<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13220802</id><updated>2012-01-03T12:55:55.648-05:00</updated><category term='அனுபவம்'/><category term='பொ.போ.பொ.'/><title type='text'>இதர எண்ணங்கள்</title><subtitle type='html'>மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>121</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-4301690260233360984</id><published>2011-12-23T19:41:00.000-05:00</published><updated>2011-12-23T19:41:23.908-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேசு மனமே பேசு! - 3</title><content type='html'>&lt;b&gt;பேசு மனமே பேசு! - 3&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃபோனில் தொழில்நுட்ப முன்னேற்றம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும், பேசுதல் என்று யோசிக்கையில் முன்னேற்றம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை.  முதலில் அளவு.  இளவயதில் பேசுவதற்கு ஆசை அதிகம்; பேச விஷயமும் அதிகம் இருந்தது.  அரை மணி, ஒரு மணி நேரம் பேசிவிட்டு, 'அப்படி என்னதான் பேசினீங்க?' என்ற அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், சமாளிப்பதற்காக 'நாங்க என்ன பேசினா என்ன?' என்று எதிர்க் கேள்வி கேட்டுத் தப்பித்ததுண்டு.  இப்போது யாராவது தெரிந்தவர் ஃபோன் செய்தால் 'நான் சௌக்கியம்; நீங்க சௌக்கியமா?' என்று கேட்டு ஒரு நிமிஷத்தில் ஃபோனை வைத்து விடுகிறேன்.  இதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று பேசுவதற்கு விஷயம் அதிகம் இல்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இருபது வருடங்களில் அதுவும் குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்  குடும்பங்களில் எந்த விதமான விஷயங்கள் செய்தியாக வரும் என்று யூகிப்பதில் தேர்ச்சி வந்து விட்டது.  எனக்கு ஞான திருஷ்டி வந்து மற்றவர்களின்  வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரிகிறது என்று நான் சொல்லவில்லை. யார் யார் எந்தெந்த மாதிரியான விஷங்களைச் செய்தியாக ஃபோனில் கூப்பிட்டு சொல்வார்கள் என்று யூகிக்க முடிகிறது என்று சொல்கிறேன்.  முதலில் இதில் ஒரு சந்தோஷம் வந்தாலும், நாளாக நாளாக இது ஃபோனில் பேசுகின்ற சுவாரசியத்தைக் குறைத்து விட்டது.  இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தவுடன், மற்றவர்களும் நாம்  ஃபோன் செய்யும் போது இதே போல சரியாக யூகிப்பார்களோ என்று தோன்ற ஆரம்பித்தது.  அந்த மாதிரியான யோசனை வந்ததிலிருந்து நான் ஃபோன் செய்வது குறைய ஆரம்பித்தது. வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழியின் பொருள் கொஞ்சம் வேறு விதமாகப் புரிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;தவிர அலுவலகத்தில் ஃபோனில் பேசுவது அதிகமாகிப் போனது.  முதன் முதலாக லிப்டனில் வேலை செய்யும் போது, செலவுச் சிக்கனம் என்று பார்த்துப் பார்த்துப் பேசியது போக இப்போது வேலையில் சகட்டு மேனிக்குப் பேச வேண்டிய கட்டாயம்.  அதிலும் கடந்த ஆறு/ஏழு வருடங்களில் சராசரியாக தினமும் 3 மணி நேரம் ஃபோனில்!  இதில் நான் பேசுவது குறைவு; இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதில் செல்லும்.  முக்கால்வாசி நேரம் இந்த 'கான்ஃப்ரன்ஸ் கால்' என்று ஐந்திலிருந்து ஐம்பது பேர்கள் வரை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒரே ஃபோன் காலில்!  வீட்டுக்கு வரும் போது ஃபோன் மணி அடித்தாலே எரிச்சல் வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியான ஃபோன் கால்களில் மனது பேசுகின்ற விஷயத்திலிருந்து தாவி வேறெங்காவது அலைபாய்வதைத் தவிர்க்க முடியாது.  சிலர் குரலைக் கேட்டாலே தூக்கம் வரும்; சில சமயம் சிலரின் பேசும் விதம் நம்மை அறியாமலேயே மற்ற விஷயங்களை யோசிக்க வைக்கும்.  முகம் தெரியாமல், குரலை மட்டும் கேட்கையில், அதிலும் அனேகம் பேர் பேசும் பொழுது, கவனம் அதிகம் தேவையாக இருக்கிறது; ஆனால் அப்போது தான் மனமும் எங்காவது சென்று விடுகிறது.  ஃபோனில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கையில், அவரின் குரல், பேச்சை மட்டும் வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது தாமாக வர ஆரம்பித்தது.  ஒருவரை நேரில் பார்க்காமல், அவருடன் பழகாமல், அவர் தரம், நாணயம் பற்றி எல்லம் அவர்களின் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு முடிவுக்கு வருவது சரியல்ல என்று தெரிந்திருந்தாலும், அந்த மாதிரியான நிர்ணயங்களுக்கு மனது தாமாகச் சென்றது. இதே போன்று என் பேச்சை, குரலை மட்டும் வைத்து என்னைப் பற்றி மற்றவர்கள்  எடை போடலாம் என்ற யோசனை வந்ததிலிருந்து தெரியாதவர்களோடு பேச நாட்டம் குறைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தவர்கள் கூப்பிட்டால் என்ன விஷயமாக இருக்கும் என்ற யூகம்; தெரியாதவராக இருந்தால் அவர் யாரோ? எப்படியோ? என்ற மதிப்பீடு - இரண்டுமே தேவையில்லாதது என்று தெரிந்திருந்தாலும் தவிர்க்க முடியவில்லை.  மற்றவர்கள் பேசுகையில் எனக்குள்ளேயே நடக்கும் சம்பாஷணையைத் தவிர்க்கத் தெரியாததால், பேசுவதே குறைந்து போனது.  நினைத்துப் பார்க்கையில் இளவயதிலும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்ப்பதை விட, நான் பேசுவதில் தான் எனக்கு நாட்டம் இருந்தது.  ஆனால் என் பேச்சைக் கேட்க யாராவது வேண்டுமே!  அதற்காக அவர்கள் பேச்சை நான் கேட்பது ஒரு விதமான 'கொடுக்க வாங்கல்' விஷயமாகிப் போனது.  மற்றவர்களின் பேச்சை கேட்க விரும்பிப் ஃபோன் செய்ததை விட, நான் பேசுவதைக் கேட்க யாராவது வேண்டும் என்பதற்காகப் ஃபோன் செய்தது தான் அதிகம்.  இப்போது அந்த மாதிரியான எண்ணம் குறைந்து போனதால், நானாக முயன்று ஃபோன் செய்வது குறைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபோனில் பேச நாட்டம் குறைந்தாலும், நேரில் பார்க்கையில் தெரிந்தவர்களுடன் பேசுவதில் நாட்டம் குறையவில்லை.  