குப்பை – 1
இது உண்மையிலேயே 'குப்பை/குப்பைத் தொட்டி' பற்றிய பதிவுதான். சிறு வயதில் பார்த்ததெல்லாம் தெருவில் ஒரு சிமென்ட் சிலின்டர். மூலையில் நிறுத்தி வைத்திருப்பர்கள். வாரம் ஒரு முறை முனிசிபாலிடி குப்பை வண்டி வந்து அந்த சிமென்ட் குழாயைச் சாய்த்து விட்டு, கூடையில் சேர்த்து, வண்டியில் (மாட்டு வண்டி) போட்டு எடுத்துச் செல்வார்கள். மன்னார்குடியில் நாங்கள் இருந்த தெருவில் புழுதி அதிகம்; குப்பை வண்டி வந்து போகும் போது தெரு முழுதும் ஒரே தூசி படலம் தான். காரணம் அந்த தொழிலாளர்கள் துடைப்பத்தால் - நீண்ட கழியின் முனையில் முக்கோண வடிவில் சிறு தட்டி - பெருக்கி குவித்தபடியே போவார்கள்; பெண் தொழிலாளிகள் அதையும் எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டே தொடர்வார்கள். வீட்டின் அருகிலேயே குப்பைத்தொட்டி இருந்ததால், வீட்டிற்குள் குப்பை சேகரம் இல்லை.
இது வட நாட்டில் (சண்டீகர்/தில்லி) வாசம் செய்த போது 'கூடா'வாக மாறியது. ப்ளாட்டில் இருந்ததால், வீட்டிற்குள்ளேயே ஒரு சிறு குப்பைத் தொட்டியில் முதலில் சேகரம்; தினமும் காலையில் அந்த ப்ளாட்டுகளுக்குப் பொதுவான ஒரு 'கூடா' சேகரம் பண்ணும் பணியாளர் வந்து தன்னுடைய பெரிய பிளாஸ்டிக் கூடையில் ஒவ்வொரு வீட்டு 'கூடா'வையும் போட்டு எடுத்துச் செல்வார். அது ஒரு பெரிய வண்டிக்கு (இது இயந்திர வண்டி; மாடு தப்பித்தது) மாறி நகரத்தை விட்டு வெளியே செல்லும். 'கூடா' மனிதர் வராத நாளில் (அது வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள்), வீட்டுக் குப்பை அளவு அதிகமாகும். ஆக ஒரு விதமான கிராம/நகர இடத்திலிருந்து மாநகரத்துக்கு மாறுகையில், வீட்டுக் குப்பை அதிகமாயிற்று. வீட்டிலே குப்பை சேகரத்திற்கென்று தனியான குப்பைத் தொட்டி - பிளாஸ்டிக்கில்! குப்பையை வீட்டிலே சேமித்து வைப்பது, முன்னேற்றத்திற்கு அடையாளமானது!!
பின் நாடு விட்டு நாடு வந்து அமெரிக்க வாசத்தில் வீட்டுக் குப்பை தொட்டி அளவிலே பெருத்தது - காரணம், இங்கு தினந்தோரும் வீட்டுக் குப்பையை யாரும் எடுத்துச் செல்வதில்லை. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை - இரண்டுக்கும் தனித் தனிக் கட்டணம். அதிலும், நேரத்திற்கு (முதல் நாள் மாலையே) குப்பைத் தொட்டியை வீட்டு வாசலில், அதற்குறிய இடத்தில் வைக்க வேண்டும். வேளை தப்பினால் வீட்டிலே இருவாரக் குப்பை. எடுத்துச் செல்லும் இயந்திர வண்டி (பெரிய லாரி), தன் இயந்திரக் கரத்தால் குப்பைத் தோட்டியைத் தூக்கி, கவிழ்த்து குப்பை வண்டியில் விழுந்த பின், தொட்டியை வைத்துவிட்டு செல்லும். அதனால் தொட்டி எந்தப் பக்கம் பார்த்து இருக்கிறது என்றெல்லாம் சரிபார்த்து வைக்க வேண்டும்! இல்லையென்றால் பாதி குப்பை பெட்டிக்குள்ளேயே இருக்கும்.
இந்தப் பெரிய குப்பைத்தொட்டி அனேகமாக எல்லா வீட்டு காரேஜிலோ அல்லது வீட்டுப் பின்புறமோ தனியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விட்டிற்கு வெளியே வந்து குப்பையைப் போடுவது இயலாத ஒன்று - அதுவும் பனி பெய்யும் குளிர் காலத்தில். அதனால் வீட்டிற்குள்ளே சிறு குப்பைத் தொட்டிகள். அதுவும், குப்பை வாரியாக - சமையலறை குப்பைத் தொட்டி தனி விதம்; குளியலறை குப்பைத்தொட்டி வேறு விதம்; தவிர பாட்டில், காகிதம் என்று மறுசுழற்சி (recycle) செய்யும் பொருள்களுக்கான குப்பைத் தொட்டி வேறு. நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு, தட்டில் உள்ள கருவேப்பிலை, முருங்கைக்காய் சக்கை எல்லாம் தட்டைக் கழுவும் தொட்டியில் போட முடியாது - அங்கு 'garbage dispenser' இருந்தாலும் கூட. முருங்கைக்காய் தொட்டியில் மாட்டிக் கொண்டு அதை சுத்தம் பண்ணுவதற்கு முன் பசி வந்து இன்னுமொரு முறை சாப்பிட வேண்டிருக்கும்..
தவிர, இந்தக் குப்பைத் தொட்டி மூன்று-நான்கு நாட்களுக்கான குப்பை சேகரம் பண்ணுவதால், அளவிலும் பெரிதாக இருக்க வேண்டும், மூடியோடு கூட வேறு இருக்க வேண்டும் – இல்லையென்றால் நம் சுவாசம் பாதிக்கும்! குப்பையை நேரடியாக பெட்டியில் போடவும் முடியாது; அப்புறம் பெட்டியை யார் அலம்பி சுத்தம் செய்வது? இதற்கென்று ஒரு பிளாஸ்டிக் பை! அதிலும் வகை வகையாய் இருப்பதால் (நல்ல வாசனையோடு இருக்கும் பைகளும் உண்டு), கடையில் இதைத் தெரிந்தெடுக்கவே நேரமாகும். இதெல்லாம் போதாதென்று குப்பைத் தொட்டியை இளப்பமாகவும் வாங்க முடியாது - வீட்டிற்கு ஏற்ற சமையலறை; சமையலறைக்கேற்ற குப்பைத் தொட்டி. இந்தியாவில் இருக்கையில் உபயோகித்த பிளாஸ்டிக் போய் பள பளபளவென்றிருக்கும் எவர்சில்வர் குப்பைத் தொட்டி வாங்கியாகிவிட்டது. அனேகமாக முக்கால்வாசி வீட்டில் இது தான் சமையலறையில் இருக்கும்.
சாப்பிட்ட கையோடு மூடியைத் திறக்க முடியாதென்று, தொட்டியின் அடியில் ஒரு பெடல். அழுத்தினால் மூடி திறக்கும். நம்மூரில் பிளாஸ்டிக் பெட்டி அதிக நாள் வராது; உடைந்து போகும், வேறு வாங்க வேண்டும். இங்கு நிறைய நாள் உபயோகிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அழுத்தும் பெடல் - பிளாஸ்டிக். கொஞ்ச நாளில் உடைந்து போகும் - அப்போது மூடியை கையால் தான் தூக்க வேண்டும். தூக்கிப் போட்டு புதிது வாங்கி விட மனசு வரவில்லை. நான் வளர்ந்த விதம் தனி! பள பளவென்றிறுக்கும் இதை தூக்கிப் போடுவதா என்று யோசனை. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பெடல் இல்லாத தொட்டி. சரி நாம் தான் இப்படி என்றால் ஒரு நண்பர் (அவரும் நம்மூரிலிருந்து குடி பெயர்ந்தவர்) வீட்டுக்குப் போயிருந்த போது அவர் வீட்டு சமையலறையிலும் இதே போன்று ஒரு பெடல் இல்லாத எவர் சில்வர் தொட்டி!!
சரி ஒரு பொது விஷயம் இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தோம். இந்த குப்பைத் தொட்டி தயாரிக்கும் நிறுவனங்களை திட்டினோம் - வருமானத்துக்காக வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களே என்று. வீட்டிற்கு வந்திருந்த மூன்றாவது நண்பர் - அவரும் நம்மூர் தான் - புதிதாக எவர்சில்வர் பெடலோடு வந்த தொட்டி வாங்கியதாகவும், அதுவும் கொஞ்ச நாளில் உடைந்து போய் விட்டது (காரணம் பெடலை தொட்டியோடு இணைக்கும் கம்பி பிளாஸ்டிக்!!) என்றும், அந்தப் பெடல் எவர் சில்வர் என்பதால் அதை தூக்கிப் போடாமல் கராஜில் வைத்திருப்பதாகவும் சொன்னார்! சரி நாமே தேவலை என்றுதான் தோன்றியது.
வாழ்க்கையில் அதிக விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் இந்த குப்பை மட்டும் முந்நாளை விட இந்நாளில் ரொம்பவும் நெருங்கி இருப்பதை நினைக்கும் போது மனது கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறு வயதில் சராசரியாக வீட்டில் இருந்த குப்பையை விட, இப்போது மூன்று அல்லது நான்கு மடங்கு - அதுவும் மிக அருகே! இது ஒரு விதமான பின்னிறக்கம் தான்!! தொடர்ச்சி அடுத்த பதிவில்.
செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009
சனி, ஆகஸ்ட் 08, 2009
பார்வை வேறு, கோணம் வேறு.
பார்வை வேறு, கோணம் வேறு.
"மேக மூட்டம் இல்லாத நாளில் இங்கிருந்து பார்க்கையில் அமெரிக்கா தெரியும்", எங்கள் பேருந்தில் இருந்த ஸ்பீக்கரில், பயண கைடு வர்ணித்துக் கொண்டு வந்ததை "ஓ" என்று பஸ்ஸின் பின்புறத்தில் இருந்து ஒரு வந்த சப்தம் பாதியில் நிறுத்தியது. கூட வந்திருந்த ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா - ஒரு பத்து வயது பையனோடு வந்திருந்தார்கள்), அப்பா மெதுவாக அந்த சிறுவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தடங்கலுக்குப் பிறகு - முன்னால் அமர்ந்திருந்த சில தலைகள் திரும்பிப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டன - வர்ணனை தொடர்ந்தது.
கனடாவில் விடுமுறைக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளாக எண்ணம்; இப்போதுதான் நிறைவேறியது. இருவருக்கும் வேலை வேலை என்று ஓடி, கொஞ்சம் அலுப்பும் சேர, திடீரென்று ஒரு விடுமுறை யோசனை தோன்றியதில் இந்தப் பயணம். விடுமுறையில் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாராவது வண்டி ஒட்டி எல்லா இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வந்து விட்டோம் - தினசரி வாழ்க்கையில் அதிகமான நேரம் டிராபிக்கில் கார் ஒட்டியதால், ஒரு வாரம் சும்மா சுற்ற வேண்டும் என்றுதான் தீர்மானம். சப்தம் இல்லாமல், அதிக வேலை இல்லாமல் நாளைக் கழிப்பதே இந்த வார இலக்கு எங்களுக்கு!
பயணத்தின் மூன்றாவது நாள் - குபெக். மான்டிரியாலில் இருந்து ஒரு மூடிய ஏ.ஸி. பஸ்ஸில் வந்து, பின் ஒரு திறந்த பஸ்ஸில் குபெக்கிற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தோம். பயண ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் செய்கைகளும், சப்தங்களும் தொந்தரவாகவே இருந்து வந்தன. பஸ் மலையில் ஏறி நிறுத்தத்தில் நின்றது - எங்களைப் போன்று வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க, சிரம பரிகாரம் செய்து கொள்ள. இறங்குகையில் சப்தம் போட்ட சிறுவனையும், அந்த குடும்பத்தையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இறங்கினேன், மற்ற பயணிகளைப் போலவே. அதிக காசு கொடுத்து கொஞ்சம் ஜாலியாக சுற்றலாம் என்று வந்தால் இத்தனை இடைஞ்சலா என்று தோன்றினாலும், இதற்கு முன் சொந்தக் காரர் ஒருவர் வீட்டுப் பிள்ளையையும் இதே போல பார்த்ததால் எங்களுக்கு அவர்கள் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்தது.
எங்கள் சீட்டுக்கு முன்னாலிருந்த ஒரு முதிர் தம்பதியினர் இதை தங்களுக்குள் வெளிப்படையாகவே கொஞ்சம் கடுப்போடு (மற்றவர்களுக்கு கேட்காத மாதிரிதான்) பேசிக்கொண்டு வந்தார்கள். பஸ் கிளம்பும் நேரம் வந்தது; பயணிகள் அனைவரும் வந்து விட்டார்கள் அந்த ஒரு குடும்பத்தைத் தவிர. ஐந்து நிமிட தாமத்திற்குப் பிறகு அவர்களையும் ஏற்றிக் கொண்டு மற்ற பயணிகளின் முணுமுணுப்புகளோடு வண்டி கிளம்பியது.
மலையிலிருந்து இறங்குகையில் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது அந்த சிறுவனிடமிருந்து. நல்ல வேளையாக பஸ்ஸில் காலி இடம் கொஞ்சம் இருந்தது. எல்லா பயணிகளும் பஸ்ஸின் முன்புறம் உள்ள சீட்டுகளுக்கு மாற, அந்தக் குடும்பமும் கடைசி சீட்டுக்கு மாற, நடுவில் இரண்டு/மூன்று வரிசை காலி சீட்டுகளோடு வண்டி சென்றது. பஸ்ஸில் கைடு உட்பட அனைவர் முகத்திலுமே கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது - இந்த குடும்பத்தைப் பார்க்கையில்.
அடுத்த நிறுத்தம் குபெக்கிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க. அங்கிருந்த விஞ்ச் மூலமாக மலைக்கு செல்ல வேண்டும். விஞ்ச்சில் அதிகபட்சம் ஆறு அல்லது எட்டு பேர்தான் செல்ல முடியும்; அதனால் பஸ்ஸின் பயணிகளை இரண்டு/மூன்று குழுவாகப் பிரித்து விஞ்சில் அனுப்பிக் கொண்டிருந்தார் கைடு. எங்கள் முறை வருகையில் நாங்களும், அந்தக் குடும்பமும் மட்டும். விஞ்சில் செல்கையில் எங்கள் பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் அப்பா சொன்னார் - சிறுவனுக்கு Autism என்று.
கொஞ்சம் பேசிக் கொண்டே வந்தோம்; பின் திரும்பி வருகையிலும், மற்ற பயணிகள் கொஞ்சம் விலகிச் செல்ல, நானும் என் மனைவியும் இவர்களோடேயே விஞ்சில் வந்து, பஸ்ஸில் ஏறினோம். இம்முறை அவர்களுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தோம்; அந்த அம்மாவின் முகம் 'நன்றி' என்று பார்வையில் சொன்னது. பஸ்ஸில் முன்னாலிருந்த பயணிகள் முகத்தில் கேள்வி - எங்களைப் பார்க்கையில், 'ஏன் முன்னால் அமரவில்லை' என்று.
மான்டிரியால் திரும்புகையில் சிறுவன் உறங்கி விட, அவர்களோடு பேசிக் கொண்டே வந்ததில் அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்தது. மனைவி ஒரு டாக்டர். கணவர் நல்ல வேலையில் இருந்து விட்டு, வீட்டு நிலைமைக்காக வேலையை விட்டு விட்டார். விடுமுறைக்காக கனடா வந்திருக்கிறார்கள். பையனுக்கு வயது பத்தாகி விட்டாலும், மனதளவில் ஒன்றரை வயது; பேச்சு வரவில்லை; இன்னமும் Diaper தான் உபயோகிக்கிறான் (அதனால் தான் குபெக்கில் ஐந்து நிமிட தாமதம்). மான்டிரியாலில் இறங்குகையில் அவரிடம் ஆறுதலாகச் சொன்னேன் "உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் உங்களை சோதித்திருக்க வேண்டாம்" என்று.
அது வரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் முகத்தில் வருத்தம். "நீங்கள் எனக்கு ஆறுதல் என்ற முறையில்தான் சொல்கிறீர்கள்; ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள். என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை. என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித்திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம். தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்", என்றார்.
மற்ற பயணிகள் முகத்தில் தெரிந்த எரிச்சலையும், கடுப்பையும் குறையாக நினைத்து என்னை அவர்களை விட உயர்வாக நினைத்த எனக்கு அவர் சொன்னது ஆழமாகப் பதிந்தது. அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் நிச்சயம் அவர் மகனுக்கு உயர்ந்த பரிசுதான் என்று சொல்லி, மனைவியுடன் ஓட்டல் திரும்பினேன்.
பிகு:
இது என் நூறாவது பதிவு. ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்.
"மேக மூட்டம் இல்லாத நாளில் இங்கிருந்து பார்க்கையில் அமெரிக்கா தெரியும்", எங்கள் பேருந்தில் இருந்த ஸ்பீக்கரில், பயண கைடு வர்ணித்துக் கொண்டு வந்ததை "ஓ" என்று பஸ்ஸின் பின்புறத்தில் இருந்து ஒரு வந்த சப்தம் பாதியில் நிறுத்தியது. கூட வந்திருந்த ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா - ஒரு பத்து வயது பையனோடு வந்திருந்தார்கள்), அப்பா மெதுவாக அந்த சிறுவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தடங்கலுக்குப் பிறகு - முன்னால் அமர்ந்திருந்த சில தலைகள் திரும்பிப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டன - வர்ணனை தொடர்ந்தது.
கனடாவில் விடுமுறைக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளாக எண்ணம்; இப்போதுதான் நிறைவேறியது. இருவருக்கும் வேலை வேலை என்று ஓடி, கொஞ்சம் அலுப்பும் சேர, திடீரென்று ஒரு விடுமுறை யோசனை தோன்றியதில் இந்தப் பயணம். விடுமுறையில் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாராவது வண்டி ஒட்டி எல்லா இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வந்து விட்டோம் - தினசரி வாழ்க்கையில் அதிகமான நேரம் டிராபிக்கில் கார் ஒட்டியதால், ஒரு வாரம் சும்மா சுற்ற வேண்டும் என்றுதான் தீர்மானம். சப்தம் இல்லாமல், அதிக வேலை இல்லாமல் நாளைக் கழிப்பதே இந்த வார இலக்கு எங்களுக்கு!
பயணத்தின் மூன்றாவது நாள் - குபெக். மான்டிரியாலில் இருந்து ஒரு மூடிய ஏ.ஸி. பஸ்ஸில் வந்து, பின் ஒரு திறந்த பஸ்ஸில் குபெக்கிற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தோம். பயண ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் செய்கைகளும், சப்தங்களும் தொந்தரவாகவே இருந்து வந்தன. பஸ் மலையில் ஏறி நிறுத்தத்தில் நின்றது - எங்களைப் போன்று வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க, சிரம பரிகாரம் செய்து கொள்ள. இறங்குகையில் சப்தம் போட்ட சிறுவனையும், அந்த குடும்பத்தையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இறங்கினேன், மற்ற பயணிகளைப் போலவே. அதிக காசு கொடுத்து கொஞ்சம் ஜாலியாக சுற்றலாம் என்று வந்தால் இத்தனை இடைஞ்சலா என்று தோன்றினாலும், இதற்கு முன் சொந்தக் காரர் ஒருவர் வீட்டுப் பிள்ளையையும் இதே போல பார்த்ததால் எங்களுக்கு அவர்கள் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்தது.
எங்கள் சீட்டுக்கு முன்னாலிருந்த ஒரு முதிர் தம்பதியினர் இதை தங்களுக்குள் வெளிப்படையாகவே கொஞ்சம் கடுப்போடு (மற்றவர்களுக்கு கேட்காத மாதிரிதான்) பேசிக்கொண்டு வந்தார்கள். பஸ் கிளம்பும் நேரம் வந்தது; பயணிகள் அனைவரும் வந்து விட்டார்கள் அந்த ஒரு குடும்பத்தைத் தவிர. ஐந்து நிமிட தாமத்திற்குப் பிறகு அவர்களையும் ஏற்றிக் கொண்டு மற்ற பயணிகளின் முணுமுணுப்புகளோடு வண்டி கிளம்பியது.
மலையிலிருந்து இறங்குகையில் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது அந்த சிறுவனிடமிருந்து. நல்ல வேளையாக பஸ்ஸில் காலி இடம் கொஞ்சம் இருந்தது. எல்லா பயணிகளும் பஸ்ஸின் முன்புறம் உள்ள சீட்டுகளுக்கு மாற, அந்தக் குடும்பமும் கடைசி சீட்டுக்கு மாற, நடுவில் இரண்டு/மூன்று வரிசை காலி சீட்டுகளோடு வண்டி சென்றது. பஸ்ஸில் கைடு உட்பட அனைவர் முகத்திலுமே கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது - இந்த குடும்பத்தைப் பார்க்கையில்.
அடுத்த நிறுத்தம் குபெக்கிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க. அங்கிருந்த விஞ்ச் மூலமாக மலைக்கு செல்ல வேண்டும். விஞ்ச்சில் அதிகபட்சம் ஆறு அல்லது எட்டு பேர்தான் செல்ல முடியும்; அதனால் பஸ்ஸின் பயணிகளை இரண்டு/மூன்று குழுவாகப் பிரித்து விஞ்சில் அனுப்பிக் கொண்டிருந்தார் கைடு. எங்கள் முறை வருகையில் நாங்களும், அந்தக் குடும்பமும் மட்டும். விஞ்சில் செல்கையில் எங்கள் பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் அப்பா சொன்னார் - சிறுவனுக்கு Autism என்று.
கொஞ்சம் பேசிக் கொண்டே வந்தோம்; பின் திரும்பி வருகையிலும், மற்ற பயணிகள் கொஞ்சம் விலகிச் செல்ல, நானும் என் மனைவியும் இவர்களோடேயே விஞ்சில் வந்து, பஸ்ஸில் ஏறினோம். இம்முறை அவர்களுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தோம்; அந்த அம்மாவின் முகம் 'நன்றி' என்று பார்வையில் சொன்னது. பஸ்ஸில் முன்னாலிருந்த பயணிகள் முகத்தில் கேள்வி - எங்களைப் பார்க்கையில், 'ஏன் முன்னால் அமரவில்லை' என்று.
மான்டிரியால் திரும்புகையில் சிறுவன் உறங்கி விட, அவர்களோடு பேசிக் கொண்டே வந்ததில் அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்தது. மனைவி ஒரு டாக்டர். கணவர் நல்ல வேலையில் இருந்து விட்டு, வீட்டு நிலைமைக்காக வேலையை விட்டு விட்டார். விடுமுறைக்காக கனடா வந்திருக்கிறார்கள். பையனுக்கு வயது பத்தாகி விட்டாலும், மனதளவில் ஒன்றரை வயது; பேச்சு வரவில்லை; இன்னமும் Diaper தான் உபயோகிக்கிறான் (அதனால் தான் குபெக்கில் ஐந்து நிமிட தாமதம்). மான்டிரியாலில் இறங்குகையில் அவரிடம் ஆறுதலாகச் சொன்னேன் "உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் உங்களை சோதித்திருக்க வேண்டாம்" என்று.
அது வரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் முகத்தில் வருத்தம். "நீங்கள் எனக்கு ஆறுதல் என்ற முறையில்தான் சொல்கிறீர்கள்; ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள். என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை. என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித்திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம். தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்", என்றார்.
மற்ற பயணிகள் முகத்தில் தெரிந்த எரிச்சலையும், கடுப்பையும் குறையாக நினைத்து என்னை அவர்களை விட உயர்வாக நினைத்த எனக்கு அவர் சொன்னது ஆழமாகப் பதிந்தது. அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் நிச்சயம் அவர் மகனுக்கு உயர்ந்த பரிசுதான் என்று சொல்லி, மனைவியுடன் ஓட்டல் திரும்பினேன்.
பிகு:
இது என் நூறாவது பதிவு. ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்.
திங்கள், ஜூலை 20, 2009
யோசிக்கும் மொழி - 2
யோசிக்கும் மொழி - 2
அலுவலக அல்லது தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்கும், குழந்தை பசி பற்றி யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவதற்கு மொழி அவசியம் தேவை; இரண்டாவது வகைக்கு பேசும் மொழி தேவையில்லை. உடல் உறுப்புகள் தங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அது எந்த மொழி என்று தெரியவில்லை; ஆனால் இது நாடு, மதம் பொறுத்து மாறாமல், உலகம் முழுதும் உள்ள மனித வர்கத்திற்கு பொதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது மற்ற விலங்குகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.
அசை போடும் வகையில் நினைப்பில் வெறும் வார்த்தைகள் மற்றும் வருவதில்லை. என் அனுபவத்தில் நினைப்பில், ஸ்பரிசம், வாசனை, வெப்பம்/குளிர் போன்ற மற்ற புலன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன. ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட புலன்களின் அனுபவம், அதே உணர்ச்சியினை அனுபவிக்கும் போது அந்த நினைப்பைக் கொண்டு வருகிறது. இதில் மொழியும் அடங்கும்; ஆனால் நினைப்புக்கு மொழி அத்தியாவசியம் என்று தோன்றவில்லை.
ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை கொஞ்சம் சுவாரசியமானது. இதில் கொஞ்சம் விடை தேடும் வகையில் யோசனையும் சேர்ந்தே இருப்பதால், மொழி தேவைப்படுகிறது. ஆழ்ந்த வினாக்கள் மேலறிவுக்கு மட்டும் புலப்படுவதில்லை; இந்த அடித்தள அறிவு (குழந்தையின் பசி அழுகை போல) மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. நான் படித்த வரையில் (நிச்சயம் கொஞ்சம் தான்), ஞானிகளின் அனுபவங்கள் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாததாகவே இருக்கிறது. உதாரணமாக, இந்த சுயதரிசனம், சுயவிமர்சனம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு நேர்ந்த அனுபவங்களை முழுவதுமாக விபரிக்க கடினமாகவே இருந்திருக்கிறது.
இவர் மட்டுமல்ல, மற்ற ஞானிகளுக்கும் அனுபவங்களை விபரிப்பது கடினமாகவே இருந்திருக்கிறது. மொழியால் விபரிக்க முடியாத அளவுக்கு, இவர்கள் எவருக்கும் மொழிப்பிரச்சனை இருந்ததில்லை; காரணம் அனுபவத்தை விபரிக்கும் வகையில் எந்த மொழியுமே இன்னமும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
பழங்கதைகளில், அது இந்திய புராணங்களாகட்டும் அல்லது கிரேக்க மற்று ஐரோப்பியக் கதைகளாகட்டும், பறவை - விலங்குகளோடு பேசும் சக்தி படைத்த மனிதர்களைப் பற்றி அதிகம் கதைகள் உண்டு. இந்த விலங்கு மொழியும் ஒரு விதமான புலன்களின் தகவல் பறிமாற்றமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கருத்துகளை, எண்ணங்களை மற்ற சக மனிதர்களோடு பறிமாறிக் கொள்ள உதவும் வாய் மொழியில் அதிக சக்தி செலவழித்ததால், மனிதர்களுக்கு இந்த புலன்களின் தகவல் பறிமாற்ற மொழி மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.
மொத்தத்தில் மனித மூளை இயக்கத்திற்கு வாய்மொழி அவசியம் இல்லை; அதே சமயத்தில் விடை தேடும் வகையில் வரும் யோசனைகளுக்கு வாய் மொழி நிச்சயம் உதவுகிறது (தேவை) என்பது என் கணிப்பு.
உங்களுக்குத் தோன்றுவதை கருத்தாகப் பதியலாம்.
பி.கு.: சென்றவாரம் பிட்ஸ்பர்க் சென்று பாலாஜி தரிசனம் செய்ததால், இணையத்தில் பதியவில்லை.
அலுவலக அல்லது தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்கும், குழந்தை பசி பற்றி யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவதற்கு மொழி அவசியம் தேவை; இரண்டாவது வகைக்கு பேசும் மொழி தேவையில்லை. உடல் உறுப்புகள் தங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. அது எந்த மொழி என்று தெரியவில்லை; ஆனால் இது நாடு, மதம் பொறுத்து மாறாமல், உலகம் முழுதும் உள்ள மனித வர்கத்திற்கு பொதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது மற்ற விலங்குகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.
