்கடியில் வைத்து பின்னர் அந்த டோக்கனை குழாய்க்கு அருகில் இருக்கும் ஒட்டையில் போட வேண்டும். பத்து செகண்டுக்குள் பால் குழாயிலிருந்து கீழேயுள்ள பாத்திரத்தில்! அந்த அறைக்குள் நின்று கொண்டு யாரோ டோக்கனைப் பெற்றுக் கொண்டு அளந்து பாலை குழாய் வழியாக விடுகிறார்கள் என்றும் நினைத்ததுண்டு. அது இயந்திரம் தான் என்று ஊர்ஜிதமானதும், சோடா பாட்டிலின் மூடியை தட்டை செய்து வெட்டிப் போட்டால் பால் வருமா என்று அந்த உறவினர் வீட்டுப் பையன்களோடு விவாதித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்தப் பாலில் புட்டிப் பாலில் வாசனை இருக்காது, அதே சமயம் வெளியே வாங்கும் பாலின் வாசனையும் இருக்காது. சொல்லப் போனால் தனித்த வாசனையே இல்லாத பால்.
இந்தப் பதிவே கொஞ்சம் பெரிதாகிவிட்டதால், தஞ்சை ஜில்லாவில் வசித்த போது இருந்த காப்பி முறையைப் அடுத்த பதிவில் தருகிறேன்.
முந்தைய பதிவு - காப்பி 1
சனி, ஆகஸ்ட் 19, 2006
காப்பி - 1
நிறைய இடங்களில் காபி என்று எழுதியதைப் பார்த்திருந்தாலும், எனக்கு காப்பி என்று எழுதியே பழகிவிட்டது; எது சரி? காபியா, காப்பியா? இந்த வருட ஆரம்பத்தில் எடுத்த ஒரு முடிவு ஒரு நாளைக்கு இரண்டு கோப்பைக்கு மேல் காப்பி குடிப்பதில்லை என்று. முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும் பழக்கத்தை சட்டென்று விட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உத்தேசம். எப்போதாவது தான் சக்கரை சேர்த்துக் கொள்கிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் (வருடங்களில்?) மொத்தமாக விட்டு விடலாம் என்று எண்ணம். காப்பி குடிப்பதை விடப் போகிறேன் என்பதால், இந்தப் பதிவுகள் ஒரு மாதிரியான நினைவு அஞ்சலி என்று வைத்துக் கொள்ளலாம்.
என் நினைவில் நிற்கிற காப்பி தொடர்பான விஷயங்களில் முதலாவது எது என்று யோசித்தால், நான்கு வயது இருக்கும் போது மாதத்திற்கு ஒரு முறை என் அம்மா காப்பிக் கொட்டைகளை வறுத்ததுதான். இராமநாதபுரத்தில் வடக்குத் தெருவில் எங்கள் வீடு. ஒரு விறகு அடுப்பில் இரும்பு வாணலியில் பச்சைக் கொட்டைகளைப் போட்டு அவை கருக்கும் வரை நன்கு வறுத்து, கூடத்தில் சுத்தம் செய்த தரையில் சூடு ஆறுவதற்காக பரப்பி வைப்பார்கள். புகையும், காப்பிக் கொட்டை வறுக்கும் வாசனையும் கலந்து வீடு முழுவதும் அடிக்கும். பொழுது போகாமல் அவ்வப் போது கசப்பான வறுபட்ட காப்பிக் கொட்டைகளைச் சாப்பிடுவேன். சூடு ஆறியதும், அந்தக் கொட்டைகளை ஒரு சின்னதான காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினில் - ஒரு சமயத்தில் இரண்டு கைப்பிடி தான் அரைக்க முடியும் - அம்மாவுக்கு உதவியாக அரைப்பேன். அரைத்து தட்டில் விழும் பொடியை டப்பாவில் போட்டு வைப்பது அம்மாவின் வேலை - நான்கு வயதில் எனக்கு கீழே கொட்டத்தான் தெரியும்!
வறுத்த காப்பிக் கொட்டைக்கு இந்த மணம் என்றால், காப்பிக்கு வேறு விதமான வாசனை. அனேகமாக பாலைக் காய்ச்சுவது குமுட்டி அடுப்பில்தான். இரும்பில் ஒரு கோப்பை வடிவில் இருக்கும். கரியைப் போட்டு எரித்து, பாத்திரத்தை கரியின் மேல் வைத்து பாலைக் காய்ச்சுவார்கள். கரியைப் பற்ற வைக்க முதலில் சூடம், தேங்காய் நார்/மட்டை, மண்ணெண்ணை போன்றவைகள் உபயோகப் படுத்தப் படும். கரி நன்றாக எரிய அவ்வப் போது ஊத வேண்டியிருக்கும்.
காப்பி பில்டர் பித்தளையில் பெரிதாக இருக்கும். ஒரு முறை தொட்டு கை சுட்டுவிட்டதால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று! முதலில் காப்பிப் பொடியைப் பில்டரின் மேல் பாத்திரத்தில் போட்டு, கொதிக்கின்ற வென்னீரை விட்டு, பின் ஒரு கைப்பிடியோடு இருக்கும் ஜல்லடைத் தட்டை போட வேண்டும். முதல் முறை மிக வேகமாக தண்ணீர் இறங்கிவிடும். மொத்தத் தண்ணீரும் இறங்கியபின், கீழ் பாத்திரத்தில் இருக்கும் டிகாஷனை மறுபடியும் மேல் பாத்திரத்தில் கொட்டி, இரண்டாம் முறை இறங்கிய டிகாஷனை காப்பிக்காக உபயோகிப்பார் அம்மா.
காய்ச்சின பாலோடு, காப்பி டிகாஷனையும் கலந்து, சக்கரை போட்டு, நுரை வரும்வரை நன்று ஆற்றி, தகுந்த சூடு வந்தவுடன் டம்ளர், டபராவில் தருவார்கள். குமுட்டி அடுப்பை ஊதும் போது எரிந்த தேங்காய் நாரோ, கரித்துண்டோ சமயத்தில் காப்பியில் கலந்து வரும். அந்த காப்பியின் மணமே ஒரு போதை தரும் - பால், காப்பிக் கொட்டை, எப்போதாவது மண்ணெண்ணை, கரி, சூடம் என்று ஒரு கதம்பமான வாசனை!
அடுத்த பதிவில் தஞ்சாவூர் ஜில்லாவில் வசித்த போதும், சென்னையில் வசித்த போதும் குடித்த காப்பி பற்றிய நினைவுகளை பதிகிறேன்.
என் நினைவில் நிற்கிற காப்பி தொடர்பான விஷயங்களில் முதலாவது எது என்று யோசித்தால், நான்கு வயது இருக்கும் போது மாதத்திற்கு ஒரு முறை என் அம்மா காப்பிக் கொட்டைகளை வறுத்ததுதான். இராமநாதபுரத்தில் வடக்குத் தெருவில் எங்கள் வீடு. ஒரு விறகு அடுப்பில் இரும்பு வாணலியில் பச்சைக் கொட்டைகளைப் போட்டு அவை கருக்கும் வரை நன்கு வறுத்து, கூடத்தில் சுத்தம் செய்த தரையில் சூடு ஆறுவதற்காக பரப்பி வைப்பார்கள். புகையும், காப்பிக் கொட்டை வறுக்கும் வாசனையும் கலந்து வீடு முழுவதும் அடிக்கும். பொழுது போகாமல் அவ்வப் போது கசப்பான வறுபட்ட காப்பிக் கொட்டைகளைச் சாப்பிடுவேன். சூடு ஆறியதும், அந்தக் கொட்டைகளை ஒரு சின்னதான காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினில் - ஒரு சமயத்தில் இரண்டு கைப்பிடி தான் அரைக்க முடியும் - அம்மாவுக்கு உதவியாக அரைப்பேன். அரைத்து தட்டில் விழும் பொடியை டப்பாவில் போட்டு வைப்பது அம்மாவின் வேலை - நான்கு வயதில் எனக்கு கீழே கொட்டத்தான் தெரியும்!
வறுத்த காப்பிக் கொட்டைக்கு இந்த மணம் என்றால், காப்பிக்கு வேறு விதமான வாசனை. அனேகமாக பாலைக் காய்ச்சுவது குமுட்டி அடுப்பில்தான். இரும்பில் ஒரு கோப்பை வடிவில் இருக்கும். கரியைப் போட்டு எரித்து, பாத்திரத்தை கரியின் மேல் வைத்து பாலைக் காய்ச்சுவார்கள். கரியைப் பற்ற வைக்க முதலில் சூடம், தேங்காய் நார்/மட்டை, மண்ணெண்ணை போன்றவைகள் உபயோகப் படுத்தப் படும். கரி நன்றாக எரிய அவ்வப் போது ஊத வேண்டியிருக்கும்.
காப்பி பில்டர் பித்தளையில் பெரிதாக இருக்கும். ஒரு முறை தொட்டு கை சுட்டுவிட்டதால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று! முதலில் காப்பிப் பொடியைப் பில்டரின் மேல் பாத்திரத்தில் போட்டு, கொதிக்கின்ற வென்னீரை விட்டு, பின் ஒரு கைப்பிடியோடு இருக்கும் ஜல்லடைத் தட்டை போட வேண்டும். முதல் முறை மிக வேகமாக தண்ணீர் இறங்கிவிடும். மொத்தத் தண்ணீரும் இறங்கியபின், கீழ் பாத்திரத்தில் இருக்கும் டிகாஷனை மறுபடியும் மேல் பாத்திரத்தில் கொட்டி, இரண்டாம் முறை இறங்கிய டிகாஷனை காப்பிக்காக உபயோகிப்பார் அம்மா.
காய்ச்சின பாலோடு, காப்பி டிகாஷனையும் கலந்து, சக்கரை போட்டு, நுரை வரும்வரை நன்று ஆற்றி, தகுந்த சூடு வந்தவுடன் டம்ளர், டபராவில் தருவார்கள். குமுட்டி அடுப்பை ஊதும் போது எரிந்த தேங்காய் நாரோ, கரித்துண்டோ சமயத்தில் காப்பியில் கலந்து வரும். அந்த காப்பியின் மணமே ஒரு போதை தரும் - பால், காப்பிக் கொட்டை, எப்போதாவது மண்ணெண்ணை, கரி, சூடம் என்று ஒரு கதம்பமான வாசனை!
அடுத்த பதிவில் தஞ்சாவூர் ஜில்லாவில் வசித்த போதும், சென்னையில் வசித்த போதும் குடித்த காப்பி பற்றிய நினைவுகளை பதிகிறேன்.
திங்கள், ஆகஸ்ட் 14, 2006
மூன்று வரி ஆறு வார்த்தை
இரண்டு மூன்று வாரங்களாக தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்த்த, படித்த சில செய்திகளின் விளைவு - இந்த மூன்று மூன்றுவரி ஆறு வார்த்தைக் கவிதைகள்.
மௌனத்தின் இரைச்சல்
கேட்க முடியவில்லை!
ஊமையின் பாஷை.
விஷப் புரளி
சாக்கடையில் சோறு!
பசியோடு பார்வை.
தியாகியா தீவிரவாதியா?
எப்படி அழைத்தாலும்
போனது உயிர்தானே!
மௌனத்தின் இரைச்சல்
கேட்க முடியவில்லை!
ஊமையின் பாஷை.