முகம் பார்த்து நேரில் பேசுவதில் இருக்கும் நிறைவும் திருப்தியும் ஃபோனில் கிடைப்பதில்லை என்பது ஒரு முக்கிய காரணம்.  இது முன்னேற்றமா இல்லையா என்று தெரியவில்லை.  அதே சமயத்தில் கருத்துப் பறிமாற்றம் என்று பார்த்தால் சிறுவயதில் இருந்ததை விட இன்னாளில் அதிகம், இணையத்தின் தயவில்.  முகம் தெரியாதவர் ஃபோனில் பேசுவதைக் கேட்பதைக் காட்டிலும், எழுதுவதைப் படிப்பது சுலபமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாடு சாப்பிட்டுவிட்டு நிதானமாக அசை போடுவது போல இணையத்தில் எழுதியதைப் படிப்பதில் ஒரு சௌகரியம்.  ஃபோனில் பேசுகையில் உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.  இணையத்தில் அந்த நிர்பந்தம் இல்லை.  இரவில் தூக்கம் கலைந்து நடு இரவில் வேதாந்தமும் படிக்கலாம் அல்லது அரசியலும் படிக்கலாம்.  யாரையும் தொந்திரவு செய்ய வேண்டாம்.   இப்போது என் செல் ஃபோனில் இதைச் செய்ய முடிகிறது.  அந்த விதத்தில் முன்னேற்றம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ட்விட்டர் போன்ற தளங்களில், 'எனக்குப் பல் வலி' அல்லது 'கடைக்குப் போகிறேன்' என்றெல்லாம் எழுதுகிறார்கள்.  நான் தினசரி வாழ்க்கையில் என்ன செய்கிறேன் என்பது பற்றி தெரிந்து கொள்ள யாரும் இருப்பதாகத் தெரியவில்லையாதலால் இன்னமும் அது போன்ற தளங்களில் எனக்கு கணக்கு இல்லை.  அதே போல மற்றவர்களின் தினசரி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லாததால் அம்மாதிரியான தளங்களுக்கு அதிகம் செல்வதும் இல்லை.   தொழில் நுட்ப முன்னேற்றம் நிச்சயம் மனதை அதிகம் பேச வைத்திருக்கிறது.  இந்தப் பேச்சினால் முன்னேற்றம் வந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் நாளாகும் என்றுதான் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-4301690260233360984?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/4301690260233360984/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=4301690260233360984' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4301690260233360984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4301690260233360984'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/12/3.html' title='பேசு மனமே பேசு! - 3'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-3362703965990103980</id><published>2011-10-23T15:53:00.000-04:00</published><updated>2011-10-23T15:53:20.071-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேசு மனமே பேசு! - 2</title><content type='html'>&lt;b&gt;பேசு மனமே பேசு! - 2&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சி.ஏ. படிப்பு முடிந்து ஹிந்துஸ்தான் லீவரில் வேலை கிடைத்தது.  பதினெட்டு மாதங்கள் டிரெயினிங் - ஊர் ஊராகப் பயணம்.  முதல் முறையாக மகன் வீட்டை விட்டு வெளியூர் போகிறானே என்ற கவலை அம்மாவிற்கு.  சமாதானமாக 'வாரா வாரம் தவறாமல் பக்கத்து வீட்டுக்குப் ஃபோன் செய்கிறேன்' (வீட்டில் அப்போது ஃபோன் கிடையாது) என்று சொல்லி பம்பாய் கிளம்பினேன்.  அப்போது ஆரம்பித்தது, வாரமொருமுறையாவது ஃபோனில் பேச்சு என்று - இன்று வரை தொடர்கிறது.  அம்மாவும், அப்பாவும் என் வீட்டிற்கு வந்து தங்கும் நாட்கள் தவிர, ஒவ்வொரு வாரக் கடைசியிலும் இரண்டு நிமிடங்களாவது பேசி விடுவது என்று!  பேசுவதற்கு உருப்படியான சமாசாரம் ஏதும் இல்லாது போனாலும் 'உன் குரலையாவது கேட்கணும்டா!' என்று சென்டிமென்டலாக அம்மா சொன்னதால் பதினேழு வருடங்களாகத் தொடர்ந்து வருவதற்கு ஃபோன் தான் காரணம்.  &lt;br /&gt;&lt;br /&gt;டிரெயினிங் முடிந்து சண்டிகரில் போஸ்டிங்.   ஒரு வீட்டின் அவுட் ஹவுசில் குடியிருந்தேன்.  ஒரு சிறு அறை, படுக்கையறை, சமையல் மற்றும் குளியலறை.  வேலை நிமித்தம் வீட்டில் ஃபோன், எஸ்.டி.டி. வசதியுடன்.  நான்காவது மாதம் ஃபோன் பில்லைப் பார்த்ததும் மயக்கமே வந்து விட்டது - ரூபாய் இருபதாயிரத்துக்கும் கொஞ்சம் அதிகம்.  பில்லை சரிபார்க்கலாம் என்றால் அந்த நாட்களில் எண்ணிக்கை வாரியாக பட்டியல் கிடையாது.  அப்புறம் தான் தெரிந்தது, எஸ்.டி.டி. இருக்கும் வீட்டுக் காரர்கள் தொலைபேசி வாரிய ஊழியர்களை சரியாக 'கவனிக்கவில்லை' என்றால், மற்ற வீட்டு தொலை தூரக் கட்டணமெல்லாம் நம் வீட்டு ஃபோனிற்கு வந்து விடும் என்று.  இது பரவலாகத் தெரிந்திருந்த ரகசியமானதால் அலுவலத்தில் பில்லை கட்டிவிட்டு, எஸ்.டி.டி. இணைப்பை மட்டும் துண்டித்து விட்டோம்.  இந்த பில் தகிடுதத்தம் பரவலாகிப் போனதால், பின் நாளில் எல்லா எக்சேஞ்களையும் மாற்றி, எண் வாரியாக கட்டண விவரம்  தரும் முறையைக் கொண்டு வந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளின் இறுதியில் இந்தியாவில் பரவலாக வந்த ஒரு விஷயம் 'எஸ்.டி.டி. பூத்' என்று தனியாரால் இயக்கப்பட்ட தொலை தூர இணைப்பகங்கள்.  சண்டீகரில் வசிக்கையில் (92-94) இந்த மாதிரியான ஒரு தொலை தூர இணைப்பகத்தில் எனக்கு 'கணக்கு' இருந்தது.  நான் வீட்டிலிருந்தே அவர்களுக்கு ஃபோன் செய்து சென்னையின் எண்ணைக்  கொடுத்தால் அவர்கள் அங்கிருந்து இணைப்புக் கொடுப்பார்கள்.  முதலில் கொஞ்சம் 'டெபாசிட்'; பின் மாதா மாதம் அவர்களுக்கான கட்டணத்துடன் 'அக்கவுண்ட்' செட்டில் பண்ண வேண்டும்.  இந்த முறையில் சேதாரம் அதிகம் இல்லை.  94 மே மாதம் காசியாபாத் (உ. பி.) வரும் வரை இந்த முறையில் தான் தொலை தூர ஃபோன் பேச்சு.  &lt;br /&gt;&lt;br /&gt;உத்திரப் பிரதேசத்தில் வேறு விதமான பிரச்சனை.  அரசு அலுவலக  ஊழியருக்கு எப்போதெல்லாம் பணத் தட்டுப்பாடு வருகிறதோ அப்போதெல்லாம் நம் வீட்டு ஃபோன் வேலை செய்யாது.  அவர் வந்து கை வைத்ததும் வேலை செய்ய ஆரம்பிக்கும்; அதற்காக அவர் கையில் ஏதாவது வைக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது நடக்கும் விஷயம் இது.  பண்டிகைக் காலங்களில் மாதத்தில் இரண்டு தடவையாவது இந்தத் தடங்கல் வரும்.  