அசை போடும் வகையில் நினைப்பில் வெறும் வார்த்தைகள் மற்றும் வருவதில்லை. என் அனுபவத்தில் நினைப்பில், ஸ்பரிசம், வாசனை, வெப்பம்/குளிர் போன்ற மற்ற புலன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன. ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட புலன்களின் அனுபவம், அதே உணர்ச்சியினை அனுபவிக்கும் போது அந்த நினைப்பைக் கொண்டு வருகிறது. இதில் மொழியும் அடங்கும்; ஆனால் நினைப்புக்கு மொழி அத்தியாவசியம் என்று தோன்றவில்லை.
ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை கொஞ்சம் சுவாரசியமானது. இதில் கொஞ்சம் விடை தேடும் வகையில் யோசனையும் சேர்ந்தே இருப்பதால், மொழி தேவைப்படுகிறது. ஆழ்ந்த வினாக்கள் மேலறிவுக்கு மட்டும் புலப்படுவதில்லை; இந்த அடித்தள அறிவு (குழந்தையின் பசி அழுகை போல) மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. நான் படித்த வரையில் (நிச்சயம் கொஞ்சம் தான்), ஞானிகளின் அனுபவங்கள் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாததாகவே இருக்கிறது. உதாரணமாக, இந்த சுயதரிசனம், சுயவிமர்சனம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு நேர்ந்த அனுபவங்களை முழுவதுமாக விபரிக்க கடினமாகவே இருந்திருக்கிறது.
இவர் மட்டுமல்ல, மற்ற ஞானிகளுக்கும் அனுபவங்களை விபரிப்பது கடினமாகவே இருந்திருக்கிறது. மொழியால் விபரிக்க முடியாத அளவுக்கு, இவர்கள் எவருக்கும் மொழிப்பிரச்சனை இருந்ததில்லை; காரணம் அனுபவத்தை விபரிக்கும் வகையில் எந்த மொழியுமே இன்னமும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
பழங்கதைகளில், அது இந்திய புராணங்களாகட்டும் அல்லது கிரேக்க மற்று ஐரோப்பியக் கதைகளாகட்டும், பறவை - விலங்குகளோடு பேசும் சக்தி படைத்த மனிதர்களைப் பற்றி அதிகம் கதைகள் உண்டு. இந்த விலங்கு மொழியும் ஒரு விதமான புலன்களின் தகவல் பறிமாற்றமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கருத்துகளை, எண்ணங்களை மற்ற சக மனிதர்களோடு பறிமாறிக் கொள்ள உதவும் வாய் மொழியில் அதிக சக்தி செலவழித்ததால், மனிதர்களுக்கு இந்த புலன்களின் தகவல் பறிமாற்ற மொழி மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.
மொத்தத்தில் மனித மூளை இயக்கத்திற்கு வாய்மொழி அவசியம் இல்லை; அதே சமயத்தில் விடை தேடும் வகையில் வரும் யோசனைகளுக்கு வாய் மொழி நிச்சயம் உதவுகிறது (தேவை) என்பது என் கணிப்பு.
உங்களுக்குத் தோன்றுவதை கருத்தாகப் பதியலாம்.
பி.கு.: சென்றவாரம் பிட்ஸ்பர்க் சென்று பாலாஜி தரிசனம் செய்ததால், இணையத்தில் பதியவில்லை.
ஞாயிறு, ஜூலை 05, 2009
யோசிக்கும் மொழி
யோசிக்கும் மொழி
யோசனை என்பது ஒருவிதமான கற்பனையே. மூளையில் ஏதோ ஒரு மூலை, நாம் யோசிக்கும் போது இயங்குகிறது. யோசனைகள் பல வகை. என் கணிப்பில் இவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. விடை தேடும் வகை 2. அசை போடும் வகை 3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை. ஒரு பிரச்சனையை தீர்க்க, வழிதேட முயல்கையில் வரும் சிந்தனைகள், ஒரு நல்ல நிகழ்ச்சி, திரைப்படம் பற்றி நினைத்து அசைபோட்டு இன்பமுறுகையில் வரும் சிந்தனையை விட வித்தியாசமானது. இதிலும், ஒரு சுய படைப்பில், அது கதையோ, கவிதையோ வரும் சிந்தனை கிட்டத்தட்ட ஒரு பிரச்சனையைத் தீர்க்க வரும் சிந்தனை போலிருந்தாலும், கொஞ்சம் மாறுபட்டது. படைப்பைப் பற்றி, அல்லது இயற்கையைப் பற்றி வரும் யோசனைகள், சிந்தனைகள் இந்த மாதிரியே.
சிறுவயதில் என் யோசனைகளில் அதிகமான நேரம் இந்த கற்பனை, ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகையிலும், விடை தேடும் வகையிலும் சென்றது. வளர்ந்து படிக்கும் காலத்தில், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்திற்கருகில் விடை தேடும் வகையிலேயே அதிக நேரம் சென்றது. இப்போதெல்லாம், அசைபோடும் வகையில் அதிக நேரமும், கொஞ்சம் பிரதிபலிப்பிலும் செல்லுகிறது. இதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்த பல பேர்கள் இது போன்றே நேர விகிதாசார வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த யோசனையில் ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். சிறு வயதில் சிந்தனைகள் தமிழிலேயே இருந்தன. அயல்நாட்டு வாசம், வேலை காரணமாக ஆங்கிலம் அதிகமாக பேசப் போக, இப்போதெல்லாம் சில விதமான சிந்தனைகள் - முக்கியமாக அலுவலக சம்பந்தமான விடை தேடும் வகையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே வருகிறது. இதுவும் நாடு விட்டு நாடு வந்த அனைவரும் உணர்ந்ததுதான் என்று நினைக்கிறேன்; நிச்சயமாகத் தெரியவில்லை. சமீப காலமாக அசைபோடும் கற்பனைகள் தவிர, மற்ற அனைத்து சிந்தனைகளும் ஆங்கிலத்திலேயெ இருப்பதைப் பார்க்கிறேன்.
இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் (இந்த யோசனையே ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகைதான்) தோன்றிய கேள்விகள் - யோசனைக்கு மொழி தேவையா? எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும்? இந்தக் கேள்விகளைப் பற்றி நான் ஆராய்ந்ததே இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும்.
இங்கு நான் யோசனை, சிந்தனை, நினைப்பு என்ற வார்த்தைகளை ஒன்றே போல பாவித்து, மாற்றி மாற்றி எழுதியிருந்தாலும், இவற்றுக்குள் வித்தியாசம் இருக்க வேண்டும். குழப்பத்தைக் குறைப்பதற்காக, இந்தப் பதிவில் இதற்குப் பின் ஒவ்வொரு வகைக்கும் தனி வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்:
1. விடை தேடும் வகை – Problem solving - யோசனை;
2. அசை போடும் வகை – Thought/memory - நினைப்பு
3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை – Reflection/analysis - சிந்தனை
முதலில் யோசனை: இந்த வகைக்கு முக்கிய தேவை ஒரு பிரச்சனை அல்லது தீர்க்க வேண்டிய புதிர். வாழ்க்கையில் பெரும்பான்மையான சமயம் இந்த பிரச்சனையே ஒரு மொழி மூலமாகத் தான் நம் மூளைக்குத் தெரிய வருவதால், அது சம்பந்தமான யோசனையும் அந்த மொழியிலேயே வருவது இயல்பு. சிறுவயதில் நான் தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசி, கல்வி கற்றதால், அப்போது தமிழில் இந்த யோசனை இருந்ததும், இப்போது அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே பேசி பணிபுரிவதால், இப்போது ஆங்கிலத்தில் இந்த யோசனை வருவதும் இயல்பே. மொத்தத்தில் பிரச்சனை எந்த மொழியோ அந்த மொழியே யோசனைக்கும் உதவும்.
இதில் ஒரு சங்கடம். குழந்தையாக இருந்த போதும் பிரச்சனைகள் இருந்திருக்கும், உ.ம். பசி. அப்போது மூளையில் யோசனை இருந்ததா? குழந்தை அழுது பால் குடிக்கையில் நிச்சயம் யோசனை இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் குழந்தைக்கு மொழி தெரியாதே - யோசனை எந்த மொழி?
அடுத்த வாரம் தொடர்கிறேன்.
யோசனை என்பது ஒருவிதமான கற்பனையே. மூளையில் ஏதோ ஒரு மூலை, நாம் யோசிக்கும் போது இயங்குகிறது. யோசனைகள் பல வகை. என் கணிப்பில் இவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. விடை தேடும் வகை 2. அசை போடும் வகை 3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை. ஒரு பிரச்சனையை தீர்க்க, வழிதேட முயல்கையில் வரும் சிந்தனைகள், ஒரு நல்ல நிகழ்ச்சி, திரைப்படம் பற்றி நினைத்து அசைபோட்டு இன்பமுறுகையில் வரும் சிந்தனையை விட வித்தியாசமானது. இதிலும், ஒரு சுய படைப்பில், அது கதையோ, கவிதையோ வரும் சிந்தனை கிட்டத்தட்ட ஒரு பிரச்சனையைத் தீர்க்க வரும் சிந்தனை போலிருந்தாலும், கொஞ்சம் மாறுபட்டது. படைப்பைப் பற்றி, அல்லது இயற்கையைப் பற்றி வரும் யோசனைகள், சிந்தனைகள் இந்த மாதிரியே.
சிறுவயதில் என் யோசனைகளில் அதிகமான நேரம் இந்த கற்பனை, ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகையிலும், விடை தேடும் வகையிலும் சென்றது. வளர்ந்து படிக்கும் காலத்தில், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்திற்கருகில் விடை தேடும் வகையிலேயே அதிக நேரம் சென்றது. இப்போதெல்லாம், அசைபோடும் வகையில் அதிக நேரமும், கொஞ்சம் பிரதிபலிப்பிலும் செல்லுகிறது. இதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்த பல பேர்கள் இது போன்றே நேர விகிதாசார வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த யோசனையில் ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். சிறு வயதில் சிந்தனைகள் தமிழிலேயே இருந்தன. அயல்நாட்டு வாசம், வேலை காரணமாக ஆங்கிலம் அதிகமாக பேசப் போக, இப்போதெல்லாம் சில விதமான சிந்தனைகள் - முக்கியமாக அலுவலக சம்பந்தமான விடை தேடும் வகையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே வருகிறது. இதுவும் நாடு விட்டு நாடு வந்த அனைவரும் உணர்ந்ததுதான் என்று நினைக்கிறேன்; நிச்சயமாகத் தெரியவில்லை. சமீப காலமாக அசைபோடும் கற்பனைகள் தவிர, மற்ற அனைத்து சிந்தனைகளும் ஆங்கிலத்திலேயெ இருப்பதைப் பார்க்கிறேன்.
இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் (இந்த யோசனையே ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகைதான்) தோன்றிய கேள்விகள் - யோசனைக்கு மொழி தேவையா? எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும்? இந்தக் கேள்விகளைப் பற்றி நான் ஆராய்ந்ததே இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும்.
இங்கு நான் யோசனை, சிந்தனை, நினைப்பு என்ற வார்த்தைகளை ஒன்றே போல பாவித்து, மாற்றி மாற்றி எழுதியிருந்தாலும், இவற்றுக்குள் வித்தியாசம் இருக்க வேண்டும். குழப்பத்தைக் குறைப்பதற்காக, இந்தப் பதிவில் இதற்குப் பின் ஒவ்வொரு வகைக்கும் தனி வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்:
1. விடை தேடும் வகை – Problem solving - யோசனை;
2. அசை போடும் வகை – Thought/memory - நினைப்பு
3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை – Reflection/analysis - சிந்தனை
முதலில் யோசனை: இந்த வகைக்கு முக்கிய தேவை ஒரு பிரச்சனை அல்லது தீர்க்க வேண்டிய புதிர். வாழ்க்கையில் பெரும்பான்மையான சமயம் இந்த பிரச்சனையே ஒரு மொழி மூலமாகத் தான் நம் மூளைக்குத் தெரிய வருவதால், அது சம்பந்தமான யோசனையும் அந்த மொழியிலேயே வருவது இயல்பு. சிறுவயதில் நான் தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசி, கல்வி கற்றதால், அப்போது தமிழில் இந்த யோசனை இருந்ததும், இப்போது அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே பேசி பணிபுரிவதால், இப்போது ஆங்கிலத்தில் இந்த யோசனை வருவதும் இயல்பே. மொத்தத்தில் பிரச்சனை எந்த மொழியோ அந்த மொழியே யோசனைக்கும் உதவும்.
இதில் ஒரு சங்கடம். குழந்தையாக இருந்த போதும் பிரச்சனைகள் இருந்திருக்கும், உ.ம். பசி. அப்போது மூளையில் யோசனை இருந்ததா? குழந்தை அழுது பால் குடிக்கையில் நிச்சயம் யோசனை இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் குழந்தைக்கு மொழி தெரியாதே - யோசனை எந்த மொழி?
அடுத்த வாரம் தொடர்கிறேன்.
ஞாயிறு, ஜூன் 28, 2009
இரயில் - 8
இரயில் - 8
ரயில் பயண உறவுகள் என்றவுடன் முன்பு தொலைக்காட்சியில் வந்த 'ரயில் சினேகம்' போன்ற ஏதாவது கதை இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ரயில் பயணங்களில் பார்த்த, பேசிய மனிதர்கள் நிறைய பேர்களை பயணம் முடிந்த சில நாட்களில் (பல சமயம் சில நிமிஷங்களுக்குள்) மறந்திருக்கிறேன். அபூர்வமாக சில முகங்கள், வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. அனேகமாக இந்த மாதிரி பாதித்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் பெயர் தெரியாது; அல்லது மறந்திருக்கும்.
ரயில் பயண சந்திப்புகள் இரண்டு வகை: தொலைதூர பயணத்தில் - குறைந்தது ஒரு நாள், ஒரு இரவு - அதே பெட்டியில் கூட வருபவர்களோடு நடக்கும் சம்பாஷணைகள், முதல் வகை. குறைந்த தூர, ஆனால் தினப்படி நடத்தும் பயணங்களில் (உதாரணமாக அலுவலகம் சென்று வர) சந்திப்புகள், கருத்துப் பறிமாறல்கள் - இரண்டாம் வகை. முதலாம் வகை பெரும்பான்மையாக ஒரு வித கட்டாயத்தால், பொழுது போக வழியில்லாமல் நடப்பவை. இது ஒரு விதமான புகைப்படம் போல - படம் அழகாயிருந்தால், வித்தியாசமாக இருந்தால் நினைப்பில் இருக்கும். இரண்டாம் வகையில் ஒரு விதமான தொடர்ச்சி, வளர்தல், மாற்றம் உண்டு; கிட்டத்தட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் போல. பிடிக்கவில்லை என்றால் பெட்டி, நேரம் மாற்ற முடியும்.
விபரம் புரியாத (நான் மூன்றாவது அல்லது நான்காவது படித்த போது என்று நினைக்கிறேன்) வயதில் எழும்பூர்-தாம்பரம் தடத்தில், மின் வண்டியில் என் வயதே ஒத்த ஒரு சிறுவன், கண்ணில்லாத ஒரு பெண்மணியுடன் (அம்மா?), பாடிக் கொண்டே மற்றவர்களிடம் காசுக்காக டப்பாவை குலுக்கிக் கொண்டே போனது இன்னமும் நினைவில் இருக்கிறது (பாட்டு:அச்சமயம் புதிதாக வந்த 'மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்'). இப்பவும் அந்தப் பாட்டு கேட்கையில் மனதில் ஒரு விதமான குழப்பம் கேள்விதான் – “ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? என்ன காரணம்?” என்று! இன்னமும் விடை கிடைக்கவில்லை.
93 - 96 வட நாட்டு வாசத்தில் வருடா வருடம் சென்னை-டில்லி ரயில் பிரயாணம் இரு முறையாவது வரும். நடுப் பயணத்தில் (வண்டி அனேகமாக நாக்பூருக்கு அருகே இருக்கும்), கால் நடக்க முடியாத (போலியோ) வாலிபர் ரயில் பெட்டி தரையை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்து காசு கேட்பார் - சலனம் அதிகம் இல்லாத முகம், தாடி; சோகம், வருத்தம் தெரியாது; ஒரு விதமான 'கடமையைச் செய்கிறேன்' என்பது போல பாவம். பெயர் தெரியாது; அதே பிரயாணங்களில் காப்பி, வடை போன்று சாப்பாடு கொண்டு வரும் ஊழியர் ஒருவருடைய முகமும் நினைப்பில் இருக்கிறது. நெற்றியில் விபூதி, சிறிய மீசை, எப்போதும் சிரித்த முகம்; சில்லறை இல்லாவிட்டாலும் கடுப்படிக்காமல், நினைவில் வைத்துக் கொண்டு பாக்கி கொண்டு கொடுப்பது இல்லை, வந்து பாக்கி காசை வாங்கிக் கொள்வது என்று பொறுமையாக செய்பவர். இருவருமே கீதையில் வரும் சிதப்பிரஞ்ஞன் சுலோகம் நினைப்புக்கு வரவழைப்பார்கள்.
2003ல் பிரிட்ஜ்வாட்டர் நிலையத்திலிருந்து நூவர்க் செல்கையில் தினமும் பார்த்த ஒரு வித்தியாசமான பேர்வழி. பெட்டியில் யாராவது தும்மினால், இருமினால் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவருக்கு (சுத்தம், சுகாதாரத்தில் அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லலாம்). இவரைப் பற்றி தெரிந்தவர் எவரும் அருகே அமர மாட்டார்கள். அது மட்டுமல்ல, வண்டி நூவர்க் நிலையம் அருகே செல்கையில் அந்தப் பெட்டியில் முதல் ஆளாக இறங்க வேண்டும் என்பதற்காக முன்னமேயே எழுந்து கதவருகே நின்று கொள்வார். ஒரு முறை இன்னுமொரு பிரயாணி தெரிந்தோ, தெரியாமலோ முதலில் சென்று நின்று கொள்ள, இவர் முகத்தைப் பார்ர்க சகிக்கவில்லை (உண்மையில் கொஞ்சம் பயமே வந்தது; ஏதாவது இசகு பிசகாக செய்து வைக்கப் போகிறாரே என்று).
மொத்தத்தில் ரயில் என்ற வாகனம் என் வாழ்க்கையில், சிந்தனையில் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. தில்லி ரயில் மியூசியம், மற்றும் லண்டன் அறிவியல் மியூசியம் என்று சென்று பார்த்து மகிழ்ந்த நினைப்புகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ரயில் பற்றிய இந்தப் பதிவும் நிலையத்திற்கு வந்து விட்டது.
அடுத்த வாரம் வேறு விஷயம் பார்க்கலாம்.
முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6 இரயில் - 7
ரயில் பயண உறவுகள் என்றவுடன் முன்பு தொலைக்காட்சியில் வந்த 'ரயில் சினேகம்' போன்ற ஏதாவது கதை இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ரயில் பயணங்களில் பார்த்த, பேசிய மனிதர்கள் நிறைய பேர்களை பயணம் முடிந்த சில நாட்களில் (பல சமயம் சில நிமிஷங்களுக்குள்) மறந்திருக்கிறேன். அபூர்வமாக சில முகங்கள், வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. அனேகமாக இந்த மாதிரி பாதித்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் பெயர் தெரியாது; அல்லது மறந்திருக்கும்.
ரயில் பயண சந்திப்புகள் இரண்டு வகை: தொலைதூர பயணத்தில் - குறைந்தது ஒரு நாள், ஒரு இரவு - அதே பெட்டியில் கூட வருபவர்களோடு நடக்கும் சம்பாஷணைகள், முதல் வகை. குறைந்த தூர, ஆனால் தினப்படி நடத்தும் பயணங்களில் (உதாரணமாக அலுவலகம் சென்று வர) சந்திப்புகள், கருத்துப் பறிமாறல்கள் - இரண்டாம் வகை. முதலாம் வகை பெரும்பான்மையாக ஒரு வித கட்டாயத்தால், பொழுது போக வழியில்லாமல் நடப்பவை. இது ஒரு விதமான புகைப்படம் போல - படம் அழகாயிருந்தால், வித்தியாசமாக இருந்தால் நினைப்பில் இருக்கும். இரண்டாம் வகையில் ஒரு விதமான தொடர்ச்சி, வளர்தல், மாற்றம் உண்டு; கிட்டத்தட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் போல. பிடிக்கவில்லை என்றால் பெட்டி, நேரம் மாற்ற முடியும்.
விபரம் புரியாத (நான் மூன்றாவது அல்லது நான்காவது படித்த போது என்று நினைக்கிறேன்) வயதில் எழும்பூர்-தாம்பரம் தடத்தில், மின் வண்டியில் என் வயதே ஒத்த ஒரு சிறுவன், கண்ணில்லாத ஒரு பெண்மணியுடன் (அம்மா?), பாடிக் கொண்டே மற்றவர்களிடம் காசுக்காக டப்பாவை குலுக்கிக் கொண்டே போனது இன்னமும் நினைவில் இருக்கிறது (பாட்டு:அச்சமயம் புதிதாக வந்த 'மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்'). இப்பவும் அந்தப் பாட்டு கேட்கையில் மனதில் ஒரு விதமான குழப்பம் கேள்விதான் – “ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? என்ன காரணம்?” என்று! இன்னமும் விடை கிடைக்கவில்லை.
93 - 96 வட நாட்டு வாசத்தில் வருடா வருடம் சென்னை-டில்லி ரயில் பிரயாணம் இரு முறையாவது வரும். நடுப் பயணத்தில் (வண்டி அனேகமாக நாக்பூருக்கு அருகே இருக்கும்), கால் நடக்க முடியாத (போலியோ) வாலிபர் ரயில் பெட்டி தரையை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்து காசு கேட்பார் - சலனம் அதிகம் இல்லாத முகம், தாடி; சோகம், வருத்தம் தெரியாது; ஒரு விதமான 'கடமையைச் செய்கிறேன்' என்பது போல பாவம். பெயர் தெரியாது; அதே பிரயாணங்களில் காப்பி, வடை போன்று சாப்பாடு கொண்டு வரும் ஊழியர் ஒருவருடைய முகமும் நினைப்பில் இருக்கிறது. நெற்றியில் விபூதி, சிறிய மீசை, எப்போதும் சிரித்த முகம்; சில்லறை இல்லாவிட்டாலும் கடுப்படிக்காமல், நினைவில் வைத்துக் கொண்டு பாக்கி கொண்டு கொடுப்பது இல்லை, வந்து பாக்கி காசை வாங்கிக் கொள்வது என்று பொறுமையாக செய்பவர். இருவருமே கீதையில் வரும் சிதப்பிரஞ்ஞன் சுலோகம் நினைப்புக்கு வரவழைப்பார்கள்.
2003ல் பிரிட்ஜ்வாட்டர் நிலையத்திலிருந்து நூவர்க் செல்கையில் தினமும் பார்த்த ஒரு வித்தியாசமான பேர்வழி. பெட்டியில் யாராவது தும்மினால், இருமினால் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவருக்கு (சுத்தம், சுகாதாரத்தில் அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லலாம்). இவரைப் பற்றி தெரிந்தவர் எவரும் அருகே அமர மாட்டார்கள். அது மட்டுமல்ல, வண்டி நூவர்க் நிலையம் அருகே செல்கையில் அந்தப் பெட்டியில் முதல் ஆளாக இறங்க வேண்டும் என்பதற்காக முன்னமேயே எழுந்து கதவருகே நின்று கொள்வார். ஒரு முறை இன்னுமொரு பிரயாணி தெரிந்தோ, தெரியாமலோ முதலில் சென்று நின்று கொள்ள, இவர் முகத்தைப் பார்ர்க சகிக்கவில்லை (உண்மையில் கொஞ்சம் பயமே வந்தது; ஏதாவது இசகு பிசகாக செய்து வைக்கப் போகிறாரே என்று).
மொத்தத்தில் ரயில் என்ற வாகனம் என் வாழ்க்கையில், சிந்தனையில் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. தில்லி ரயில் மியூசியம், மற்றும் லண்டன் அறிவியல் மியூசியம் என்று சென்று பார்த்து மகிழ்ந்த நினைப்புகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ரயில் பற்றிய இந்தப் பதிவும் நிலையத்திற்கு வந்து விட்டது.
அடுத்த வாரம் வேறு விஷயம் பார்க்கலாம்.
முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6 இரயில் - 7
ஞாயிறு, ஜூன் 21, 2009
இரயில் - 7
இரயில் - 7
டீசலோடு கிரசின் கலந்து புகை கக்கும் லொட்டை பேருந்துகள் தரும் எரிச்சலோடு கலந்த வாசனையைத் தவிர பேருந்து நிலையத்திற்கு என்று தனித்த வாசனை இல்லை. ஆனால் ரயில் நிலைய மணமே தனி. இந்த மணத்தை விபரிப்பது கடினம்; இருந்தாலும் முயற்சிக்கிறேன். மூடிய, பெரிய நிலையங்களில் இந்த மணம் தூக்கலாக இருக்கும். அதிலும் கரி வண்டிகள் அதிகமாக இருந்தால் இதை சுலபமாக உணரலாம். உதாரணமாக திருச்சி ஜங்க்ஷன் நிலையத்தில் இருக்கும் மணம் (இது திறந்த வெளி நிலையமாக இருப்பினும்), கொஞ்ச தொலைவில் இருக்கும் பேருந்து நிலைத்தில் இருக்காது. இது கொஞ்சம் கொல்லப் பட்டறை வாசனை, குமிட்டி அடுப்பு வாசனை (அதிலும் கரிதான்) எல்லாம் கலந்து இருக்கும்.
சென்னையில் எழும்பூர் நிலையமானாலும் சரி அல்லது சென்ட்ரல் நிலையமாக இருந்தாலும் சரி, மணம் ஒன்று தான். இந்த மணத்தில் ஒரு விதமான 'ரேஞ்ஜ்' - விகிதாசார வித்தியாசம், இருக்கும். சென்ட்ரல் அல்லது எழும்பூர் நிலையத்தில் நிற்கும் எந்த தொலைதூர பயண ரயிலிலும் இதை நீங்கள் உணர முடியும். ரயில் கிளம்பும் முன் பிளாட்பாரத்தில் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை நீங்கள் நடக்கையில் இந்த வித்தியாசத்தை உணரலாம். அதிலும் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு நடந்தால் அதிகமாகவே இந்த வாசனை வித்தியாசம் தெரியும். எது மேலாவது இடித்துக் கொண்டு விழுந்தால் நான் பொருப்பல்ல.
இஞ்ஜினைக் கடக்கையில் வரும் கொல்லப் பட்டறை வாசனை, நீராவி அல்லது வெப்பம் தரும் வாசனை வித்தியாசம், சரக்குப் பெட்டியைத் தாண்டும் போது வரும் வாசனை (அதிலும் மீன், கருவாடு போன்ற சரக்கு இருக்கையில் வரும் வாசனை), சமையல் வண்டியைத் (அல்லது பிளாட்பாரத்தில் இருக்கும் சாப்பாட்டுக் கடையைத்) தாண்டுகையில் வரும் வாசனை, குளிர் பதன பெட்டியைத் தாண்டுகையில் மட்டுப் படும் வாசனை என்றெல்லாம் வகை பிரித்து உணர முடியும். அதிலும் இரவு நேர ரயில் நிலைய வாசனை, தூக்கலானது. காரணம் சப்தம் குறைவு; வெப்பம் குறைவு என்று என் ஊகம்.
இத்தனை வித்தியாசம் சரக்கு ரயிலில் வராது. அதில் வரும் வாசனை பெரும்பான்மையாக அதில் வரும் சரக்கைப் பொருத்தது. உரங்கள் ஏற்றி வரும் சரக்குப் பெட்டிக்கும், இரும்பு சாமான்கள் கொண்டு வரும் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்சம் அருகே சென்றால் தான் தெரியும். ரயில் பெட்டிக்குள் ஏறினால் ரயில் இருக்கும் இடம், பருவம் பொருத்து வித்தியாசம் வேறுபடும். உதாரணமாக குளிர்காலத்தில் தெற்கே (தமிழ்நாட்டில்) ரயில் பெட்டியின் வாசம், வடக்கே (சண்டீகர்) இருக்கும் வாசத்தில் இருந்து அதிகம் வேறுபடும். மத்தியப் பிரதேசத்தில் தகிக்கும் கோடையில் குளிர் பதனப் படுத்தப் படாத பெட்டியில் பிரயாணம் செய்தால் வியர்வை வாசனை தவிர வேறு எதுவும் தெரியாது. அதே வண்டி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் உலவுகையில் வரும் வாசனை - சுகந்தம்!!