விஷப் புரளி
சாக்கடையில் சோறு!
பசியோடு பார்வை.
தியாகியா தீவிரவாதியா?
எப்படி அழைத்தாலும்
போனது உயிர்தானே!
திங்கள், ஜூலை 31, 2006
சுயநலம்
பள்ளியில் படிக்கும் போது மோசமான குணங்களில் ஒன்று சுயநலம் என்று பெரும்பான்மையான ஆசிரியர்கள் சொன்னார்கள். பாடங்களிலும், சுயநலம் எவ்வளவு மோசமானது என்பதை விளக்கும் கதைகள் இருந்தன. போதாதற்கு, வீட்டிலும், பழகிய ஏனைய பெரியவர்களும் இது தவறு என்பது போன்றே சொன்னார்கள். பொதுவாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்; அதுமாதிரி இல்லாமல் நாமே அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் அது சுயநலம் என்ற மாதிரி விளக்கம் வந்தது. அதிகமாக யோசிக்காமல், இதர பழக்க வழக்கங்கள், குணங்கள் போன்று (உ.ம். நகம் கடிக்காமல் இருத்தல், போய் பேசாது இருத்தல்) சுயநலம் பற்றிய ஒரு முடிவையும், அதிகம் விவாதிக்காமல் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் இது வரை வந்தாயிற்று.
வெளியுலகில், முக்கியமாக அலுவலக வாழ்க்கையில், பொய், சுயநலம் போன்றவற்றிற்கு எக்கச்சக்கமான விளக்கங்கள் கிடைத்தன. வயது ஏற ஏற, வரும் அனுபவங்கள் இது போன்று கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்ட குணங்களையும், வழக்கங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வைத்தன. ஏற்கனவே பொய்/உண்மை பற்றி எனக்குத் தோன்றியவற்றை ஒரு பதிவாக எழுதியிருக்கிறேன். இங்கு சுயநலம் பற்றி நான் புரிந்து கொண்டதையும், பார்த்ததையும், புரியாததையும் பற்றி பதிந்திருக்கிறேன்.
என்னுடைய எந்த செயலும் ஒரு எதிர்பார்ப்பை ஒத்தே எடுக்கப் படுகிறது. எனக்கு சொந்தமாக ஒரு லாபத்தைத் தரா விட்டாலும் கூட, ஒரு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கிறது. அது எனக்கு 'கடமையச் சரிவர செய்துவிட்டோம்' என்கிற திருப்தியையோ, அல்லது எனக்கு ஒரு நல்ல நினைவை, மன சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதாலேயோதான் ஒரு செயலைச் செய்கிறேன். நிர்பந்தமாய் எனக்குப் பிடிக்காத செயலைச் செய்வதற்கும் என்னுள் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பே காரணம். ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, ஒருவர் என்னை ஒரு கத்திமுனையில் மிரட்டி பணத்தை திருடிக் கொள்ளும் போதும், நான் பணத்தைக் கொடுக்க 'பணத்தைக் கொடுத்தால், கத்தியால் குத்து விழாது' என்ற ஒரு எதிர்பார்ப்பு முக்கியமான காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் காரியங்கள் செய்ததாக நினைவில்லை. இந்த எதிர்பார்ப்பையும், என் மனமகிழ்ச்சியையும், நல்ல நினைவையும், சுயநலம் என்று சொன்னால் என்னுடைய எல்லாச் செயல்களும் சுயநலத்தை எண்ணியே செய்ததாக அர்த்தம் (பொருள்) வருகிறது.
என்னுடைய எல்லாக் காரியத்திலும் கொஞ்சம் சுயலநம் இருப்பதால் விளக்கத்தை சற்று மாற்ற வேண்டியிருக்கிறது. நான் செய்யும் ஒரு காரியத்தில் எனக்கு வரும் நலம், என்னைத் தவிர மற்றவர்களுக்கு வரும் நலத்தை விட அதிகமாக இருந்தால் அது சுயநலம்; மற்றவருக்கு நலம் அதிகமாகக் கிடைத்தால் அது சுயநலம் இல்லை. (நாயகன் திரைப்படத்தில் வரும் வசனம் போல: "நாலு பேருக்கு நல்லது கிடைச்சுதுன்னா எதுவுமே தப்பில்லை"). அதாவது ஒரு செயலில் மற்றவருக்கு கிடைக்கும் நலத்தைவிட சுயநலம் குறைவாக இருக்கிறது.
ஆனால் இந்த இரண்டு விளக்கங்களுமே எனக்கு சரி என்று தோன்றவில்லை. பெரும்பான்மையான மக்கள் வலியப் போய் குற்றங்கள் செய்வது இல்லை; யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்றால், மற்றவர்களுக்கு அதிகம் நஷ்டம் வராத ஒரு செயலை, அதிலும் அந்த செயலினால் சுயலாபம் வரும் என்றால், செய்யத் தயாராகவே இருக்கிறார்கள். முதல் விளக்கத்தைப் பார்த்துவிட்டு 'எல்லோருமே சுயநலவாதிகள் தான்; ஆகையால் நான் லஞ்சம் வாங்குவது தவறில்லை' என்று நியாப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. இரண்டாவது விளக்கம் அதைவிட மோசம். ஒரு மந்திரி 'ரோடு போடும் பணியை அனுமதித்தால், லட்சக்கணக்கான மக்களுக்கு நலம் வரும், ஆகையால் காண்ட்ராக்டரிடம் 10% வாங்கினால் என் சுயநலத்தின் மதிப்பு பொதுநலத்தின் மதிப்பை விடக் குறைவானதுதானே. என்ன தவறு?' என்று சொல்லலாம்.
இதற்கு 'சுயநலம் இருப்பது தவறில்லை; அது அதிகமாகப் போய், ஒருவரின் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி செயல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது, மற்றவரின் வாழ்வை, அமைதியைக் குலைக்கும் வண்ணம் இருந்தாலோ தவறு' என்று சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதே சமயம், பாலகனாய் இருந்த போது இருந்த தெளிவு, இப்போது - அனுபவமும், அறிவும் அதிகமான போது - இல்லையே என்ற வருத்தமும் வருகிறது. 60 அல்லது 70 வயதிலாவது சரி, தவறு என்ற வித்தியாசம் புரிந்து, தெளிவும் வருமா? தெரியவில்லை; ஆனால் எதிர்பார்ப்பு இருக்கிறது.
வெளியுலகில், முக்கியமாக அலுவலக வாழ்க்கையில், பொய், சுயநலம் போன்றவற்றிற்கு எக்கச்சக்கமான விளக்கங்கள் கிடைத்தன. வயது ஏற ஏற, வரும் அனுபவங்கள் இது போன்று கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்ட குணங்களையும், வழக்கங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வைத்தன. ஏற்கனவே பொய்/உண்மை பற்றி எனக்குத் தோன்றியவற்றை ஒரு பதிவாக எழுதியிருக்கிறேன். இங்கு சுயநலம் பற்றி நான் புரிந்து கொண்டதையும், பார்த்ததையும், புரியாததையும் பற்றி பதிந்திருக்கிறேன்.
என்னுடைய எந்த செயலும் ஒரு எதிர்பார்ப்பை ஒத்தே எடுக்கப் படுகிறது. எனக்கு சொந்தமாக ஒரு லாபத்தைத் தரா விட்டாலும் கூட, ஒரு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கிறது. அது எனக்கு 'கடமையச் சரிவர செய்துவிட்டோம்' என்கிற திருப்தியையோ, அல்லது எனக்கு ஒரு நல்ல நினைவை, மன சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதாலேயோதான் ஒரு செயலைச் செய்கிறேன். நிர்பந்தமாய் எனக்குப் பிடிக்காத செயலைச் செய்வதற்கும் என்னுள் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பே காரணம். ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, ஒருவர் என்னை ஒரு கத்திமுனையில் மிரட்டி பணத்தை திருடிக் கொள்ளும் போதும், நான் பணத்தைக் கொடுக்க 'பணத்தைக் கொடுத்தால், கத்தியால் குத்து விழாது' என்ற ஒரு எதிர்பார்ப்பு முக்கியமான காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் காரியங்கள் செய்ததாக நினைவில்லை. இந்த எதிர்பார்ப்பையும், என் மனமகிழ்ச்சியையும், நல்ல நினைவையும், சுயநலம் என்று சொன்னால் என்னுடைய எல்லாச் செயல்களும் சுயநலத்தை எண்ணியே செய்ததாக அர்த்தம் (பொருள்) வருகிறது.
என்னுடைய எல்லாக் காரியத்திலும் கொஞ்சம் சுயலநம் இருப்பதால் விளக்கத்தை சற்று மாற்ற வேண்டியிருக்கிறது. நான் செய்யும் ஒரு காரியத்தில் எனக்கு வரும் நலம், என்னைத் தவிர மற்றவர்களுக்கு வரும் நலத்தை விட அதிகமாக இருந்தால் அது சுயநலம்; மற்றவருக்கு நலம் அதிகமாகக் கிடைத்தால் அது சுயநலம் இல்லை. (நாயகன் திரைப்படத்தில் வரும் வசனம் போல: "நாலு பேருக்கு நல்லது கிடைச்சுதுன்னா எதுவுமே தப்பில்லை"). அதாவது ஒரு செயலில் மற்றவருக்கு கிடைக்கும் நலத்தைவிட சுயநலம் குறைவாக இருக்கிறது.
ஆனால் இந்த இரண்டு விளக்கங்களுமே எனக்கு சரி என்று தோன்றவில்லை. பெரும்பான்மையான மக்கள் வலியப் போய் குற்றங்கள் செய்வது இல்லை; யாரும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்றால், மற்றவர்களுக்கு அதிகம் நஷ்டம் வராத ஒரு செயலை, அதிலும் அந்த செயலினால் சுயலாபம் வரும் என்றால், செய்யத் தயாராகவே இருக்கிறார்கள். முதல் விளக்கத்தைப் பார்த்துவிட்டு 'எல்லோருமே சுயநலவாதிகள் தான்; ஆகையால் நான் லஞ்சம் வாங்குவது தவறில்லை' என்று நியாப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் இருக்கிறது. இரண்டாவது விளக்கம் அதைவிட மோசம். ஒரு மந்திரி 'ரோடு போடும் பணியை அனுமதித்தால், லட்சக்கணக்கான மக்களுக்கு நலம் வரும், ஆகையால் காண்ட்ராக்டரிடம் 10% வாங்கினால் என் சுயநலத்தின் மதிப்பு பொதுநலத்தின் மதிப்பை விடக் குறைவானதுதானே. என்ன தவறு?' என்று சொல்லலாம்.
இதற்கு 'சுயநலம் இருப்பது தவறில்லை; அது அதிகமாகப் போய், ஒருவரின் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி செயல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது, மற்றவரின் வாழ்வை, அமைதியைக் குலைக்கும் வண்ணம் இருந்தாலோ தவறு' என்று சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதே சமயம், பாலகனாய் இருந்த போது இருந்த தெளிவு, இப்போது - அனுபவமும், அறிவும் அதிகமான போது - இல்லையே என்ற வருத்தமும் வருகிறது. 60 அல்லது 70 வயதிலாவது சரி, தவறு என்ற வித்தியாசம் புரிந்து, தெளிவும் வருமா? தெரியவில்லை; ஆனால் எதிர்பார்ப்பு இருக்கிறது.