94 கடைசியில் வேலை மாறி ஆஸ்திரேலியா சென்றேன்.  சிட்னியிலிருந்து திருச்சிக்கு வாரக் கடைசியில் அம்மாவுக்கு ஃபோன்.  பரமக்குடியில் முதல் முதலாக அடுத்த தெருவுக்கு தூக்க முடியாமல் தூக்கி மூன்று எண்கள் சுற்றி பேசியதில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பேச எடையும் கயறும் (அதான் சார் wire) இல்லாத ஃபோனில் பத்து எண்கள் அழுத்திப் பேச முடிந்த முன்னேற்றத்தை நான் காண கிட்டத்தட்ட இருபது வருடம் ஆனது. &lt;br /&gt;&lt;br /&gt;சிட்னியிலிருந்து திரும்பி டில்லி வந்த போது முதல் முறையாக செல் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்.  ஒரு குட்டி செங்கல் அளவு, கனம்; ஆனால் கருப்பு நிறம். அதற்காக தனி பாட்டரி, அதை மின் இணைப்பில் பொருத்தி புத்துயிர் கொடுக்க தனியாக இன்னுமொரு சாதனம். அந்நாளில் தச்சர்கள் மரத்தை இழைப்பதற்காக ஒரு கருவி வைத்திருப்பார்களே, அது போல இருக்கும்.  நான்கு மணி நேரம் மின் இணைப்பில் வைத்திருந்தால், ஃபோனும் நான்கு மணி நேரம் உயிரோடு இருக்கும்!  நாள் முழுவதும் வேண்டுமென்றால், இரண்டு பாட்டரிகளை முதல் நாள் இரவு உயிர்ப்பித்து வைத்திருக்க வேண்டும்.  இந்த எல்லா உபகரணங்களையும் சேர்த்தால் முன்னாளின் கருப்பு ஃபோன் அளவுக்கு எடை!  இருந்தாலும் 'என்னே தொழில்நுட்ப வளர்ச்சி' - எங்கிருந்து வேண்டுமானாலும் பேச முடிகிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆகஸ்ட் மாதம் கூகுளின் நெக்சஸ் ஃபோன் வாங்கினேன்.  இதில் பேச மட்டும் செய்ய வேண்டாம்.  பாட்டு கேட்கலாம்; படம் பிடிக்கலாம்; புத்தகம் படிக்கலாம்; இணையத்தில் மேயலாம். இன்னம் எத்தனை எத்தனையோ விஷயங்கள்.  ஆனால் தடவிக் கொடுத்துத் தான் வேலை வாங்க வேண்டும்.  அந்தக் காலத்தில் சினிமாவில் கோபத்தைக் காட்ட வேகமாக ஃபோனை வைப்பார்கள்; இப்போது என்னதான் கோபம் இருந்தாலும் மெதுவாக அழுத்தத் தான் வேண்டும்.  கையளவே இருக்கிறது; இருந்தாலும் ஏகத்துக்கு வேலை செய்கிறது!!  முதல் முதலாக கல் அளவில் பார்த்த செல் ஃபோனுக்கும், இதற்கும் எத்தனையோ வித்தியாசம்; இந்த மாற்றத்திற்கு கிட்டத்தட்ட இருபது வருடங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பேச உதவும் கருவியில் நாற்பது வருடங்களில் நான் கண்ட முன்னேற்றம் அதிகம்.  என்ன பேசினேன், யாருடன் பேசினேன் என்பதிலும் நிறைய மாற்றங்கள்.  அதைப் பற்றி அடுத்த பதிவில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-3362703965990103980?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/3362703965990103980/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=3362703965990103980' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/3362703965990103980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/3362703965990103980'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/10/2.html' title='பேசு மனமே பேசு! - 2'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-2200075843836619050</id><published>2011-09-08T17:15:00.010-04:00</published><updated>2011-09-08T17:22:31.231-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேசு மனமே பேசு! - 1</title><content type='html'>&lt;b&gt;பேசு மனமே பேசு! - 1&lt;/b&gt;   &lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாட்கள் (வருடம்) தள்ளிப் போட்டு ஒரு வழியாக சென்ற மாதம் புத்தம் புதிதாக ஒரு 'ஸ்மார்ட் ஃபோன்' வாங்கி விட்டேன் - கூகுள் நெக்ஸஸ் - எஸ்!  உபயோகிக்க ஆரம்பித்து மூன்று வாரங்களாகி விட்டது; இன்னமும் உபயோகிக்கும் விதம் முழுவதுமாகப் புரியவில்லை.  போனில் எக்கச்சக்கமான விஷயங்கள் - இணையத்தில் தேடுவதில் ஆரம்பித்து, புத்தகம் படிக்க, சுடோக்கு விளையாட, வழி தேடி வரைபடம் பார்க்க என்று ஏகப்பட்ட சமாசாரங்கள்.  இப்படி எதையாவது செய்து கொண்டிருக்கையில், வீட்டிலிருந்து ஃபோன் வந்தால் சடாரென்று எடுத்து பதில் சொல்லமுடியாமல், தட்டுத் தடுமாறி, தடவித் தடவி 'ஹலோ' என்றால் எதிர் முனையில் 'ஃபோனெடுக்க என்ன இத்தனை நேரம்?' என்று கேள்வி!  இந்தத் தொலை பேசி, தொல்லைப் பேசியாகி விட்டது.    &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் தொலைபேசி என்ற அழகான வாக்கியம் இருந்தாலும், ஃபோன் என்று சொல்லிப் பழகிவிட்டது.  எஸ்.வி. சேகர் ஒரு நாடகத்தில் சொல்லுவார் 'ஓ பிராமிஸ் இப்போது தமிழ் வார்த்தையாகி விட்டதா' என்று; எனக்கு ஃபோன் தமிழ் வார்த்தையாகி விட்டது.   இதனால் ஒரு உபயோகம்: வாய்ப்பாடில் வரும், அ, ஆ, இ, ஈ  தமிழ் வார்த்தைகளுக்கு (அணில், ஆடு, இலை, ஈக்கள்), ஃ என்பதற்கு அஃது தவிர இன்னுமொரு தமிழ் வார்த்தை சேர்க்கலாம்!  நிறைய தமிழ்ப் பிரியர்கள் இது சரியல்ல என்று சொன்னாலும், இந்தப் பதிவில் ஃபோன் என்றே குறிப்பிடுகிறேன்!    &lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையில் முதல் முதலாக வந்த பரிச்சயம் பரமக்குடியில் இருந்த பெரியப்பா வீட்டு கறுப்பு ஃபோன். தூக்க முடியாத கனம் (அப்போது எனக்கு நான்கு, ஐந்து வயது).  பெரியப்பா வக்கீலாக இருந்தார்; வீட்டு போர்டிகோ தாண்டி, அவருடைய வீட்டு அலுவலகம்.  வீட்டின் முதல் அறைக்கும், அலுவலகத்திற்கும் இடையே ஒரு ஜன்னல்.  அந்த ஜன்னலுக்கு அருகிலே சிறு மர மேடை; அந்த மேடையில் ஃபோன்.   ஜன்னலில் கீழ்ப் பாகத்தில் கம்பிகனின் இடைவெளி அதிகம் - ஃபோனின் ரிசிவரை ஜன்னலின் வழியாக எடுக்க வசதியாக இருப்பதற்காக.  வீட்டுப்  ஃபோனின் எண் 234 - இதை எண்களைச் சுற்றும் தகட்டின் நடுவே பதித்திருப்பார்கள்.   அந்த  ஃபோன் வாசனையே தனி.  ஃபோனை இணைத்திருக்கும் வயர் பிளாஸ்டிக் கருப்பு நிறம்; அதை ஒரு விதமான சிகப்பு நிற நூலால் உரை மாதிரி போட்டு சுற்றி வைத்திருக்கும். ஒவ்வொரு எண்ணைச் சுற்றும் போதும் வரும் சப்தமும் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.    &lt;br /&gt;&lt;br /&gt;பெரியப்பாவின் குமாஸ்தா. வேலை விஷயமாக மானாமதுரை, மதுரை என்றெல்லாம் டிரங்கால் போட்டுப் பேசுவார்.  'அலோ. அலோ' என்று அவர் அலறுவதைக் கேட்பதே ஒரு தமாஷ் தான்! அவர் பேசுகையில் எதிர் முனையில் என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியாது; ஆனாலும் நானும் என் பெரியப்பா பிள்ளையும் அவர் பேசும் தோரணையை காப்பியடித்து ("அப்படியா?",  "ஆமா", "அலோ, அலோ") அவர் இல்லாத போது கற்பனையாக ஃபோன் பேசுவோம். ஒரு தடவை கணம் தாங்காமல் கீழே போட்டு விட்டேன்; நல்ல வேளை உடையவில்லை.  இருந்தாலும், அதன் பின்னால் நாங்கள் விளையாட அந்தப் ஃபோனை உபயோகிக்க அனுமதியில்லை.  இரண்டு தீப்பெட்டிகளை  நூலால் கட்டி கற்பனை ஃபோன் பேசுவோம்.  பின்னால் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கையில் இந்த ஃபோன் சமாசாரம் எப்படி இயங்குகிறது என்பது பற்றிப் புரிந்தது.     &lt;br /&gt;&lt;br /&gt;பட்டுக்கோட்டை, மன்னார்குடி வாசத்தில் ஃபோன் ஒரு அரிதான விஷயமாகவே இருந்தது.  மற்ற உறவினர்களுடன் தொடர்பு கடிதம் மூலமாகத்தான்.  இந்தக் "கடுதாசி" பற்றி தனிப்பதிவு இன்னொரு நாள்!  திருச்சியில் கல்லூரியில் படிக்கையில், அப்பாவின் தயவில் ஸ்டேட் பாங்க் வட்டார அலுவலகத்தில் "ஹாட் லைன்" ஃபோன் பார்க்க முடிந்தது.  மற்ற வட்டார, தலைமை அலுவலகங்களோடு நேரடித் தொடர்பு கொள்வதற்காக (திருச்சியிலிருந்து மதுரை,சென்னை போன்ற இடங்களுக்கு) நேரடி இணைப்புகள்.  ஒரு அறையில், போதிய பாதுகாப்போடு (காவலுக்கு ஒருத்தர், எல்லா ஃபோன் கால்களையும் எழுத ஒரு நோட்டு!) வரிசையாக தனித்தனி ஃபோன்கள்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊருக்கு.   ஹார்லிக்ஸ் விளம்பரப் பையன் பாணியில் 'சுற்ற வேண்டாம்; அப்படியே பேசிடுவேன்!' வகை.  எந்த எண்ணையும் சுற்ற வேண்டாம்; நேரடியாக ரிசீவரை எடுத்தால் அடுத்த ஊரில் மணியடிக்கும்.    &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிப் படிப்பு முடிந்து சென்னையில் சி.ஏ. படிக்கும் போது தணிக்கை உத்தியோகம்.  வேலைக்காக மற்ற நிறுவனங்களுக்கு செல்கையில் ஃபோன்களின் அருகாமை அதிகரித்தது.  அந்த அருகாமை மற்றவர்களோடு பேச வேண்டும் என்ற தேவையையும் தோற்றுவித்தது.  ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு விதமான 'பாலிசி'.  அனேகமாக எல்லோருமே ஒரு விதத்தில் ஃபோன் உபயோகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.  இருந்தாலும் 'ஆடிட்டர் ஆபிஸ்' என்ற அந்தஸ்த்தை கிட்டத்தட்ட அனைவருமே துஷ்பிரயோகித்தோம்! நான் சேர்ந்த வருடத்தில் என்னோடு மூன்று பேர்கள் எங்கள் ஆடிட்டரிடம் வேலைக்கு சேர்ந்தோம்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் - ஒருவர் பாடி,மற்றொருவர் மவுண்ட் ரோடு, இன்னுமொருவர் ஆழ்வார்ப்பேட்டை.  மாலையில் எல்லோருமே நுங்கம்பாக்கம் ஹை ரோடில் சி.ஏ. இன்ஸ்ட்டிட்யூட்டில் சி.ஏ. வகுப்புக்கு செல்வோம்.  தினம் ஒரு முறையாவது ஃபோனில் ஒருவரோடு ஒருவர் பேசுவோம் - ஓசியில் கிடைத்ததால்! அப்போதெல்லாம் 'கான்ஃப்ரன்ஸ்' வசதி கிடையாது. புலி, ஆடு, புல்லுக்கட்டு கதை போல மூன்று, நாலு முறை பேச வேண்டியிருக்கும்!    &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நினைத்த போதேல்லாம் பேச முடியாது.  அனேகமாக ஃபோன், அக்கவுண்டண்ட் மேசையில் தான் இருக்கும்.  அவர் இல்லாத போது பேசுவது வசதி; அவர் இருந்தால், கொஞ்சம் பேச்சைக் குறைக்க வேண்டியிருக்கும்.  அவருக்கு கோபம் வந்து ஆடிட்டரிடம் வத்தி வைத்தால் பிரச்சனையாகிவிடும் என்று சீனியர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தார்கள்.  இருந்தாலும், ஃபோனின் அருகாமை, பேச்சை அதிகரித்தது.  வீட்டில் ஃபோன் இல்லாது போனாலும், மற்ற அலுவலக எண்களைக் குறித்து வைத்துக் கொள்ள முதல் முதலாக டெலிஃபோன் டைரியை உபயோகித்தேன் - 1988ல்.  அந்த சிறு பாக்கெட் புத்தகத்தில் உள்ள அனைத்து எண்களும் இப்போது மாறிவிட்டது.  இருந்தாலும்,சென்டிமென்டாக அந்த அரக்குக் கலர் டைரி இன்னமும் என்னிடம் இருக்கிறது!  89ல் முதல் முதலாக சுற்றும் ஃபோனைத் தவிர, பட்டன் அழுத்தும் ஃபோன் பார்த்தேன்!  கனம் குறைவான அதே சமயத்தில் விரைவாக எண்ணை அழுத்த முடிகிறதே என்று ஒரே சந்தோஷம்!    &lt;br /&gt;&lt;br /&gt;வேலையில் இருக்கையில் வந்த ரூ. 20,000 ஃபோன் பில், முதல் முதலாக 96ல் வாங்கிய'செல் ஃபோன்' (கல்) பற்றி அடுத்த பதிவில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-2200075843836619050?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/2200075843836619050/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=2200075843836619050' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/2200075843836619050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/2200075843836619050'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/09/1.html' title='பேசு மனமே பேசு! - 1'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-9126512837229215764</id><published>2011-09-02T15:10:00.000-04:00</published><updated>2011-09-02T15:10:37.021-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஆடல் காணீரோ?</title><content type='html'>&lt;b&gt;ஆடல் காணீரோ?&lt;/b&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இந்த ஆகஸ்ட் மாதம் வித்தியாசமானது. &lt;br /&gt; &lt;br /&gt;முதல் வார இறுதியில் மகளுடன் (எட்டு வயது) பத்து நாள் லண்டன் பயணம்.  என் மனைவியின் அண்ணன் குடும்பத்துடன் (அவர்களுக்கு ஏழு வயதில் பெண்) விடுமுறைக்காக கொஞ்சம் சுற்றலாம் என்று எண்ணிக் கொண்டு போய்ச் சேர்ந்தோம்.  இரண்டாம் நாள் செஸ்ஸிங்க்டன் சென்று குழந்தைகளோடு சேர்ந்து, உடம்பை ஆட்டி வைத்த விளையாட்டு சமாசாரங்களில் (ரோலர்-கோஸ்டர், ரங்க ராட்டினம், இத்யாதி) சுற்றி விட்டு களைத்துப் போய் வீடு வந்து தொலைக்காட்சியைப் பார்கையில் லண்டன் கலவரம் பற்றிச் சொன்னார்கள்.  