ரயில் தான் இப்படி என்றால் நிலையத்தின் வாசனை வேறுபாடுகள் அருமை. அதிலும் சாப்பாட்டுக் கடைகள், உணவு வாசனைகள் மிகவும் ரசிக்க வேண்டியவை. சிலருக்கு சில வாசனைகள் பிடிக்காது; அதனால் வாசனை மட்டம், கெட்ட வாசனை என்பார்கள். நானும் அப்படித்தான் பேசியிருக்கிறேன். ரொம்ப வருடம் கழித்து அரிசோனா பீனிக்ஸில் வியட்நாமிலிருந்து குடிபெயர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் "வாசனையில் நல்லது கெட்டது இல்லை. உனக்கு சில வகை பிடித்திருக்கிறது; சில வகை பிடிக்கவில்லை. வாசனையில் மொத்தம் இரண்டு வகை தான் - இருக்கிறது; இல்லை - No good or bad smell; just there is smell or no smell" என்றார். அது மனதில் ஆழமாகப் பதிந்து போனது. அதனால் தான் இந்தப் பதிவில் வியர்வையும், கருவாடும் 'வாசனை'!
ஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் கிடைக்கும் பூரி-உருளைக் கிழங்கு வாசனை, சென்னை-தில்லி தடத்தில் ரயிலில் கிடைக்கும் மசால் வடை வாசனை, பீகார் ரயில்களில் கிடைக்கும் குடுவை டீ வாசனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் அனுபவித்த வித்தியாசமான அனேக வாசனைகளை நியூயார்க் ரயில் நிலையங்களில் என்னால் உணர முடியவில்லை. அனைத்து வண்டிகளும் குளிர் பதனப் படுத்தப் பட்டு, மூடியே இருக்கின்றன. சரக்கு ரயிலை தூர இருந்து தான் பார்க்க முடிகிறது. என் கணிப்பில் அறிவியல் ஆராய்ச்சியில் கண், காது புலன்கள் சம்பந்தப்பட்ட விஷங்களுக்கு தந்த முக்கியத்துவம் மூக்கு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இல்லை. அதனால் என்னால் முடிந்த தொண்டு, வாசனைக்கென்று ஒரு பதிவு.
அடுத்த பதிவில் ரயில் பயணத்தில் பார்த்த, பாதித்த உறவுகள் பற்றி.
முந்தைய பதிவுகள்:இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6
டீசலோடு கிரசின் கலந்து புகை கக்கும் லொட்டை பேருந்துகள் தரும் எரிச்சலோடு கலந்த வாசனையைத் தவிர பேருந்து நிலையத்திற்கு என்று தனித்த வாசனை இல்லை. ஆனால் ரயில் நிலைய மணமே தனி. இந்த மணத்தை விபரிப்பது கடினம்; இருந்தாலும் முயற்சிக்கிறேன். மூடிய, பெரிய நிலையங்களில் இந்த மணம் தூக்கலாக இருக்கும். அதிலும் கரி வண்டிகள் அதிகமாக இருந்தால் இதை சுலபமாக உணரலாம். உதாரணமாக திருச்சி ஜங்க்ஷன் நிலையத்தில் இருக்கும் மணம் (இது திறந்த வெளி நிலையமாக இருப்பினும்), கொஞ்ச தொலைவில் இருக்கும் பேருந்து நிலைத்தில் இருக்காது. இது கொஞ்சம் கொல்லப் பட்டறை வாசனை, குமிட்டி அடுப்பு வாசனை (அதிலும் கரிதான்) எல்லாம் கலந்து இருக்கும்.
சென்னையில் எழும்பூர் நிலையமானாலும் சரி அல்லது சென்ட்ரல் நிலையமாக இருந்தாலும் சரி, மணம் ஒன்று தான். இந்த மணத்தில் ஒரு விதமான 'ரேஞ்ஜ்' - விகிதாசார வித்தியாசம், இருக்கும். சென்ட்ரல் அல்லது எழும்பூர் நிலையத்தில் நிற்கும் எந்த தொலைதூர பயண ரயிலிலும் இதை நீங்கள் உணர முடியும். ரயில் கிளம்பும் முன் பிளாட்பாரத்தில் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை நீங்கள் நடக்கையில் இந்த வித்தியாசத்தை உணரலாம். அதிலும் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு நடந்தால் அதிகமாகவே இந்த வாசனை வித்தியாசம் தெரியும். எது மேலாவது இடித்துக் கொண்டு விழுந்தால் நான் பொருப்பல்ல.
இஞ்ஜினைக் கடக்கையில் வரும் கொல்லப் பட்டறை வாசனை, நீராவி அல்லது வெப்பம் தரும் வாசனை வித்தியாசம், சரக்குப் பெட்டியைத் தாண்டும் போது வரும் வாசனை (அதிலும் மீன், கருவாடு போன்ற சரக்கு இருக்கையில் வரும் வாசனை), சமையல் வண்டியைத் (அல்லது பிளாட்பாரத்தில் இருக்கும் சாப்பாட்டுக் கடையைத்) தாண்டுகையில் வரும் வாசனை, குளிர் பதன பெட்டியைத் தாண்டுகையில் மட்டுப் படும் வாசனை என்றெல்லாம் வகை பிரித்து உணர முடியும். அதிலும் இரவு நேர ரயில் நிலைய வாசனை, தூக்கலானது. காரணம் சப்தம் குறைவு; வெப்பம் குறைவு என்று என் ஊகம்.
இத்தனை வித்தியாசம் சரக்கு ரயிலில் வராது. அதில் வரும் வாசனை பெரும்பான்மையாக அதில் வரும் சரக்கைப் பொருத்தது. உரங்கள் ஏற்றி வரும் சரக்குப் பெட்டிக்கும், இரும்பு சாமான்கள் கொண்டு வரும் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்சம் அருகே சென்றால் தான் தெரியும். ரயில் பெட்டிக்குள் ஏறினால் ரயில் இருக்கும் இடம், பருவம் பொருத்து வித்தியாசம் வேறுபடும். உதாரணமாக குளிர்காலத்தில் தெற்கே (தமிழ்நாட்டில்) ரயில் பெட்டியின் வாசம், வடக்கே (சண்டீகர்) இருக்கும் வாசத்தில் இருந்து அதிகம் வேறுபடும். மத்தியப் பிரதேசத்தில் தகிக்கும் கோடையில் குளிர் பதனப் படுத்தப் படாத பெட்டியில் பிரயாணம் செய்தால் வியர்வை வாசனை தவிர வேறு எதுவும் தெரியாது. அதே வண்டி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் உலவுகையில் வரும் வாசனை - சுகந்தம்!!
ரயில் தான் இப்படி என்றால் நிலையத்தின் வாசனை வேறுபாடுகள் அருமை. அதிலும் சாப்பாட்டுக் கடைகள், உணவு வாசனைகள் மிகவும் ரசிக்க வேண்டியவை. சிலருக்கு சில வாசனைகள் பிடிக்காது; அதனால் வாசனை மட்டம், கெட்ட வாசனை என்பார்கள். நானும் அப்படித்தான் பேசியிருக்கிறேன். ரொம்ப வருடம் கழித்து அரிசோனா பீனிக்ஸில் வியட்நாமிலிருந்து குடிபெயர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் "வாசனையில் நல்லது கெட்டது இல்லை. உனக்கு சில வகை பிடித்திருக்கிறது; சில வகை பிடிக்கவில்லை. வாசனையில் மொத்தம் இரண்டு வகை தான் - இருக்கிறது; இல்லை - No good or bad smell; just there is smell or no smell" என்றார். அது மனதில் ஆழமாகப் பதிந்து போனது. அதனால் தான் இந்தப் பதிவில் வியர்வையும், கருவாடும் 'வாசனை'!
ஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் கிடைக்கும் பூரி-உருளைக் கிழங்கு வாசனை, சென்னை-தில்லி தடத்தில் ரயிலில் கிடைக்கும் மசால் வடை வாசனை, பீகார் ரயில்களில் கிடைக்கும் குடுவை டீ வாசனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் அனுபவித்த வித்தியாசமான அனேக வாசனைகளை நியூயார்க் ரயில் நிலையங்களில் என்னால் உணர முடியவில்லை. அனைத்து வண்டிகளும் குளிர் பதனப் படுத்தப் பட்டு, மூடியே இருக்கின்றன. சரக்கு ரயிலை தூர இருந்து தான் பார்க்க முடிகிறது. என் கணிப்பில் அறிவியல் ஆராய்ச்சியில் கண், காது புலன்கள் சம்பந்தப்பட்ட விஷங்களுக்கு தந்த முக்கியத்துவம் மூக்கு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இல்லை. அதனால் என்னால் முடிந்த தொண்டு, வாசனைக்கென்று ஒரு பதிவு.
அடுத்த பதிவில் ரயில் பயணத்தில் பார்த்த, பாதித்த உறவுகள் பற்றி.
முந்தைய பதிவுகள்:இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5 இரயில் - 6
ஞாயிறு, ஜூன் 14, 2009
இரயில் - 6
இரயில் - 6
ரயில் என்ற வார்த்தை எனக்கு உணர்த்திய இன்னுமொரு பரிமாணம் 'வலிமை'. ரயில் சம்பந்தப்பட்ட (பெரும்பான்மையான) பொருள்கள் திடத்தில், சக்தியில் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். உதாரணமாக வீட்டில் இருக்கும் மின் விளக்கு/மின் விசிறியின் சுவிட்சை இயக்க (அழுத்த) வேண்டிய விசையை விட, ரயில் பெட்டியில் இருக்கும் சுவிட்சை இயக்க அதிக விசை தேவை. வீட்டில் நாற்காலியில் இடித்துக் கொண்டால் வரும் வலியை விட, ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையிலோ அல்லது ரயில் பெட்டியிலுள்ள இருக்கையிலோ இடித்துக் கொண்டால் வரும் வலி அதிகம்.
சாலை போட உபயோகிக்கும் சரளைக் கல்லை விட ரயில் தண்டவாளம் போட உபயோகிக்கும் சரளைக் கல் வலிமை அதிகம். ஜன்னல் கம்பியிலிருந்து ஆரம்பித்து தண்டவாளம் வரை கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் அதை ஒத்த மற்ற வாகன பாகங்களோடு பார்க்கையில் பெரிதாகவோ, வலிமையாகவோ தான் இருக்கும். ஐம்பது சரக்குப் பெட்டிகளை இரண்டு டீசல் என்ஜின்கள் இழுத்துச் செல்வதைப் பார்க்கையில் அந்த வலிமையை நினைத்து வியந்தது அதிகம். இந்த வலிமை சம்பந்தமான ஒரு கதை என் அப்பா சொன்னது (அவருக்கு அவர் தாத்தா சொன்னது).
கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒப்பிலியப்பன் கோவிலின் மூலவர் விக்கிரகம் முதலில் அத்தி மரத்தில் செய்ததாம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பவுண்டரீகபுரம் கிராமத்தில் இருந்த அண்ணு அய்யங்கார் கனவில் ஒப்பிலியப்பன் வந்து தான் மயிலம் பக்கத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வந்து நிர்மாணிக்க வேண்டும் என்று கட்டளையிட்டாராம். மயிலம் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கும் இடையே உள்ள இடம்; அப்போது விருத்தாசலம் அருகே இருந்த இரயில் நிலையம்.
இவரும் கொஞ்சம் பணம் சேர்த்து மயிலம் சென்று அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் குளத்திலிருந்த கல்லை எடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் சென்றார். வழியில், கல்லின் கனம் தாளாமல், பல முறை வண்டியின் அச்சு முறிந்து போக, புது வண்டி, புது அச்சு என்றெல்லாம் மாற்றி மாற்றி மிகவும் சிரமப்பட்டு விருத்தாசலம் வந்தடைந்தார். நடந்த கதையெல்லாம் சொல்லி ரயில் பார்சல் ஆபீசில் கல்லை கும்பகோணம் அனுப்பி வைத்து விட்டு, இவரும் ஊர் வந்து சேர்ந்தார்.
கும்பகோணம் வரும் வழியில், ரயில் சரக்குப் பெட்டியும் கல்லின் கனம் தாளமல் சக்கர அச்சு முறிந்து போக, ரயில்வேயிலிருந்து இவருக்கு ஆயிரக் கணக்கில் அபராதத் தொகையுடன் நோட்டீசு வந்து விட்டது. இது நடந்தது சுதந்திரத்திற்கு முன்னால்; ரயில் நிர்வாகம் ஆங்கிலேய அரசின் கையில். வட்டாரத் தலைமயகம் திருச்சியில், ஒரு ஆங்கிலேயர் தான் தலைமை. இவரிடமோ கையில் அபராதத் தொகை கட்ட பணமில்லை.
அண்ணு அய்யங்காரும் திருச்சிக்கு சென்று நிலைமையை விளக்கினார். விருத்தாசலம் ரயில் நிலையம் வருவதற்குள் பலமுறை மாட்டு வண்டி அச்சு முறிந்ததையும், இதை விபரமாக விருத்தாசல ரயில் நிலையத்தில் விளக்கியதையும் சொல்லி, ஒரு சரக்கு ரயிலின் வலிமையை, அதன் பளு தாங்கும் திறமையை, கிராமத்தில் வசிக்கும் தம்மால் எப்படி ஊகிக்க முடியும் என்று கேட்டாராம். இதை வட்டார அலுவலக நிர்வாகியும் ஒப்புக் கொண்டு, அபராதத் தொகையை ரத்து செய்ததோடு இல்லாமல், கல்லை கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினாராம். இப்பொதும் ஒப்பிலயப்பன் கோவில் சென்று வழிபடும் போதெல்லாம், இந்தக் கதை நினைப்புக்கு வரும்.
ரயில் நிலையம் சம்பந்தமான வாசனை பற்றிய விஷயங்கள் அடுத்த பதிவில்.
முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5
ரயில் என்ற வார்த்தை எனக்கு உணர்த்திய இன்னுமொரு பரிமாணம் 'வலிமை'. ரயில் சம்பந்தப்பட்ட (பெரும்பான்மையான) பொருள்கள் திடத்தில், சக்தியில் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். உதாரணமாக வீட்டில் இருக்கும் மின் விளக்கு/மின் விசிறியின் சுவிட்சை இயக்க (அழுத்த) வேண்டிய விசையை விட, ரயில் பெட்டியில் இருக்கும் சுவிட்சை இயக்க அதிக விசை தேவை. வீட்டில் நாற்காலியில் இடித்துக் கொண்டால் வரும் வலியை விட, ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையிலோ அல்லது ரயில் பெட்டியிலுள்ள இருக்கையிலோ இடித்துக் கொண்டால் வரும் வலி அதிகம்.
சாலை போட உபயோகிக்கும் சரளைக் கல்லை விட ரயில் தண்டவாளம் போட உபயோகிக்கும் சரளைக் கல் வலிமை அதிகம். ஜன்னல் கம்பியிலிருந்து ஆரம்பித்து தண்டவாளம் வரை கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் அதை ஒத்த மற்ற வாகன பாகங்களோடு பார்க்கையில் பெரிதாகவோ, வலிமையாகவோ தான் இருக்கும். ஐம்பது சரக்குப் பெட்டிகளை இரண்டு டீசல் என்ஜின்கள் இழுத்துச் செல்வதைப் பார்க்கையில் அந்த வலிமையை நினைத்து வியந்தது அதிகம். இந்த வலிமை சம்பந்தமான ஒரு கதை என் அப்பா சொன்னது (அவருக்கு அவர் தாத்தா சொன்னது).
கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒப்பிலியப்பன் கோவிலின் மூலவர் விக்கிரகம் முதலில் அத்தி மரத்தில் செய்ததாம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பவுண்டரீகபுரம் கிராமத்தில் இருந்த அண்ணு அய்யங்கார் கனவில் ஒப்பிலியப்பன் வந்து தான் மயிலம் பக்கத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வந்து நிர்மாணிக்க வேண்டும் என்று கட்டளையிட்டாராம். மயிலம் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கும் இடையே உள்ள இடம்; அப்போது விருத்தாசலம் அருகே இருந்த இரயில் நிலையம்.
இவரும் கொஞ்சம் பணம் சேர்த்து மயிலம் சென்று அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் குளத்திலிருந்த கல்லை எடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் சென்றார். வழியில், கல்லின் கனம் தாளாமல், பல முறை வண்டியின் அச்சு முறிந்து போக, புது வண்டி, புது அச்சு என்றெல்லாம் மாற்றி மாற்றி மிகவும் சிரமப்பட்டு விருத்தாசலம் வந்தடைந்தார். நடந்த கதையெல்லாம் சொல்லி ரயில் பார்சல் ஆபீசில் கல்லை கும்பகோணம் அனுப்பி வைத்து விட்டு, இவரும் ஊர் வந்து சேர்ந்தார்.
கும்பகோணம் வரும் வழியில், ரயில் சரக்குப் பெட்டியும் கல்லின் கனம் தாளமல் சக்கர அச்சு முறிந்து போக, ரயில்வேயிலிருந்து இவருக்கு ஆயிரக் கணக்கில் அபராதத் தொகையுடன் நோட்டீசு வந்து விட்டது. இது நடந்தது சுதந்திரத்திற்கு முன்னால்; ரயில் நிர்வாகம் ஆங்கிலேய அரசின் கையில். வட்டாரத் தலைமயகம் திருச்சியில், ஒரு ஆங்கிலேயர் தான் தலைமை. இவரிடமோ கையில் அபராதத் தொகை கட்ட பணமில்லை.
அண்ணு அய்யங்காரும் திருச்சிக்கு சென்று நிலைமையை விளக்கினார். விருத்தாசலம் ரயில் நிலையம் வருவதற்குள் பலமுறை மாட்டு வண்டி அச்சு முறிந்ததையும், இதை விபரமாக விருத்தாசல ரயில் நிலையத்தில் விளக்கியதையும் சொல்லி, ஒரு சரக்கு ரயிலின் வலிமையை, அதன் பளு தாங்கும் திறமையை, கிராமத்தில் வசிக்கும் தம்மால் எப்படி ஊகிக்க முடியும் என்று கேட்டாராம். இதை வட்டார அலுவலக நிர்வாகியும் ஒப்புக் கொண்டு, அபராதத் தொகையை ரத்து செய்ததோடு இல்லாமல், கல்லை கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினாராம். இப்பொதும் ஒப்பிலயப்பன் கோவில் சென்று வழிபடும் போதெல்லாம், இந்தக் கதை நினைப்புக்கு வரும்.
ரயில் நிலையம் சம்பந்தமான வாசனை பற்றிய விஷயங்கள் அடுத்த பதிவில்.
முந்தைய பதிவுகள்:
இரயில் - 1 இரயில் - 2 இரயில் - 3 இரயில் - 4 இரயில் - 5
ஞாயிறு, ஜூன் 07, 2009
இரயில் – 5
இரயில் – 5
வில்லிவாக்கத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு தேவர் தெருவிலிருந்து, தாமோதரப் பெருமாள் காலனிக்கு மாற்றி வந்தோம். அதிலும், வீட்டிற்குப் பின்புறம் தண்டவாளங்கள் தான். அதிலும் அம்பத்தூர் செல்லும் பாதை தவிர, பாடி வீல்ஸ் இன்டியா தொழிற்சாலையை ஒட்டி, ரயில் வண்டிகளுக்கு பூச்சு அடிக்கும் நிலயத்திற்கு செல்வதற்கான இன்னுமொரு பாதையும் உண்டு. இந்த பெயிண்ட் அடிக்கும் நிலையத்திற்கு செல்வதற்காக முழுவதும் முடிக்கப்படாத வண்டிப் பெட்டிகளை அழைத்துச் செல்வதற்காக சின்ன டீசல் இன்ஜின்கள் இயங்கும்.
இந்த இன்ஜின்கள் மொத்தம் இரண்டு வகை (அப்போது). டீசல் மற்றும் கரி. டீசலில் பெரிசு, சிறிசு உண்டு. இந்த சிறிசு அம்பத்தூர் - பீச் லோகல் வண்டிக்கு அதிகம் உபயோகிப்பார்கள். கரி இன்ஜினில் இரண்டு வகை - முகம் தட்டையான வகை; மற்றும் முகம் ஒரு கூம்பு போல முடிந்த வகை. மின் வண்டி அப்போது இந்த தடத்தில் கிடையாது. ஒவ்வொரு இன்ஜின் சப்தமும் தனி.
கரிவண்டி நிலையத்தை விட்டு கிளம்புவது, ஒரு அழகான கர்நாடக சங்கீதப் பாட்டின் ஆரம்பம் போல. ஸ்வரம் நிதானமாக ஆரம்பித்து, ஒரு சீராக வேகம் எடுக்கும். நிலையத்தின் வெளியே கொஞ்ச தூரத்தில் சாலை தண்டவாளத்தைக் கடக்கும்; அதற்கு முன்பாக அனேகமாக அனைத்து வண்டிகளும், ஓசை (விசில்) எழுப்பி விட்டுத்தான் செல்லும். இந்த விசிலும் ஒரு விதமான தாளத்தோடுதான் - கரிவண்டிகள் அனேகமாக இரண்டு விசில் அடிக்கும், ஒரு சின்னது, தொடர்ந்து கொஞ்சம் நீளமான விசில். இந்த சின்ன விசில் முடிவதற்கு முன் பெரியது ஆரம்பித்துவிடும் - இரண்டுக்கும் நடுவில் நிசப்தம் இருக்காது.
இந்த இன்ஜின் சக்கரங்கள் அளவும், சக்கரங்களுக்கு இடையே உள்ள தூரமும் வண்டிப் பெட்டிகளில் இருக்கும் சக்கரங்களை விட மாறுபட்டது. நீராவிப் பெட்டியிருந்து (அதான் பிஸ்டன் இருக்கும் டப்பா) வரும் இரும்பு உருளை இரண்டு அல்லது மூன்று பெரிய சக்கரங்களோடு (ஆரங்கள் உள்ள சக்கரங்கள்) இணைந்திருக்கும். நீராவி இந்த இரும்பு உருளையைத் தள்ளும் போது அந்த விசை ஒரு சக்கரத்திற்கு மட்டும் செல்லாமல் இந்த இரண்டு/மூன்று சக்கரங்களுக்கும் செல்லத்தான் இந்த அமைப்பு. இதில் சமயத்தில் நிலையத்திலிருந்து கிளம்புகையில் இன்ஜின் சக்கரத்தில் தண்டவாளத்தோடு அதிக பிடிப்பு இல்லாமல், சக்கரம் ஒரே இடத்தில் வேகமாகச் சுற்றுவதைப் பார்க்கலாம். அப்போது வரும் சப்தம் (கிட்டத்தட்ட அபஸ்வரம்) நிச்சயாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
அந்த நான்கு வருடங்களில் வெவ்வேறு விதமான சப்தங்களையும் அந்த வண்டிகளையும் கேட்டு/பார்த்து, அடையாளம் காண்பதில் தேர்ச்சி வந்தது. அதிலும் தாமோதரன் காலனி வீட்டில் மொட்டைமாடி - அதனால் வண்டிகளைப் பார்ப்பதும் கேட்பதும் அதிகமானது. அப்போது நாங்களாய் தென்னங் குறும்பையில் இரண்டு தென்னங்குச்சியை சொருகி (ஒரு பெரிய குச்சியை வளைத்து - ஆங்கில தலைகீழ் U, நடுவில் இரண்டாவது சின்ன குச்சியை சொருகி, மூன்றாவது குச்சியை இந்த குறும்பைக் குச்சிகளுக்கு இடையே நுழைத்து சுழற்றினால் ஒரு விதமான கிலுகிலுப்பை சத்தம் - Rattler) சுழற்றினால் வரும் சத்த தாளத்தை ரயில் வண்டியின் தாளத்தை ஒட்டி வரவழைப்பது ஒரு விளையாட்டு.
இது தவிர ஒரு ஊதல் - புல்லாங்குழல் போல. அதில் ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி, தண்ணீரில் நனைத்து, அந்த குச்சியை குழலின் உள்ளே மேலும் கீழும் அசைத்து, ஊதலின் சப்தம் மாறுவதை (சப்தம் கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி என்று மாறும்) கேட்போம். இந்த மேலிருந்து கீழ் அசைவை ஒரு தாள வேகத்தோடு செய்தால் கரிவண்டிகள் எழுப்பும் முன்னால் சொன்ன அந்த இரண்டு விசில் போல வரும். இந்த விசில் சப்தம் ஏன் அளவில் வேறுபடுகிறது என்று புரிந்தது, மன்னார்குடியில் திரு ஸ்ரீதரன் அவர்கள் இசைக் கவை பற்றி சொல்லிக் கொடுத்த போது கொஞ்சம் புரிந்தமாதிரி இருந்தது. ஊதுபத்தி டப்பாவை (ஒரு உருளை அட்டை) காதில் வைத்து ரயில் ஊதலைக் கேட்கையில் தெரிந்த வித்தியாசத்த்தை விவரிப்பது கடினம்; இசைக் கவைப் பாடம் நிச்சயம் உதவியது.
முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2
இரயில் - 3
இரயில் - 4
வில்லிவாக்கத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு தேவர் தெருவிலிருந்து, தாமோதரப் பெருமாள் காலனிக்கு மாற்றி வந்தோம். அதிலும், வீட்டிற்குப் பின்புறம் தண்டவாளங்கள் தான். அதிலும் அம்பத்தூர் செல்லும் பாதை தவிர, பாடி வீல்ஸ் இன்டியா தொழிற்சாலையை ஒட்டி, ரயில் வண்டிகளுக்கு பூச்சு அடிக்கும் நிலயத்திற்கு செல்வதற்கான இன்னுமொரு பாதையும் உண்டு. இந்த பெயிண்ட் அடிக்கும் நிலையத்திற்கு செல்வதற்காக முழுவதும் முடிக்கப்படாத வண்டிப் பெட்டிகளை அழைத்துச் செல்வதற்காக சின்ன டீசல் இன்ஜின்கள் இயங்கும்.
இந்த இன்ஜின்கள் மொத்தம் இரண்டு வகை (அப்போது). டீசல் மற்றும் கரி. டீசலில் பெரிசு, சிறிசு உண்டு. இந்த சிறிசு அம்பத்தூர் - பீச் லோகல் வண்டிக்கு அதிகம் உபயோகிப்பார்கள். கரி இன்ஜினில் இரண்டு வகை - முகம் தட்டையான வகை; மற்றும் முகம் ஒரு கூம்பு போல முடிந்த வகை. மின் வண்டி அப்போது இந்த தடத்தில் கிடையாது. ஒவ்வொரு இன்ஜின் சப்தமும் தனி.
கரிவண்டி நிலையத்தை விட்டு கிளம்புவது, ஒரு அழகான கர்நாடக சங்கீதப் பாட்டின் ஆரம்பம் போல. ஸ்வரம் நிதானமாக ஆரம்பித்து, ஒரு சீராக வேகம் எடுக்கும். நிலையத்தின் வெளியே கொஞ்ச தூரத்தில் சாலை தண்டவாளத்தைக் கடக்கும்; அதற்கு முன்பாக அனேகமாக அனைத்து வண்டிகளும், ஓசை (விசில்) எழுப்பி விட்டுத்தான் செல்லும். இந்த விசிலும் ஒரு விதமான தாளத்தோடுதான் - கரிவண்டிகள் அனேகமாக இரண்டு விசில் அடிக்கும், ஒரு சின்னது, தொடர்ந்து கொஞ்சம் நீளமான விசில். இந்த சின்ன விசில் முடிவதற்கு முன் பெரியது ஆரம்பித்துவிடும் - இரண்டுக்கும் நடுவில் நிசப்தம் இருக்காது.