செவ்வாய், ஜூலை 25, 2006
பணம் தரும் (உருப்படாத?) யோசனைகள்
அலுவல் நிமித்தமாக கொலம்பஸ் (ஒஹாயோ) செல்ல வேண்டியிருந்தது. பயணம் ஒன்றரை மணி நேரம் என்றால், விமானத்தில் ஏறி ரன்வே செல்லவே ஒன்றேகால் மணி ஆகிவிட்டது! போய் இறங்கினால் கூட வந்த ஒரு பயணியின் பெட்டி வரவில்லை என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்! வெறுத்துப் போய் மற்ற விமானங்களையும் (நியுவர்க்), விமான நிலயத்தையும் (கொலம்பஸ்) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது வந்த இரு யோசனைகள். இந்த ஐடியாக்களை வைத்துப் பணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன் (ஒரு நப்பாசைதான்). பணம் தருமா, இல்லை பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் உருப்படாத யோசனைகள் தலைப்பின் கீழ் போகுமா என்று தெரியவில்லை.
ஒன்று.
சரக்கு விமானத்திலிருந்து சரக்கை வேகமாக இறக்கக் கையாளும் உத்தியை ஏன் பயணிகளுக்கும் உபயோகிக்கக் கூடாது? சரக்கு விமானத்தில் அதன் மூக்கு மேல் நோக்கித் திறந்து கொள்ள (சமயத்தில் அதன் அடி வயிறும் திறந்து கொள்ள), உள்ளே இருக்கும் பிரம்மாண்டமான பெட்டிகள் (கன்டெய்னர்) சுலபமாக கிரேன்களாலும், கன்டெய்னர்கள் இருக்கும் தண்டவாளங்களினாலும் இறக்கப் படுகிறது.
அதே போல விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கையில், விமான இருக்கைகளை ஒரு பெரிய அடித்தளத்தோடு வைத்து, அதில் முதலிலேயே பயணிகளையெல்லாம் உட்கார்த்தி, சீட் பெல்டால் கட்டி வைத்து விட்டு, விமானத்தின் மூக்கையோ அல்லது அடி வயிறையோ திறந்து, இந்த இருக்கைகளை அப்படியே தண்டாவாளத்தின் மூலமாக விமானத்தின் உள் ஏற்றி, விமானத் தளத்தோடு பூட்டு ஒன்று போட்டு இணத்து விட்டால் எல்லோருக்கும் சௌகரியமாக இருக்கும் அல்லவா? காத்து நிற்கும் நேரமும் குறைவு; விமானம் வந்து நின்றவுடன், உள்ளே இருப்பவர்கள் இருக்கைகளோடு மூக்கு வழியாக வெளியேறவும், ஏற வேண்டியவர்கள் வயிற்றின் வழியாக இருக்கைகளுடன் உள்ளே போகவும், பத்து நிமிடங்களில் விமானம் மறுமுறை பயணத்திற்கு ரெடி!
இரண்டு.
விமானப் பயணத்தில் பெட்டிகள் தொலைந்து போவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. மும்பாயில் மதிய உணவு அலுவலகங்களுக்கு எடுத்துப் போகும் 'டப்பா வாலா'க்கள் கலர் கலரான பெயிண்டால் எழுதும் குறிகளை வைத்து அடையாளம் கண்டு கொண்டு அருமையாக சாப்பாடை கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களில் சிலரை இங்கு (அமெரிக்கா) கூட்டி வந்து விமான நிறுவனங்களுக்கு பயிற்சி நடத்தலாம்! தொலையும் பெட்டிகளின் எண்ணிக்கை குறையும்.
இன்னமும் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன்: கூட்ட நேரத்தில் இரயிலில் உட்கார இடம் பிடிப்பது எப்படி, ஹைவேயில் எக்ஸிட் எடுக்க முடியாமல் வாகனங்கள் அதிகம் இருந்தால் சுலபமாக வெளியேருவது எப்படி, என்றெல்லாம். உங்களுக்கு ஏதாவது ஐடியா வந்தால் சொல்லுங்கள்.
ஒன்று.
சரக்கு விமானத்திலிருந்து சரக்கை வேகமாக இறக்கக் கையாளும் உத்தியை ஏன் பயணிகளுக்கும் உபயோகிக்கக் கூடாது? சரக்கு விமானத்தில் அதன் மூக்கு மேல் நோக்கித் திறந்து கொள்ள (சமயத்தில் அதன் அடி வயிறும் திறந்து கொள்ள), உள்ளே இருக்கும் பிரம்மாண்டமான பெட்டிகள் (கன்டெய்னர்) சுலபமாக கிரேன்களாலும், கன்டெய்னர்கள் இருக்கும் தண்டவாளங்களினாலும் இறக்கப் படுகிறது.
அதே போல விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கையில், விமான இருக்கைகளை ஒரு பெரிய அடித்தளத்தோடு வைத்து, அதில் முதலிலேயே பயணிகளையெல்லாம் உட்கார்த்தி, சீட் பெல்டால் கட்டி வைத்து விட்டு, விமானத்தின் மூக்கையோ அல்லது அடி வயிறையோ திறந்து, இந்த இருக்கைகளை அப்படியே தண்டாவாளத்தின் மூலமாக விமானத்தின் உள் ஏற்றி, விமானத் தளத்தோடு பூட்டு ஒன்று போட்டு இணத்து விட்டால் எல்லோருக்கும் சௌகரியமாக இருக்கும் அல்லவா? காத்து நிற்கும் நேரமும் குறைவு; விமானம் வந்து நின்றவுடன், உள்ளே இருப்பவர்கள் இருக்கைகளோடு மூக்கு வழியாக வெளியேறவும், ஏற வேண்டியவர்கள் வயிற்றின் வழியாக இருக்கைகளுடன் உள்ளே போகவும், பத்து நிமிடங்களில் விமானம் மறுமுறை பயணத்திற்கு ரெடி!
இரண்டு.
விமானப் பயணத்தில் பெட்டிகள் தொலைந்து போவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. மும்பாயில் மதிய உணவு அலுவலகங்களுக்கு எடுத்துப் போகும் 'டப்பா வாலா'க்கள் கலர் கலரான பெயிண்டால் எழுதும் குறிகளை வைத்து அடையாளம் கண்டு கொண்டு அருமையாக சாப்பாடை கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களில் சிலரை இங்கு (அமெரிக்கா) கூட்டி வந்து விமான நிறுவனங்களுக்கு பயிற்சி நடத்தலாம்! தொலையும் பெட்டிகளின் எண்ணிக்கை குறையும்.
இன்னமும் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன்: கூட்ட நேரத்தில் இரயிலில் உட்கார இடம் பிடிப்பது எப்படி, ஹைவேயில் எக்ஸிட் எடுக்க முடியாமல் வாகனங்கள் அதிகம் இருந்தால் சுலபமாக வெளியேருவது எப்படி, என்றெல்லாம். உங்களுக்கு ஏதாவது ஐடியா வந்தால் சொல்லுங்கள்.
செவ்வாய், ஜூலை 04, 2006
மனதில் நின்ற ஆசிரியர் - திரு சந்தானம் ஸார்
சிறு வயதில் இருந்து இன்றும் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள், அதிலும் முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள் எத்தனையோ பேர். எல்லோரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை. இந்த வாரம் அமெரிக்க விடுதலை நாளுக்காக வாண வேடிக்கைகள் வீட்டுக்கு அருகில் எங்கு இருக்கும் என்று இணையத்தில் தேடுகையில், இந்த மத்தாப்பு, வெடியில் இருக்கும் இரசாயனப் பொருள்கள் பற்றியும் ஒரு இணையப் பக்கத்தில் பார்த்தேன். எனக்கு +1 / +2 வில் வேதியல் சொல்லிக் கொடுத்த மறைந்த திரு சந்தானம் ஸார் ஞாபகம் வந்தது.
சந்தானம் ஸார் சொல்லிக் கொடுத்த வேதியலை விட, உலக/நாட்டு நடப்புகள், மனோதத்துவம் பற்றிய அவர் 'பொன் மொழிகள்', இன்னமும் நினைவில் நிற்கிறது. ஒரு சந்தோஷமான வித்தியாசமான மனிதர். சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டுதான் வருவார். அனேகமாக அத்தனை மாணவர்களையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார். இவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை; மாணவரை அடித்தும் நான் பார்த்தில்லை. வழக்கமாக முதல் வகுப்பு (பீரியட்) அவருடையது தான். மன்னார்குடி தேசியப் பள்ளியில் அப்போது முதல் இரண்டு வகுப்புகள் 45 நிமிடங்கள்; மற்ற வகுப்புகள் எல்லாம் 40 நிமிடங்கள். முதல் வகுப்பில் தான் இந்த பதிவேடு (அட்டென்டன்ஸ்), லீவ் லெட்டர் (விடுப்பு விண்ணப்பம் என்று எழுதினால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றுகிறது; தமிழ் வித்தகர்கள் மன்னிக்க!) சமாச்சாரமெல்லாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று லீவ் லெட்டராவது இருக்கும். ஒவ்வொன்றாகப் படித்து ரசித்து சிரிப்பார்; விமர்சிப்பார்!
லீவ் லெட்டரைப் பொறுத்தவரை ஒரு எழுதாத சட்டம், அது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். பெரும்பான்மையான மாணவர்கள் தமிழ் வகுப்பில் படித்து விட்டு, +1 ல் ஆங்கில வகுப்புக்கு மாறியிருப்பார்கள் (நானும் எட்டாவது வரைக்கும் தமிழ் மீடியம் தான்; பத்தாவது வரைக்கும் ஆங்கிலத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது; அப்புறம் தயக்கம் பழகி விட்டது!). ஆறாவது/ஏழாவது வகுப்பில் ஆங்கிலப் பாட வகுப்பில் இந்த லீவ் லெட்டர் ஒரு கட்டுரை மாதிரி இருக்கும். ஆகையால் எல்லா மாணவருக்கும் இது தெரியும். இவர் கிண்டலுக்கு பயந்தே எல்லோரும் எந்த காரணமாக இருந்தாலும், இந்த கட்டுரையில் வந்தது போல் லீவ் லெட்டர் எழுதிவிடுவோம்! “As I am suffering from fever, I humbly request you to grant me leave for two days”. நாள் மட்டும் தான் மாறும். இதை சுட்டிக்காட்டி சிரிப்பார். "கல்யாணத்துக்காக திருச்சி போயிருக்கான்; இருந்தாலும் அதே லெட்டர்! அது மட்டுமில்லை. Father’s signature என்று எழுதி ஒரு X குறி வேறு போட்டிருக்கான். நல்லாப் படிச்சு கவர்மெண்ட் உத்தியோகத்தில் அப்பா இருக்கார்; இருந்தாலும் அப்பன் தற்குறின்னு இவனே சொல்றான்!" என்று சொல்லி சிரிப்பார்.