குழந்தைகளோடு சந்தோஷமாக ஆடலாம் என்று பார்த்தால், தெருக்களில் வேறு விதமான ஆட்டம்.  இரண்டு நாட்களுக்கு வேறு எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம்.  பொழுது போவதற்காக குழுந்தைகள் இரண்டும் 'வீ'  (Wii) பெட்டியின் தயவில் டென்னிஸ், கோல்ஃப் என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக தெருக்களில் ஆட்டம் குறைந்ததும், மறுபடியும் சுற்றக் கிளம்பினோம்.  நாளைக்கு ஒருமுறையாவது மழை வந்தது - அரை மணி அல்லது ஒரு மணி நேரம் மழை பெய்து முடிந்ததும் சில்லென்று காற்றுடன் சுள்ளென்று வெயிலும் அடித்தது.  மொத்தத்தில் வருண தேவன், சூரிய தேவன், வாயு தேவன் என்று அனைவரும் கொஞ்சம் விளையாடினார்கள்!  இரண்டு நாள் வீட்டிலேயே இருந்தாலும், மற்ற நாட்களில் தினமும் ஆடிக் களைத்ததில் திரும்பி வந்தவுடன் வீட்டில் கொஞ்சம் அமைதி.  பத்து நாள் பயணம் பறந்து போனதே தெரியவில்லை. &lt;br /&gt; &lt;br /&gt;விமானம் ஏறி மகளுடன் நாடு திரும்புகையில் இறங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் இருக்கையில், இருக்கைப் பட்டியை (seat belt) கட்டிக் கொள்ளுமாறு அறிவித்தார்கள் - காரணம் வெளியே பலத்த காற்றுடன் கூடிய மழை!  அதுவரை பறப்பதையே உணரவில்லை, அவ்வளவு சொகுசாக இருந்தது; திடீரென்று செஸ்ஸிங்டன் ரோலர்-கோஸ்டர் போல தூக்கித் தூக்கிப் போட்டது.  விமானி திறமையுடன் நூவர்க் வந்து இறக்கியவுடன், பயணிகள் (நானும்தான்) கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.  சிறு வயதில் இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் நாற்பதாவது ஓவரில் தடுமாறுகையில் வந்த டென்ஷன், பின் ஒரு வழியாக நாற்பத்தொன்பதாவது ஓவரில் வெல்லுகையில் வரும் நிம்மதி கலந்த சந்தோஷம் போல இந்த விமானப் பயணம் அமைந்தது.  வீடு வந்து சேர்ந்து இரண்டு நாட்களுக்கு அதிகம் தூங்கி ஆட்டக் களைப்பைப் போக்கிக் கொண்டோம், நானும் என் மகளும்.&lt;br /&gt; &lt;br /&gt;மூன்றாம் வாரம் எப்போதும் போல அலுவலக வேலை - இரண்டு வார விடுமுறையில் சேந்து விட்ட விஷயங்களை ஒரு மாதிரியாக முடித்து விட்டு வார இறுதியில் வீட்டில் சேர்ந்த வேலைகளைக் கொஞ்சம் செய்ய முடிந்தது.  இருபத்து மூன்றாம் தேதி அலுவலகத்தில் வழக்கம் போல தொலைபேசியில் கதையளந்து கொண்டிருக்கையில் திடீரென்று மேஜை, நாற்காலி எல்லாம் ஆடுவது போல ஒரு பிரமை.  காலையில் ஒன்றும் சாப்பிடாமல் அவரசமாக வேலைக்கு வந்து விட்டதால் தலை சுற்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில், தொலைபேசியில் எதிர் முனையில் சத்தம் - அங்கும் நாற்காலி ஆடுவதாக.  அறைக்கு வெளியே சென்று பார்த்தால், மொத்த தளத்திலும் உள்ள சக ஊழியர்கள் எழுந்து ஒருவரை ஒருவர் பீதியுடனும், பிரமிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அப்புறம் தான் தெரிந்தது அது நிலநடுக்கம் என்று.  வாஷிங்டனில் இருந்து பாஸ்டன் வரை உணர்ந்ததாக அப்புறம் தெரிய வந்தது. &lt;br /&gt; &lt;br /&gt;வீட்டில் மகளுக்கு ஆயிரம் கேள்வி, நில நடுக்கம் பற்றி.  பாதிக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை; இணையத்தில் (கூகுளுக்கு நன்றி) தேடித் தேடி ஒரு வழியாக அவளை திருப்தி செய்தேன்.  அப்படித் தேடியதில் நான் தெரிந்து கொண்ட சொல்ப விஷயங்கள்: பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் (பூமத்திய ரேகையின் அருகில்) கிட்டத்தட்ட மணிக்கு ஆயிரம் மைல்.  இது பந்து, அல்லது பம்பரம் ஒரே இடத்தில் தன்னைத் தானே சுற்றுவது போல.  பூமி சூறியனை சுற்றும் வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 66/67 ஆயிரம் மைல்கள்!  இந்த வேகத்தில் சுற்றினாலும், அதன் மேலே இருக்கும் கட்டடங்கள், மரங்கள், மலைகள் பூமியிலிருந்து பறந்து போகாமல் ஸ்திரமாக இருக்கின்றன.  பூமிக்குள் இருக்கும் கற் படுகைகள் (tectonic plates) கொஞ்சம் திரும்பினாலும், நிலநடுக்கம் வந்து விடுகிறது!  ஒரு விதத்தில் பூமியின் ஆட்டம் அபாரம் – அந்தரத்தில், நிற்காமல் அதி வேகத்தில் நடக்கும் ஆட்டம்.  கொஞ்சம் தாளம் பிசகினாலும், நமக்கு நடுக்கம்தான்!&lt;br /&gt; &lt;br /&gt;மகளுக்கு நிலநடுக்கம் பற்றி விளக்கி விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிக் கொண்டிருந்த புயல் பற்றிச் சொன்னார்கள்.  அது சும்மா கடலிலேயே இருக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை நோக்கி வர ஆரம்பித்தது.  எல்லா நிலையங்களிலும் ஐரீன் புயல் பற்றியே பேச்சு - எங்கேல்லாம் போகும், என்ன பாதிப்பு வரும் - ஒவ்வொருவரும் தனக்குத் தோன்றியவைகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள்.  வட கரோலினா மாநிலத்தில் நாட்டினுள் புகுந்த புயல் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு, வட கிழக்கு என்று நகர்ந்து வந்து கொண்டிருந்தது.  சனிக்கிழமை (29) மதியத்திலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது.  எடிசனுக்குப் புயல் வந்த போது ஞாயிறு அதிகாலை - மிக பலமான காற்று - வீட்டுக்கு வெளியே பெரிய மரங்கள் ஆடுவதைப் பார்க்கையில் பயமாகத்தான் இருந்தது.  அவ்வப் போது மின்சாரம் நின்று போனது!  வீட்டின் பின்புறம் ஆறு போலத் தண்ணீர்.  போதாக்குறைக்கு வீட்டு அடித்தளத்தில் (basement) தண்ணீர் வர ஆரம்பித்தது!   நான், என் மனைவி, என் மாமனார் என்று ஒரு சிறு குழு; நீரகற்றும் வேலையில் இரண்டு/மூன்று மணி நேரம் செலவழித்து சாமான்கள் சேதமாகாமல் ஒரு வழியாக சமாளித்தோம்.  சிறு வயதில் வில்லிவாக்கதில் (1975/76 என்று நினைப்பு) புயலினால் ரெட் ஹில்ஸ் ஏரி உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் வந்தது நினைப்புக்கு வந்தது.  அப்போது இரண்டு நாளைக்கு மொட்டை மாடியில் கிரசின் ஸ்டவ்வில் பொங்கல் வைத்து சாப்பிட்டோம்! இப்போது அந்த அளவுக்கு தண்ணீர் வரவில்லை என்ற சந்தோஷம்; அதே சமயத்தில் தொலைக்காட்சியில் புயலினால் வந்த சேதத்தைப் பார்க்கையில் வருத்தமும் வந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் எத்தனை விதமான ஆட்டங்கள்.  