இந்த இன்ஜின் சக்கரங்கள் அளவும், சக்கரங்களுக்கு இடையே உள்ள தூரமும் வண்டிப் பெட்டிகளில் இருக்கும் சக்கரங்களை விட மாறுபட்டது. நீராவிப் பெட்டியிருந்து (அதான் பிஸ்டன் இருக்கும் டப்பா) வரும் இரும்பு உருளை இரண்டு அல்லது மூன்று பெரிய சக்கரங்களோடு (ஆரங்கள் உள்ள சக்கரங்கள்) இணைந்திருக்கும். நீராவி இந்த இரும்பு உருளையைத் தள்ளும் போது அந்த விசை ஒரு சக்கரத்திற்கு மட்டும் செல்லாமல் இந்த இரண்டு/மூன்று சக்கரங்களுக்கும் செல்லத்தான் இந்த அமைப்பு. இதில் சமயத்தில் நிலையத்திலிருந்து கிளம்புகையில் இன்ஜின் சக்கரத்தில் தண்டவாளத்தோடு அதிக பிடிப்பு இல்லாமல், சக்கரம் ஒரே இடத்தில் வேகமாகச் சுற்றுவதைப் பார்க்கலாம். அப்போது வரும் சப்தம் (கிட்டத்தட்ட அபஸ்வரம்) நிச்சயாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
அந்த நான்கு வருடங்களில் வெவ்வேறு விதமான சப்தங்களையும் அந்த வண்டிகளையும் கேட்டு/பார்த்து, அடையாளம் காண்பதில் தேர்ச்சி வந்தது. அதிலும் தாமோதரன் காலனி வீட்டில் மொட்டைமாடி - அதனால் வண்டிகளைப் பார்ப்பதும் கேட்பதும் அதிகமானது. அப்போது நாங்களாய் தென்னங் குறும்பையில் இரண்டு தென்னங்குச்சியை சொருகி (ஒரு பெரிய குச்சியை வளைத்து - ஆங்கில தலைகீழ் U, நடுவில் இரண்டாவது சின்ன குச்சியை சொருகி, மூன்றாவது குச்சியை இந்த குறும்பைக் குச்சிகளுக்கு இடையே நுழைத்து சுழற்றினால் ஒரு விதமான கிலுகிலுப்பை சத்தம் - Rattler) சுழற்றினால் வரும் சத்த தாளத்தை ரயில் வண்டியின் தாளத்தை ஒட்டி வரவழைப்பது ஒரு விளையாட்டு.
இது தவிர ஒரு ஊதல் - புல்லாங்குழல் போல. அதில் ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி, தண்ணீரில் நனைத்து, அந்த குச்சியை குழலின் உள்ளே மேலும் கீழும் அசைத்து, ஊதலின் சப்தம் மாறுவதை (சப்தம் கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி என்று மாறும்) கேட்போம். இந்த மேலிருந்து கீழ் அசைவை ஒரு தாள வேகத்தோடு செய்தால் கரிவண்டிகள் எழுப்பும் முன்னால் சொன்ன அந்த இரண்டு விசில் போல வரும். இந்த விசில் சப்தம் ஏன் அளவில் வேறுபடுகிறது என்று புரிந்தது, மன்னார்குடியில் திரு ஸ்ரீதரன் அவர்கள் இசைக் கவை பற்றி சொல்லிக் கொடுத்த போது கொஞ்சம் புரிந்தமாதிரி இருந்தது. ஊதுபத்தி டப்பாவை (ஒரு உருளை அட்டை) காதில் வைத்து ரயில் ஊதலைக் கேட்கையில் தெரிந்த வித்தியாசத்த்தை விவரிப்பது கடினம்; இசைக் கவைப் பாடம் நிச்சயம் உதவியது.
முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2
இரயில் - 3
இரயில் - 4
ஞாயிறு, மே 31, 2009
இரயில் - 4
இரயில் - 4
ஒரு விஷயத்தை உணர்ந்து அனுபவிக்க, அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருந்தால் உதவியாக இருக்கும். அதே சமயத்தில் அந்த அறிவு, அல்லது ஞானம் கொஞ்சம் அதிகமாக இருந்துவிட்டால் சமயத்தில் அந்த ஞானமே அனுபவ முழுமைக்குத் தடையாக இருந்துவிடுகிறது.
சிறு வயதில் ரயில் செல்லும் ஓசையை நான் அனுபவித்து ரசித்திருக்கிறேன். பார்க்காமலேயே வண்டி கொரட்டூர் பக்கத்திலிருந்து பெரம்பூர் செல்கிறதா, அல்லது பெரம்பூர் பக்கத்தில்ருந்து கொரட்டூர் செல்கிறதா என்று சொல்வது கொஞ்சம் சுலபம். திசை மட்டுமில்லாமல், இது கூட்ஸ் (சரக்கு ரயில்); இது பாசஞ்சர்; இது எக்ஸ்ப்ரஸ்; இது பெரிய கூட்ஸ் பெட்டி; இது சிறியது என்றெல்லாம் சொல்லி தம்பியையும், அக்கம் பக்கத்து சிறுவர்களையும் போட்டி விளையாட்டுக்கு அழைத்திருகிறேன். அனேகமாக நான் தான் வெல்வேன்; அதனால் யாரும் அதிகமாக இந்த விளையாட்டுக்கு வர மாட்டார்கள்.
அப்போது யாராவது என்னை 'எப்படி உன்னால் பார்க்காமலே சரியாகச் சொல்ல முடிகிறது' என்று கேட்டிருந்தால், எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்காது. பின்னால், மன்னார்குடியில் படிக்கையில், டாப்ளர் விதி பற்றி திரு சேதுராமன் சொல்லிக் கொடுக்கையில் - இந்த வில்லிவாக்க விளையாட்டு நினைப்புக்கு வந்து 'அட இதானா அது' என்று புரிந்தது. தண்டவாள துண்டுகளுக்கு இணைப்பு கொடுக்கையில் விடும் இடைவெளியில் (வெப்பத்தில் இரும்பு விரியும் போது ரயில் தடம் புரளாமல் இருக்க), சக்கரம் செல்லும் போது வரும் ஓசை ஒருவிதமான தாளம். ரயில் பெட்டிகளின் சக்கர அமைப்பு - இரண்டு இரண்டாக இருக்கும் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். முதல் பெட்டியின் கடைசி சக்கரத்திற்கும், இரண்டாம் பெட்டியின் முதல் சக்கரத்திற்கும் இடைய உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். இதனால் ரயில் செல்லும் போது சீரான தாள கதியில் ஓசை வருகிறது. 'தடக்-தடக்' என்னும் இந்த சுருதி, தம்புராவில் இரண்டு மீட்டுதல்களை ஒத்திருக்கும்.
பெரிய சரக்குப் பெட்டியில் முன்-பின் சக்கர தூரம், சிறிய சரக்குப் பெட்டியிலிருப்பதை விட அதிகம் - அதனால் இந்த தாள அமைப்பு சற்று மாறும். முதல் 'தடக்-தடக்'க்கும் இரண்டாம் ‘தடக்-தடக்'கிற்கும் அதிக இடைவெளி இருந்தால் அது பெரிய பெட்டி; இல்லையென்றால் சிறிய பெட்டி. திறந்த பெட்டியில் காற்று புகுந்து செல்லும் விதமும், மூடிய சரக்குப் பெட்டியைத் தாண்டி வரும் விதமும் பயணிகள் ரயிலுக்கும், சரக்கு ரயிலுக்கும் ஓசை வித்தியாசம் ஏற்படுத்தும்.
இந்த மாதிரி சீரான தாள ஓசைகளை கேட்க வேண்டும் என்று ஒரு வெறி; அளவு கடந்த ஆர்வம். வீட்டின் பின்புறம் குடித்தனம் இருந்தவர்கள் தயிர் கடைய ஒரு தூணில் கயற்றை வளையமாகக் கட்டி, அதில் மத்தை வைத்து, மத்தை மற்றொரு கயற்றால் சுழற்றி தயிரை கடைவார்கள். தச்சர்கள் மரத்தில் துளை போட இதே போன்று கயற்றால் சுழற்றி இயக்குவதைப் பார்த்திருக்கிறேன். இவை அனைத்திலுமே ஒரு சீரான தாள அமைப்பைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் மத்தை அம்மா கையால் சுழற்றுவார்கள். அதில் ஓசை சீராக வரவில்லை என்றால், அம்மாவை 'நீ சரியாக சுற்றவில்லை' என்றெல்லாம் சொல்லி வெறுப்பேத்தியிருக்கிறேன்.
நல்ல வேளை என் அம்மா கொஞ்சம் அதிகமாகவே பொறுமை சாலியாக இருந்ததால், இந்த ஆர்வம் எந்த விடத்திலும் தடங்கலில்லாமல் அதிகமான அனுபவத்தைப் பெற முடிந்தது. இந்தக் காலத்தில் இருக்கும் 'அறிவும்' 'ஞானமும்' இருந்திருந்தால், எனக்கு 'OCD – Obsessive Compulsive Disorder' இல்லை ‘ADD – Attention Deficit Disorder’ என்றெல்லாம் சொல்லி 'தெரபி' கொடுத்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்யாமல், பொறுமையுடன் என்னை வளர்த்த அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
திரு சேதுராமன் அறிவியல் வகுப்பில், டாப்ளர் விதியையும், அதன் சமன்பாடுகளையும் ரொம்பவும் விபரமாக பாடம் நடத்திய போது, அதை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியது இந்த சிறுவயது 'உணர்தல்' தான். அந்த அனுபவம் இல்லாமல் இந்த விதியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது. அறிவியலால் புரிந்தது பத்து வருடங்களுக்குப் பின்னால்; ஆனால் சிறுவயதில் இந்த வித்தியாசத்தை உண்ர்ந்ததோடு அல்லாமல் அதை அடையாளமும் கண்டு கொண்டதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் வேலை விஷயமாக வில்மிங்டன் செல்ல 'Acela’ எக்ஸ்ப்ரசில் போகையில், பெட்டியின் வாசலில் கண்ணை மூடிக் கொண்டு நின்று கொண்டு இந்த தாளத்தை ரசிக்கையில், அம்மாவின் மத்தும், டாப்ளர் விதியின் சமன்பாடும், வில்லிவாக்க ரயில் நிலையமும் தான் நினைப்புக்கு வந்தது. அனுபவத்தையும், அறிவியலையும் முழுமையாக உணர வைத்தை அம்மாவிற்கும், ஆசிரியருக்கும் நன்றி.
முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2
இரயில் - 3
ஒரு விஷயத்தை உணர்ந்து அனுபவிக்க, அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருந்தால் உதவியாக இருக்கும். அதே சமயத்தில் அந்த அறிவு, அல்லது ஞானம் கொஞ்சம் அதிகமாக இருந்துவிட்டால் சமயத்தில் அந்த ஞானமே அனுபவ முழுமைக்குத் தடையாக இருந்துவிடுகிறது.
சிறு வயதில் ரயில் செல்லும் ஓசையை நான் அனுபவித்து ரசித்திருக்கிறேன். பார்க்காமலேயே வண்டி கொரட்டூர் பக்கத்திலிருந்து பெரம்பூர் செல்கிறதா, அல்லது பெரம்பூர் பக்கத்தில்ருந்து கொரட்டூர் செல்கிறதா என்று சொல்வது கொஞ்சம் சுலபம். திசை மட்டுமில்லாமல், இது கூட்ஸ் (சரக்கு ரயில்); இது பாசஞ்சர்; இது எக்ஸ்ப்ரஸ்; இது பெரிய கூட்ஸ் பெட்டி; இது சிறியது என்றெல்லாம் சொல்லி தம்பியையும், அக்கம் பக்கத்து சிறுவர்களையும் போட்டி விளையாட்டுக்கு அழைத்திருகிறேன். அனேகமாக நான் தான் வெல்வேன்; அதனால் யாரும் அதிகமாக இந்த விளையாட்டுக்கு வர மாட்டார்கள்.
அப்போது யாராவது என்னை 'எப்படி உன்னால் பார்க்காமலே சரியாகச் சொல்ல முடிகிறது' என்று கேட்டிருந்தால், எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்காது. பின்னால், மன்னார்குடியில் படிக்கையில், டாப்ளர் விதி பற்றி திரு சேதுராமன் சொல்லிக் கொடுக்கையில் - இந்த வில்லிவாக்க விளையாட்டு நினைப்புக்கு வந்து 'அட இதானா அது' என்று புரிந்தது. தண்டவாள துண்டுகளுக்கு இணைப்பு கொடுக்கையில் விடும் இடைவெளியில் (வெப்பத்தில் இரும்பு விரியும் போது ரயில் தடம் புரளாமல் இருக்க), சக்கரம் செல்லும் போது வரும் ஓசை ஒருவிதமான தாளம். ரயில் பெட்டிகளின் சக்கர அமைப்பு - இரண்டு இரண்டாக இருக்கும் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும். முதல் பெட்டியின் கடைசி சக்கரத்திற்கும், இரண்டாம் பெட்டியின் முதல் சக்கரத்திற்கும் இடைய உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். இதனால் ரயில் செல்லும் போது சீரான தாள கதியில் ஓசை வருகிறது. 'தடக்-தடக்' என்னும் இந்த சுருதி, தம்புராவில் இரண்டு மீட்டுதல்களை ஒத்திருக்கும்.
பெரிய சரக்குப் பெட்டியில் முன்-பின் சக்கர தூரம், சிறிய சரக்குப் பெட்டியிலிருப்பதை விட அதிகம் - அதனால் இந்த தாள அமைப்பு சற்று மாறும். முதல் 'தடக்-தடக்'க்கும் இரண்டாம் ‘தடக்-தடக்'கிற்கும் அதிக இடைவெளி இருந்தால் அது பெரிய பெட்டி; இல்லையென்றால் சிறிய பெட்டி. திறந்த பெட்டியில் காற்று புகுந்து செல்லும் விதமும், மூடிய சரக்குப் பெட்டியைத் தாண்டி வரும் விதமும் பயணிகள் ரயிலுக்கும், சரக்கு ரயிலுக்கும் ஓசை வித்தியாசம் ஏற்படுத்தும்.
இந்த மாதிரி சீரான தாள ஓசைகளை கேட்க வேண்டும் என்று ஒரு வெறி; அளவு கடந்த ஆர்வம். வீட்டின் பின்புறம் குடித்தனம் இருந்தவர்கள் தயிர் கடைய ஒரு தூணில் கயற்றை வளையமாகக் கட்டி, அதில் மத்தை வைத்து, மத்தை மற்றொரு கயற்றால் சுழற்றி தயிரை கடைவார்கள். தச்சர்கள் மரத்தில் துளை போட இதே போன்று கயற்றால் சுழற்றி இயக்குவதைப் பார்த்திருக்கிறேன். இவை அனைத்திலுமே ஒரு சீரான தாள அமைப்பைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் மத்தை அம்மா கையால் சுழற்றுவார்கள். அதில் ஓசை சீராக வரவில்லை என்றால், அம்மாவை 'நீ சரியாக சுற்றவில்லை' என்றெல்லாம் சொல்லி வெறுப்பேத்தியிருக்கிறேன்.
நல்ல வேளை என் அம்மா கொஞ்சம் அதிகமாகவே பொறுமை சாலியாக இருந்ததால், இந்த ஆர்வம் எந்த விடத்திலும் தடங்கலில்லாமல் அதிகமான அனுபவத்தைப் பெற முடிந்தது. இந்தக் காலத்தில் இருக்கும் 'அறிவும்' 'ஞானமும்' இருந்திருந்தால், எனக்கு 'OCD – Obsessive Compulsive Disorder' இல்லை ‘ADD – Attention Deficit Disorder’ என்றெல்லாம் சொல்லி 'தெரபி' கொடுத்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்யாமல், பொறுமையுடன் என்னை வளர்த்த அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
திரு சேதுராமன் அறிவியல் வகுப்பில், டாப்ளர் விதியையும், அதன் சமன்பாடுகளையும் ரொம்பவும் விபரமாக பாடம் நடத்திய போது, அதை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியது இந்த சிறுவயது 'உணர்தல்' தான். அந்த அனுபவம் இல்லாமல் இந்த விதியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது. அறிவியலால் புரிந்தது பத்து வருடங்களுக்குப் பின்னால்; ஆனால் சிறுவயதில் இந்த வித்தியாசத்தை உண்ர்ந்ததோடு அல்லாமல் அதை அடையாளமும் கண்டு கொண்டதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் வேலை விஷயமாக வில்மிங்டன் செல்ல 'Acela’ எக்ஸ்ப்ரசில் போகையில், பெட்டியின் வாசலில் கண்ணை மூடிக் கொண்டு நின்று கொண்டு இந்த தாளத்தை ரசிக்கையில், அம்மாவின் மத்தும், டாப்ளர் விதியின் சமன்பாடும், வில்லிவாக்க ரயில் நிலையமும் தான் நினைப்புக்கு வந்தது. அனுபவத்தையும், அறிவியலையும் முழுமையாக உணர வைத்தை அம்மாவிற்கும், ஆசிரியருக்கும் நன்றி.
முந்தைய பதிவுகள்
இரயில் - 1
இரயில் - 2
இரயில் - 3
சனி, மே 23, 2009
இரயில் - 3
இரயில் - 3
நான் வளர்ந்த காலத்தில் விளையாட்டு பொம்மைகள் வீட்டில் அதிகம் கிடையாது. வாங்கித்தந்த பொம்மைகளைவிட நாங்களாய் உருவாக்கிக் கொண்ட விளையாட்டு பொம்மைகளைத் தான் அதிகம் விரும்பி உபயோகித்தோம் - நான் மட்டுமல்ல, தெருவில் வசித்த முக்கால் வாசி சிறுவர்கள் வீட்டு நிலைமையும் இதே போலத்தான். மொட்டைமாடியில் நின்று பட்டம் (வீட்டில் வரும் செய்தித்தாளில் செய்தது) விடுவது, மற்றும் விதவிதமான வண்டிகள் செய்து விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி - பட்டமோ, வண்டியோ, செய்தது நாம் தானே! விளையாடுவதை விட செய்த பொருள் நன்றாக இயங்கினால் சந்தோஷம் அதிகம்.
பட்டம் அனேகமாக கோடையில்தான். ரயில் வண்டி செய்வது அதிகமாக மழைக்காலத்தில் - வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடைந்து கிடக்கையில் சிகரெட்டு டப்பா, தீப்பெட்டி கொண்டு வண்டிகள் செய்வோம். தீபாவளி சமயத்தில் அதிகம் தீப்பெட்டி கிடைக்கும். உள்ளிருக்கும் பெட்டியை பாதி திறந்து அடுத்த தீப்பெட்டியுடன் இணைத்தால் தொடர் வண்டி ரெடி. துணி தைக்கும் ஊசியால் (ஊசி முக்கியம்; குச்சியால் நேரடியாக ஓட்டை போட முயன்றால், பெட்டி உடைய வாய்ப்பு உண்டு) தீப்பெட்டியில் ஓட்டை போட்டு, தென்னங்குச்சியை நுழைத்து (அது தான் ஆக்சில் - Axle) சக்கரத்துக்கு எது கிடைக்கிறதோ - அது வெண்டைக்காயின் காம்பாக இருக்கட்டும், அல்லது சப்போட்டா பிஞ்சு இல்லை தென்னங்குறும்பை! - அதை இரண்டு பக்கங்களிலும் சொருகி எந்த வண்டி வேகமாகப் போகிறது என்று போட்டி போட்டுக் கொண்டிருப்போம்.
ஒரு முறை பள்ளியில் சாக்பீஸ் டப்பா ஒன்று - தக்கையான மர டப்பா - கிடைக்க, அதிலும் இதே போன்ற வித்தை காட்டி வண்டி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்த வண்டி விளையாட்டில் நிஜத்தை பிரதிபலிக்க சேர்த்த டிக்கட், வண்டியின் டிரைவர் வண்டி நிற்கும் நிலையப் பெயர் சொல்வது (வரிசையான பெயர்கள் - அது எழும்பூர் - தாம்பரம், அல்லது அம்பத்தூர் - பீச் வழித்தடமாக இருக்கும்) என்றெல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தி விளையாடினோம்!
ஒரு முறை - 75ல் என்று நியாபகம் - வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு ரயில் புத்தக நிலையம் ஒன்று வந்து ஒரு வாரம் இருந்தது. இரண்டு/மூன்று பெட்டிகளை ஒரு புத்தகக் கடை போல மாற்றி ஒரு வாரம் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பா எங்களை அழைத்து சென்று புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒன்று 'யார் அதிக பலசாலி?' - பத்து/பதினைந்து பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம், ஒரு சிறுவன் அப்பாவிடம் 'உலகிலேயே யார் அதிக பலசாலி' என்று கேட்க, அப்பா ஒவ்வொரு இடமாக ஆழைத்துச் செல்வது போல கதை - முதலில் யானை, பஸ், பின் ரயில் நிலையம், கிரேன், கப்பல் என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசில் இதை எல்லாம் இயக்கும் மனிதன் தான் அதிக பலசாலி என்று முடியும்.. அங்கு வாங்கின இன்னுமொரு புத்தகம் உள்ளங்கை அளவுதான் - ஆனால் நிறைய பக்கங்கள். எல்லாமே பாட்டுதான் - ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இல்லை நான்கு வரிகள். அதில் படித்த ஒரு ரயில் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.
ரயிலே ரயிலே ரயிலே
ரயிலும் சிறிது வேகமாய்ப் போனால்
மெயிலே மெயிலே மெயிலே
டிக்கட் டிக்கட் டிக்கட்
டிக்கட் இன்றி பயணம் சென்றால்
இக்கட் இக்கட் இக்கட்
பாலம் பாலம் பாலம்
பாலத்தின் மேல் பாராது போனால்
ஓலம் ஓலம் ஓலம்
என்று ஆரம்பிக்கும் - மொத்தம் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒரு பாட்டுக்கு.
ரயிலைப் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அந்த அனுபவத்தை பின்னாளில் பள்ளி/கல்லூரியில் படித்த பாடங்களோடும், புத்தகங்களோடும் பொருத்தி புரிந்து கொண்டதையும் அடுத்த பதிவில் தருகிறேன்.
முன்பதிவுகள்
இரயில் – 1
இரயில் – 2
நான் வளர்ந்த காலத்தில் விளையாட்டு பொம்மைகள் வீட்டில் அதிகம் கிடையாது. வாங்கித்தந்த பொம்மைகளைவிட நாங்களாய் உருவாக்கிக் கொண்ட விளையாட்டு பொம்மைகளைத் தான் அதிகம் விரும்பி உபயோகித்தோம் - நான் மட்டுமல்ல, தெருவில் வசித்த முக்கால் வாசி சிறுவர்கள் வீட்டு நிலைமையும் இதே போலத்தான். மொட்டைமாடியில் நின்று பட்டம் (வீட்டில் வரும் செய்தித்தாளில் செய்தது) விடுவது, மற்றும் விதவிதமான வண்டிகள் செய்து விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி - பட்டமோ, வண்டியோ, செய்தது நாம் தானே! விளையாடுவதை விட செய்த பொருள் நன்றாக இயங்கினால் சந்தோஷம் அதிகம்.
பட்டம் அனேகமாக கோடையில்தான். ரயில் வண்டி செய்வது அதிகமாக மழைக்காலத்தில் - வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடைந்து கிடக்கையில் சிகரெட்டு டப்பா, தீப்பெட்டி கொண்டு வண்டிகள் செய்வோம். தீபாவளி சமயத்தில் அதிகம் தீப்பெட்டி கிடைக்கும். உள்ளிருக்கும் பெட்டியை பாதி திறந்து அடுத்த தீப்பெட்டியுடன் இணைத்தால் தொடர் வண்டி ரெடி. துணி தைக்கும் ஊசியால் (ஊசி முக்கியம்; குச்சியால் நேரடியாக ஓட்டை போட முயன்றால், பெட்டி உடைய வாய்ப்பு உண்டு) தீப்பெட்டியில் ஓட்டை போட்டு, தென்னங்குச்சியை நுழைத்து (அது தான் ஆக்சில் - Axle) சக்கரத்துக்கு எது கிடைக்கிறதோ - அது வெண்டைக்காயின் காம்பாக இருக்கட்டும், அல்லது சப்போட்டா பிஞ்சு இல்லை தென்னங்குறும்பை! - அதை இரண்டு பக்கங்களிலும் சொருகி எந்த வண்டி வேகமாகப் போகிறது என்று போட்டி போட்டுக் கொண்டிருப்போம்.
ஒரு முறை பள்ளியில் சாக்பீஸ் டப்பா ஒன்று - தக்கையான மர டப்பா - கிடைக்க, அதிலும் இதே போன்ற வித்தை காட்டி வண்டி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்த வண்டி விளையாட்டில் நிஜத்தை பிரதிபலிக்க சேர்த்த டிக்கட், வண்டியின் டிரைவர் வண்டி நிற்கும் நிலையப் பெயர் சொல்வது (வரிசையான பெயர்கள் - அது எழும்பூர் - தாம்பரம், அல்லது அம்பத்தூர் - பீச் வழித்தடமாக இருக்கும்) என்றெல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தி விளையாடினோம்!
ஒரு முறை - 75ல் என்று நியாபகம் - வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு ரயில் புத்தக நிலையம் ஒன்று வந்து ஒரு வாரம் இருந்தது. இரண்டு/மூன்று பெட்டிகளை ஒரு புத்தகக் கடை போல மாற்றி ஒரு வாரம் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பா எங்களை அழைத்து சென்று புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒன்று 'யார் அதிக பலசாலி?' - பத்து/பதினைந்து பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம், ஒரு சிறுவன் அப்பாவிடம் 'உலகிலேயே யார் அதிக பலசாலி' என்று கேட்க, அப்பா ஒவ்வொரு இடமாக ஆழைத்துச் செல்வது போல கதை - முதலில் யானை, பஸ், பின் ரயில் நிலையம், கிரேன், கப்பல் என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசில் இதை எல்லாம் இயக்கும் மனிதன் தான் அதிக பலசாலி என்று முடியும்.. அங்கு வாங்கின இன்னுமொரு புத்தகம் உள்ளங்கை அளவுதான் - ஆனால் நிறைய பக்கங்கள். எல்லாமே பாட்டுதான் - ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இல்லை நான்கு வரிகள். அதில் படித்த ஒரு ரயில் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.
ரயிலே ரயிலே ரயிலே
ரயிலும் சிறிது வேகமாய்ப் போனால்
மெயிலே மெயிலே மெயிலே
டிக்கட் டிக்கட் டிக்கட்
டிக்கட் இன்றி பயணம் சென்றால்
இக்கட் இக்கட் இக்கட்
பாலம் பாலம் பாலம்
பாலத்தின் மேல் பாராது போனால்
ஓலம் ஓலம் ஓலம்
என்று ஆரம்பிக்கும் - மொத்தம் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒரு பாட்டுக்கு.
ரயிலைப் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அந்த அனுபவத்தை பின்னாளில் பள்ளி/கல்லூரியில் படித்த பாடங்களோடும், புத்தகங்களோடும் பொருத்தி புரிந்து கொண்டதையும் அடுத்த பதிவில் தருகிறேன்.
முன்பதிவுகள்
இரயில் – 1
இரயில் – 2
சனி, மே 16, 2009
இரயில் – 2
இரயில் – 2
இராமநாதபுரத்தில் வீடு இரயில் நிலையம் அருகில் இல்லை; அதனால் பார்ப்பதே அபூர்வம். அனேகமாக வீதியில் (வடக்கு வீதி) செல்லும் மாட்டு வண்டிதான். எப்போதாவது கார், ஜீப். திண்ணையில் உட்கார்ந்து அதிகம் பார்த்தது சைக்கிள் தான். அதே தெருவில் எங்கள் பெரியப்பாவும் இருந்தார்; அவரிடம் ஒரு ஜீப் இருந்தது (உப்பளத்துக்கு சென்று வர). அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது போல கற்பனை செய்து விளையாடுவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.
சென்னை வந்து முதலில் குடிபுகுந்தது, வில்லிவாக்கம் தேவர் தெருவில். அந்தத் தெருவின் வடக்கு வரிசையில் எங்கள் வீடு - வீடு என்றால் ஒரு வீட்டில் வீட்டுக்காரரையும் சேர்த்து நான்கு குடித்தனங்கள்; அதில் நாங்களும் ஒன்று. வீட்டிற்கு கொல்லைப்புறம் ஒரு பாதை; அதைத் தாண்டி இரயில் நிலையம். வீட்டுக்காரருக்கும் மற்றுமொரு குடித்தனக்காரருக்கும் இந்திய ரயில்வேயில் தான் வேலை - பெரம்பூர் லோகோவொர்க்ஸ். இருவரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்தே வேலைக்குச் செல்வார்கள். வீட்டின் கொல்லையில் சில தென்னை மரங்கள், ஒரு மாமரம் (சின்னது) இரண்டு பெரிய சப்போட்டா மரங்கள், ஒரு பவழ மல்லி, மற்றும் சில பெயர் தெரியாத சில்லறை மரங்கள். இதைத் தவிர கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு புதர் போன்ற பெரிய செடி/மரம் - பேரெல்லாம் நினைவில்லை. யாராவது கேட்டால் பெரிய மரம், சின்ன மரம் என்றுதான் சொல்லத் தெரியும் - டெனிஸ் த மெனஸ் கார்ட்டூனில் டெனிஸ் சொல்வது போல! அங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இரயிலை வேடிக்கை பார்ப்பது ஒரு விளையாட்டு.