தினசரி நடக்கும் விஷயங்களிலும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இவரிடம் உண்டு. "பாத்திருக்கியாடா?" என்று தான் ஆரம்பிப்பார். "ஒரு ரூபாய் கடன் கொடுக்கிறியா? என்று கேட்டால், 'என்னிடம் பணம் இல்லை' என்று மட்டும் சொல்ல மாட்டான்! சட்டைப் பையையோ, பர்ஸையோ திறந்தும் பார்த்துவிட்டு காட்டுவான். ஏன் தெரியுமா? எங்கே நமக்கே தெரியாமல் ஒரு ரூபாய் வந்திருக்குமோ? என்று ஒரு நப்பாசைதான். இவன் கிட்ட ரூபாய் இருக்காது என்று கேட்பவனுக்குத் தெரியாதா என்ன? இரண்டு பேரும் கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு சேர்ந்து தானே மாட்னி போனாங்க?!"
எங்கள் வகுப்பு மாடியில் இருந்தது, ஜன்னலிலிருந்து ரோடை பார்க்கிற மாதிரி. ஒரு முறை ரோட்டில் ஏதோ ஊர்வலம் போனது. எல்லொரும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது: "பாத்தியாடா? 'வரி கொடுக்க மாட்டோம்'ன்னு சொல்றத்துக்கு ஒரு ஊர்வலம். கொஞ்ச தூரம் போனதும் பள்ளம் தடுக்கி கீழே விழுவான்! அப்ப முனிசிபாலிடியைத் திட்டுவான் - 'ரோடு ஒழுங்காப் போடலை'ன்னு. ஏண்டா - நீ வரி கொடுத்தாத் தானே அவன் ரோடு போட முடியும்?!"
எனக்கு வேதியல் சுத்தமாக மறந்து போனாலும், வாழ்க்கையை 'ஓவர் சீரியஸாக' எடுத்துக் கொள்ளாமல், ஒரு நகைச்சுவையோடு பார்க்கக் கற்றுத் தந்த திரு சந்தானம் ஸார் எப்போதும் என் நினைவில் நிற்பார்.
சந்தானம் ஸார் சொல்லிக் கொடுத்த வேதியலை விட, உலக/நாட்டு நடப்புகள், மனோதத்துவம் பற்றிய அவர் 'பொன் மொழிகள்', இன்னமும் நினைவில் நிற்கிறது. ஒரு சந்தோஷமான வித்தியாசமான மனிதர். சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டுதான் வருவார். அனேகமாக அத்தனை மாணவர்களையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார். இவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை; மாணவரை அடித்தும் நான் பார்த்தில்லை. வழக்கமாக முதல் வகுப்பு (பீரியட்) அவருடையது தான். மன்னார்குடி தேசியப் பள்ளியில் அப்போது முதல் இரண்டு வகுப்புகள் 45 நிமிடங்கள்; மற்ற வகுப்புகள் எல்லாம் 40 நிமிடங்கள். முதல் வகுப்பில் தான் இந்த பதிவேடு (அட்டென்டன்ஸ்), லீவ் லெட்டர் (விடுப்பு விண்ணப்பம் என்று எழுதினால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றுகிறது; தமிழ் வித்தகர்கள் மன்னிக்க!) சமாச்சாரமெல்லாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று லீவ் லெட்டராவது இருக்கும். ஒவ்வொன்றாகப் படித்து ரசித்து சிரிப்பார்; விமர்சிப்பார்!
லீவ் லெட்டரைப் பொறுத்தவரை ஒரு எழுதாத சட்டம், அது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். பெரும்பான்மையான மாணவர்கள் தமிழ் வகுப்பில் படித்து விட்டு, +1 ல் ஆங்கில வகுப்புக்கு மாறியிருப்பார்கள் (நானும் எட்டாவது வரைக்கும் தமிழ் மீடியம் தான்; பத்தாவது வரைக்கும் ஆங்கிலத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது; அப்புறம் தயக்கம் பழகி விட்டது!). ஆறாவது/ஏழாவது வகுப்பில் ஆங்கிலப் பாட வகுப்பில் இந்த லீவ் லெட்டர் ஒரு கட்டுரை மாதிரி இருக்கும். ஆகையால் எல்லா மாணவருக்கும் இது தெரியும். இவர் கிண்டலுக்கு பயந்தே எல்லோரும் எந்த காரணமாக இருந்தாலும், இந்த கட்டுரையில் வந்தது போல் லீவ் லெட்டர் எழுதிவிடுவோம்! “As I am suffering from fever, I humbly request you to grant me leave for two days”. நாள் மட்டும் தான் மாறும். இதை சுட்டிக்காட்டி சிரிப்பார். "கல்யாணத்துக்காக திருச்சி போயிருக்கான்; இருந்தாலும் அதே லெட்டர்! அது மட்டுமில்லை. Father’s signature என்று எழுதி ஒரு X குறி வேறு போட்டிருக்கான். நல்லாப் படிச்சு கவர்மெண்ட் உத்தியோகத்தில் அப்பா இருக்கார்; இருந்தாலும் அப்பன் தற்குறின்னு இவனே சொல்றான்!" என்று சொல்லி சிரிப்பார்.
தினசரி நடக்கும் விஷயங்களிலும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இவரிடம் உண்டு. "பாத்திருக்கியாடா?" என்று தான் ஆரம்பிப்பார். "ஒரு ரூபாய் கடன் கொடுக்கிறியா? என்று கேட்டால், 'என்னிடம் பணம் இல்லை' என்று மட்டும் சொல்ல மாட்டான்! சட்டைப் பையையோ, பர்ஸையோ திறந்தும் பார்த்துவிட்டு காட்டுவான். ஏன் தெரியுமா? எங்கே நமக்கே தெரியாமல் ஒரு ரூபாய் வந்திருக்குமோ? என்று ஒரு நப்பாசைதான். இவன் கிட்ட ரூபாய் இருக்காது என்று கேட்பவனுக்குத் தெரியாதா என்ன? இரண்டு பேரும் கிளாசுக்கு மட்டம் போட்டுட்டு சேர்ந்து தானே மாட்னி போனாங்க?!"
எங்கள் வகுப்பு மாடியில் இருந்தது, ஜன்னலிலிருந்து ரோடை பார்க்கிற மாதிரி. ஒரு முறை ரோட்டில் ஏதோ ஊர்வலம் போனது. எல்லொரும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது: "பாத்தியாடா? 'வரி கொடுக்க மாட்டோம்'ன்னு சொல்றத்துக்கு ஒரு ஊர்வலம். கொஞ்ச தூரம் போனதும் பள்ளம் தடுக்கி கீழே விழுவான்! அப்ப முனிசிபாலிடியைத் திட்டுவான் - 'ரோடு ஒழுங்காப் போடலை'ன்னு. ஏண்டா - நீ வரி கொடுத்தாத் தானே அவன் ரோடு போட முடியும்?!"
எனக்கு வேதியல் சுத்தமாக மறந்து போனாலும், வாழ்க்கையை 'ஓவர் சீரியஸாக' எடுத்துக் கொள்ளாமல், ஒரு நகைச்சுவையோடு பார்க்கக் கற்றுத் தந்த திரு சந்தானம் ஸார் எப்போதும் என் நினைவில் நிற்பார்.
புதன், ஜூன் 21, 2006
அல்ப சந்தோஷங்கள்
"வாழ்க்கை என்பது நீ மற்ற திட்டங்களை யோசிக்கும் நேரத்தில் நடப்பது" என்று எப்போதோ படித்தது. (Life is what happens to you while you're busy making other plans. John Lennon). இந்த பழமொழியை (Quote என்ற வார்த்தைக்கு தமிழில் பொருத்தமான சொல் இருக்கிறதா?) படித்தவுடன் ஒரே சிந்தனை - இது வரை வாழ்ந்த நாட்களிலே எத்தனை நாட்களை இது மாதிரி கோட்டை விட்டிருக்கிறேன் என்று.
இதுபோல இன்னுமொரு கொடேஷன்: "வாழ்க்கையின் குறிக்கோளே, குறிக்கோளோடு வாழ்வதுதான்". [The purpose of life is to live a life of purpose - Richard Leider] இதைப் படித்துவிட்டு ஒரே குழப்பம் - என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று ஓயாமல் சிந்தனை - நடுவே முதல் பழமொழி நினைவுக்கு வந்து, இந்த குறிக்கோள் பற்றிய யோசனையில் சில வாழ்க்கை மணிகளைத் தொலைத்துவிட்டேனோ என்ற குழப்பம்.
இப்படி எல்லாம் சிந்தனைகள் வந்து போய்க் கொண்டிருக்கும். அடிக்கடி திடீர் ஞானோதயம் வரும்; போகும். சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு ஞானோதயம் இது. வாழ்க்கை என்பது ஒரு பெரிய சந்தோஷத்தைத் தேடி அலைவது என்றில்லை. வழியில் ஆங்காங்கே வரும் - யாருக்கும் தீமையோ தொந்தரவோ தராத அல்ப சந்தோஷங்களிலும் ஒளிந்திருப்பதுதான் வாழ்க்கை.
உதாரணமாக எனக்கு காய்கறி நறுக்குவது - அதிலும் முக்கியமாக ஒரே சீரான அளவோடு நறுக்குவது பிடிக்கும். ஒரு வேளைக்கான வெண்டைக்காயை (அல்லது வேறு எந்தக் காய்கறியையோ) ஒரே சீராக நறுக்கி முடித்தால் வரும் திருப்தியிலும் என் சந்தோஷம் இருப்பதைப் பார்க்கிறேன். இதில் மட்டுமல்ல - புல்லை வெட்டுவதிலும், காரை சுத்தம் செய்வதிலும், அலுவலகத்தில் ஒரு மின் மடல் எழுதியவுடன், 'ஸ்பெல் செக்' செய்து ஒரு தவறும் இல்லை என்று கணினி சொல்லும் போதும் மனதுக்கு ஒரு திருப்தி வருகிறது. எல்லாமே பைசா செலவில்லாத அல்ப சந்தோஷம் தான் - இருந்தாலும் எனக்கு அது வேண்டியிருக்கிறது.
குடும்பத்தோடு லண்டன் சென்று இரண்டுவாரம் செலவு செய்து வந்த திருப்தியோடு இவைகளை என்னால் ஒப்பிட்டு பார்க்க முடியாவிட்டாலும், அல்லது இந்த மாதிரி அல்ப சந்தோஷங்கள் என் வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாவிட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை வரும் ஒரு பெரும் சந்தோஷத்தோடு கூட, தினமும் கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று அல்ப சந்தோஷங்கள் என் தினசரி வாழ்க்கையை ஒரு உற்சாகத்தோடு நடத்த உதவுகிறது.
இப்போதெல்லாம் தினசரி வாழ்க்கையில் திருப்தியும், சந்தோஷமும், ஒரு விதமான contenment தரும் நிகழ்ச்சிகளை கொஞ்சம் உணர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த ஞானோதயம் எத்தனை நாள் இருக்கும் என்று தெரியவில்லை; இருக்கும் வரை தினசரி வாழ்க்கை டானிக் போல் இருக்கும் இந்த அல்ப சந்தோஷங்கள் வாழ்க!
இதுபோல இன்னுமொரு கொடேஷன்: "வாழ்க்கையின் குறிக்கோளே, குறிக்கோளோடு வாழ்வதுதான்". [The purpose of life is to live a life of purpose - Richard Leider] இதைப் படித்துவிட்டு ஒரே குழப்பம் - என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று ஓயாமல் சிந்தனை - நடுவே முதல் பழமொழி நினைவுக்கு வந்து, இந்த குறிக்கோள் பற்றிய யோசனையில் சில வாழ்க்கை மணிகளைத் தொலைத்துவிட்டேனோ என்ற குழப்பம்.