மாத ஆரம்பத்தில் மன மகிழ்ச்சிக்காக நாமே முயன்று செய்த, மற்றவர்களுக்கு இன்னல் தராத ஆட்டங்கள் - (ரங்க ராட்டினம், 'வீ' போன்றவை).  மற்றவர்களை துன்புறுத்தும் தாளம் தவறிய ஆட்டங்கள் - லண்டன், லிபியா கலவரங்கள்.  தொலைக்காட்சியில் அடிபட்டு தடுமாறிக் கொண்டிருந்த மாணவனுக்கு உதவி செய்வது போல வந்து அவன் பையில் இருந்தவற்றை எடுத்துக் கொண்டு சென்ற கொடுரம்; க்ராய்டன் பகுதியில் வீட்டை முற்றிலுமாக நெருப்பில் இழந்த  குடும்பத்தினரைப் பார்த்ததை நினைக்கையில் இப்பவும் வருத்தம் வருகிறது.  இயற்கையின் ஆட்டங்கள் - லண்டனில் ஒரே நாளில், மழை, வெயில், காற்று என்று மாறி, மாறி வந்தது மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.  அந்த ஆட்டம் ஒரு விதமான நளினமான நடனம் போல இருந்தது.  அதே இயற்கை நிலநடுக்கமாகவோ, புயலாகவோ ஆடிய போது பயம்தான் வந்தது.  மாத ஆரம்பத்தில் நினைத்தும் பார்க்கவில்லை இந்த மாதத்தில் இத்தனை ஆட்டங்கள் நடக்கும் என்று.  இப்போது யோசித்தால், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர் பாலையா சொன்ன 'அடேங்கப்பா!  ஆட்டம் ஜாஸ்தியாயிருக்கே!' வசனம் நினைப்புக்கு வருகிறது. இது போன்று எத்தனை விதமான ஆட்டங்களை வாழ்க்கையில் பார்க்கப் போகிறோமோ என்று நினைத்தால் பிரமிப்பும் பயமும் தான் வருகிறது. ஆட்ட நாயகனான தில்லையரசன் தான் தாளம் தப்பாமலிருக்க அருள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-9126512837229215764?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/9126512837229215764/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=9126512837229215764' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/9126512837229215764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/9126512837229215764'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/09/blog-post.html' title='ஆடல் காணீரோ?'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-6856105869664805475</id><published>2011-07-12T19:47:00.007-04:00</published><updated>2011-07-12T20:41:03.054-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இலக்கு – 10</title><content type='html'>&lt;strong&gt;இலக்கு – 10 &lt;/strong&gt; &lt;br /&gt;                               &lt;br /&gt;வளர்ச்சி உயிரினங்களின் இயல்பு.  தாமாக வளரும் உடலுறுப்புகளையும், அவ்வாறு வளராத திறன்களையும் முயன்று வளர்த்திக் கொள்வது தவறாகத் தோன்றவில்லை.  வளர்ச்சியடைவது தவறாகத் தோன்றாவிட்டாலும், எது வளர்ச்சி என்று அறுதியிட்டுக் கூறுவது அவ்வளவு சுலபமான விஷயமாகத் தோன்றவில்லை.  காலப் பயணத்தில் முன்பிருந்த நிலையை விட தரம் உயர்ந்தால் அது வளர்ச்சியின் அடையாளம்.  முன்னாளில் படித்த ஒரு ஆங்கிலப் பழமொழி: ‘Life is change.  Growth is optional.  Choose wisely.’  "வாழ்க்கை மாற்றங்கள் நிரம்பியது.  வளர்ச்சி நம் இஷ்டத்திற்கு விடப்பட்டது.  அறிவுணர்ந்து தேர்ந்தெடு!"&lt;br /&gt; &lt;br /&gt;கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய 'காலக் கணிதம்' என்ற கவிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: &lt;br /&gt;“கல்லாய் மரமாய்க் காடுமே டாக&lt;br /&gt;மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்&lt;br /&gt;மாற்றம் எனது மானிடத் தத்துவம்&lt;br /&gt;மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்&lt;br /&gt;எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை&lt;br /&gt;என்ப தறிந்தே ஏகுமென் சாலை”.&lt;br /&gt; &lt;br /&gt;மனித வாழ்க்கையில் நிரந்தரமான ஒன்று மாற்றம் - அது வளர்ச்சியை நோக்கிச் செல்லாத போது ஏமாற்றம் தான்.  மாற்றம் இல்லாமல் இருக்க முடியாது.  இந்த மாற்றம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் விதமாக நாம் மாற்ற முயல வேண்டும்.  இலக்காக வளர்ச்சியைக் கருதும் போது ஒரு பொறுப்பு வருகிறது.  மாற்றங்கள் விதியின் விளைவு என்று எடுத்துக் கொண்டாலும், அதன் திசையை, வளர்ச்சியைத் நிர்ணயிக்கும் கருவியாக என் முடிவுகள், நடப்புகள் அமைய வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;அதே சமயத்தில் எப்படி வளர்கிறோம் என்பது முக்கியமானது.  உடலளவில் 'இயக்க ஊக்கிகள்' என்றழைக்கப்படும் ஊக்க மருந்துகள் (Steroids) உடலுறுப்புகளில் உடனடி வளர்ச்சியைத் தந்தாலும் பின்னாளில் அதிகமான உடலுபாதைகளைத் தருவதை நாம் காண்கிறோம்.  குறைவளிக்கும் பக்க விளைவுகள் தராத வழிமுறைகள் தரும் வளர்ச்சியே உன்னதமானது. முன்பு எழுதிய ஒரு &lt;a href="http://pranganathan.blogspot.com/2005/07/blog-post_24.html"&gt;கவிதையின்&lt;/a&gt; சில வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னேற்றம் வேண்டி நாகரீகமானேன்&lt;br /&gt;மாறியபின் வந்தது தெளிவு&lt;br /&gt;நாகரீகத்தில் இல்லை முன்னேற்றம்.&lt;br /&gt; &lt;br /&gt;வளர்ச்சி என்று கருதி தவறான வழிமுறைகளை அறியாமல் தேர்ந்தெடுப்பது சகஜம்.  இதைத் தவிர்க்க அறிவை வளர்ப்பது அவசியம்.  ஆதலால் இங்கு வளர்ச்சிக்கு அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது.  எந்த விஷயத்தையும் அறிந்து கொள்ளுதல் தவறு என்று வாதிட முடியாது.  என்னைப் பொருத்தவரையில் வளர்ச்சியும் அறிதலும் ஒன்றை ஒன்று ஒத்திப் பிணைந்திருக்கின்றன.  இரண்டுமே ஒரு உயிரின் வாழ்வுக்கு அத்தியாவசமானது.  இவைகளை இலக்காகத் கொள்ளுதல் தவறில்லை.  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது: "அறிவு வளர்ச்சி பிறப்பில் தொடங்கி இறப்பில் தான் முடிய வேண்டும்".  ‘Intellectual growth should commence at birth and cease only at death.’