அப்போதெல்லாம் இரயில் எண்ணிக்கை அதிகம் கிடையாது; மொத்தமாக நான்கு அல்லது ஐந்து, இல்லை அதிக பட்சம் ஆறு இரயில் தான் பார்க்க முடியும் மாலை வேளையில். அதிலும் இரண்டு சரக்கு வண்டியாக இருக்கும். அதில் என்ஜினையும், கார்டு பெட்டியையும் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் எண்ணிக்கை அதிகம்; அதிலும் எப்போதாவது ஒரு டாங்கரோ, அல்லது இராணுவ வண்டிகளை ஏற்றி செல்லும் திறந்த வெளிப்பெட்டிகள் (open carriages) வந்தால் ஒரு குஷி.
என் அப்பாவிற்கு பாரிஸ் கார்னர் அருகே அலுவலகம்; அதனால் வில்லிவாக்கத்தில்ருந்து இரயில் பிடித்து 'பீச்' நிலையம் போவார். எனக்கும் என் தம்பிக்கும் காலை அவர் கிளம்பும் ரயிலை கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் வேலை நேரம் இரண்டாவது ஷிப்ட் மாற, அவர் போவதும் தெரியாது, வருவதும் தெரியாது! நாங்கள் பள்ளியில் இருக்கையில் அவர் வீட்டிலிருந்து புறப்படுவார். எட்டு அல்லது எட்டரைக்கு நாங்கள் தூங்கிவிடுவோம்; அவர் வருவதோ 'அறிவாளி' படத்தில் தங்கவேலு மனைவி சொல்வது போல 'பேய் அலையற' நேரம்!
சென்னையில் உறவினர்கள் அதிகம்; மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது விசேஷம்! அவர் எங்களை குடும்பத்தோடு குரோம்பேட்டை, அல்லது நங்கநல்லூர், மாம்பலம் என்று அழைத்து செல்வார். ரயில் - பஸ் என்று மாற்றி மாற்றி அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லிவிடுவோம் - அப்போது தானே நிறைய டிக்கட் கிடைக்கும். டிக்கட் சேர்ப்பதில் எனக்கும் என் தம்பிக்கும் போட்டி வேறு உண்டே! எங்களுக்காக பேருந்தில் வில்லிவாக்கத்திலிருந்து எழும்பூர் (பல்லவன் - எண் பதினாறு); எழும்பூரிலிருந்து மாம்பலம், மீனம்பாக்கம் (அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் வரவில்லை) அல்லது கிரோம்பேட்டை (ரயில் நிலையத்தில் 'கி', கடைகளில் 'கு' - இப்பவும் இந்த பெயர் குழப்பத்தைப் பார்க்கலாம்) வரையில் மின் வண்டியில் செல்ல வேண்டும்! எனக்கும் என் தம்பிக்கும் எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையப் பெயர்களும் வரிசையாக அத்துப்படி. எங்கள் ரயில் விளையாட்டில் நிஜத்தைப் பிரதிபலிக்க இது உதவியாக இருந்தது.
தீப்பெட்டி, சிகரெட் டப்பா ரயில் வண்டிகள் செய்த கதைகளையும் டிக்கட் சம்பந்தமான அனுபவத்தையும் (பாட்டு கூட உண்டு) அடுத்த வார பதிவில் தருகிறேன்.
முன்பதிவு
இரயில் – 1
இராமநாதபுரத்தில் வீடு இரயில் நிலையம் அருகில் இல்லை; அதனால் பார்ப்பதே அபூர்வம். அனேகமாக வீதியில் (வடக்கு வீதி) செல்லும் மாட்டு வண்டிதான். எப்போதாவது கார், ஜீப். திண்ணையில் உட்கார்ந்து அதிகம் பார்த்தது சைக்கிள் தான். அதே தெருவில் எங்கள் பெரியப்பாவும் இருந்தார்; அவரிடம் ஒரு ஜீப் இருந்தது (உப்பளத்துக்கு சென்று வர). அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது போல கற்பனை செய்து விளையாடுவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.
சென்னை வந்து முதலில் குடிபுகுந்தது, வில்லிவாக்கம் தேவர் தெருவில். அந்தத் தெருவின் வடக்கு வரிசையில் எங்கள் வீடு - வீடு என்றால் ஒரு வீட்டில் வீட்டுக்காரரையும் சேர்த்து நான்கு குடித்தனங்கள்; அதில் நாங்களும் ஒன்று. வீட்டிற்கு கொல்லைப்புறம் ஒரு பாதை; அதைத் தாண்டி இரயில் நிலையம். வீட்டுக்காரருக்கும் மற்றுமொரு குடித்தனக்காரருக்கும் இந்திய ரயில்வேயில் தான் வேலை - பெரம்பூர் லோகோவொர்க்ஸ். இருவரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்தே வேலைக்குச் செல்வார்கள். வீட்டின் கொல்லையில் சில தென்னை மரங்கள், ஒரு மாமரம் (சின்னது) இரண்டு பெரிய சப்போட்டா மரங்கள், ஒரு பவழ மல்லி, மற்றும் சில பெயர் தெரியாத சில்லறை மரங்கள். இதைத் தவிர கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு புதர் போன்ற பெரிய செடி/மரம் - பேரெல்லாம் நினைவில்லை. யாராவது கேட்டால் பெரிய மரம், சின்ன மரம் என்றுதான் சொல்லத் தெரியும் - டெனிஸ் த மெனஸ் கார்ட்டூனில் டெனிஸ் சொல்வது போல! அங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இரயிலை வேடிக்கை பார்ப்பது ஒரு விளையாட்டு.
அப்போதெல்லாம் இரயில் எண்ணிக்கை அதிகம் கிடையாது; மொத்தமாக நான்கு அல்லது ஐந்து, இல்லை அதிக பட்சம் ஆறு இரயில் தான் பார்க்க முடியும் மாலை வேளையில். அதிலும் இரண்டு சரக்கு வண்டியாக இருக்கும். அதில் என்ஜினையும், கார்டு பெட்டியையும் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் எண்ணிக்கை அதிகம்; அதிலும் எப்போதாவது ஒரு டாங்கரோ, அல்லது இராணுவ வண்டிகளை ஏற்றி செல்லும் திறந்த வெளிப்பெட்டிகள் (open carriages) வந்தால் ஒரு குஷி.
என் அப்பாவிற்கு பாரிஸ் கார்னர் அருகே அலுவலகம்; அதனால் வில்லிவாக்கத்தில்ருந்து இரயில் பிடித்து 'பீச்' நிலையம் போவார். எனக்கும் என் தம்பிக்கும் காலை அவர் கிளம்பும் ரயிலை கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் வேலை நேரம் இரண்டாவது ஷிப்ட் மாற, அவர் போவதும் தெரியாது, வருவதும் தெரியாது! நாங்கள் பள்ளியில் இருக்கையில் அவர் வீட்டிலிருந்து புறப்படுவார். எட்டு அல்லது எட்டரைக்கு நாங்கள் தூங்கிவிடுவோம்; அவர் வருவதோ 'அறிவாளி' படத்தில் தங்கவேலு மனைவி சொல்வது போல 'பேய் அலையற' நேரம்!
சென்னையில் உறவினர்கள் அதிகம்; மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது விசேஷம்! அவர் எங்களை குடும்பத்தோடு குரோம்பேட்டை, அல்லது நங்கநல்லூர், மாம்பலம் என்று அழைத்து செல்வார். ரயில் - பஸ் என்று மாற்றி மாற்றி அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லிவிடுவோம் - அப்போது தானே நிறைய டிக்கட் கிடைக்கும். டிக்கட் சேர்ப்பதில் எனக்கும் என் தம்பிக்கும் போட்டி வேறு உண்டே! எங்களுக்காக பேருந்தில் வில்லிவாக்கத்திலிருந்து எழும்பூர் (பல்லவன் - எண் பதினாறு); எழும்பூரிலிருந்து மாம்பலம், மீனம்பாக்கம் (அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் வரவில்லை) அல்லது கிரோம்பேட்டை (ரயில் நிலையத்தில் 'கி', கடைகளில் 'கு' - இப்பவும் இந்த பெயர் குழப்பத்தைப் பார்க்கலாம்) வரையில் மின் வண்டியில் செல்ல வேண்டும்! எனக்கும் என் தம்பிக்கும் எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையப் பெயர்களும் வரிசையாக அத்துப்படி. எங்கள் ரயில் விளையாட்டில் நிஜத்தைப் பிரதிபலிக்க இது உதவியாக இருந்தது.
தீப்பெட்டி, சிகரெட் டப்பா ரயில் வண்டிகள் செய்த கதைகளையும் டிக்கட் சம்பந்தமான அனுபவத்தையும் (பாட்டு கூட உண்டு) அடுத்த வார பதிவில் தருகிறேன்.
முன்பதிவு
இரயில் – 1
சனி, மே 09, 2009
இரயில் - 1
இரயில் - 1
ரயில், ரெயில், ரயிலு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊர்தி என்னை மிகவும் கவர்ந்த வாகனம். சிறு வயதில் என் கற்பனையெல்லாம் என்ஜினில் - அதுவும் கரி வண்டியில் - ஒரு தடவையாவது சவாரி செய்ய வேண்டும் என்பதுதான். இன்று வரை நடக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் இந்த கரி வண்டியே காணாமல் போகும்; அதற்கு முன் ஒரு தடவையாவது அதில் ஏறி விட வேண்டும் என்று ஆசை. காபி, தேனீர் வரிசையில் இரயிலைப் பற்றி எழுத வேண்டும் என்று ரொம்ப நாளுக்கு முன்னால் யோசித்து வைத்திருந்தேன். இப்போது ஆரம்பித்துவிட்டேன்.
எழுத்தாளர் பாலகுமாரன் கல்கியில் "இரும்பு குதிரைகள்" எழுத ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் வருத்தம் - லாரியை இரும்பு குதிரையாக எழுதுகிறாரே; ரயிலை விட்டு விட்டாரே என்று. இந்த ரயில் மோகம் எனக்கு வந்தது நாங்கள் வில்லிவாக்கத்தில் வசித்த காலத்தில் (என்னுடைய ஆறிலிருந்து பத்து வயது வரை). வீட்டிற்கு பின்புறம் வில்லிவாக்கம் ரயில் நிலையம். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு ரயில் போவதை வேடிக்கை பார்ப்பது ஒரு முக்கியமான விளையாட்டு (அப்போது தொலைக்காட்சி இல்லை).
என் முதல் நியாபகம், இராமனாதபுரம் ரயில் நிலையம்தான். அதிலும் கண்ணால் பார்த்து நினைவில் இருக்கும் சித்திரத்தை விட, நுகர்ந்து அனுபவித்த மணம் தான் இன்னமும் பசுமையாக இருக்கிறது. என் தந்தைக்கு உத்தியோக மாற்றம்; இராமனாதபுரத்திலிருந்து சென்னைக்கு. வங்கியில் மாற்றல் ஆனதால், முதல் வகுப்பில் பயணம். மேலிருக்கும் மெத்தைக்கு செல்ல ஜன்னலுக்குப் பக்கத்தில் கால் வைத்து ஏற ஒரு இரும்புப் படி - மூடியிருந்தது. எனக்கு ஐந்தரை வயது; அதை திறக்க முயற்சிக்க, வலு இல்லாததால், அது சடக்கென்று மூடி என் கை விரல்களை பதம் பார்க்க, அப்பா திட்டுவாரே என்று பயந்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டது இன்னமும் நினைவில் இருக்கிறது!
இரயில் மெதுவாகக் கிளம்பி பின் வழியில் பரமக்குடி நிலையத்தில் நின்றது. பரமக்குடி தான் நான் பிறந்த ஊர்; என் பெரியம்மா வீட்டில். அவர்கள் குடும்பத்துடன் இரயில் நிலையத்திற்கு வந்து எங்களை வழியனுப்பியதும், வண்டி கிளம்புகையில் என் அம்மாவும் பெரியம்மாவும் அழுததும் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. என் அம்மா பள்ளியில் படித்தது, வளர்ந்தது என் பெரியம்மா வீட்டில் தான்; அதனால் இருவருக்கும் ஒட்டுதல் அதிகம். பெரும்பான்மையான பயணம் முழுதும் இரவில் இருந்ததால், அப்பா ஜன்னலை எல்லாம் மூடிவிட, கரு நீல இரவு விளக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்; என் தம்பி முதலிலேயே தூங்கிவிட்டான். இப்பவும் எனக்கு அந்த கருநீல விளக்கைப் பார்த்தால் ஒரு இனம் புரியாத சோகம் வருகிறது - காரணம் அந்தப் பயணம் தானோ என்னவோ!
மறுநாள் மதிய வாக்கில் சென்னை வந்து கருப்பு டாக்சியில் ஏகப்பட்ட சாமானோடு (கூரையில், பின் டிக்கியை மூட முடியாமல் கயற்றால் கட்டி) வில்லிவாக்கம் (இன்னுமொரு பெரியம்மா வீடு) வந்து சேர்ந்தோம். வில்லிவாக்க வாசம், ரயில் மோக வளர்ச்சி பற்றி அடுத்த வாரம்.
பிகு:
பின்னாளில் பட்டுக்கோட்டை தமிழ் ஆசிரியர் இரயில் என்றுதான் எழுத வேண்டும் (என் பெயரையும் அவர் அரங்கநாதன் என்று தான் வகுப்பு பதிவேட்டில் எழுதி முதல் வரிசையில் உட்கார வைத்தார், பெயர் 'அ'வில் ஆரம்பித்ததால்) என்று சொன்னதால் தலைப்பில் இரயில் என்று எழுதினாலும், பழக்கம் விடாமல் பதிவு முழுதும் ரயில் என்றே எழுதியிருக்கிறேன். தமிழாசிரியர் மன்னிக்க.
ரயில், ரெயில், ரயிலு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊர்தி என்னை மிகவும் கவர்ந்த வாகனம். சிறு வயதில் என் கற்பனையெல்லாம் என்ஜினில் - அதுவும் கரி வண்டியில் - ஒரு தடவையாவது சவாரி செய்ய வேண்டும் என்பதுதான். இன்று வரை நடக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் இந்த கரி வண்டியே காணாமல் போகும்; அதற்கு முன் ஒரு தடவையாவது அதில் ஏறி விட வேண்டும் என்று ஆசை. காபி, தேனீர் வரிசையில் இரயிலைப் பற்றி எழுத வேண்டும் என்று ரொம்ப நாளுக்கு முன்னால் யோசித்து வைத்திருந்தேன். இப்போது ஆரம்பித்துவிட்டேன்.
எழுத்தாளர் பாலகுமாரன் கல்கியில் "இரும்பு குதிரைகள்" எழுத ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் வருத்தம் - லாரியை இரும்பு குதிரையாக எழுதுகிறாரே; ரயிலை விட்டு விட்டாரே என்று. இந்த ரயில் மோகம் எனக்கு வந்தது நாங்கள் வில்லிவாக்கத்தில் வசித்த காலத்தில் (என்னுடைய ஆறிலிருந்து பத்து வயது வரை). வீட்டிற்கு பின்புறம் வில்லிவாக்கம் ரயில் நிலையம். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு ரயில் போவதை வேடிக்கை பார்ப்பது ஒரு முக்கியமான விளையாட்டு (அப்போது தொலைக்காட்சி இல்லை).
என் முதல் நியாபகம், இராமனாதபுரம் ரயில் நிலையம்தான். அதிலும் கண்ணால் பார்த்து நினைவில் இருக்கும் சித்திரத்தை விட, நுகர்ந்து அனுபவித்த மணம் தான் இன்னமும் பசுமையாக இருக்கிறது. என் தந்தைக்கு உத்தியோக மாற்றம்; இராமனாதபுரத்திலிருந்து சென்னைக்கு. வங்கியில் மாற்றல் ஆனதால், முதல் வகுப்பில் பயணம். மேலிருக்கும் மெத்தைக்கு செல்ல ஜன்னலுக்குப் பக்கத்தில் கால் வைத்து ஏற ஒரு இரும்புப் படி - மூடியிருந்தது. எனக்கு ஐந்தரை வயது; அதை திறக்க முயற்சிக்க, வலு இல்லாததால், அது சடக்கென்று மூடி என் கை விரல்களை பதம் பார்க்க, அப்பா திட்டுவாரே என்று பயந்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டது இன்னமும் நினைவில் இருக்கிறது!
இரயில் மெதுவாகக் கிளம்பி பின் வழியில் பரமக்குடி நிலையத்தில் நின்றது. பரமக்குடி தான் நான் பிறந்த ஊர்; என் பெரியம்மா வீட்டில். அவர்கள் குடும்பத்துடன் இரயில் நிலையத்திற்கு வந்து எங்களை வழியனுப்பியதும், வண்டி கிளம்புகையில் என் அம்மாவும் பெரியம்மாவும் அழுததும் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. என் அம்மா பள்ளியில் படித்தது, வளர்ந்தது என் பெரியம்மா வீட்டில் தான்; அதனால் இருவருக்கும் ஒட்டுதல் அதிகம். பெரும்பான்மையான பயணம் முழுதும் இரவில் இருந்ததால், அப்பா ஜன்னலை எல்லாம் மூடிவிட, கரு நீல இரவு விளக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்; என் தம்பி முதலிலேயே தூங்கிவிட்டான். இப்பவும் எனக்கு அந்த கருநீல விளக்கைப் பார்த்தால் ஒரு இனம் புரியாத சோகம் வருகிறது - காரணம் அந்தப் பயணம் தானோ என்னவோ!
மறுநாள் மதிய வாக்கில் சென்னை வந்து கருப்பு டாக்சியில் ஏகப்பட்ட சாமானோடு (கூரையில், பின் டிக்கியை மூட முடியாமல் கயற்றால் கட்டி) வில்லிவாக்கம் (இன்னுமொரு பெரியம்மா வீடு) வந்து சேர்ந்தோம். வில்லிவாக்க வாசம், ரயில் மோக வளர்ச்சி பற்றி அடுத்த வாரம்.
பிகு:
பின்னாளில் பட்டுக்கோட்டை தமிழ் ஆசிரியர் இரயில் என்றுதான் எழுத வேண்டும் (என் பெயரையும் அவர் அரங்கநாதன் என்று தான் வகுப்பு பதிவேட்டில் எழுதி முதல் வரிசையில் உட்கார வைத்தார், பெயர் 'அ'வில் ஆரம்பித்ததால்) என்று சொன்னதால் தலைப்பில் இரயில் என்று எழுதினாலும், பழக்கம் விடாமல் பதிவு முழுதும் ரயில் என்றே எழுதியிருக்கிறேன். தமிழாசிரியர் மன்னிக்க.
ஞாயிறு, மே 03, 2009
தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!
தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!
இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது நான் இணையத்தில் பதிந்து. முக்கிய காரணம் 2007ல் வேலை மாற்றம் (அதே அலுவலகம்; பணி வேறு). ஒரு வருடத்திற்குள் வேலை புரிந்து போய், அலுவலகத்தில் செலவழிக்கும் நேரம் குறைந்து போனாலும், திரும்பி வராததற்கு காரணம் சோம்பல். தவிர என் இணைய விடுப்பு யாருக்கும் பெரிய இழப்பாகத் தெரியவில்லை. இந்த இரண்டு வருடத்தில் அதிக பட்சம் ஐந்து அல்லது ஆறு விசாரணைகள் - ஏன் எழுதுவதில்லை என்று.
கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் ரொம்பவும் வற்புறுத்தினார்கள் - அவர்கள் சொன்ன காரணங்கள் நிறைய இருந்தாலும், ஒரு காரணம் நிரம்பவும் ஆழமாக இருந்தது. "முயற்சி செய்யாத போது நூறு சதவீத வாய்ப்பையும் இழக்கிறாய்" என்பது தான் அது. You miss 100% of shots you don’t take! அதனால் தான் இந்த மறு நுழைவு!
சொந்த வாழ்க்கையில் இந்த இரண்டு வருடங்களில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. அதே வீடு, வேலை (ஆண்டவன் புண்ணியத்தில் இன்னமும் வேலை இருக்கிறது!), தினசரி வாழ்க்கை. பிள்ளைகள் பெரிதாகி வருகிறார்கள் - அதில் அனேக மாற்றங்கள்; வாழ்க்கையில் பெற்றோர் பணி சம்பந்தமான கல்வி இன்னமும் தொடருகிறது - பிள்ளைகளின் தயவால்.
வெளியே மாற்றங்கள் அதிகம் - புது ஜனாதிபதி இங்கே! உலகமும் முழுவதும் இந்த "எகானமி" படுத்தும் பாடு தாங்கவில்லை. பொருளாதாரத்தில் (பொருள் + ஆதாரம்) - பொருளும் இல்லை; ஆதாரமும் இல்லை போல் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விண்கலத்தில் ஏறி 'வியாழன்' கோளுக்குச் (குரு - ஜாதக கணிப்பில் அவர் தான் செல்வத்தை குறிப்பவர்) சென்று, இப்போது திரும்பினால், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமி அப்படியே தான் இருப்பது போல் தெரியும். இந்த இரண்டு வருடங்களில் புதிதாக பெரிய மலையோ, கடலோ வரவில்லை - இயற்கையின் செயலில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் இல்லை; குரு தந்த செல்வத்தில் குறைவு இல்லை.
ஆனால் மனித இனத்தால் உருவாக்கப் பட்ட இந்த பொருளாதரம், பணம் என்ற விஷயங்களில் தலைகீழ் மாற்றம். மொத்த உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள். எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது!
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்!
இந்த மாற்றம் உலக நியதியாகும்.
இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது நான் இணையத்தில் பதிந்து. முக்கிய காரணம் 2007ல் வேலை மாற்றம் (அதே அலுவலகம்; பணி வேறு). ஒரு வருடத்திற்குள் வேலை புரிந்து போய், அலுவலகத்தில் செலவழிக்கும் நேரம் குறைந்து போனாலும், திரும்பி வராததற்கு காரணம் சோம்பல். தவிர என் இணைய விடுப்பு யாருக்கும் பெரிய இழப்பாகத் தெரியவில்லை. இந்த இரண்டு வருடத்தில் அதிக பட்சம் ஐந்து அல்லது ஆறு விசாரணைகள் - ஏன் எழுதுவதில்லை என்று.
கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் ரொம்பவும் வற்புறுத்தினார்கள் - அவர்கள் சொன்ன காரணங்கள் நிறைய இருந்தாலும், ஒரு காரணம் நிரம்பவும் ஆழமாக இருந்தது. "முயற்சி செய்யாத போது நூறு சதவீத வாய்ப்பையும் இழக்கிறாய்" என்பது தான் அது. You miss 100% of shots you don’t take! அதனால் தான் இந்த மறு நுழைவு!
சொந்த வாழ்க்கையில் இந்த இரண்டு வருடங்களில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. அதே வீடு, வேலை (ஆண்டவன் புண்ணியத்தில் இன்னமும் வேலை இருக்கிறது!), தினசரி வாழ்க்கை. பிள்ளைகள் பெரிதாகி வருகிறார்கள் - அதில் அனேக மாற்றங்கள்; வாழ்க்கையில் பெற்றோர் பணி சம்பந்தமான கல்வி இன்னமும் தொடருகிறது - பிள்ளைகளின் தயவால்.
வெளியே மாற்றங்கள் அதிகம் - புது ஜனாதிபதி இங்கே! உலகமும் முழுவதும் இந்த "எகானமி" படுத்தும் பாடு தாங்கவில்லை. பொருளாதாரத்தில் (பொருள் + ஆதாரம்) - பொருளும் இல்லை; ஆதாரமும் இல்லை போல் தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விண்கலத்தில் ஏறி 'வியாழன்' கோளுக்குச் (குரு - ஜாதக கணிப்பில் அவர் தான் செல்வத்தை குறிப்பவர்) சென்று, இப்போது திரும்பினால், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமி அப்படியே தான் இருப்பது போல் தெரியும். இந்த இரண்டு வருடங்களில் புதிதாக பெரிய மலையோ, கடலோ வரவில்லை - இயற்கையின் செயலில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் இல்லை; குரு தந்த செல்வத்தில் குறைவு இல்லை.
ஆனால் மனித இனத்தால் உருவாக்கப் பட்ட இந்த பொருளாதரம், பணம் என்ற விஷயங்களில் தலைகீழ் மாற்றம். மொத்த உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள். எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது!
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்!
இந்த மாற்றம் உலக நியதியாகும்.
ஞாயிறு, டிசம்பர் 31, 2006
ஒரு இரயில் பயணத்தில் - 3
“அப்படி இப்படின்னு 2006 முடிஞ்சு போச்சு. இந்த வருஷத்திலதான் எத்தனை மாற்றம். வருஷ ஆரம்பத்துல டெஸ்ட்ல ஹாட்ரிக் எடுத்த பதான் வருஷ முடிவுல டெஸ்ட் டீம்லேயே காணோம். சென்னையில, பங்களூரில வருஷ ஆரம்பத்தில ஆட்சி செஞ்சவங்க இப்ப இல்ல. நாம கூட வருஷ ஆரம்பத்துல அமெரிக்கா வருவோம்ன்னு நினைக்கல. இப்ப என்னடான்னா குளிர்ல நியூயார்க்ல எக்கச்சக்கத்துக்கு துணி போத்திக்கிட்டு வேலைக்கு ஓடறோம். ”
“நிறைய விஷயம் மாறவே இல்லையே. பதான் இருந்த அந்த டெஸ்ட்லயும் தோல்வி; இல்லாத வருஷக் கடைசி டெஸ்ட்லயும் தோல்வி. வருஷ ஆரம்பத்துல கர்நாடகாவோடதான் தண்ணிச் சண்டை; இப்போ கேரளாவோட கூட. எனக்கு வருஷ ஆரம்பத்துல இருந்த கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை"
“அப்படி என்ன சந்தேகம் உனக்கு?”
“குழந்தை பிறந்ததும் பெற்றவங்களை அம்மான்னு கூப்பிடறோம். இதே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையில், முட்டை இட்டவுடன் அம்மாவாகுமா இல்லை முட்டை பொரிஞ்சு குஞ்சு வந்தவுடன் அம்மாவாகுமா? அதே மாதிரி முதலில் இட்ட முட்டையிலிருந்து வருவது அண்ணா/அக்காவா இல்லை முதலில் பொரியும் முட்டையில் இருப்பது அண்ணா/அக்காவாகுமா?”
“மூளையை எதுக்குத்தான் செலவழிக்கறதுன்னு உனக்கு புரிய மாட்டேங்குது. இப்போ இது ரொம்ப முக்கியமா? ஒரு வருஷமா இந்தக் கேள்வியத்தான் யோசிச்சியா?”
“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு; அதை விட்டுட்டு ஏன் கேள்வி கேட்கிறேன்னு விதண்டாவாதம் பண்ணாதே”
“தெரியலைப்பா; ஆளை விடு. எனக்கு வர சந்தேகம், கேள்வியெல்லாம் இல்லாத ஒண்ணைப் பத்தி யோசிக்கிற விதம் இல்லை. இருக்கிற விஷயங்களிலே வர கேள்விக்கே உனக்கு பதில் தெரிய மாட்டேங்குது. இந்த அழகுல - முட்டை வந்தா அம்மாவா? முட்டை பொரிஞ்சா அம்மாவா? - இப்படி ஒரு கேள்வி”
“நீ அப்படி என்ன கேள்வி கேட்டே எனக்கு பதில் சொல்ல வராத மாதிரி?”
“பாட்டுல ராகம் எப்படி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன்ல? நீ என்ன சொன்ன?”
“உனக்கு பாடிக் காமிச்சு, என் MP3 ப்ளேயரும் கொடுத்து கேட்கச் சொன்னேனே? இன்னுமா விளங்கல?”
"இப்படித்தான் நீ சொல்லிட்டுப் போயிடுவே. உன்னை நம்பி, உன் MP3 ப்ளேயர்ல ஒரே ராகத்துல இருக்கற பாட்டா செலக்ட் பண்ணி கேட்டேன். எல்லாப் பாட்டும் வித்தியாசமாத்தான் இருக்கு - ரெண்டு பாட்டு கூட ஒரே மாதிரி தெரியலே"
"என்ன ராகத்துல கேட்டே?"
"ராகமாலிகா. உங்கிட்ட இருக்கிறதுல அதிகமான பாட்டு அந்த ராகத்துல தான் இருக்கு. ராகமாலிகா ராகம் ரொம்ப பாப்புலரா?”