இப்படி எல்லாம் சிந்தனைகள் வந்து போய்க் கொண்டிருக்கும். அடிக்கடி திடீர் ஞானோதயம் வரும்; போகும். சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு ஞானோதயம் இது. வாழ்க்கை என்பது ஒரு பெரிய சந்தோஷத்தைத் தேடி அலைவது என்றில்லை. வழியில் ஆங்காங்கே வரும் - யாருக்கும் தீமையோ தொந்தரவோ தராத அல்ப சந்தோஷங்களிலும் ஒளிந்திருப்பதுதான் வாழ்க்கை.
உதாரணமாக எனக்கு காய்கறி நறுக்குவது - அதிலும் முக்கியமாக ஒரே சீரான அளவோடு நறுக்குவது பிடிக்கும். ஒரு வேளைக்கான வெண்டைக்காயை (அல்லது வேறு எந்தக் காய்கறியையோ) ஒரே சீராக நறுக்கி முடித்தால் வரும் திருப்தியிலும் என் சந்தோஷம் இருப்பதைப் பார்க்கிறேன். இதில் மட்டுமல்ல - புல்லை வெட்டுவதிலும், காரை சுத்தம் செய்வதிலும், அலுவலகத்தில் ஒரு மின் மடல் எழுதியவுடன், 'ஸ்பெல் செக்' செய்து ஒரு தவறும் இல்லை என்று கணினி சொல்லும் போதும் மனதுக்கு ஒரு திருப்தி வருகிறது. எல்லாமே பைசா செலவில்லாத அல்ப சந்தோஷம் தான் - இருந்தாலும் எனக்கு அது வேண்டியிருக்கிறது.
குடும்பத்தோடு லண்டன் சென்று இரண்டுவாரம் செலவு செய்து வந்த திருப்தியோடு இவைகளை என்னால் ஒப்பிட்டு பார்க்க முடியாவிட்டாலும், அல்லது இந்த மாதிரி அல்ப சந்தோஷங்கள் என் வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாவிட்டாலும், வருடத்திற்கு ஒரு முறை வரும் ஒரு பெரும் சந்தோஷத்தோடு கூட, தினமும் கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று அல்ப சந்தோஷங்கள் என் தினசரி வாழ்க்கையை ஒரு உற்சாகத்தோடு நடத்த உதவுகிறது.
இப்போதெல்லாம் தினசரி வாழ்க்கையில் திருப்தியும், சந்தோஷமும், ஒரு விதமான contenment தரும் நிகழ்ச்சிகளை கொஞ்சம் உணர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இந்த ஞானோதயம் எத்தனை நாள் இருக்கும் என்று தெரியவில்லை; இருக்கும் வரை தினசரி வாழ்க்கை டானிக் போல் இருக்கும் இந்த அல்ப சந்தோஷங்கள் வாழ்க!
திங்கள், ஜூன் 19, 2006
இங்கிலாந்துப் பயணம்
கிட்டத்தட்ட இரண்டு வாரம் லண்டன் பயணம் - குடும்பத்தோடு விடுமுறையில். இதற்கு முன் அலுவல் நிமித்தமாக மூன்று அல்லது நான்கு முறை வந்திருந்தாலும், விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்க வருவது இதுவே முதல் முறை. பத்து வருடங்கள் அமெரிக்காவில் இருந்துவிட்ட படியால், இங்கு வந்தவுடன் அலுவலகம் சம்பந்தமில்லாத பொது வாழ்வில் தெரிந்த வித்தியாசங்கள் - அதனால் எனக்குத் தோன்றிய சிந்தனைகள் இங்கே.
அலுவலகத்தில் உள்ள வித்தியாசங்கள் - கூப்பிடும் முறை, செயல்படும் முறை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் பொதுவாழ்வில் இவைகளின் தீவிரம் அதிகம். உதாரணமாக நாங்கள் சென்ற இரயில் நிலையத்திலெல்லாம் தானியங்கிக் கருவி (பயணச்சீட்டு வழங்க) வைத்திருந்தார்கள். அதே சமயத்தில் அதன் அருகே ஒரு பணியாளர் நின்று கொண்டு கருவியை உபயோகிக்க உதவிக் கொண்டிருந்தார்! மனதுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயத்தில் ஸவுத்தாம்டன் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் போது, ஐந்து மணிக்கு கதவை இழுத்து மூடிவிட்டார்கள். வெளியே உட்கார நாற்காலி கிடையாது, கழிப்பிடம் அலுவலகத்திற்க்கு உள்ளே தான். அலுவலகத்திற்குள் பேருந்துப் பணியாளர்கள் நால்வர் அமர்ந்து பேசிக் கொண்டும், சுடொக்கு போட்டுக் கொண்டும், ஏதோ வேலை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாய் வந்த பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரை அந்தப் பணியாளர்கள் கதவைத் திறக்கவேயில்லை, பயணிகள் கண்ணாடி ஜன்னலைத் தட்டிக் கூப்பிட்ட போதும்!
நாங்கள் வந்திருக்கும் சமயம் உலகக் கோப்பை (கால் பந்து) ஜுரம். கார், வீடு, உடைகள், ஏன் முகத்திலும் கூட இங்கிலாந்துக் கொடி. நிறைய கார்களில் இரண்டு கொடிகள்; வசிக்கும் ஊcன இங்கிலாந்து, பிறந்த ஊரான பிரேசில் (அல்லது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இன்ன பிற நாட்டுக் கொடிகள்)! வித்தியாசமாக இருந்தது.
செய்திகளில் முக்கியமான அரசியல், சமூகப் பிரச்சனை ஒரு நீதிபதி சட்டத்தில் உள்ளது போல ஒரு குற்றவாளிக்கு (child molestation) 'பரோல்' கொடுத்தது. அரசும் அரசியல் வாதிகளும், நீதிபதியைத் தாக்கி அறிக்கைகள் விட, நீதிபதி சார்பில் மற்ற வழக்குரைஞர்கள் சட்டம் இயற்றிய அரசைக் குற்றம் கூற, முடிவில் அரசு தரப்பில் ஒரு மந்திரியை அமெரிக்கா அனுப்பி அங்கு எப்படி இது போன்ற விஷயங்களை அரசும் சட்டமும் கண்காணிக்கிறது என்று அறியப் போவதாக செய்தி வந்திருக்கிறது. நாலு பாட்டும், இரண்டு சண்டைக்காட்சிகளும் சேர்த்தால் நம்மூர் சினிமா தான்!
இதைத் தவிர இரண்டு செய்திகள் - சென்ற வாரத்தில். 1. தவறான தகவல் அடிப்படையில் இங்கிலாந்துப் போலீஸ் ஒரு வீட்டில் புகுந்து ஒருவரை சுட்டும், அவரது சகோதரரை அடித்தும் கைது பண்ணி பத்து நாட்கள் முட்டிக்கு முட்டி தட்டி விசாரித்து பின் தவறு தெரிந்து விடுதலை செய்திருக்கிறார்கள். இந்த சகோதரர்கள் முஸ்லிம்! அதே வாரத்தில் இங்கிலாந்துப் போலீஸ் தலைவருக்கு ஒரு விருதும் வழங்கப் படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறது 2. இங்கிலாந்து ராணிக்கு 80 வயதாகிவிட்டது. பிரார்த்தனைக் கூட்டத்தில் தூங்கிய பிரதம மந்திரியின் மனைவியின் புகைப்படம் செய்தித் தாள்களில் வந்திருக்கிறது.
அமெரிக்காவைப் போல் மற்ற இன, மதங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இங்கு அதிகம் இல்லை. வந்த இரண்டாம் நாள் அருகில் உள்ள பூங்காவில் மகளையும், என் மைத்துனன் குழந்தையையும் விளையாட அழைத்துச் சென்றிருந்த என் மனைவியிடம் ஒரு சிறுவனும், சிறுமியும் (பத்து - பதிமூன்று வயதிருக்கும்) 'You are all slaves, why dont you go to your country?' என்று கேட்டதில் உள்ள வருத்தம் கொஞ்சம் இன்னமும் இருக்கத்தான் செய்தாலும், மொத்ததில் குடும்பத்தோடு ஒன்றாக சந்தோஷமாக இருந்தது மகிழ்ச்சியையே தருகிறது.
அலுவலகத்தில் உள்ள வித்தியாசங்கள் - கூப்பிடும் முறை, செயல்படும் முறை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் பொதுவாழ்வில் இவைகளின் தீவிரம் அதிகம். உதாரணமாக நாங்கள் சென்ற இரயில் நிலையத்திலெல்லாம் தானியங்கிக் கருவி (பயணச்சீட்டு வழங்க) வைத்திருந்தார்கள். அதே சமயத்தில் அதன் அருகே ஒரு பணியாளர் நின்று கொண்டு கருவியை உபயோகிக்க உதவிக் கொண்டிருந்தார்! மனதுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அதே சமயத்தில் ஸவுத்தாம்டன் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் போது, ஐந்து மணிக்கு கதவை இழுத்து மூடிவிட்டார்கள். வெளியே உட்கார நாற்காலி கிடையாது, கழிப்பிடம் அலுவலகத்திற்க்கு உள்ளே தான். அலுவலகத்திற்குள் பேருந்துப் பணியாளர்கள் நால்வர் அமர்ந்து பேசிக் கொண்டும், சுடொக்கு போட்டுக் கொண்டும், ஏதோ வேலை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாய் வந்த பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரை அந்தப் பணியாளர்கள் கதவைத் திறக்கவேயில்லை, பயணிகள் கண்ணாடி ஜன்னலைத் தட்டிக் கூப்பிட்ட போதும்!
நாங்கள் வந்திருக்கும் சமயம் உலகக் கோப்பை (கால் பந்து) ஜுரம். கார், வீடு, உடைகள், ஏன் முகத்திலும் கூட இங்கிலாந்துக் கொடி. நிறைய கார்களில் இரண்டு கொடிகள்; வசிக்கும் ஊcன இங்கிலாந்து, பிறந்த ஊரான பிரேசில் (அல்லது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இன்ன பிற நாட்டுக் கொடிகள்)! வித்தியாசமாக இருந்தது.
செய்திகளில் முக்கியமான அரசியல், சமூகப் பிரச்சனை ஒரு நீதிபதி சட்டத்தில் உள்ளது போல ஒரு குற்றவாளிக்கு (child molestation) 'பரோல்' கொடுத்தது. அரசும் அரசியல் வாதிகளும், நீதிபதியைத் தாக்கி அறிக்கைகள் விட, நீதிபதி சார்பில் மற்ற வழக்குரைஞர்கள் சட்டம் இயற்றிய அரசைக் குற்றம் கூற, முடிவில் அரசு தரப்பில் ஒரு மந்திரியை அமெரிக்கா அனுப்பி அங்கு எப்படி இது போன்ற விஷயங்களை அரசும் சட்டமும் கண்காணிக்கிறது என்று அறியப் போவதாக செய்தி வந்திருக்கிறது. நாலு பாட்டும், இரண்டு சண்டைக்காட்சிகளும் சேர்த்தால் நம்மூர் சினிமா தான்!