&lt;br /&gt; &lt;br /&gt;இந்த அறிவு வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை சிந்திக்கையில், பாரதியாரின் ஒரு பாடல் - அறிவே தெய்வம் என்ற தலைப்பில் எழுதியது - நினைப்புக்கு வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;“ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி&lt;br /&gt;அலையு மறிவிலிகாள் - பல்&lt;br /&gt;லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்&lt;br /&gt;டாமெனல் கேளீரோ?&lt;br /&gt; &lt;br /&gt;மாடனைக் காடனை வேடனைப் போற்றி&lt;br /&gt;மயங்கு மதியிலிகாள் - எத&lt;br /&gt;னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்&lt;br /&gt;றோதி யறியீரோ?”&lt;br /&gt; &lt;br /&gt;அறிவே தெய்வம் என்று பாரதி எழுதியதற்கும், 'அனுபவமே தெய்வம்' என்று பொருள் வருமாறு கண்ணதாசன் எழுதியதற்கும் (&lt;a href="http://spbvana.blogspot.com/2010/05/blog-post.html"&gt;நீ மணி நான் ஒலி&lt;/a&gt;) அதிக வித்தியாசம் இல்லை.  அனுபவம் அறிவாக மாறுகிறது.  அதே சமயத்தில் அனுபவம் மட்டுமே அறிவாக மாறுவதில்லை.  இம்மானுவேல் கன்ட் சொன்னது: 'நம்முடைய அறிவனைத்தும் அனுபவத்தில் தொடங்கினாலும், அனுபவத்தால் மட்டுமே விளைந்ததாகக் கருத முடியாது'.  [That all our knowledge begins with experiences, it by no means follows that all arises out of experience – &lt;a href="http://www.marxists.org/reference/subject/ethics/kant/reason/ch01.htm"&gt;Immanuel Kant in Critique of Pure Reason&lt;/a&gt;].  அனுபவத்தால் தோன்றிய அறிவை ஆராய்ந்து, அசைபோட்டு, உறுமாற்றி ஞானமாக்கி வைப்பதும் அறிவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இலக்கான 'வாழ்தல்' சரியா, அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகளை விட இரண்டாம் இலக்கான மகிழ்ச்சி சரியா அதனை அடையும் முறை சரியா என்ற கேள்விகள் கடினமானதாக இருக்கின்றன.  இதைப் பற்றி யோசிக்கையில் என் அறிவு, அனுபவப் பற்றாக்குறை நிதர்சனமாகத் தெரிகிறது.  இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட ஆரம்பிக்கையில் வளர்ச்சியும் வருகிறது.  பதில் தேடும் பயணத்தில், பதில் கிடைக்கையில், அறிவும் வளர்கிறது. மொத்தத்தில் இந்தப் பதிவுத் தொடரை எழுத ஆரம்பித்து, சுய தேடலில் கேள்விகள் கேட்டு, பதில் தேடிப் படித்த புத்தகங்களால் என்னுள் ஒரு வளர்ச்சியையும், அதனால் ஒரு மகிழ்ச்சி வந்ததையும் உணர்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;இந்த அறிவை, வளர்ச்சியை இலக்காக நான் எடுத்துக் கொண்டது தவறு என்று வாதிட எந்தக் காரணமும் தோன்றாததால், இவைகள் சரியான இலக்குகள்தான் என்று கருதுகிறேன்.  இவைகளை அடையும் முறைகளில் சரி எது என்று யோசிக்கையில், இந்தவிதமான குறிப்பிட்ட முறைதான் சிறந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  மாறாக எந்த விதமான செய்கைகளைச் செய்து வளர்ச்சியையோ அறிவையோ பெறுதல் சரியல்ல என்று குறித்துச் சொல்ல முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சியாலும், பெற்ற அறிவினாலும் என்னுடைய கடமைகளில் குறைவு வந்தால் இந்த வளரச்சியை, அறிவை அடைந்த முறை சரியான ஒன்றாக இருக்க முடியாது.  அதே போல வந்த வளர்ச்சியாலும், அறிவாலும், என்னால் மற்றவர்களுக்குக் கிடைத்து வந்த உதவியும், சந்தோஷமும் குறைந்து போனால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இல்லை; அதை அடைந்த முறை சரியல்ல என்று சொல்லலாம்.  சுருக்கமாகச் சொன்னால் எந்த விதமான வளர்ச்சியாலும், அறிவாலும் எனக்கு மட்டும் மகிழ்ச்சி வராமல், மற்றவர்களுக்கும் ஆதாயம் (அது அவர்களின் மகிழ்ச்சியாகவோ அல்லது வேறு விதமான உதவியாகவோ இருக்கலாம்) உண்டானால் அந்த வளர்ச்சியில், அறிவில் முழுமை இருக்கிறது; அதை அடைந்த முறை சரி என்று சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்தலில் ஆரம்பித்து, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று மொத்தமாகப் பார்க்கும் போது அனைத்திலுமே என்னோடு மட்டும் நின்று விடாமல் மற்றவர்களின் சுக-துக்கங்களையும், இன்னமும் சொல்லப் போனால் மற்ற உயிரினங்களின் வாழ்வு, மகிழ்ச்சி, வளர்ச்சியைப் பேணும் விதமாக என் இலக்கையடையும் வழிமுறைகள் அமைய வேண்டும் என்று புரிகிறது.  இந்த இலக்குகளை அடையும் வழிமுறைதான் என் வாழ்க்கை என்று பார்க்க ஆரம்பித்தால் புத்தர் சொன்னது போல பிற உயிர்களுக்கு இன்னல் தராத வாழ்க்கையை நடத்த முடியும் என்றும் தோன்றுகிறது.  அம்மாதிரியான வாழ்க்கையில் ஒரு முழுமையையும், திருப்தியையும் அடைய முடியும் என்றும் நம்பிக்கை வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;என் இலக்குகளை அடையும் வழிமுறைகள் சரியாக அமைந்து விட்டால் என் மகிழ்ச்சியும் மற்ற உயிர்களின் மகிழ்ச்சியும் ஒன்றாகி விடுகிறது; எனக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு பிணைப்பைப் பார்க்க முடியும்.  இதனால் 'நான்' என்ற குறுகிய உணர்வு குறைந்து, என் ஒருவனின் சுக-துக்கங்களுக்காக மட்டும் வாழாமல் இருக்க முடியும் என்றும் தோன்றுகிறது.  இது ஒருவிதத்தில் 'தன்னையே வெல்லும் விதம்'!  பாரதியாரின் ஆத்ம ஜெயம் என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,&lt;br /&gt;எத்தனை மேன்மைகளோ -&lt;br /&gt;தன்னைவென் றாலவை யாவும் பெறுவது&lt;br /&gt;சத்திய மாகுமென்றே&lt;br /&gt;முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்&lt;br /&gt;முற்று முணர்ந்தபின்னும்&lt;br /&gt;தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத்&lt;br /&gt;தாழ்வுற்று நிற்போமோ?"&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வு, என் மகிழ்ச்சி, என் வளர்ச்சி என்று இலக்குகளை வரையறுக்க ஆரம்பித்தாலும், விவேகானந்தர் சொன்னது போல அதை அடையும் முறை பற்றி சிந்தித்ததில் சரியான முறையில் அந்த இலக்குகளை அடைய 'நான்' என்ற உணர்வு குறைவது அவசியம் என்று தெரிகிறது.  இதை எந்த அளவுக்கு நான் அடையப் போகிறேன் என்று தெரியாது - காலம் தான் சொல்ல வேண்டும்.  