"தெரியலேன்னா கேட்டுத் தெரிஞ்சுக்கணும். இப்படி லூசாட்டம் ஏதாவது சொல்லக்கூடாது. ராகமாலிகா ராகம் இல்ல. அது நம்ப ஊர்ல சொல்ற கதம்ப மாலை மாதிரி. கதம்பம்ன்னு பூ கிடையாது. நிறைய பூக்களை கலந்து மாலையா கட்டினா கதம்பம். அதே மாதிரி நிறைய ராகங்களை உபயோகிச்சு ஒரு பாட்டு பாடினா அது ராகமாலிகா"
"ஓகோ - காலைல குடிக்கிற பஞ்ச் மாதிரியா? பஞ்ச்ன்னு ஒரு பழம் கிடையாது - ஆனா பஞ்ச்க்குள்ள நிறைய பழரசம் – சரிதானே?"
"உனக்கு சாப்பாட்டு உதாரணம் தான் கொடுக்கணும். சரி பஞ்ச் இல்ல கதம்ப சாதம் மாதிரின்னு வச்சுக்கோயேன். பாட்டுல இருக்கிற வெவ்வேறு பகுதியை வெவ்வேறு ராகத்துல பாடினா அது ராகமாலிகா."
"ஆமா - 'ராகம்: ராகமாலிகா' அப்படின்னு போட்டா வேற என்னன்னு நினைச்சுக்கிறது. பேசாமா ‘கதம்பம்’ன்னு போடலாம்ல? இதெல்லாங்கூட என்னை மாதிரி ஒரு அறிவுஜீவி வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு. நீ என்னடான்னா, முதலில் வந்த முட்டை அண்ணாவா, இல்லை முதலில் பொரிஞ்ச முட்டை அண்ணாவான்னு கேள்வி கேக்கற!"
“யோசிச்சுப் பாரு மனுஷங்க மட்டும் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையா இருந்திருந்தா எத்தனை குழப்பம், கேசு வந்திருக்கும்?"
“ஏன் இந்தக் கேள்வியோடு நிறுத்திட்டே? மனுஷனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும்? அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே?”
“அதைப் பத்தியும் யோசிச்சிருக்கேனே. கொம்பை வளர்க்கலாமா இல்லையா என்பதில ஒவ்வொரு மதமும் ஒவ்வோண்ணு சொல்லும் - சில பேர் கொம்பு சாத்தானோட வடிவம்ன்னு சொல்லி வெட்டிப்பாங்க, சிலர் அது ‘கடவுள் தந்தது; வெட்டக்கூடாது’ அப்படின்னு சொல்லி வளர்ப்பாங்க. ஒரு மதம் கொம்பை மூடணும்ன்னு சொல்லும், இன்னொரு மதம் கடவுள் தந்ததை மூடக்கூடாதுன்னு சொல்லும். மதச் சண்டைகள் வருவதற்கு இன்னுமொரு காரணம் கிடைக்கும்.
சிலர் கொம்புக்கு நெயில் பாலிஷ் மாதிரி கொம்பு பாலிஷ் போட்டுப்பாங்க. சிலர் கொம்புக்கு தங்கம், வெள்ளில நகை பண்ணிப் போட்டுப்பாங்க. தொப்பி வகையில நிறைய மாற்றம் வரும்; விளையாட்டுகளில், முக்கியமா ரக்பில, ஹெல்மெட் வித்தியாசமா இருக்கும். ஸ்பெயின்ல மாட்டைக் கத்தியால குத்தி கொல்றத்துக்கு பதிலா, கொம்பால முட்டிக் கொல்லும் விளையாட்டு வரலாம். பேப்பர்ல 'கொம்பால் குத்திக் கொலை'ன்னு தலைப்பு வரும்.”
"எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உன்னைப் போய் கேள்வி கேட்டேனே! நல்ல வேளை ஸ்டேஷன் வந்தாச்சு. இறங்கலாம் வா."
“நிறைய விஷயம் மாறவே இல்லையே. பதான் இருந்த அந்த டெஸ்ட்லயும் தோல்வி; இல்லாத வருஷக் கடைசி டெஸ்ட்லயும் தோல்வி. வருஷ ஆரம்பத்துல கர்நாடகாவோடதான் தண்ணிச் சண்டை; இப்போ கேரளாவோட கூட. எனக்கு வருஷ ஆரம்பத்துல இருந்த கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை"
“அப்படி என்ன சந்தேகம் உனக்கு?”
“குழந்தை பிறந்ததும் பெற்றவங்களை அம்மான்னு கூப்பிடறோம். இதே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையில், முட்டை இட்டவுடன் அம்மாவாகுமா இல்லை முட்டை பொரிஞ்சு குஞ்சு வந்தவுடன் அம்மாவாகுமா? அதே மாதிரி முதலில் இட்ட முட்டையிலிருந்து வருவது அண்ணா/அக்காவா இல்லை முதலில் பொரியும் முட்டையில் இருப்பது அண்ணா/அக்காவாகுமா?”
“மூளையை எதுக்குத்தான் செலவழிக்கறதுன்னு உனக்கு புரிய மாட்டேங்குது. இப்போ இது ரொம்ப முக்கியமா? ஒரு வருஷமா இந்தக் கேள்வியத்தான் யோசிச்சியா?”
“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு; அதை விட்டுட்டு ஏன் கேள்வி கேட்கிறேன்னு விதண்டாவாதம் பண்ணாதே”
“தெரியலைப்பா; ஆளை விடு. எனக்கு வர சந்தேகம், கேள்வியெல்லாம் இல்லாத ஒண்ணைப் பத்தி யோசிக்கிற விதம் இல்லை. இருக்கிற விஷயங்களிலே வர கேள்விக்கே உனக்கு பதில் தெரிய மாட்டேங்குது. இந்த அழகுல - முட்டை வந்தா அம்மாவா? முட்டை பொரிஞ்சா அம்மாவா? - இப்படி ஒரு கேள்வி”
“நீ அப்படி என்ன கேள்வி கேட்டே எனக்கு பதில் சொல்ல வராத மாதிரி?”
“பாட்டுல ராகம் எப்படி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன்ல? நீ என்ன சொன்ன?”
“உனக்கு பாடிக் காமிச்சு, என் MP3 ப்ளேயரும் கொடுத்து கேட்கச் சொன்னேனே? இன்னுமா விளங்கல?”
"இப்படித்தான் நீ சொல்லிட்டுப் போயிடுவே. உன்னை நம்பி, உன் MP3 ப்ளேயர்ல ஒரே ராகத்துல இருக்கற பாட்டா செலக்ட் பண்ணி கேட்டேன். எல்லாப் பாட்டும் வித்தியாசமாத்தான் இருக்கு - ரெண்டு பாட்டு கூட ஒரே மாதிரி தெரியலே"
"என்ன ராகத்துல கேட்டே?"
"ராகமாலிகா. உங்கிட்ட இருக்கிறதுல அதிகமான பாட்டு அந்த ராகத்துல தான் இருக்கு. ராகமாலிகா ராகம் ரொம்ப பாப்புலரா?”
"தெரியலேன்னா கேட்டுத் தெரிஞ்சுக்கணும். இப்படி லூசாட்டம் ஏதாவது சொல்லக்கூடாது. ராகமாலிகா ராகம் இல்ல. அது நம்ப ஊர்ல சொல்ற கதம்ப மாலை மாதிரி. கதம்பம்ன்னு பூ கிடையாது. நிறைய பூக்களை கலந்து மாலையா கட்டினா கதம்பம். அதே மாதிரி நிறைய ராகங்களை உபயோகிச்சு ஒரு பாட்டு பாடினா அது ராகமாலிகா"
"ஓகோ - காலைல குடிக்கிற பஞ்ச் மாதிரியா? பஞ்ச்ன்னு ஒரு பழம் கிடையாது - ஆனா பஞ்ச்க்குள்ள நிறைய பழரசம் – சரிதானே?"
"உனக்கு சாப்பாட்டு உதாரணம் தான் கொடுக்கணும். சரி பஞ்ச் இல்ல கதம்ப சாதம் மாதிரின்னு வச்சுக்கோயேன். பாட்டுல இருக்கிற வெவ்வேறு பகுதியை வெவ்வேறு ராகத்துல பாடினா அது ராகமாலிகா."
"ஆமா - 'ராகம்: ராகமாலிகா' அப்படின்னு போட்டா வேற என்னன்னு நினைச்சுக்கிறது. பேசாமா ‘கதம்பம்’ன்னு போடலாம்ல? இதெல்லாங்கூட என்னை மாதிரி ஒரு அறிவுஜீவி வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு. நீ என்னடான்னா, முதலில் வந்த முட்டை அண்ணாவா, இல்லை முதலில் பொரிஞ்ச முட்டை அண்ணாவான்னு கேள்வி கேக்கற!"
“யோசிச்சுப் பாரு மனுஷங்க மட்டும் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையா இருந்திருந்தா எத்தனை குழப்பம், கேசு வந்திருக்கும்?"
“ஏன் இந்தக் கேள்வியோடு நிறுத்திட்டே? மனுஷனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும்? அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே?”
“அதைப் பத்தியும் யோசிச்சிருக்கேனே. கொம்பை வளர்க்கலாமா இல்லையா என்பதில ஒவ்வொரு மதமும் ஒவ்வோண்ணு சொல்லும் - சில பேர் கொம்பு சாத்தானோட வடிவம்ன்னு சொல்லி வெட்டிப்பாங்க, சிலர் அது ‘கடவுள் தந்தது; வெட்டக்கூடாது’ அப்படின்னு சொல்லி வளர்ப்பாங்க. ஒரு மதம் கொம்பை மூடணும்ன்னு சொல்லும், இன்னொரு மதம் கடவுள் தந்ததை மூடக்கூடாதுன்னு சொல்லும். மதச் சண்டைகள் வருவதற்கு இன்னுமொரு காரணம் கிடைக்கும்.
சிலர் கொம்புக்கு நெயில் பாலிஷ் மாதிரி கொம்பு பாலிஷ் போட்டுப்பாங்க. சிலர் கொம்புக்கு தங்கம், வெள்ளில நகை பண்ணிப் போட்டுப்பாங்க. தொப்பி வகையில நிறைய மாற்றம் வரும்; விளையாட்டுகளில், முக்கியமா ரக்பில, ஹெல்மெட் வித்தியாசமா இருக்கும். ஸ்பெயின்ல மாட்டைக் கத்தியால குத்தி கொல்றத்துக்கு பதிலா, கொம்பால முட்டிக் கொல்லும் விளையாட்டு வரலாம். பேப்பர்ல 'கொம்பால் குத்திக் கொலை'ன்னு தலைப்பு வரும்.”
"எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உன்னைப் போய் கேள்வி கேட்டேனே! நல்ல வேளை ஸ்டேஷன் வந்தாச்சு. இறங்கலாம் வா."
செவ்வாய், டிசம்பர் 26, 2006
ஒரு இரயில் பயணத்தில் - 2
"சும்மா சொல்லக்கூடாது, இந்த குளிர் விடுமுறையும், சின்ன வயசில நாம பள்ளியிலே படிக்கறச்சே அனுபவிச்ச கோடை விடுமுறை மாதிரி நல்லாவே இருக்கு"
"ஆமா. ரயில்ல உட்கார இடம் கிடைக்குது; அலுவலகத்தில ஆள் இல்ல. என்ன எக்கச்சக்கமா கோட், மப்ளர், ஸ்வெட்டர்ன்னு ஒரு குட்டி பீரோ துணி போட்டுக்கிட்டு போக வேண்டியிருக்கு"
"ரொம்ப அலுத்துக்காதே. வெள்ளிக்கிழமை மீட்டிங்ல என்ன சொன்னாங்க?"
"ஆங் - சொல்ல மறந்துட்டேனே. இந்த வார மீட்டிங்ல பாதுஷா சூப்பர்!"
"என்ன சொன்னாங்கன்னுதானே கேட்டேன்; என்ன மென்னாங்கன்னா கேட்டேன்? அது சரி உனக்கு சாப்பாட்டப் பத்தி யோசிக்காம இருக்க முடியாதே. டோனட்ன்னு சொல்லேன்; பாதுஷாவாம்!"
"இரண்டையும் ஒரே மாதிரி தான் செய்யறாங்க. என்ன பாதுஷா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்; டோனட் கொஞ்சம் லேசு. எதோ நட் போல்ட திங்கறா மாதிரி சொல்ல வேண்டாமேன்னு பாதுஷான்னு தமிழ்ல சொல்றேன். மீட்டிங்ல ஒண்ணும் பெரிசா சொல்லல. வழக்கம் போல 'ஹாப்பி ஹாலிடேஸ்; சீ யூ இன் த நியூ இயர்' அப்படின்னு சொன்னாங்க. ஏன் கேக்கற?"
"இல்ல செலவக் குறைக்க நம்ம மாதிரி கான்ட்ராக்டருக்கெல்லாம் கட்டாய விடுமுறை தரப் போறாங்கன்னு ஒரு வதந்தி இருந்தது"
"என்னடா அக்குறும்பு. இவங்களுக்குத்தானே பண்டிகை; நமக்கு இல்லையே? நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு?"
"அதான் தெரியுமே. ஆபீஸ்ல இவங்க ஆளே இருக்கறதில்லே; நம்மை மாதிரி கான்ட்ராக்டர் வேலை செய்யாம சம்பளம் வாங்கறதப் பார்க்க பொறுக்கலே!"
"அவ்வளவு சந்தேகமா இருந்தா இவங்கள்ல நாலு பேர் வேலைக்கு வரட்டுமே. நானா வேணாங்கறேன்?"
"சரி அதை விடு. இந்த வருடம் இந்த மாதிரி ஏதும் பண்ணலை. அடுத்த வருடம் நாம் இங்க இருக்கமோ இல்லையோ!"
"இன்னுமொரு முக்கியமான விஷயம். அடுத்த மீட்டிங்ல இருந்து 'சுகர் ப்ரீ' சாமானும் இருக்குமாம்! நம்ம டிப்பார்ட்மென்ட்ல புதுசா வந்திருக்கற மக்கள்ல யாருக்கோ சுகர் இருக்காம். கேட்டவுடனே இனிமே பத்திய மீட்டிங்தானோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். அதனாலே நைசா விசாரிச்சுட்டேன்; நல்ல வேளை சக்கரை சாமானும் உண்டு."
"என்னதான் இருந்தாலும் இந்த ஊரிலே எல்லாரையும் அனுசரிச்சுத்தான் போறாங்க. மற்றவங்களோட சாப்பாட்டுப் பிரச்சனைகளையும் யோசிக்கிறாங்க. அப்படி இருக்கறப்பவே, காப்பியை மேல கொட்டிக்கிட்டு கம்பெனி மேல கேஸ் போடறாங்க"
"கேஸ்னு சொன்னதும் நினைவுக்கு வருது. இங்கிலாந்துல ஒரு வேர்ஹவுஸ்ல வேல செஞ்ச மனுஷன் தலையில அடிபட்டிடுச்சாம். அதுக்கப்புறம் அந்தாளு பலான படம் பார்க்கறது, பொண்ணுங்கள டாவடிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டானாம். இந்த மாதிரி பண்ணத்துக்கு காரணமே தலைல அடிபட்டதுதான், அதனால கம்பெனிதான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு கேசும் போட்டு ஜெயிச்சுட்டானாம்"
"அடப்பாவி. இவன் டாவடிக்கறத்துக்கு இவன் காரணம் இல்லையா? இது மட்டும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிஞ்சது, போச்சு. பண்ற அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் நான் கீழ விழுந்து அடி பட்டுக்கிட்டதுதான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்குவாங்க"
"ஏன் அரசியல்வாதிகளை மட்டும் சொல்ற. வீட்டில சின்னப்பசங்கள்ல இருந்து கிழங்கட்டை வரை எல்லோரும் ‘தலைல இடிச்சுக்கிட்டேன்; அதனால நான் காரணம் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு எல்லா விதமான தப்பும் பண்ணுவாங்க"
"சரி அதை விடு. சுக்வீந்தர ஏன் பிராஜக்ட்லேர்ந்து எடுத்துட்டாங்க? இத்தனைக்கும் அவனுக்கு இங்க்லீஷ் நல்லா பேச/எழுத வரும்l தவிர அவனுக்கு ரிகொயர்மென்ட்டெல்லாம் நல்லாப் புரியுமே?"
"ஆனா கோடெழுத வரலையே? கோடும் எழுதாம, நல்லாவும் பேசினா இவனுக்கு கோடெழுத தெரியலங்கறது மத்தவங்களுக்கு நல்லா தெரிஞ்சுடுதே! நம்ம இர்பான் பதான் மாதிரி தான். போலிங் போட டீம்ல எடுத்தா 'நான் நல்லா பேட் பண்றேன்' அப்படின்னு சொன்னா வச்சுக்குவாங்களா?"
"சரி. ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலாம் வா."
"ஆமா. ரயில்ல உட்கார இடம் கிடைக்குது; அலுவலகத்தில ஆள் இல்ல. என்ன எக்கச்சக்கமா கோட், மப்ளர், ஸ்வெட்டர்ன்னு ஒரு குட்டி பீரோ துணி போட்டுக்கிட்டு போக வேண்டியிருக்கு"
"ரொம்ப அலுத்துக்காதே. வெள்ளிக்கிழமை மீட்டிங்ல என்ன சொன்னாங்க?"
"ஆங் - சொல்ல மறந்துட்டேனே. இந்த வார மீட்டிங்ல பாதுஷா சூப்பர்!"
"என்ன சொன்னாங்கன்னுதானே கேட்டேன்; என்ன மென்னாங்கன்னா கேட்டேன்? அது சரி உனக்கு சாப்பாட்டப் பத்தி யோசிக்காம இருக்க முடியாதே. டோனட்ன்னு சொல்லேன்; பாதுஷாவாம்!"
"இரண்டையும் ஒரே மாதிரி தான் செய்யறாங்க. என்ன பாதுஷா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்; டோனட் கொஞ்சம் லேசு. எதோ நட் போல்ட திங்கறா மாதிரி சொல்ல வேண்டாமேன்னு பாதுஷான்னு தமிழ்ல சொல்றேன். மீட்டிங்ல ஒண்ணும் பெரிசா சொல்லல. வழக்கம் போல 'ஹாப்பி ஹாலிடேஸ்; சீ யூ இன் த நியூ இயர்' அப்படின்னு சொன்னாங்க. ஏன் கேக்கற?"
"இல்ல செலவக் குறைக்க நம்ம மாதிரி கான்ட்ராக்டருக்கெல்லாம் கட்டாய விடுமுறை தரப் போறாங்கன்னு ஒரு வதந்தி இருந்தது"
"என்னடா அக்குறும்பு. இவங்களுக்குத்தானே பண்டிகை; நமக்கு இல்லையே? நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு?"
"அதான் தெரியுமே. ஆபீஸ்ல இவங்க ஆளே இருக்கறதில்லே; நம்மை மாதிரி கான்ட்ராக்டர் வேலை செய்யாம சம்பளம் வாங்கறதப் பார்க்க பொறுக்கலே!"
"அவ்வளவு சந்தேகமா இருந்தா இவங்கள்ல நாலு பேர் வேலைக்கு வரட்டுமே. நானா வேணாங்கறேன்?"
"சரி அதை விடு. இந்த வருடம் இந்த மாதிரி ஏதும் பண்ணலை. அடுத்த வருடம் நாம் இங்க இருக்கமோ இல்லையோ!"
"இன்னுமொரு முக்கியமான விஷயம். அடுத்த மீட்டிங்ல இருந்து 'சுகர் ப்ரீ' சாமானும் இருக்குமாம்! நம்ம டிப்பார்ட்மென்ட்ல புதுசா வந்திருக்கற மக்கள்ல யாருக்கோ சுகர் இருக்காம். கேட்டவுடனே இனிமே பத்திய மீட்டிங்தானோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். அதனாலே நைசா விசாரிச்சுட்டேன்; நல்ல வேளை சக்கரை சாமானும் உண்டு."
"என்னதான் இருந்தாலும் இந்த ஊரிலே எல்லாரையும் அனுசரிச்சுத்தான் போறாங்க. மற்றவங்களோட சாப்பாட்டுப் பிரச்சனைகளையும் யோசிக்கிறாங்க. அப்படி இருக்கறப்பவே, காப்பியை மேல கொட்டிக்கிட்டு கம்பெனி மேல கேஸ் போடறாங்க"
"கேஸ்னு சொன்னதும் நினைவுக்கு வருது. இங்கிலாந்துல ஒரு வேர்ஹவுஸ்ல வேல செஞ்ச மனுஷன் தலையில அடிபட்டிடுச்சாம். அதுக்கப்புறம் அந்தாளு பலான படம் பார்க்கறது, பொண்ணுங்கள டாவடிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டானாம். இந்த மாதிரி பண்ணத்துக்கு காரணமே தலைல அடிபட்டதுதான், அதனால கம்பெனிதான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு கேசும் போட்டு ஜெயிச்சுட்டானாம்"
"அடப்பாவி. இவன் டாவடிக்கறத்துக்கு இவன் காரணம் இல்லையா? இது மட்டும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிஞ்சது, போச்சு. பண்ற அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் நான் கீழ விழுந்து அடி பட்டுக்கிட்டதுதான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்குவாங்க"
"ஏன் அரசியல்வாதிகளை மட்டும் சொல்ற. வீட்டில சின்னப்பசங்கள்ல இருந்து கிழங்கட்டை வரை எல்லோரும் ‘தலைல இடிச்சுக்கிட்டேன்; அதனால நான் காரணம் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு எல்லா விதமான தப்பும் பண்ணுவாங்க"
"சரி அதை விடு. சுக்வீந்தர ஏன் பிராஜக்ட்லேர்ந்து எடுத்துட்டாங்க? இத்தனைக்கும் அவனுக்கு இங்க்லீஷ் நல்லா பேச/எழுத வரும்l தவிர அவனுக்கு ரிகொயர்மென்ட்டெல்லாம் நல்லாப் புரியுமே?"
"ஆனா கோடெழுத வரலையே? கோடும் எழுதாம, நல்லாவும் பேசினா இவனுக்கு கோடெழுத தெரியலங்கறது மத்தவங்களுக்கு நல்லா தெரிஞ்சுடுதே! நம்ம இர்பான் பதான் மாதிரி தான். போலிங் போட டீம்ல எடுத்தா 'நான் நல்லா பேட் பண்றேன்' அப்படின்னு சொன்னா வச்சுக்குவாங்களா?"
"சரி. ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலாம் வா."
ஞாயிறு, டிசம்பர் 24, 2006
படம் எங்கே போச்சு?
ஒவ்வொரு புது பெற்றோருக்கும் தன் குழந்தையை எப்படி ‘ஐடியலாக’ (IDEAL) வளர்க்க வேண்டும் என்று நிச்சயம் எண்ணம் இருக்கும். குழந்தை வளர்ந்து பெரிதாகும் போது அவர்களுடைய ‘வளர்க்கும் முறை’ அந்த ‘வளர்க்கும் தர’த்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். இரண்டு (அல்லது மூன்று/நான்கு) குழந்தைகளுக்குப் பின் இந்த ‘தரம்’ மொத்தமும் மாறியிருக்கும். எனக்கும் இந்த மாதிரி நிறைய விஷயங்களில் ஒரு ‘தரம்’ வைத்திருந்து அவைகள் மாறி வருவதைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இது அவ்வளவு சுவையாக இல்லை. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் சொன்ன பொன் மொழி நினைவுக்கு வந்து படுத்துகிறது: 'வாழ்க்கை என்பது அனேகம் பேருக்கு இலட்சியத்திற்கும் நடைமுறைக்கும் நடக்கும் சமரசம்.'
Real life is, to most men, a perpetual compromise between the ideal and the possible – Bertrand Russell.
‘சிறு வயதில் குழந்தைகள் தெரிந்து கொள்வது அவர்கள் கேட்கும் கேள்வியில்தான் உள்ளது; அந்த ஆவலை (CURIOSITY) தடை செய்யக் கூடாது, அவர்களுக்கு உண்மையான பதிலை சொல்வதன் மூலம் அவர்களுடைய அறிவை வளர்க்க முடியும்’, என்றெல்லாம் எனக்கு ஒரு தீர்மானமான எண்ணம். ஆதலால் என் மகள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உண்மையான விளக்கம் தர வேண்டும், அரை குறை பதில் சொல்லி சமாளிக்கவோ, அல்லது கோபிக்கவோ கூடாது என்றும் அவள் பேச ஆராம்பிப்பதற்கு முன் உறுதியாய் இருந்தேன். இதற்கு சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது நான் அதிகம் கேள்வி கேட்கிறேன் என்று சில ஆசிரியர்கள் என்னை கேள்வியே கேட்கக் கூடாது என்று படுத்தியதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
என் மகள் சிறு குழந்தையாய் பேச ஆரம்பித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தபோது முதலில் அதிகம் கேட்ட கேள்வி ‘எங்கே?’ என்பது தான். ‘ஏன்’ ‘எப்படி’ என்பதெல்லாம் பின்னால் தான் வந்தது. அவள் கேட்ட நிறைய ‘எங்கே?’ கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முடியவில்லை என்பதில் இரண்டு வகை – ஒன்று எனக்குத் தெரியும் என்று நான் நினைத்துக் கொண்டு அவளுக்கு புரிகிற மாதிரி விடை சொல்ல ஆரம்பித்து, அவளையும் குழப்பி, நானும் குழம்பியது; மற்றொன்று எனக்கு விடையே தெரியாத கேள்விகள்!
உதாரணமாக 'சூரியன் எங்கே போச்சு?' என்ற கேள்விக்கு, விபரமாக பந்தை வைத்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றெல்லாம் சொல்ல ஆரம்பிக்க அவளைக் குழப்பி வெறுப்பேற்றியதுதான் மிச்சம். இது முதல் வகை.
இரண்டாம் வகையில் - அதாவது எனக்கு உண்மையில் விடையே தெரியாத வகையில், சில கேள்விகளுக்கு கொஞ்சம் பொய் கலந்து சொல்லி சமாளிக்க ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கையில் சாலையில் போன காரைப் பார்த்து ‘கார் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு உண்மையில் எனக்கு பதில் தெரியாது; இருந்தாலும் ‘வீட்டுக்கு போச்சு’ என்று சொல்வேன் (பொய்தான் – இருந்தாலும் பாதகமில்லை என்ற நினைப்பு). இது வானத்தில் பறக்கும் பறவைக்கும் (‘அது தன்னோட கூட்டுக்கு போச்சு’) பொருந்தும். அந்த சமயத்தில் உண்மையாக இல்லாவிட்டாலும் இந்த மாதிரி விடைகள் பொருத்தமானவையாகவே இருக்கும்.
இதிலேயே கடினமான கேள்விகளை என் மகள் கேட்க ஆரம்பித்த போதுதான் பிரச்சனையே வந்தது எனக்கு. வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தவுடன் ‘படம் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. என் மண்டைக்குள் அந்தக் கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது. படம் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளி பரப்பப் படும் போது அலைகள் ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்க எனக்கு தொலைக்காட்சி பெட்டி தேவை. நான் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பதன் மூலம் படம் இல்லாமல் போய் விடுகிறதா என்ன? இது பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போல இருக்கிறது. ‘எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. என் மகளிடம் 'தெரியாது' என்று சொன்னால், நான் பதில் தெரிந்து கொண்டே அவளுக்கு சொல்லவில்லை என்று கோபம் - அழுகை. வழக்கம் போல் என் மனைவி ‘காணாமல் போச்சு’ என்று பதில் சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள். இருந்தாலும் எனக்கு இந்தக் கேள்வி ஒரு புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது. உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
இப்போதெல்லாம் என் மகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை என் மனைவியிடமே விட்டு விட்டேன். இதே போல எனக்குள்ளேயே நிறையக் கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடக் காலண்டரை மாட்டி, '2006 எங்கே போச்சு?' என்று யோசித்தால் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. வயது ஆக ஆக எனக்குத் தெரியாதது அதிகமாவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. 'எங்கே?' கேள்விகளுக்கே இப்படி என்றால், 'ஏன்?' என்ற கேள்விக்கு நிச்சயமாக நான் அம்பேல்!!!
Real life is, to most men, a perpetual compromise between the ideal and the possible – Bertrand Russell.