இதைத் தவிர இரண்டு செய்திகள் - சென்ற வாரத்தில். 1. தவறான தகவல் அடிப்படையில் இங்கிலாந்துப் போலீஸ் ஒரு வீட்டில் புகுந்து ஒருவரை சுட்டும், அவரது சகோதரரை அடித்தும் கைது பண்ணி பத்து நாட்கள் முட்டிக்கு முட்டி தட்டி விசாரித்து பின் தவறு தெரிந்து விடுதலை செய்திருக்கிறார்கள். இந்த சகோதரர்கள் முஸ்லிம்! அதே வாரத்தில் இங்கிலாந்துப் போலீஸ் தலைவருக்கு ஒரு விருதும் வழங்கப் படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறது 2. இங்கிலாந்து ராணிக்கு 80 வயதாகிவிட்டது. பிரார்த்தனைக் கூட்டத்தில் தூங்கிய பிரதம மந்திரியின் மனைவியின் புகைப்படம் செய்தித் தாள்களில் வந்திருக்கிறது.
அமெரிக்காவைப் போல் மற்ற இன, மதங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இங்கு அதிகம் இல்லை. வந்த இரண்டாம் நாள் அருகில் உள்ள பூங்காவில் மகளையும், என் மைத்துனன் குழந்தையையும் விளையாட அழைத்துச் சென்றிருந்த என் மனைவியிடம் ஒரு சிறுவனும், சிறுமியும் (பத்து - பதிமூன்று வயதிருக்கும்) 'You are all slaves, why dont you go to your country?' என்று கேட்டதில் உள்ள வருத்தம் கொஞ்சம் இன்னமும் இருக்கத்தான் செய்தாலும், மொத்ததில் குடும்பத்தோடு ஒன்றாக சந்தோஷமாக இருந்தது மகிழ்ச்சியையே தருகிறது.
திங்கள், ஜூன் 12, 2006
ஒலி
சிறிது நாட்களுக்கு முன் ஒளி பற்றி 'வண்ணங்கள்' என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டேன். அதன் தொடர்ச்சியாக இந்த 'ஒலி'. மன்னார்குடியில் படிக்கும் போது (+1), 'டியூனிங் ஃபோர்க்' சம்பந்தப் பட்ட ஒரு பௌதீக சோதனை - கம்பியில் சிறு பேப்பர் துண்டுகளை தொங்க விட்டு, Tuning Forkஐ ஒரு தட்டு தட்டி, எங்கு அந்தப் பேப்பர் எழும்பி விழுகிறது என்று பார்த்து, கணக்கெல்லாம் போட்டு, அலைவரிசை கண்டுபிடிக்கும் ஒரு சோதனை - நினைவுக்கு வருகிறது. வெண்பா இலக்கணம் சொல்லித்தந்த தமிழ் ஆசிரியர் சொன்னது 'அசையில்லாமல் இசை இல்லை'; நிச்சயமாகச் சொல்லலாம் அசைவில்லாமல் ஒலியில்லை என்று. காற்றிலுள்ள அணுக்கள் மூலமாக பரவுகின்ற அதிர்வே நாம் ஒலியைக் கேட்க உதவுகிறது.
இந்த ஒலியும் ஒரு அலைதான் - ஆனால் ஒளி போல் குறுக்குவாட்டில் போகாமல் நெடுக்கு வாட்டில் போகும். இதைவிட முக்கியமான வித்தியாசம் - ஒலி செல்வதற்கு ஏதாவது ஒரு ஊடகம் - carrier - தேவை. ஒளி வெற்றிடத்திலும் செல்லும், ஒலியால் முடியாது. அது மட்டுமல்ல; ஒலி செல்லும் வேகம் ஊடகத்தைப் பொறுத்தது. திடப் பொருள்களில் மிக வேகமாகவும், திரவப் பொருள்களில் அதை விட சற்று மெதுவாகவும், வாயுப்பொருள்களில் மிக மிக மெதுவாகவும் செல்லும். ஒலியின் அலைவரிசையை ஹெர்ட்ஸ் என்று குறிப்பார்கள் Heinrich Rudolph Hertz (1857-94) நினைவாக.
மனிதக் காதுகளுக்கு 20ல் இருந்து 20,000 ஹெர்ட்ஸ் வரை அலைவரிசையுடைய ஒலிகள் கேட்கும். சில விலங்குகளுக்கு - நீர்யானை, யானை, திமிங்கிலம் போன்றவை - "இன்ஃப்ரா" என்று சொல்லப்படும் 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. நாய், பூனை, எலிகள் - "அல்ட்ரா" என்று சொல்லப்படும் 20,000 ஹெர்ட்ஸ்க்கும் மேலான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. வௌவாலின் கேட்கும் திறன் பற்றி எல்லோருக்கும் தெரியும். பாம்புக்கு காதுகள் இல்லாவிட்டாலும், மகுடியிலிருந்து வரும் ஒலி அலைகளின் அதிர்வு, நிலத்திலிருந்து, அதன் உடலில் உள்ள எலும்புகள் மூலமாக அதன் மூளைக்கு செல்கின்றது என்று படித்ததாக நினைவு.
நம் காதுக்குள் வந்த ஒலி அதிர்வு, காதுக்குள் உள்ள திரவத்தை அதிர்வடையச் செய்கிறது; பின் அந்த அதிர்வே மூளைக்கு அனுப்பப்பட்டு நம்மால் ஒலியாக உணரப்படுகிறது. நாம் பேசும் போதோ, பாடும் போதோ நம்முடைய வாயிலிருந்து வரும் ஒலிவலைகள் காற்றின் மூலமாக காதை அடையும். அதே சமயத்தில் நம்முடைய வாய் எலும்புகளில் அந்த ஒலியலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் காதை அடைந்து, பின் மூளையை அடையும் போது, நம் குரலின் அடையாளம் நமக்கு ஒருவிதமாக மாற்றிக் காட்டப்படுகிறது - இரண்டுவிதமான அதிர்வுகளின் கலவையாக (காற்றின் மூலம் வந்த அதிர்வு + எலும்பின் மூலம் வந்த அதிர்வு). இதனாலேயே நம்முடைய குரலை பதிவு பண்ணிக் கேட்கும் போது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது. இந்த விஷயத்தைப் பற்றி ஸ்ரீகாந்த் மீனாக்ஷி சமீபத்தில் எழுதிய பதிவு இங்கே.
காதில் எல்லா உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்தாலும், சமயத்தில் பிறர் சொல்வது நமக்கு கேட்பதில்லை; முக்கியமான காரணம் மூளை அந்த சமயத்தில் வேறு ஏதாவது ஒரு காரியத்தில் மிகவும் நுணுக்கமாக ஈடுபட்டிருப்பதுதான். ஆர்க்கிமிடிஸ் இது போன்று ஒரு புதிரை தீர்க்க முயன்று கொண்டிருக்கையில், அருகில் வந்த ஒரு வீரனுக்கு உடன் பதில் சொல்லாததால் கொல்லப்பட்டார் என்று கேள்வி. வேறு வேலையில் ஈடுபடாவிட்டாலும் வரும் ஒலி அதிர்வுகளைப் பற்றி ஒரு விதமான பரிச்சயம் இருந்துவிட்டால், மூளை செயல்பட மறந்துவிடும்.
நாங்கள் மன்னார்குடியில் இருந்த வீட்டில் ஒரு அரதப் பழசான மின்விசிறி உண்டு. அது போடும் சத்தம் மிக அதிகம். முதலில் சங்கடமாய் இருந்தாலும், சில மாதங்கள் கழித்து தூங்குவதற்கு அந்த சத்தம் தொந்தரவாயில்லை; என் மூளை அந்த சத்தத்தை நிராகரித்து செயல்பட கற்றுக் கொண்டுவிட்டது. என் வீட்டம்மாவிடம் சில நாட்களுக்கு முன் இதை விவரித்தபோது அவங்களுக்கு வந்ததே கோபம். "நான் சொல்வதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதும் இல்லாமல், என் குரலை இனம் பிரித்து உங்கள் மூளை நிராகரித்து விடுகிறது என்று சொல்ல என்ன தைரியம்" என்று! தவறு என் மீது தான். 'பேப்பர் குப்பைகளை எல்லாம் எடுத்து வையுங்கள்' என்று இரண்டு, மூன்று முறை கூறியது என் காதில் விழவில்லை; 'ஏன் விழவில்லை' என்ற அவங்க கேள்விக்கு எப்போதும் போல் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு பேப்பரை எடுத்து வைக்காமல் அன்றைக்கு என்று இந்த விளக்கத்தைக் கொடுத்தேன். விளக்கம் சொல்லாமல் காது சரியில்லை என்று சமாளிக்காதது என் குற்றம் தானே!
இந்த ஒலியும் ஒரு அலைதான் - ஆனால் ஒளி போல் குறுக்குவாட்டில் போகாமல் நெடுக்கு வாட்டில் போகும். இதைவிட முக்கியமான வித்தியாசம் - ஒலி செல்வதற்கு ஏதாவது ஒரு ஊடகம் - carrier - தேவை. ஒளி வெற்றிடத்திலும் செல்லும், ஒலியால் முடியாது. அது மட்டுமல்ல; ஒலி செல்லும் வேகம் ஊடகத்தைப் பொறுத்தது. திடப் பொருள்களில் மிக வேகமாகவும், திரவப் பொருள்களில் அதை விட சற்று மெதுவாகவும், வாயுப்பொருள்களில் மிக மிக மெதுவாகவும் செல்லும். ஒலியின் அலைவரிசையை ஹெர்ட்ஸ் என்று குறிப்பார்கள் Heinrich Rudolph Hertz (1857-94) நினைவாக.
மனிதக் காதுகளுக்கு 20ல் இருந்து 20,000 ஹெர்ட்ஸ் வரை அலைவரிசையுடைய ஒலிகள் கேட்கும். சில விலங்குகளுக்கு - நீர்யானை, யானை, திமிங்கிலம் போன்றவை - "இன்ஃப்ரா" என்று சொல்லப்படும் 20 ஹெர்ட்ஸ்க்கும் குறைவான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. நாய், பூனை, எலிகள் - "அல்ட்ரா" என்று சொல்லப்படும் 20,000 ஹெர்ட்ஸ்க்கும் மேலான அலைவரிசைகளில் வரும் ஒலியையும் கேட்கும் திறமை உண்டு. வௌவாலின் கேட்கும் திறன் பற்றி எல்லோருக்கும் தெரியும். பாம்புக்கு காதுகள் இல்லாவிட்டாலும், மகுடியிலிருந்து வரும் ஒலி அலைகளின் அதிர்வு, நிலத்திலிருந்து, அதன் உடலில் உள்ள எலும்புகள் மூலமாக அதன் மூளைக்கு செல்கின்றது என்று படித்ததாக நினைவு.
நம் காதுக்குள் வந்த ஒலி அதிர்வு, காதுக்குள் உள்ள திரவத்தை அதிர்வடையச் செய்கிறது; பின் அந்த அதிர்வே மூளைக்கு அனுப்பப்பட்டு நம்மால் ஒலியாக உணரப்படுகிறது. நாம் பேசும் போதோ, பாடும் போதோ நம்முடைய வாயிலிருந்து வரும் ஒலிவலைகள் காற்றின் மூலமாக காதை அடையும். அதே சமயத்தில் நம்முடைய வாய் எலும்புகளில் அந்த ஒலியலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் காதை அடைந்து, பின் மூளையை அடையும் போது, நம் குரலின் அடையாளம் நமக்கு ஒருவிதமாக மாற்றிக் காட்டப்படுகிறது - இரண்டுவிதமான அதிர்வுகளின் கலவையாக (காற்றின் மூலம் வந்த அதிர்வு + எலும்பின் மூலம் வந்த அதிர்வு). இதனாலேயே நம்முடைய குரலை பதிவு பண்ணிக் கேட்கும் போது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது. இந்த விஷயத்தைப் பற்றி ஸ்ரீகாந்த் மீனாக்ஷி சமீபத்தில் எழுதிய பதிவு இங்கே.
காதில் எல்லா உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்தாலும், சமயத்தில் பிறர் சொல்வது நமக்கு கேட்பதில்லை; முக்கியமான காரணம் மூளை அந்த சமயத்தில் வேறு ஏதாவது ஒரு காரியத்தில் மிகவும் நுணுக்கமாக ஈடுபட்டிருப்பதுதான். ஆர்க்கிமிடிஸ் இது போன்று ஒரு புதிரை தீர்க்க முயன்று கொண்டிருக்கையில், அருகில் வந்த ஒரு வீரனுக்கு உடன் பதில் சொல்லாததால் கொல்லப்பட்டார் என்று கேள்வி. வேறு வேலையில் ஈடுபடாவிட்டாலும் வரும் ஒலி அதிர்வுகளைப் பற்றி ஒரு விதமான பரிச்சயம் இருந்துவிட்டால், மூளை செயல்பட மறந்துவிடும்.
நாங்கள் மன்னார்குடியில் இருந்த வீட்டில் ஒரு அரதப் பழசான மின்விசிறி உண்டு. அது போடும் சத்தம் மிக அதிகம். முதலில் சங்கடமாய் இருந்தாலும், சில மாதங்கள் கழித்து தூங்குவதற்கு அந்த சத்தம் தொந்தரவாயில்லை; என் மூளை அந்த சத்தத்தை நிராகரித்து செயல்பட கற்றுக் கொண்டுவிட்டது. என் வீட்டம்மாவிடம் சில நாட்களுக்கு முன் இதை விவரித்தபோது அவங்களுக்கு வந்ததே கோபம். "நான் சொல்வதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதும் இல்லாமல், என் குரலை இனம் பிரித்து உங்கள் மூளை நிராகரித்து விடுகிறது என்று சொல்ல என்ன தைரியம்" என்று! தவறு என் மீது தான். 'பேப்பர் குப்பைகளை எல்லாம் எடுத்து வையுங்கள்' என்று இரண்டு, மூன்று முறை கூறியது என் காதில் விழவில்லை; 'ஏன் விழவில்லை' என்ற அவங்க கேள்விக்கு எப்போதும் போல் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு பேப்பரை எடுத்து வைக்காமல் அன்றைக்கு என்று இந்த விளக்கத்தைக் கொடுத்தேன். விளக்கம் சொல்லாமல் காது சரியில்லை என்று சமாளிக்காதது என் குற்றம் தானே!
திங்கள், மே 29, 2006
வண்ணங்கள்
சென்ற வாரம் எங்க வீட்டம்மா என்னை மாடியிலிருந்து 'பச்சை'ப் பையை எடுத்துத் தரச் சொன்னாங்க. நான் கொண்டு வந்த பின் அது 'பச்சை' இல்லை, 'நீலம்' என்று சொல்லி திருப்பித்தர நான் மறுமுறை பத்து படி ஏறி 'நீல'ப் பையை எடுத்துக் கொண்டு வந்தேன். எனக்கு கண்ணில் ஏதும் கோளாறு இல்லை (அப்படித்தான் சென்ற வருடம் மருத்துவர் சொன்னார்). அப்புறம் எப்படி பச்சைக்கும் நீலத்திற்கும் உனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று கேட்பீர்கள் என்று தெரியும். விஷயம் இதுதான். இரண்டு பைகளுமே பச்சைக்கும் நீலத்திற்கும் இடையே இருக்கும் ஒரு குழப்பமான கலர். ஒரு மாதிரியாகப் பார்த்தால் பச்சை; கொஞ்சம் தள்ளி நின்று வேறு கோணத்தில் பார்த்தால் நீலம். ஒரு விதத்தில் நாங்கள் இருவருமே சரிதான் - எங்களின் தனித்தனிக் கோணங்களில். இதை மாடு அசைபோடுவது போல அலுவலகத்திற்கு காரை ஓட்டிக்கொண்டுவரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.
முதன் முதலில் ஒளி அலைகளைப் பற்றி விபரமாக அறிந்து கொண்டது மன்னார்குடி தேசிய மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் போதுதான். அறிவியல் ஆசிரியர் திரு. சேதுராமன் (தற்போது அவர் தான் தலைமை ஆசிரியர்) அனுபவித்து பாடம் சொல்லிக் கொடுத்தது, எனக்கு அறிவியலில் ஒரு தனி விருப்பம் வருவதற்குக் காரணம். ஒளியும் ஒரு வித அலை தான் (ஒளிக்கு துகளின் தன்மையும் உண்டு). இந்த அலைகள் பல விதமானவை. ஒரு முக்கியமான அளவுகோல் "அலைநீளம்" ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு அலை ஒரு முறை மேலே எழுந்து, கீழே போய், மறுபடியும் தொடங்கிய நிலைக்கு வரும் தூரத்தை அலை நீளம் என்று கூறுவார்கள்.
ரேடியோ அலைகளின் அலைநீளம் மிக அதிகம் - 570 மீட்டர் வரை போகும். காமா அலைகளின் அலைநீளம் மிக மிகக் குறைவு - மீட்டரில் அளந்தால் தசமப் புள்ளிக்குப் பிறகு பனிரெண்டு பூஜ்யம் போட்டு ஒன்று போட்டால் வரும் தூரம் - அதாவது ஒரு மில்லி மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு! நாம் கண்ணால் பார்க்கும் ஒளி அலைகள் இந்த காமா அலைகளின் நீளத்தை விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமானவை (அதாவது ஒரு மில்லி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு). இந்த தூரத்தை நானோ மீட்டர் என்று கூறுவார்கள். நாம் பார்க்கும் ஒளி அலைகளின் அலைநீளம் 400ல் இருந்து 700 நானோ மீட்டர்கள். முழுப் பட்டியலுக்கு பதிவின் முடிவிற்கு செல்லவும்.
இந்த ஒளி அலைகளின் பங்கு - மொத்த அலைகளின் விஸ்தீரணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, ரொம்பவும் சின்னது. அதாவது மொத்த அலைகளில் பத்தாயிரம் கோடியில் ஒரு பங்கைத் தான் நாம் கண்களால் பார்க்க முடியும். பள்ளியில் படிக்கும் போது விபரீதமான கற்பனைகள் வரும். நம் கண்ணுக்கு மட்டும் மற்ற அலைநீளங்கள் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ரேடியோ டெலஸ்கோப் துணையோடு பார்ப்பதற்கு பதிலாக தொலைதூர நட்சத்திரங்களையும், கோள்களையும் கண்ணாலேயே பார்க்க முடியும், என்றெல்லாம் யோசித்ததுண்டு.
இந்த வண்ணக் குழப்பம் வந்தபின் 'ஆட்டுக்குக் கூட தாடியை அளந்து தான் வைத்தான்' என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. தம்மாத்தூண்டு இருக்கும் ஒளி அலைகளுக்குள்ளேயே இத்தனை வண்ணங்கள், குழப்பங்கள் - பச்சையா? நீலமா? என்று. மற்ற அலைநீளங்களையும் கண்ணால் பார்க்க முடிந்தால் எத்தனை வண்ணங்கள் இருக்குமோ? இன்னமும் எத்தனை பிரச்சனையோ? கல்யாண சேலைக்குப் பொருத்தமாக சட்டை எடுப்பதற்குள் அறுபதாம் கல்யாணமே வந்து விடும்! பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷம் தான் மனதில் இருக்கிறது.
அலை நீளங்கள்
ரேடியோ அலைகள் = 570 - 2.8 மீட்டர்
தொலைக்காட்சி அலைகள் = 5.6 - 0.34 மீட்டர்
மைக்ரோ அலைகள் = 0.1 - 0.001 மீட்டர்
ஒளி அலைகள் (சிகப்பு-வயலட்) = 700 - 400 நானோ மீட்டர்
அல்ட்ரா வயலட் = 0.1 - 0.0001 நானோ மீட்டர்
X அலைகள் = 0.0001 - 0.000001 நானோ மீட்டர்
காமா அலைகள் = 0.000001 நானோ மீட்டருக்கும் குறைவு
முதன் முதலில் ஒளி அலைகளைப் பற்றி விபரமாக அறிந்து கொண்டது மன்னார்குடி தேசிய மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் போதுதான். அறிவியல் ஆசிரியர் திரு. சேதுராமன் (தற்போது அவர் தான் தலைமை ஆசிரியர்) அனுபவித்து பாடம் சொல்லிக் கொடுத்தது, எனக்கு அறிவியலில் ஒரு தனி விருப்பம் வருவதற்குக் காரணம். ஒளியும் ஒரு வித அலை தான் (ஒளிக்கு துகளின் தன்மையும் உண்டு). இந்த அலைகள் பல விதமானவை. ஒரு முக்கியமான அளவுகோல் "அலைநீளம்" ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் ஒரு அலை ஒரு முறை மேலே எழுந்து, கீழே போய், மறுபடியும் தொடங்கிய நிலைக்கு வரும் தூரத்தை அலை நீளம் என்று கூறுவார்கள்.
ரேடியோ அலைகளின் அலைநீளம் மிக அதிகம் - 570 மீட்டர் வரை போகும். காமா அலைகளின் அலைநீளம் மிக மிகக் குறைவு - மீட்டரில் அளந்தால் தசமப் புள்ளிக்குப் பிறகு பனிரெண்டு பூஜ்யம் போட்டு ஒன்று போட்டால் வரும் தூரம் - அதாவது ஒரு மில்லி மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு! நாம் கண்ணால் பார்க்கும் ஒளி அலைகள் இந்த காமா அலைகளின் நீளத்தை விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமானவை (அதாவது ஒரு மில்லி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு). இந்த தூரத்தை நானோ மீட்டர் என்று கூறுவார்கள். நாம் பார்க்கும் ஒளி அலைகளின் அலைநீளம் 400ல் இருந்து 700 நானோ மீட்டர்கள். முழுப் பட்டியலுக்கு பதிவின் முடிவிற்கு செல்லவும்.
இந்த ஒளி அலைகளின் பங்கு - மொத்த அலைகளின் விஸ்தீரணத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, ரொம்பவும் சின்னது. அதாவது மொத்த அலைகளில் பத்தாயிரம் கோடியில் ஒரு பங்கைத் தான் நாம் கண்களால் பார்க்க முடியும். பள்ளியில் படிக்கும் போது விபரீதமான கற்பனைகள் வரும். நம் கண்ணுக்கு மட்டும் மற்ற அலைநீளங்கள் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ரேடியோ டெலஸ்கோப் துணையோடு பார்ப்பதற்கு பதிலாக தொலைதூர நட்சத்திரங்களையும், கோள்களையும் கண்ணாலேயே பார்க்க முடியும், என்றெல்லாம் யோசித்ததுண்டு.