‘சிறு வயதில் குழந்தைகள் தெரிந்து கொள்வது அவர்கள் கேட்கும் கேள்வியில்தான் உள்ளது; அந்த ஆவலை (CURIOSITY) தடை செய்யக் கூடாது, அவர்களுக்கு உண்மையான பதிலை சொல்வதன் மூலம் அவர்களுடைய அறிவை வளர்க்க முடியும்’, என்றெல்லாம் எனக்கு ஒரு தீர்மானமான எண்ணம். ஆதலால் என் மகள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உண்மையான விளக்கம் தர வேண்டும், அரை குறை பதில் சொல்லி சமாளிக்கவோ, அல்லது கோபிக்கவோ கூடாது என்றும் அவள் பேச ஆராம்பிப்பதற்கு முன் உறுதியாய் இருந்தேன். இதற்கு சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது நான் அதிகம் கேள்வி கேட்கிறேன் என்று சில ஆசிரியர்கள் என்னை கேள்வியே கேட்கக் கூடாது என்று படுத்தியதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
என் மகள் சிறு குழந்தையாய் பேச ஆரம்பித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தபோது முதலில் அதிகம் கேட்ட கேள்வி ‘எங்கே?’ என்பது தான். ‘ஏன்’ ‘எப்படி’ என்பதெல்லாம் பின்னால் தான் வந்தது. அவள் கேட்ட நிறைய ‘எங்கே?’ கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. முடியவில்லை என்பதில் இரண்டு வகை – ஒன்று எனக்குத் தெரியும் என்று நான் நினைத்துக் கொண்டு அவளுக்கு புரிகிற மாதிரி விடை சொல்ல ஆரம்பித்து, அவளையும் குழப்பி, நானும் குழம்பியது; மற்றொன்று எனக்கு விடையே தெரியாத கேள்விகள்!
உதாரணமாக 'சூரியன் எங்கே போச்சு?' என்ற கேள்விக்கு, விபரமாக பந்தை வைத்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றெல்லாம் சொல்ல ஆரம்பிக்க அவளைக் குழப்பி வெறுப்பேற்றியதுதான் மிச்சம். இது முதல் வகை.
இரண்டாம் வகையில் - அதாவது எனக்கு உண்மையில் விடையே தெரியாத வகையில், சில கேள்விகளுக்கு கொஞ்சம் பொய் கலந்து சொல்லி சமாளிக்க ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கையில் சாலையில் போன காரைப் பார்த்து ‘கார் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு உண்மையில் எனக்கு பதில் தெரியாது; இருந்தாலும் ‘வீட்டுக்கு போச்சு’ என்று சொல்வேன் (பொய்தான் – இருந்தாலும் பாதகமில்லை என்ற நினைப்பு). இது வானத்தில் பறக்கும் பறவைக்கும் (‘அது தன்னோட கூட்டுக்கு போச்சு’) பொருந்தும். அந்த சமயத்தில் உண்மையாக இல்லாவிட்டாலும் இந்த மாதிரி விடைகள் பொருத்தமானவையாகவே இருக்கும்.
இதிலேயே கடினமான கேள்விகளை என் மகள் கேட்க ஆரம்பித்த போதுதான் பிரச்சனையே வந்தது எனக்கு. வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தவுடன் ‘படம் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. என் மண்டைக்குள் அந்தக் கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது. படம் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளி பரப்பப் படும் போது அலைகள் ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்க எனக்கு தொலைக்காட்சி பெட்டி தேவை. நான் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பதன் மூலம் படம் இல்லாமல் போய் விடுகிறதா என்ன? இது பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போல இருக்கிறது. ‘எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. என் மகளிடம் 'தெரியாது' என்று சொன்னால், நான் பதில் தெரிந்து கொண்டே அவளுக்கு சொல்லவில்லை என்று கோபம் - அழுகை. வழக்கம் போல் என் மனைவி ‘காணாமல் போச்சு’ என்று பதில் சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள். இருந்தாலும் எனக்கு இந்தக் கேள்வி ஒரு புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது. உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
இப்போதெல்லாம் என் மகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை என் மனைவியிடமே விட்டு விட்டேன். இதே போல எனக்குள்ளேயே நிறையக் கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடக் காலண்டரை மாட்டி, '2006 எங்கே போச்சு?' என்று யோசித்தால் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. வயது ஆக ஆக எனக்குத் தெரியாதது அதிகமாவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. 'எங்கே?' கேள்விகளுக்கே இப்படி என்றால், 'ஏன்?' என்ற கேள்விக்கு நிச்சயமாக நான் அம்பேல்!!!
புதன், டிசம்பர் 20, 2006
ஓணான் வாயில் புகையிலை - ஏன்?
மன்னார்குடியில் பள்ளியின் பெரிய விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அருகில் இல்லாமல் கொஞ்சம் தொலைவில் இருக்கும். எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; கிரிக்கெட் விளையாட மைதானத்துக்குப் போக வேண்டும் என்றால் நிறையப் பேர் கும்பலாக நடந்துதான் போவோம். சந்தடியான தெருவெல்லாம் தாண்டி, அதிகம் ஆள் நடமாட்டமில்லாத பாதையில் போகும் போது, சிலருக்கு ஒரு முக்கியமான விளையாட்டு ஓணானைப் பிடித்து, அதன் வாயில் கொஞ்சம் புகையிலையோ அல்லது கீழே கிடக்கும் பீடி/சிகரெட்டின் தூளையோ (அதுவும் புகையிலைதானே) போட்டு, ஓணான் தள்ளாடுவதைப் பார்ப்பது. இதை செய்யும் தைரியம் சிலருக்குத்தான் உண்டு; எனக்கு அதைப் பார்க்கக் கூட அவ்வளவாக வராது. கொஞ்சம் ஒதுங்கியே சென்று விடுவேன். அப்போதெல்லாம் தோன்றிய கேள்வி 'இதை ஏன் செய்கிறார்கள்?' என்பதுதான்.
நண்பர்களிடம் கேட்டால் வந்த பதிலெல்லாம் 'என் அண்ணன் செய்தேன் என்று சொன்னான்; நானும் அதேபோல விளையாடுகிறேன்' என்ற ரீதியிலேயே இருந்தது. அண்ணன்களைக் கேட்டால், அவர்களும் 'முந்தைய தலைமுறையில் செய்ததாக சொன்னார்கள்; அதான் நானும் செய்தேன்' என்றுதான் சொல்லுவார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக பதில் தெரியாத இந்தக் கேள்விக்கு இந்த வாரம் எதிர்பாராத விதமாக ஒரு பதில் கிடைத்தது. அதைத்தான் இங்கு பதிகிறேன். இந்த பதில் எத்தனை தூரம் சரி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தக் கதை ஆப்ரிக்கப் பழங்குடியினரிடமிருந்து வந்தது. ஸூலூ இன மக்களிடையே இந்தக் கதை பழங்காலந்தொட்டு சொல்லப்பட்டு வருகிறது என்று 1913-ல் வெளியான ‘The Belief in Immortality and the Worship of the Dead, Volume I’ என்ற புத்தகத்தில் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (Sir James George Frazer) சொல்லியிருக்கிறார்!
வெகுகாலத்துக்கு முன்னால் கடவுள் (உன்குலுன்குலு - UNKULUNKULU) பூமிக்கு ஒரு ஓணனை அனுப்பி மக்களிடையே அவர்கள் இறக்காமல் இருக்குமாறு சொல்லச் சொன்னாராம். ஓணானும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்ததாம். வழியிலே அங்கும் இங்கும் அலைந்து விட்டு பழங்களைச் சாப்பிட்டு படுத்துக் கொண்டிருந்ததாம். இதற்கிடையே கடவுளும் யோசித்து, ஒரு பல்லியையும் அனுப்ப, அது மக்களிடத்திலே வந்து ‘நீங்கள் இறக்குமாறு கடவுள் சொன்னார்’ என்று சொல்லியதாம். இகைக் கேட்ட மக்களும் இறக்க ஆரம்பித்தனராம். கொஞ்ச நாள் கழித்து ஓணானும் மெதுவாக வந்து ‘கடவுள் உங்களையெல்லாம் இறக்காமல் இருக்கச் சொன்னார்’ என்று சொன்னதாம். ஆனால் மக்களோ ‘உனக்கு முன்பாகவே பல்லி வந்து எங்களை இறக்கச் சொல்லிவிட்டது’ என்று சொல்லி – தொடர்ந்து இறக்க ஆரம்பித்தார்களாம். அவர்களுடைய சந்ததியினர் எல்லாம் இதனாலேயே தாமதமாக வந்த ஓணானைப் பழிவாங்க, அதன் வாயில் புகையிலையைப் போட்டு அதைத் துன்புறுத்துகிறார்களாம்.
நம் ஊரிலே மட்டும் தான் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று நினைத்தால், காலங்காலமாக ஆப்ரிக்காவிலும் இதே போல செய்திருக்கிறார்கள், மற்றும் ஒரு கதையும் இருக்கிறது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு இது போல ஏதாவது கதை தெரியுமா?
நண்பர்களிடம் கேட்டால் வந்த பதிலெல்லாம் 'என் அண்ணன் செய்தேன் என்று சொன்னான்; நானும் அதேபோல விளையாடுகிறேன்' என்ற ரீதியிலேயே இருந்தது. அண்ணன்களைக் கேட்டால், அவர்களும் 'முந்தைய தலைமுறையில் செய்ததாக சொன்னார்கள்; அதான் நானும் செய்தேன்' என்றுதான் சொல்லுவார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக பதில் தெரியாத இந்தக் கேள்விக்கு இந்த வாரம் எதிர்பாராத விதமாக ஒரு பதில் கிடைத்தது. அதைத்தான் இங்கு பதிகிறேன். இந்த பதில் எத்தனை தூரம் சரி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தக் கதை ஆப்ரிக்கப் பழங்குடியினரிடமிருந்து வந்தது. ஸூலூ இன மக்களிடையே இந்தக் கதை பழங்காலந்தொட்டு சொல்லப்பட்டு வருகிறது என்று 1913-ல் வெளியான ‘The Belief in Immortality and the Worship of the Dead, Volume I’ என்ற புத்தகத்தில் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (Sir James George Frazer) சொல்லியிருக்கிறார்!
வெகுகாலத்துக்கு முன்னால் கடவுள் (உன்குலுன்குலு - UNKULUNKULU) பூமிக்கு ஒரு ஓணனை அனுப்பி மக்களிடையே அவர்கள் இறக்காமல் இருக்குமாறு சொல்லச் சொன்னாராம். ஓணானும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்ததாம். வழியிலே அங்கும் இங்கும் அலைந்து விட்டு பழங்களைச் சாப்பிட்டு படுத்துக் கொண்டிருந்ததாம். இதற்கிடையே கடவுளும் யோசித்து, ஒரு பல்லியையும் அனுப்ப, அது மக்களிடத்திலே வந்து ‘நீங்கள் இறக்குமாறு கடவுள் சொன்னார்’ என்று சொல்லியதாம். இகைக் கேட்ட மக்களும் இறக்க ஆரம்பித்தனராம். கொஞ்ச நாள் கழித்து ஓணானும் மெதுவாக வந்து ‘கடவுள் உங்களையெல்லாம் இறக்காமல் இருக்கச் சொன்னார்’ என்று சொன்னதாம். ஆனால் மக்களோ ‘உனக்கு முன்பாகவே பல்லி வந்து எங்களை இறக்கச் சொல்லிவிட்டது’ என்று சொல்லி – தொடர்ந்து இறக்க ஆரம்பித்தார்களாம். அவர்களுடைய சந்ததியினர் எல்லாம் இதனாலேயே தாமதமாக வந்த ஓணானைப் பழிவாங்க, அதன் வாயில் புகையிலையைப் போட்டு அதைத் துன்புறுத்துகிறார்களாம்.
நம் ஊரிலே மட்டும் தான் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று நினைத்தால், காலங்காலமாக ஆப்ரிக்காவிலும் இதே போல செய்திருக்கிறார்கள், மற்றும் ஒரு கதையும் இருக்கிறது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்கு இது போல ஏதாவது கதை தெரியுமா?
வெள்ளி, டிசம்பர் 08, 2006
ஒரு இரயில் பயணத்தில்...
ரயிலில் நியூயார்க் வரும் போது கணிப்பொறித் துறையில் வேலை செய்யும் இரு தமிழ் பேசும் வாலிபர்கள் என் காதில் விழுகிற மாதிரி பேசிக் கொண்டு வந்த உரையாடல்.
“கொஞ்சம் முன்னாலேயே கிளம்பலாம்னு இதுக்குதான் சொன்னேன். இப்படி மூச்சு வாங்க ஓடி வரவேண்டாமில்லையா?”
“கொஞ்சம் வேகமா நடந்தாக் கூட ஒனக்கு மூச்சு வாங்கும்; ஒழுங்கா சாப்பிட்டாத்தானே?”
“சாப்பாட்டைப் பத்தி பேசி வெறுப்பேத்தாதே. அந்தக் குழந்தையைப் பாரு; நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு”.
“அழகா இருக்குல்ல – அது சிரிக்கறச்சே. நல்ல ஆப்பிள் மாதிரி கன்னம்”
“மறுபடியும் சாப்பாடா? ஏன் கன்னத்தில 440-ஸ்டிக்கர் ஒட்டிருக்கா?”
“ஆங் – ஆப்பிள்ன்ன ஒடனே நினைவுக்கு வருது, சப்ஜி மண்டில இனிமே 440 வாங்க கூடாது – ஒரு பவுண்டு 99 சென்ட்; இருந்தாலும் ஆப்பிள் ஒரே மாவா இருக்கு. பவுண்டுக்கு 1.19 கொடுத்தாலும், 460 தான் வாங்கணும்”.
“எனக்கு தெரிஞ்சு கடையில இருக்கிற காஷியரத் தவிர இந்த லேபிள் ஸ்டிக்கர் எல்லாம் பார்க்கிற ஒரே ஆள் நீதாம்ப்பா. எப்படித்தான் சாப்பாட்டு விஷயத்தில மட்டும் இதெல்லாம் கரெக்டா நினைப்புல வச்சுக்கறயோ?”
“பின்ன – உன்னோட ஒரே ரூம்ல இருந்தா யாருக்குத்தான் சாப்பாடு விஷயம் மறக்கும். காலைல பிரேக் ஃபாஸ்ட்ன்னு சொல்லிட்டு, அரை டம்ளர் ஜூஸ் – அதுவும் எல்லாப் பழத்தையும் ஒண்ணா போட்டு கலக்கி கொடுக்கற பன்ச். அப்புறம் சீரியல்ன்னு சொல்லிட்டு சோளச் சீவல். கொஞ்சம் ஏமாந்தா வெறும் டப்பாவைக் காட்டியே அனுப்பிடுவே”
“கார்ன்பிளேக்குன்னு சொல்லேன் - சோளச்சீவல்ன்னு சொன்னா குழப்பமா இருக்குல்ல?”
“கார்ன்பிளேக்குன்னு சொன்னா ரொம்ப பெரிசா ஏதோ சாப்பிடறா மாதிரி தோணும். சோளச்சீவல்ன்னு சொன்னாத்தான் அது சாப்பிடப் பத்தாதுன்னு புரியும்”
“இங்க இருக்கப்போறது ஐந்து மாசமோ அல்லது ஆறு மாசமோ. கொஞ்சம் காசு சேர்த்தால் ஊருக்கு போய் செலவழிக்கலாம் இல்லையா?”
“அதுக்குன்னு இப்படியா? ஒரு டோஸ்ட், பேகல் இல்ல மப்பின் இப்படின்னு எதையாவது சாப்பிடலாம்ல”
“நீயும் நானும் சைவம். மத்தியானத்துக்கு காண்டீன்ல சான்ட்விச்னு இதே பிரட்டும், தக்காளி வெங்காயமும்தான். அதை காலையிலயும் சாப்பிடணுமா? சரி விடு. எப்பப் பார்த்தாலும் நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் தான் யோசிக்கற. ஆமா நேத்து மத்தியானம் உன் சீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையே – ஓபியா?”
“அதெல்லாம் இல்லை, நம்ப சுக்வீந்தருக்கு கோடெழுத கொஞ்சம் ஹெல்ப் பண்ண போயிருந்தேன்”
“நீ அவனுக்கு கோடெழுத போனியா? நீயே காப்பி-பேஸ்ட் கேசு – சொந்தமா என்னிக்கு கோடெழுதியிருக்கே?”
“என்னோட பாலிசியே ‘DON’T REINVENT THE WHEEL’ தான். எவ்வளவு அழகா நான் ரீயூஸ் பண்றேன்?”
“ஆமா – எல்லாத்தையும் வகைக்கு தகுந்தா மாதிரி வோர்டுல காப்பி-பேஸ்ட் பண்ணி வச்சுருக்கே. அதைத் தவிர்த்து கூகுள்ல தேடி கோடு சேக்கற! கேட்டா ‘பெஸ்ட் பிராக்டீஸ் லைப்ரரின்னு’ பந்தவா சொல்றே. அதுவும் ஒரு பிளாஷ் டிரைவ்ல வேற. டிப் டாப்பா பேன்ட், சட்டை, கோட்டு. அவனவன் ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு வந்து நிக்கறான். எல்லாம் நேரம்.”
“ஆள் பாதி ஆடை பாதின்னு நீ கேட்டதில்லையா? ஆமா நீ ஏன் ரெகுலரா ஷேவ் கூட பண்ணறதில்லை? காசு செலவாயிடுமின்னா? இல்ல காதல் தோல்வியா?”
“கிண்டலா? நான் ஷேவ் பண்ணாததற்கு ரெண்டு காரணம். ஒண்ணு குளிர் – காலங்கார்த்தால எவன் சில்லுன்னு தண்ணிய மூஞ்சில அப்பிக்கறது? இரண்டாவது – நீ சொன்ன மாதிரி ‘ஆள் பாதி ஆடை பாதி’ - வேலைக்கு ஏத்த ஒப்பனை”
“வேலைக்கு ஏத்த ஒப்பனையா?”
“ஆமா – நான் பண்றது டெஸ்டிங். ஒன்னை மாதிரி காப்பி-பேஸ்ட் கோடன்க கிட்ட போய் ‘நீ பண்ணது தப்பு’ன்னு சொல்லற வேலை! அப்ப போய் டிப்-டாப்ப ஷேவ், டிரஸ் பண்ணிக்கிட்டு ‘ஹாய்!, உன் கோடுல மிஸ்டேக்’ன்னு சொன்னா அவனவனுக்கு பத்திக்கும். அதுக்காகத்தான் நானே ரெண்டு நாள் தாடியோட போயி ‘தப்பு நடந்துடுச்சுன்னு’ சோகமா சொன்னா, என்னை திட்ட மாட்டானுங்க”
“ஏதோ இஷ்டத்துக்கு பீலா வுடரே – காலையில பாத்ருமுக்குள்ள போனா வர ஒரு மணி நேரம் ஆவுது வெளிய வர. ஆனா ஷேவ் பண்ண தண்ணி சில்லுன்னு இருக்குன்னு ரீல் விடர”
“சத்தமா பேசாத; அந்த சின்னப் பையன் நம்மையேபாத்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்”
“யாரு அந்த ஆப்பிள் கன்னமா”
“மறுபடியும் சாப்பாடா?”
ரயில் நியுவர்க் நிலையத்திற்கு வந்து சேர, அவர்கள் இருவரும் இறங்கினார்கள். மறுமுறை அந்த இருவரையும் பார்த்தால் சொல்கிறேன்.
“கொஞ்சம் முன்னாலேயே கிளம்பலாம்னு இதுக்குதான் சொன்னேன். இப்படி மூச்சு வாங்க ஓடி வரவேண்டாமில்லையா?”
“கொஞ்சம் வேகமா நடந்தாக் கூட ஒனக்கு மூச்சு வாங்கும்; ஒழுங்கா சாப்பிட்டாத்தானே?”
“சாப்பாட்டைப் பத்தி பேசி வெறுப்பேத்தாதே. அந்தக் குழந்தையைப் பாரு; நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு”.
“அழகா இருக்குல்ல – அது சிரிக்கறச்சே. நல்ல ஆப்பிள் மாதிரி கன்னம்”
“மறுபடியும் சாப்பாடா? ஏன் கன்னத்தில 440-ஸ்டிக்கர் ஒட்டிருக்கா?”
“ஆங் – ஆப்பிள்ன்ன ஒடனே நினைவுக்கு வருது, சப்ஜி மண்டில இனிமே 440 வாங்க கூடாது – ஒரு பவுண்டு 99 சென்ட்; இருந்தாலும் ஆப்பிள் ஒரே மாவா இருக்கு. பவுண்டுக்கு 1.19 கொடுத்தாலும், 460 தான் வாங்கணும்”.
“எனக்கு தெரிஞ்சு கடையில இருக்கிற காஷியரத் தவிர இந்த லேபிள் ஸ்டிக்கர் எல்லாம் பார்க்கிற ஒரே ஆள் நீதாம்ப்பா. எப்படித்தான் சாப்பாட்டு விஷயத்தில மட்டும் இதெல்லாம் கரெக்டா நினைப்புல வச்சுக்கறயோ?”
“பின்ன – உன்னோட ஒரே ரூம்ல இருந்தா யாருக்குத்தான் சாப்பாடு விஷயம் மறக்கும். காலைல பிரேக் ஃபாஸ்ட்ன்னு சொல்லிட்டு, அரை டம்ளர் ஜூஸ் – அதுவும் எல்லாப் பழத்தையும் ஒண்ணா போட்டு கலக்கி கொடுக்கற பன்ச். அப்புறம் சீரியல்ன்னு சொல்லிட்டு சோளச் சீவல். கொஞ்சம் ஏமாந்தா வெறும் டப்பாவைக் காட்டியே அனுப்பிடுவே”
“கார்ன்பிளேக்குன்னு சொல்லேன் - சோளச்சீவல்ன்னு சொன்னா குழப்பமா இருக்குல்ல?”
“கார்ன்பிளேக்குன்னு சொன்னா ரொம்ப பெரிசா ஏதோ சாப்பிடறா மாதிரி தோணும். சோளச்சீவல்ன்னு சொன்னாத்தான் அது சாப்பிடப் பத்தாதுன்னு புரியும்”
“இங்க இருக்கப்போறது ஐந்து மாசமோ அல்லது ஆறு மாசமோ. கொஞ்சம் காசு சேர்த்தால் ஊருக்கு போய் செலவழிக்கலாம் இல்லையா?”
“அதுக்குன்னு இப்படியா? ஒரு டோஸ்ட், பேகல் இல்ல மப்பின் இப்படின்னு எதையாவது சாப்பிடலாம்ல”
“நீயும் நானும் சைவம். மத்தியானத்துக்கு காண்டீன்ல சான்ட்விச்னு இதே பிரட்டும், தக்காளி வெங்காயமும்தான். அதை காலையிலயும் சாப்பிடணுமா? சரி விடு. எப்பப் பார்த்தாலும் நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் தான் யோசிக்கற. ஆமா நேத்து மத்தியானம் உன் சீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையே – ஓபியா?”
“அதெல்லாம் இல்லை, நம்ப சுக்வீந்தருக்கு கோடெழுத கொஞ்சம் ஹெல்ப் பண்ண போயிருந்தேன்”
“நீ அவனுக்கு கோடெழுத போனியா? நீயே காப்பி-பேஸ்ட் கேசு – சொந்தமா என்னிக்கு கோடெழுதியிருக்கே?”
“என்னோட பாலிசியே ‘DON’T REINVENT THE WHEEL’ தான். எவ்வளவு அழகா நான் ரீயூஸ் பண்றேன்?”
“ஆமா – எல்லாத்தையும் வகைக்கு தகுந்தா மாதிரி வோர்டுல காப்பி-பேஸ்ட் பண்ணி வச்சுருக்கே. அதைத் தவிர்த்து கூகுள்ல தேடி கோடு சேக்கற! கேட்டா ‘பெஸ்ட் பிராக்டீஸ் லைப்ரரின்னு’ பந்தவா சொல்றே. அதுவும் ஒரு பிளாஷ் டிரைவ்ல வேற. டிப் டாப்பா பேன்ட், சட்டை, கோட்டு. அவனவன் ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு வந்து நிக்கறான். எல்லாம் நேரம்.”
“ஆள் பாதி ஆடை பாதின்னு நீ கேட்டதில்லையா? ஆமா நீ ஏன் ரெகுலரா ஷேவ் கூட பண்ணறதில்லை? காசு செலவாயிடுமின்னா? இல்ல காதல் தோல்வியா?”
“கிண்டலா? நான் ஷேவ் பண்ணாததற்கு ரெண்டு காரணம். ஒண்ணு குளிர் – காலங்கார்த்தால எவன் சில்லுன்னு தண்ணிய மூஞ்சில அப்பிக்கறது? இரண்டாவது – நீ சொன்ன மாதிரி ‘ஆள் பாதி ஆடை பாதி’ - வேலைக்கு ஏத்த ஒப்பனை”
“வேலைக்கு ஏத்த ஒப்பனையா?”
“ஆமா – நான் பண்றது டெஸ்டிங். ஒன்னை மாதிரி காப்பி-பேஸ்ட் கோடன்க கிட்ட போய் ‘நீ பண்ணது தப்பு’ன்னு சொல்லற வேலை! அப்ப போய் டிப்-டாப்ப ஷேவ், டிரஸ் பண்ணிக்கிட்டு ‘ஹாய்!, உன் கோடுல மிஸ்டேக்’ன்னு சொன்னா அவனவனுக்கு பத்திக்கும். அதுக்காகத்தான் நானே ரெண்டு நாள் தாடியோட போயி ‘தப்பு நடந்துடுச்சுன்னு’ சோகமா சொன்னா, என்னை திட்ட மாட்டானுங்க”
“ஏதோ இஷ்டத்துக்கு பீலா வுடரே – காலையில பாத்ருமுக்குள்ள போனா வர ஒரு மணி நேரம் ஆவுது வெளிய வர. ஆனா ஷேவ் பண்ண தண்ணி சில்லுன்னு இருக்குன்னு ரீல் விடர”
“சத்தமா பேசாத; அந்த சின்னப் பையன் நம்மையேபாத்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்”
“யாரு அந்த ஆப்பிள் கன்னமா”
“மறுபடியும் சாப்பாடா?”
ரயில் நியுவர்க் நிலையத்திற்கு வந்து சேர, அவர்கள் இருவரும் இறங்கினார்கள். மறுமுறை அந்த இருவரையும் பார்த்தால் சொல்கிறேன்.
புதன், டிசம்பர் 06, 2006
தேநீர் – 13
இந்த இறுதிப் பகுதியில் தேநீர் பற்றிய சில பொது விஷயங்களைத் தந்திருக்கிறேன். முதலில் வடுவூர் குமாரின் கேள்வி பற்றி.
இந்தியாவில் டீ ஏலம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பில் பங்கேற்க சில சட்ட திட்டங்கள் உண்டு – ஏலம் எடுப்போரும், டீயை விற்போரும் இந்த சட்ட திட்டத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம், இந்த சட்ட திட்டங்களௌக்கு உட்பட்டு இருக்கும் வரை. ஏலம் எடுத்தவருக்கும், விடுபவருக்கும் சில பொறுப்புகள் உண்டு – ஏலம் விடுபவர், குறிப்பிட்ட அளவு தேயிலையை ஏலம் எடுத்தவருக்கு இத்தனை நாட்களுக்குள் (சாதாரணமாக 72 மணி நேரம்; ஏலம் எடுப்பவருடன் பேசி ஒத்துக்கொண்டால் இந்த கால நிர்ணயம் மாறலாம்) கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட அளவு அபராதம் கட்ட வேண்டும். அதே போல ஏலம் எடுத்தவர், அதே போல குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணத்தையும் செலுத்த வேண்டும் – தவறினால் அதற்கும் அபராதம் (வட்டி) உண்டு. ஏலம் நடத்தும் அமைப்பு இதையெல்லாம் அதன் செயல்பாட்டு ஆவணங்களில் விபரமாக விளக்கியிருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தால் ஆர்பிட்ரெஷன் (Arbitration) என்று சொல்லப்படும், ஒரு நடு நிலை வகிப்பவர் கூறும் தீர்ப்பை இரு தரப்பாரும் ஏற்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய டீ பொட்டலங்கள் எப்போது விற்பனையாகிறது என்பது மிக முக்கியம். தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட தேயிலையின் சுவை, ருசி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் – இது இயற்கை. முதலில் தோட்டத்தில் டீத் தூளாக்கப் பட்டு, ஏலத்தின் மூலமாக தொழிற்சாலைக்கு வந்து, பொட்டலமாகி, மொத்த வினியோகஸ்தரிடம் வந்து, பின் அங்கிருந்து சில்லறை வினியோகஸ்தர்கள் மூலமாக உங்கள் தெருமுனை கடைக்கு வருகிறது. பின் நீங்கள் வாங்கி தினம் இரண்டு-நான்கு ஸ்பூன் கணக்கில் டீயாக அருந்தப் படுகிறது. இதில் நேரம் முக்கியம் – இரண்டு காரணங்களால். ஒன்று டீயின் சுவை குறைவு. இரண்டாவது நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்த 72 மணி நேரத்தில் பணத்தை கொடுத்தாக வேண்டும். நம் போன்ற உபயோகிப்பவர்கள் டீ வாங்கி பணம் கொடுக்கும் வரை நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் – காலம் அதிகமாக முதலுக்கு வட்டியும் அதிகம்.