இந்த வண்ணக் குழப்பம் வந்தபின் 'ஆட்டுக்குக் கூட தாடியை அளந்து தான் வைத்தான்' என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. தம்மாத்தூண்டு இருக்கும் ஒளி அலைகளுக்குள்ளேயே இத்தனை வண்ணங்கள், குழப்பங்கள் - பச்சையா? நீலமா? என்று. மற்ற அலைநீளங்களையும் கண்ணால் பார்க்க முடிந்தால் எத்தனை வண்ணங்கள் இருக்குமோ? இன்னமும் எத்தனை பிரச்சனையோ? கல்யாண சேலைக்குப் பொருத்தமாக சட்டை எடுப்பதற்குள் அறுபதாம் கல்யாணமே வந்து விடும்! பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷம் தான் மனதில் இருக்கிறது.
அலை நீளங்கள்
ரேடியோ அலைகள் = 570 - 2.8 மீட்டர்
தொலைக்காட்சி அலைகள் = 5.6 - 0.34 மீட்டர்
மைக்ரோ அலைகள் = 0.1 - 0.001 மீட்டர்
ஒளி அலைகள் (சிகப்பு-வயலட்) = 700 - 400 நானோ மீட்டர்
அல்ட்ரா வயலட் = 0.1 - 0.0001 நானோ மீட்டர்
X அலைகள் = 0.0001 - 0.000001 நானோ மீட்டர்
காமா அலைகள் = 0.000001 நானோ மீட்டருக்கும் குறைவு
புதன், மே 10, 2006
வீடு!
நேற்று மாலையில் அலுவலகத்திலிருந்து வரும்போது அந்தப் புது வீட்டின் வாசலில் பலகை வைத்திருந்தார்கள் – For Sale - என்று. மனதிற்குள் ஒரு வருத்தம் கலந்த சந்தோஷம்.
நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில் ஒரு தெருவில் கடைசி வீடு அது. தெரு முனை என்பதால், மெதுவாகத்தான் திரும்ப வேண்டும்; சில சமயம் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சில நிமிடம் நிற்கவும் வேண்டும். தினமும் பார்ப்பதால் அந்த வீட்டோடு ஒரு அன்யோன்யமான நட்பு - வீட்டோடு நட்பா என்று கிண்டலெல்லாம் வேண்டாம் - ஒரு பரிச்சயம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
முன்பு அங்கு ஒரு பழைய வீடு - ஒரு மாதிரி மரப் பழுப்பு வண்ணத்தில் - இருந்தது. வீட்டிலே யாரும் வசித்ததாகவும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கு முன்னால் திடீரென்று ஒரு நாள் அந்த வீட்டின் அருகில் பெரிய பெரிய இயந்திரங்கள் - புல்டோஸர். தெருவுக்குள் போக ரொம்ப நேரமாயிற்று - வழி அதிகம் இல்லாததால். அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறு வழியில் (கொஞ்சம் சுற்று வழி) வீட்டுக்கு வந்ததால் என்ன நடந்தது என்று விபரம் தெரியாது. மறுபடியும் வழக்கமான பாதையில் வந்தால், வீடு இருந்த இடத்தில் வெறும் குழி - ஒரு குட்டி மலை போல மண்ணைக் குமித்திருந்தார்கள். ‘Free Fill Dirt’ என்ற பலகை அருகில் இருந்தது.
அடுத்த வாரம் அந்த மண்ணைக் காணோம் - பதிலாக குழியின் பக்கங்களில் கான்கிரீட் ப்ளாக்குகள் வைத்து சுவர். அடுத்த வாரம் தளம் தயார், மரச் சட்டங்கள் வந்து இறங்கின. ஒரு வாரத்திற்குள் இரு நிலைகள் கொண்ட வீட்டின் ஃப்ரேம் தயார். கிடு கிடுவென வீடு வளர்ந்தது. பின்பு வாசல் படி, ஜன்னல்கள், கராஜ் கதவுகள் என்று ஒவ்வொன்றாக வந்தது. சென்ற வார ஆரம்பத்தில் வாசல் சாலை ரெடி; பின்பு வாசல் புல்வெளி. நேற்று வீடு விற்பதற்கான பலகை. ஒரு மாதிரியான மங்கின சந்தனக் கலர் வீடு - குறைந்தது $750,000 ஆவது இருக்கும்.
அழகான வாசல் படி, உயரமான கூரை, நிதானமான அதே சமயம் ஒளி நன்றாக வரும் விளக்கு, Bay Window, என்று வீடு அழகாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக மனத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழுப்பு நிற வீட்டை நினைத்து மனம் ஏன் வருந்துகிறது என்று தெரியவில்லை.
பொதுவாக வீட்டைப் பற்றி என் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் தான் சிறுவனாக தாத்தா வீட்டில் (தஞ்சாவூர் அருகில் வழுத்தூர்) இருந்தது, வீட்டிற்கு எப்படி மண் சாந்து (களிமண்ணை அரைத்து, கடுக்காய் நீர் விட்டு, செங்கலைப் பூசுவது) பூசுவது, எப்படி ஓடு மாற்றுவது என்றெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் நடந்தது அவருக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. பூசுவதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருளைக் கேட்டால் வித்தியாசமாக இருந்தது - உ.ம். பசுஞ்சாணி, கடுக்காய், துவரை விதை உறை, சுண்ணாம்பு, காவி, களிமண். பெரிய பணக்காரர்கள் வீட்டில் வாசலுக்கு இந்தக் கலவையொடு முட்டையையும் அரைத்துப் போடுவார்களாம் - பளபளப்புக்காக!
நான் பார்த்து வளர்ந்த இந்தப் புது வீட்டில் பூசப்பட்டது எல்லாம் செயற்கையான பொருட்களே; வெளியில் வந்த புல் தரை கூட ஏதோ ஒரு இடத்தில் வளர்த்த புல்; இரண்டு அங்குலத் தரையோடு சேர்த்து எடுத்து வந்து கம்பளம் விரிப்பது போல் விரித்து தண்ணீர் விட்டு ஒரே நாளில் தயார் பண்ணி விட்டார்கள்.
அதனால்தான், மூன்றே மாதத்தில் சகல வசதிகளோடு அழகாக வந்துவிட்டதில் மனது சந்தோஷப்பட்டாலும், பழைய வீட்டை மனசு நினைத்து வருந்துகிறதோ? இன்னும் கொஞ்ச நாளில் அந்த பழைய வீட்டின் நினைவு முற்றிலும் மறந்து போய் இந்தப் புது வீட்டில் வைத்துள்ள ரோஜாச் செடிகளையும், புல்வெளியையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வேனோ என்னமோ.
நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில் ஒரு தெருவில் கடைசி வீடு அது. தெரு முனை என்பதால், மெதுவாகத்தான் திரும்ப வேண்டும்; சில சமயம் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சில நிமிடம் நிற்கவும் வேண்டும். தினமும் பார்ப்பதால் அந்த வீட்டோடு ஒரு அன்யோன்யமான நட்பு - வீட்டோடு நட்பா என்று கிண்டலெல்லாம் வேண்டாம் - ஒரு பரிச்சயம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
முன்பு அங்கு ஒரு பழைய வீடு - ஒரு மாதிரி மரப் பழுப்பு வண்ணத்தில் - இருந்தது. வீட்டிலே யாரும் வசித்ததாகவும் தெரியவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கு முன்னால் திடீரென்று ஒரு நாள் அந்த வீட்டின் அருகில் பெரிய பெரிய இயந்திரங்கள் - புல்டோஸர். தெருவுக்குள் போக ரொம்ப நேரமாயிற்று - வழி அதிகம் இல்லாததால். அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறு வழியில் (கொஞ்சம் சுற்று வழி) வீட்டுக்கு வந்ததால் என்ன நடந்தது என்று விபரம் தெரியாது. மறுபடியும் வழக்கமான பாதையில் வந்தால், வீடு இருந்த இடத்தில் வெறும் குழி - ஒரு குட்டி மலை போல மண்ணைக் குமித்திருந்தார்கள். ‘Free Fill Dirt’ என்ற பலகை அருகில் இருந்தது.
அடுத்த வாரம் அந்த மண்ணைக் காணோம் - பதிலாக குழியின் பக்கங்களில் கான்கிரீட் ப்ளாக்குகள் வைத்து சுவர். அடுத்த வாரம் தளம் தயார், மரச் சட்டங்கள் வந்து இறங்கின. ஒரு வாரத்திற்குள் இரு நிலைகள் கொண்ட வீட்டின் ஃப்ரேம் தயார். கிடு கிடுவென வீடு வளர்ந்தது. பின்பு வாசல் படி, ஜன்னல்கள், கராஜ் கதவுகள் என்று ஒவ்வொன்றாக வந்தது. சென்ற வார ஆரம்பத்தில் வாசல் சாலை ரெடி; பின்பு வாசல் புல்வெளி. நேற்று வீடு விற்பதற்கான பலகை. ஒரு மாதிரியான மங்கின சந்தனக் கலர் வீடு - குறைந்தது $750,000 ஆவது இருக்கும்.
அழகான வாசல் படி, உயரமான கூரை, நிதானமான அதே சமயம் ஒளி நன்றாக வரும் விளக்கு, Bay Window, என்று வீடு அழகாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக மனத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பழுப்பு நிற வீட்டை நினைத்து மனம் ஏன் வருந்துகிறது என்று தெரியவில்லை.
பொதுவாக வீட்டைப் பற்றி என் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் தான் சிறுவனாக தாத்தா வீட்டில் (தஞ்சாவூர் அருகில் வழுத்தூர்) இருந்தது, வீட்டிற்கு எப்படி மண் சாந்து (களிமண்ணை அரைத்து, கடுக்காய் நீர் விட்டு, செங்கலைப் பூசுவது) பூசுவது, எப்படி ஓடு மாற்றுவது என்றெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் நடந்தது அவருக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. பூசுவதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருளைக் கேட்டால் வித்தியாசமாக இருந்தது - உ.ம். பசுஞ்சாணி, கடுக்காய், துவரை விதை உறை, சுண்ணாம்பு, காவி, களிமண். பெரிய பணக்காரர்கள் வீட்டில் வாசலுக்கு இந்தக் கலவையொடு முட்டையையும் அரைத்துப் போடுவார்களாம் - பளபளப்புக்காக!
நான் பார்த்து வளர்ந்த இந்தப் புது வீட்டில் பூசப்பட்டது எல்லாம் செயற்கையான பொருட்களே; வெளியில் வந்த புல் தரை கூட ஏதோ ஒரு இடத்தில் வளர்த்த புல்; இரண்டு அங்குலத் தரையோடு சேர்த்து எடுத்து வந்து கம்பளம் விரிப்பது போல் விரித்து தண்ணீர் விட்டு ஒரே நாளில் தயார் பண்ணி விட்டார்கள்.
அதனால்தான், மூன்றே மாதத்தில் சகல வசதிகளோடு அழகாக வந்துவிட்டதில் மனது சந்தோஷப்பட்டாலும், பழைய வீட்டை மனசு நினைத்து வருந்துகிறதோ? இன்னும் கொஞ்ச நாளில் அந்த பழைய வீட்டின் நினைவு முற்றிலும் மறந்து போய் இந்தப் புது வீட்டில் வைத்துள்ள ரோஜாச் செடிகளையும், புல்வெளியையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வேனோ என்னமோ.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)