நிறுவனங்களே உங்களுக்கு விற்பது என்று எடுத்துக் கொண்டால் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும். ஆதலால் அவர்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு தன் பொட்டலங்களை விற்று விடுவார்கள். அந்த மாதிரி விற்கும் போதே பணமும் நிறுவனத்துக்கு வந்து விடும். முக்கால் வாசி நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களிடம் இருந்து நிறுவனத்தின் பெயரில் முன்னமேயே கையொப்பமிட்ட காசோலைகளை வங்கி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். மொத்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பொட்டலங்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப் படும் போது இந்த காசோலைகள் வங்கிகளில் நிறுவனங்கள் கணக்கில் போடப்படும். பொருளை காசு கொடுத்து வாங்கி கடைகளுக்கு விற்பதால் இந்த சில்லறை வினியோகஸ்தர்களுக்கு வரும்படி வேண்டும்; அதே போல் தெரு முனையில் இருக்கும் கடைக்காரரும், தன் சொந்தக் காசைப் போட்டு பொட்டலம் வாங்குவதால் அவருக்கும் வரும்படி வேண்டும். இதை எல்லாம் கணக்கில் வைத்து, கடையில் நீங்களும் நானும் வாங்கும் விலையிலிருந்து, கொஞ்சம் குறைவாகவே நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு விற்கும். இது போதாதென்று, நிறுவன இருப்பு அதிகமானால் ‘தற்காலிக விலைக் குறைப்பு’, மற்றும் ‘சிறப்புத் தள்ளுபடி’ என்றெல்லாம் சொல்லி நிறுவனக்கள் விற்பனையைப் பெருக்க முயலும்.
இது மட்டுமல்லாமல் இந்த பொட்டலங்களை ஒவ்வொரு இடமாக அனுப்பி, ஏற்றி இறக்குவதால் வரும் சேதம், நாள் கடந்து போனதால் விற்க முடியாமல் திரும்பி வரும் சரக்கு (அனேகமாக அனைத்து நிறுவனங்களும், கடைக்காரர்களிடம் இருந்து இதை ஏற்றுக் கொள்ளும்; இதை கமிஷனாக (அளவைப் பொறுத்து) கடையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு நிறுவனங்கள் தந்து விடும்), என்றெல்லாம் வேறு செலவு. உற்பத்தி செய்யும் செலவோடு, இவற்றையெல்லாம் அனுமானித்து, விற்கும் விலையை நிர்ணயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அடிக்கடி விலயையும் மாற்ற முடியாது. ஒட்ட வேண்டிய லேபலில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இத்தனையும் மீறி இந்த வியாபாரத்தில் பணம் பண்ணுவதற்கு கொஞ்சம் திறமை வேன்டும்.
என்னுடைய பயிற்சியின் போது இரண்டு வாரங்கள் விற்பனைப் பிரிவில் இருந்தேன். விற்கும் அதிகாரியுடன் (Sales Manager) மொத்த வினியோகஸ்தர் (C&FA), சில்லறை வினியோகஸ்தர் (Distributor), மற்றும் கடைகள் (Shops) எல்லாம் போயிருக்கிறேன். இந்த அதிகாரி அவர்களோடு விற்பனைக்காக ஹிந்தியில் பேசுவதை (மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல், புகழ்ச்சி, பேரம் - எல்லாம் உண்டு) கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன். அவரோடு சேர்ந்து டீ விளம்பரத் தோரணம் (YELLOW LABEL) கட்டியிருக்கிறேன். அவர் தொலைபேசியில் உயர் அதிகாரிகளுடன் தற்காலிக விலைக் குறைப்புக்காக போராடியதைக் கேட்டிருக்கிறேன் (உயர் அதிகாரி மறுத்தது வேறு விஷயம்; போதாக் குறைக்கு உங்களுக்கு - என்னையும் சேர்த்துத்தான் - விற்கத் தெரியவில்லை என்று அவர் கோபிக்க வேறு செய்தார்). இந்த இரண்டு வார பயிற்சி முடிந்ததும் எனக்கு நிச்சயமாய் தெரிந்த ஒரு விஷயம் - என்னால் இந்த விற்பன வேலையை செய்ய வராது, முடியாது என்பதுதான்!
இந்தியாவில் தேயிலை உற்பத்தி கிட்டத்தட்ட 9 லக்ஷம் மெட்ரிக் டன் (90,00,00,000 கிலோ - 90 கோடி கிலோ). 2003-ம் வருடத்தில் வட இந்தியாவில் 66.36 கோடி கிலோவும், தென் இந்தியாவில் 19.34 கோடி கிலோவும் விளைந்தது (மொத்தம் 85.7 கோடி கிலோ). இதில் பெரும்பான்மை சதவீதம் ஏலத்தின் மூலமாகத் தான் விற்பனையாகின. கிட்டத்தட்ட 20 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த விற்பனை முறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. எத்தனையோ சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தாலும், இந்த அடிப்படை விற்பனை முறை நூறு வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருக்கிறது. அதே போல தேயிலையிலிருந்து டீத் தூள் செய்வதிலும் மிகப் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை – க்ரீன் டீ என்று சொல்லப்படும் நீராவி மூலம் பதப்படுத்தப்படும் முறையைத் தவிர.
இருபது – முப்பது வருடங்களுக்கு முன் இந்தியா உலகிலேயே அதிக டீ உற்பத்தி பண்ணும் நாடாகவும், ஏற்றுமதி பண்ணும் நாடகவும் இருந்தது. சமீப காலங்களில் கென்யா, இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. 2004ல் இந்தியாவின் டீ உற்பத்தி 4.3% குறைந்திருக்கிறது – முக்கிய காரணங்கள் தட்பவெப்ப நிலை மாறுதல் மற்றும் அஸ்ஸாமில் கிட்டத்தட்ட 70 தோட்டங்கள் மூடப்பட்டது. ஏற்றுமதியில் க்ரீன் டீ உற்பத்தியினால் சீனா முன்னணிக்கு வந்திருக்கிறது. விபரங்களுக்கு இங்கே. இந்தியாவில் விளையும் டீ உலக உற்பத்தியில் கால் பங்குக்கும் சிறிது அதிகம். இணையத்தில் டீ பற்றி அனேகச் செய்திகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டீ பற்றிய ஒரு ப்ளாக்.
பொறுமையாக இத்தனை பதிவையும் படித்தவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றி :-).
தேநீர் – 12; தேநீர் – 11; தேநீர் – 10; தேநீர் – 9; தேநீர் – 8; தேநீர் – 7; தேநீர் – 6; தேநீர் – 5; தேநீர் – 4; தேநீர் – 3; தேநீர் – 2; தேநீர் – 1
இந்தியாவில் டீ ஏலம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பில் பங்கேற்க சில சட்ட திட்டங்கள் உண்டு – ஏலம் எடுப்போரும், டீயை விற்போரும் இந்த சட்ட திட்டத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம், இந்த சட்ட திட்டங்களௌக்கு உட்பட்டு இருக்கும் வரை. ஏலம் எடுத்தவருக்கும், விடுபவருக்கும் சில பொறுப்புகள் உண்டு – ஏலம் விடுபவர், குறிப்பிட்ட அளவு தேயிலையை ஏலம் எடுத்தவருக்கு இத்தனை நாட்களுக்குள் (சாதாரணமாக 72 மணி நேரம்; ஏலம் எடுப்பவருடன் பேசி ஒத்துக்கொண்டால் இந்த கால நிர்ணயம் மாறலாம்) கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட அளவு அபராதம் கட்ட வேண்டும். அதே போல ஏலம் எடுத்தவர், அதே போல குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணத்தையும் செலுத்த வேண்டும் – தவறினால் அதற்கும் அபராதம் (வட்டி) உண்டு. ஏலம் நடத்தும் அமைப்பு இதையெல்லாம் அதன் செயல்பாட்டு ஆவணங்களில் விபரமாக விளக்கியிருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தால் ஆர்பிட்ரெஷன் (Arbitration) என்று சொல்லப்படும், ஒரு நடு நிலை வகிப்பவர் கூறும் தீர்ப்பை இரு தரப்பாரும் ஏற்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய டீ பொட்டலங்கள் எப்போது விற்பனையாகிறது என்பது மிக முக்கியம். தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட தேயிலையின் சுவை, ருசி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் – இது இயற்கை. முதலில் தோட்டத்தில் டீத் தூளாக்கப் பட்டு, ஏலத்தின் மூலமாக தொழிற்சாலைக்கு வந்து, பொட்டலமாகி, மொத்த வினியோகஸ்தரிடம் வந்து, பின் அங்கிருந்து சில்லறை வினியோகஸ்தர்கள் மூலமாக உங்கள் தெருமுனை கடைக்கு வருகிறது. பின் நீங்கள் வாங்கி தினம் இரண்டு-நான்கு ஸ்பூன் கணக்கில் டீயாக அருந்தப் படுகிறது. இதில் நேரம் முக்கியம் – இரண்டு காரணங்களால். ஒன்று டீயின் சுவை குறைவு. இரண்டாவது நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்த 72 மணி நேரத்தில் பணத்தை கொடுத்தாக வேண்டும். நம் போன்ற உபயோகிப்பவர்கள் டீ வாங்கி பணம் கொடுக்கும் வரை நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் – காலம் அதிகமாக முதலுக்கு வட்டியும் அதிகம்.
நிறுவனங்களே உங்களுக்கு விற்பது என்று எடுத்துக் கொண்டால் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும். ஆதலால் அவர்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு தன் பொட்டலங்களை விற்று விடுவார்கள். அந்த மாதிரி விற்கும் போதே பணமும் நிறுவனத்துக்கு வந்து விடும். முக்கால் வாசி நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களிடம் இருந்து நிறுவனத்தின் பெயரில் முன்னமேயே கையொப்பமிட்ட காசோலைகளை வங்கி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். மொத்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பொட்டலங்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப் படும் போது இந்த காசோலைகள் வங்கிகளில் நிறுவனங்கள் கணக்கில் போடப்படும். பொருளை காசு கொடுத்து வாங்கி கடைகளுக்கு விற்பதால் இந்த சில்லறை வினியோகஸ்தர்களுக்கு வரும்படி வேண்டும்; அதே போல் தெரு முனையில் இருக்கும் கடைக்காரரும், தன் சொந்தக் காசைப் போட்டு பொட்டலம் வாங்குவதால் அவருக்கும் வரும்படி வேண்டும். இதை எல்லாம் கணக்கில் வைத்து, கடையில் நீங்களும் நானும் வாங்கும் விலையிலிருந்து, கொஞ்சம் குறைவாகவே நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு விற்கும். இது போதாதென்று, நிறுவன இருப்பு அதிகமானால் ‘தற்காலிக விலைக் குறைப்பு’, மற்றும் ‘சிறப்புத் தள்ளுபடி’ என்றெல்லாம் சொல்லி நிறுவனக்கள் விற்பனையைப் பெருக்க முயலும்.
இது மட்டுமல்லாமல் இந்த பொட்டலங்களை ஒவ்வொரு இடமாக அனுப்பி, ஏற்றி இறக்குவதால் வரும் சேதம், நாள் கடந்து போனதால் விற்க முடியாமல் திரும்பி வரும் சரக்கு (அனேகமாக அனைத்து நிறுவனங்களும், கடைக்காரர்களிடம் இருந்து இதை ஏற்றுக் கொள்ளும்; இதை கமிஷனாக (அளவைப் பொறுத்து) கடையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு நிறுவனங்கள் தந்து விடும்), என்றெல்லாம் வேறு செலவு. உற்பத்தி செய்யும் செலவோடு, இவற்றையெல்லாம் அனுமானித்து, விற்கும் விலையை நிர்ணயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அடிக்கடி விலயையும் மாற்ற முடியாது. ஒட்ட வேண்டிய லேபலில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இத்தனையும் மீறி இந்த வியாபாரத்தில் பணம் பண்ணுவதற்கு கொஞ்சம் திறமை வேன்டும்.
என்னுடைய பயிற்சியின் போது இரண்டு வாரங்கள் விற்பனைப் பிரிவில் இருந்தேன். விற்கும் அதிகாரியுடன் (Sales Manager) மொத்த வினியோகஸ்தர் (C&FA), சில்லறை வினியோகஸ்தர் (Distributor), மற்றும் கடைகள் (Shops) எல்லாம் போயிருக்கிறேன். இந்த அதிகாரி அவர்களோடு விற்பனைக்காக ஹிந்தியில் பேசுவதை (மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல், புகழ்ச்சி, பேரம் - எல்லாம் உண்டு) கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன். அவரோடு சேர்ந்து டீ விளம்பரத் தோரணம் (YELLOW LABEL) கட்டியிருக்கிறேன். அவர் தொலைபேசியில் உயர் அதிகாரிகளுடன் தற்காலிக விலைக் குறைப்புக்காக போராடியதைக் கேட்டிருக்கிறேன் (உயர் அதிகாரி மறுத்தது வேறு விஷயம்; போதாக் குறைக்கு உங்களுக்கு - என்னையும் சேர்த்துத்தான் - விற்கத் தெரியவில்லை என்று அவர் கோபிக்க வேறு செய்தார்). இந்த இரண்டு வார பயிற்சி முடிந்ததும் எனக்கு நிச்சயமாய் தெரிந்த ஒரு விஷயம் - என்னால் இந்த விற்பன வேலையை செய்ய வராது, முடியாது என்பதுதான்!
இந்தியாவில் தேயிலை உற்பத்தி கிட்டத்தட்ட 9 லக்ஷம் மெட்ரிக் டன் (90,00,00,000 கிலோ - 90 கோடி கிலோ). 2003-ம் வருடத்தில் வட இந்தியாவில் 66.36 கோடி கிலோவும், தென் இந்தியாவில் 19.34 கோடி கிலோவும் விளைந்தது (மொத்தம் 85.7 கோடி கிலோ). இதில் பெரும்பான்மை சதவீதம் ஏலத்தின் மூலமாகத் தான் விற்பனையாகின. கிட்டத்தட்ட 20 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த விற்பனை முறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. எத்தனையோ சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தாலும், இந்த அடிப்படை விற்பனை முறை நூறு வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருக்கிறது. அதே போல தேயிலையிலிருந்து டீத் தூள் செய்வதிலும் மிகப் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை – க்ரீன் டீ என்று சொல்லப்படும் நீராவி மூலம் பதப்படுத்தப்படும் முறையைத் தவிர.
இருபது – முப்பது வருடங்களுக்கு முன் இந்தியா உலகிலேயே அதிக டீ உற்பத்தி பண்ணும் நாடாகவும், ஏற்றுமதி பண்ணும் நாடகவும் இருந்தது. சமீப காலங்களில் கென்யா, இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. 2004ல் இந்தியாவின் டீ உற்பத்தி 4.3% குறைந்திருக்கிறது – முக்கிய காரணங்கள் தட்பவெப்ப நிலை மாறுதல் மற்றும் அஸ்ஸாமில் கிட்டத்தட்ட 70 தோட்டங்கள் மூடப்பட்டது. ஏற்றுமதியில் க்ரீன் டீ உற்பத்தியினால் சீனா முன்னணிக்கு வந்திருக்கிறது. விபரங்களுக்கு இங்கே. இந்தியாவில் விளையும் டீ உலக உற்பத்தியில் கால் பங்குக்கும் சிறிது அதிகம். இணையத்தில் டீ பற்றி அனேகச் செய்திகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டீ பற்றிய ஒரு ப்ளாக்.
பொறுமையாக இத்தனை பதிவையும் படித்தவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றி :-).
தேநீர் – 12; தேநீர் – 11; தேநீர் – 10; தேநீர் – 9; தேநீர் – 8; தேநீர் – 7; தேநீர் – 6; தேநீர் – 5; தேநீர் – 4; தேநீர் – 3; தேநீர் – 2; தேநீர் – 1
ஞாயிறு, டிசம்பர் 03, 2006
தேநீர் – 12
மார்க்கெட்டிங்
தோட்டத்தில் வளரும் செடியிலிருந்து இலையைப் பறித்து டீத் தூளாகவும் செய்து தருவது டீ எஸ்டேட் என்று சொல்லப்படும் தோட்டங்களே. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, தோட்டங்களே நேரடியாக டீயை பருகும் மக்களுக்கு விற்பனை செய்ததில்லை. தோட்டங்கள் ஏலத்தின் மூலமாக டீத்தூள்களைக் கலந்து பொட்டலம் கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு விற்பதை மட்டுமே செய்து வந்தன. இந்த பொட்டலம் கட்டுவது தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய விஷயம் என்று சொல்ல முடியாது. இதைப் புரிந்து கொண்ட தோட்டங்கள், இந்த டீத்தூளை நாமே ஏன் பொட்டலம் போட்டு நேரடியாக விற்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தன. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் டீத்தூள் பொட்டலம் போடும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரிய அளவில் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள்; பிராண்டு என்று பார்த்தால் இருபது/முப்பது இருக்கும்.
இப்போது எத்தனையோ வகைகள் வந்து விட்டன. நிறைய தோட்டங்கள் ‘தோட்டத்து தேயிலையின் புத்துணர்வு’ என்று தங்களிடமே தோட்டம் இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை வித்தியாசமாகக் காட்ட ஆரம்பித்தன. பொட்டலம் போடும் வியாபாரம் இருக்க முக்கிய காரணம், இயற்கையின் படைப்பில் வரும் வித விதமான தேயிலைகளை இன்னமும் அதிகமான எண்ணிக்கையில் கலவையாக்க முடியும் என்பதால் தான். இரண்டே தோட்டங்கள் இருந்தால் கூட, இந்த இரண்டையும் எத்தனை விகிதாசாரத்தில் கலக்கிறோம் என்பதிலேயே நாம் நிறைய வகைகளை (பிராண்ட்) உருவாக்க முடியும். இந்த ஒரு சமாசாரத்தில் தான் மொத்த பொட்டல வியாபாரமும் அடங்கியிருக்கிறது.
மூன்று, நான்கு தோட்டத்திலிருந்து தேயிலையை வாங்கி கலந்து கொடுக்கிறேன் என்று நான் சொன்னால் யாரும் என்னிடம் வர மாட்டார்கள். அதற்காக எனக்கு மார்க்கெட்டிங் பிரிவின் ‘அறிவு’ தேவை. அவர்கள் உங்களிடம் வந்து இந்த டீ குடித்தால் களைப்பு போகும், புத்துணர்வு வரும், என்று சொன்னால், நீங்கள் வந்து கொஞ்சம் போணி பண்ணுவீர்கள். அதற்காகத்தான் இந்தப் பிரிவு.
இவ்வளவுதானா என்று நினைக்க வேண்டாம். ஒரு பெரிய நிறுவனத்திற்கு பத்து, இருபது பிராண்டு தேவை. இவைகளுக்குள் முரண்பாடு வராத மாதிரி, அதே சமயம் ஒவ்வொரு வகையும் (பிராண்டு) ஒரு தனி விசேஷத்தை சொல்வது போலவும் கதை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. முடிந்தால் மற்ற நிறுவன பிராண்டை கொஞ்சம் மட்டம் தட்டி, சொந்த பிராண்டை கொஞ்சம் தூக்கிப் பேசினால் விற்பனை பெருகலாம். இதற்காக இவர்கள் செய்யும் செலவுதான் எத்தனை. இந்தப் பிரிவு மட்டும் இல்லையென்றால், நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கும் – அது சுவரில் டீப்பொட்டலப் படம் வரைபவரிலிருந்து, வீட்டில் நீங்கள் டீ குடித்துக்கோண்டே ஆவலாகப் பார்க்கும் தொலைக்காட்ச்சித் தொடர் வரை.
ஒரு கலவைக்கு எந்த மாதிரி குணம் இருக்கிறது என்பதை நிர்ணயித்து (குணம் என்பது பொதுவான சொல் – அது சுவை, மணம், நிறம், அது தரும் உணர்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), அந்த குணத்தை மக்கள் மனதிலே பதியுமாறு விளம்பரங்கள் தயாரிப்பது, போட்டிகள் நடத்துவது போன்றவை மார்க்கெட்டிங் பிரிவின் வேலை. இந்த விளம்பரங்களுக்கு வெளி நிறுவனங்களை அணுகி, அங்கு இருக்கும் கவிஞர்கள், கலைஞர்களின் திறமையால் ஒரு துண்டுப் படத்தையோ, பாடலையோ, அந்தக் கலவையின் குணத்தை பறைசாற்றும் விதமாக தருவிப்பது என்பது ஒரு பெரிய விஷயம். அது டீத்தோட்டத்தில் ஓடும் பி.டி. உஷாவா (கண்ணன் தேவன் டீ), அல்லது தபலா வாசிக்கும் ஜாகீர் ஹூசேனா (தாஜ் மஹல் டீ) என்றெல்லாம் நிர்ணயிப்பது இவர்கள் தான்.
மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இதில் ஒரு பெரிய வித்தியாசம், இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை. ஒரு விளம்பரம் முக்கியமான மொழிகள் அத்தனையிலும் வருவது நலம் - அது செலவையும் குறைக்கும், இந்தியா முழுவதும் டீயை விற்க உதவும். இந்த மாதிரி ஒரு பிரச்சனை அனேகமாக மற்ற நாடுகளில் கிடையாது. பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்க உதவுமாறு ஒரு சிறு கவிதை எழுதுவது ரொம்பவும் கஷ்டம். இதற்காகவே இந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.
சமயத்தில் சில விளம்பரங்கள் ஒரு மொழியில் மட்டும் பிரபலமாவதும் உண்டு. இதில் எனக்குப் பிடித்த ஒரு விளம்பரக் கவிதை:
Dip – Dip
Add the Sugar; and the milk
And its ready to sip
Do you want it stronger? Dip a little longer
Dip – Dip – Dip
And its ready to sip
உங்களுக்குப் பிடித்த டீ விளம்பரங்களை பின்னூட்டமிடுங்கள்.
முந்தைய பதிவுகள்
தேநீர் – 11
தேநீர் – 10
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1
தோட்டத்தில் வளரும் செடியிலிருந்து இலையைப் பறித்து டீத் தூளாகவும் செய்து தருவது டீ எஸ்டேட் என்று சொல்லப்படும் தோட்டங்களே. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, தோட்டங்களே நேரடியாக டீயை பருகும் மக்களுக்கு விற்பனை செய்ததில்லை. தோட்டங்கள் ஏலத்தின் மூலமாக டீத்தூள்களைக் கலந்து பொட்டலம் கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு விற்பதை மட்டுமே செய்து வந்தன. இந்த பொட்டலம் கட்டுவது தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய விஷயம் என்று சொல்ல முடியாது. இதைப் புரிந்து கொண்ட தோட்டங்கள், இந்த டீத்தூளை நாமே ஏன் பொட்டலம் போட்டு நேரடியாக விற்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தன. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் டீத்தூள் பொட்டலம் போடும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரிய அளவில் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள்; பிராண்டு என்று பார்த்தால் இருபது/முப்பது இருக்கும்.
இப்போது எத்தனையோ வகைகள் வந்து விட்டன. நிறைய தோட்டங்கள் ‘தோட்டத்து தேயிலையின் புத்துணர்வு’ என்று தங்களிடமே தோட்டம் இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை வித்தியாசமாகக் காட்ட ஆரம்பித்தன. பொட்டலம் போடும் வியாபாரம் இருக்க முக்கிய காரணம், இயற்கையின் படைப்பில் வரும் வித விதமான தேயிலைகளை இன்னமும் அதிகமான எண்ணிக்கையில் கலவையாக்க முடியும் என்பதால் தான். இரண்டே தோட்டங்கள் இருந்தால் கூட, இந்த இரண்டையும் எத்தனை விகிதாசாரத்தில் கலக்கிறோம் என்பதிலேயே நாம் நிறைய வகைகளை (பிராண்ட்) உருவாக்க முடியும். இந்த ஒரு சமாசாரத்தில் தான் மொத்த பொட்டல வியாபாரமும் அடங்கியிருக்கிறது.
மூன்று, நான்கு தோட்டத்திலிருந்து தேயிலையை வாங்கி கலந்து கொடுக்கிறேன் என்று நான் சொன்னால் யாரும் என்னிடம் வர மாட்டார்கள். அதற்காக எனக்கு மார்க்கெட்டிங் பிரிவின் ‘அறிவு’ தேவை. அவர்கள் உங்களிடம் வந்து இந்த டீ குடித்தால் களைப்பு போகும், புத்துணர்வு வரும், என்று சொன்னால், நீங்கள் வந்து கொஞ்சம் போணி பண்ணுவீர்கள். அதற்காகத்தான் இந்தப் பிரிவு.
இவ்வளவுதானா என்று நினைக்க வேண்டாம். ஒரு பெரிய நிறுவனத்திற்கு பத்து, இருபது பிராண்டு தேவை. இவைகளுக்குள் முரண்பாடு வராத மாதிரி, அதே சமயம் ஒவ்வொரு வகையும் (பிராண்டு) ஒரு தனி விசேஷத்தை சொல்வது போலவும் கதை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. முடிந்தால் மற்ற நிறுவன பிராண்டை கொஞ்சம் மட்டம் தட்டி, சொந்த பிராண்டை கொஞ்சம் தூக்கிப் பேசினால் விற்பனை பெருகலாம். இதற்காக இவர்கள் செய்யும் செலவுதான் எத்தனை. இந்தப் பிரிவு மட்டும் இல்லையென்றால், நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கும் – அது சுவரில் டீப்பொட்டலப் படம் வரைபவரிலிருந்து, வீட்டில் நீங்கள் டீ குடித்துக்கோண்டே ஆவலாகப் பார்க்கும் தொலைக்காட்ச்சித் தொடர் வரை.
ஒரு கலவைக்கு எந்த மாதிரி குணம் இருக்கிறது என்பதை நிர்ணயித்து (குணம் என்பது பொதுவான சொல் – அது சுவை, மணம், நிறம், அது தரும் உணர்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), அந்த குணத்தை மக்கள் மனதிலே பதியுமாறு விளம்பரங்கள் தயாரிப்பது, போட்டிகள் நடத்துவது போன்றவை மார்க்கெட்டிங் பிரிவின் வேலை. இந்த விளம்பரங்களுக்கு வெளி நிறுவனங்களை அணுகி, அங்கு இருக்கும் கவிஞர்கள், கலைஞர்களின் திறமையால் ஒரு துண்டுப் படத்தையோ, பாடலையோ, அந்தக் கலவையின் குணத்தை பறைசாற்றும் விதமாக தருவிப்பது என்பது ஒரு பெரிய விஷயம். அது டீத்தோட்டத்தில் ஓடும் பி.டி. உஷாவா (கண்ணன் தேவன் டீ), அல்லது தபலா வாசிக்கும் ஜாகீர் ஹூசேனா (தாஜ் மஹல் டீ) என்றெல்லாம் நிர்ணயிப்பது இவர்கள் தான்.
மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இதில் ஒரு பெரிய வித்தியாசம், இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை. ஒரு விளம்பரம் முக்கியமான மொழிகள் அத்தனையிலும் வருவது நலம் - அது செலவையும் குறைக்கும், இந்தியா முழுவதும் டீயை விற்க உதவும். இந்த மாதிரி ஒரு பிரச்சனை அனேகமாக மற்ற நாடுகளில் கிடையாது. பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்க உதவுமாறு ஒரு சிறு கவிதை எழுதுவது ரொம்பவும் கஷ்டம். இதற்காகவே இந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.
சமயத்தில் சில விளம்பரங்கள் ஒரு மொழியில் மட்டும் பிரபலமாவதும் உண்டு. இதில் எனக்குப் பிடித்த ஒரு விளம்பரக் கவிதை:
Dip – Dip
Add the Sugar; and the milk
And its ready to sip
Do you want it stronger? Dip a little longer
Dip – Dip – Dip
And its ready to sip
உங்களுக்குப் பிடித்த டீ விளம்பரங்களை பின்னூட்டமிடுங்கள்.
முந்தைய பதிவுகள்
தேநீர் – 11
தேநீர் – 10
தேநீர் – 9
தேநீர் – 8
தேநீர் – 7
தேநீர் – 6
தேநீர் – 5
தேநீர் – 4
தேநீர் – 3
தேநீர் – 2
தேநீர் – 1
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)