இருந்தாலும், இதை எனக்குள்ளே யோசித்து, நானே உணர்ந்ததே ஒரு விதத்தில் திருப்தி தரும் விஷயம். இதுவும் ஒரு வளர்ச்சிதான்.  இன்னமும் வளர ஆசை!!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவுடன் இந்தத் தொடர் நிறைந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-6856105869664805475?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/6856105869664805475/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=6856105869664805475' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/6856105869664805475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/6856105869664805475'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/07/10.html' title='இலக்கு – 10'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-7516464092717699374</id><published>2011-05-28T17:37:00.005-04:00</published><updated>2011-05-28T18:19:33.636-04:00</updated><title type='text'>இலக்கு - 9</title><content type='html'>என்னுடைய இலக்காக நான் கருதும் "மகிழ்ச்சி"க்கும் சிதப்பிரக்ஞன் விளக்கத்தில் வரும் "ஆனந்த"த்திற்கும் வேறுபாடு இருந்தாலும் அடிப்படையில் சில ஒற்றுமைகளைக் காண்கிறேன்.  இரண்டிலுமே மற்றவர்களுக்கு எந்த விதமான கஷ்டமோ, தொந்திரவோ வர வாய்ப்பில்லை.  மற்றவர்கள் மனம் நொந்து வரும் மகிழ்ச்சியில் நிறைவு இல்லை.  அது மட்டுமல்ல, மனதில் இந்த மகிழ்ச்சியை, ஆனந்தத்தை அனுபவித்த பிறகு, அடைந்தவர் மனதில் எந்த விதமான குற்ற உணர்வோ, மனக்கசப்போ, தன்னிறக்கமோ வருவதில்லை.  அனுபவித்த பிறகு மனதில் திருப்தியும் நிறைவும் தராத மகிழ்ச்சி முழுமையானதில்லை.  இந்த இரண்டு குணாதிசயங்களும் இந்த மகிழ்ச்சியின் தூய்மையை, உன்னதத்தை உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'அர்த்தமுள்ள இந்து மதம்' தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதியது: "யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனின் உணர்வுகளை இந்து மதம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது".  மதத்தை விடுத்து பொது வாழ்க்கையின் தத்துவமாகப் பார்க்கையில் பக்க விளைவுகள் இல்லாத மகிழ்ச்சி உயர்வானதாகவே தோன்றுகிறது.  அதிலும், மற்றவர்களுக்கும், தமக்கும் குறைவுதரும் பக்க விளைவுகள் (negative side effects) இல்லாத செயல்கள் அரிதாக இருக்கையில் அந்த மாதிரி செயலால் மகிழ்ச்சியும் வந்தால் அது சிறந்த விஷயம்தான்.  இந்த மாதிரியான நிறைவான மகிழ்ச்சியை அடைவதை இலக்காகக் கொள்வது தவறில்லை என்றே நான் எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட "மகிழ்ச்சி" எல்லாமே இதுவரை அனுபவித்த வாழ்க்கையில் இருந்துதான்.    இந்த எடுத்துக்காட்டுகளை (தம்ஸ் அப் படப் புத்தகம், ராமநாதபுரம் கல்கி, ஆனந்த விகடன் படக் கதைகள்) இலக்காக நான் கருதும் "மகிழ்ச்சி" உணர்வை விவரிப்பதற்காகக் குறிப்பிட்டிருந்தாலும், மகிழ்ச்சிக்காக இது போன்ற விஷயங்களை மட்டுமே தேடுகிறேன் என்று அர்த்தம் இல்லை.  படிக்கும் எவரும் அவர்களுடைய வாழ்க்கையில் தொடர்பு படுத்திக் கொள்ள வசதியாக இருக்குமாறு பொதுவான உதாரணங்களைத்தான் தந்திருக்கிறேன்.  இந்த விஷயங்களில் கிடைத்த மகிழ்ச்சிக்கும், சிதப்பிரக்ஞன் ஆனந்தத்திற்கும் நான் புரிந்து கொண்ட முக்கிய வித்தியாசம் புலன்களின் தொடர்பு.  இதுவரை நான் அனுபவித்த மகிழ்ச்சிக் கணங்கள் வருவதற்கு என் புலன்களின் தேவை மிகவும் முக்கியம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மகிழ்ச்சியை உணர்வதற்கு அனைத்துப் புலன்களும் தேவையாக இல்லை.  சொல்லப் போனால் முழுதாக உணர சில புலன்கள் தடையாக இருந்ததால், மூளை தாமாகவே தேவையில்லாத புலன்களின் தன்மாத்திரை விஷயங்களை தடை செய்திருக்கிறது.  தம்ஸ் அப் படப் புத்தகத்தை புரட்டும் ஆர்வத்தில், அந்த மகிழ்ச்சியை உணரும் தருவாயில், அம்மா கூப்பிட்டதை காதில் வாங்காதவாறு மூளை கண் பார்க்கும் படத்தில் ஊன்றிப் போனது.  மனதுக்கு இன்பம் தரும் இசையைக் கேட்கையில் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கும் மனிதர்கள் ஏராளம்.  மனிதர்களுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் சாதாரணமான புலன்களின் மகிழ்ச்சியை உணரவே மற்ற புலன்கள் தடையாகி விடுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆசை என்பது புலன்களின் தேவையை நிரப்பும் உணர்வு; புலன்களின் பசி.  ஆசையை பூர்த்தி செய்து வரும் மகிழ்ச்சிக்கு புலன்களின் தொடர்பு இன்றியமையாதவாக மாறி விடுகிறது.  சிதப்பிரக்ஞன் விளக்கத்தில் 'ஆசையைத் துறந்து வரும் மகிழ்ச்சியே உன்னதமானது' என்று பொருள் வருகிறது.  புலன்கள் இல்லாமல் எப்படி மகிழ முடியும் என்ற கேள்வி முன்னாளில் இருந்தது.  மகிழ்ச்சியின் உச்சமாக 'ஆனந்தத்தை' அடைய எல்லாப் புலன்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை ஒரு சாத்தியமாக இப்போது உணர ஆரம்பித்திருக்கிறேன்.  சாதாரண புலன்களின் மகிழ்ச்சியின் உச்சத்தை உணர மற்ற புலன்கள் தடையாகின்ற போது, உன்னதமான மகிழ்ச்சியை அடைய அனைத்துப் புலன்களும் தடையாக இருக்க வாய்ப்புண்டு.  இருந்தாலும் எப்படி அதை அடைவது என்பதில் இன்னமும் தீர்மானமான வழி தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கோ, மற்றவருக்கோ மனதிலும், உடலிலும் குறைவுதரும் பக்க விளைவுகள் இல்லாத மகிழ்ச்சி உன்னதமானது; ஆனந்தமானது.  இதை அடைவதை இலக்காகக் கொள்வது தவறில்லை என்றே தோன்றுகிறது.  இதை அடைய புலன்களைத் தாண்டிய சிந்தனையில் வழியிருக்கும் என்றும் தோன்றுகிறது.  இந்த வழியை அடைவது என் வளர்ச்சியிலும், அறிதலிலும் தான் இருக்கிறது - அதனால் தான் இவையிரண்டும் என் இலக்குகள்.  மேலும் அடுத்த பதிவில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-7516464092717699374?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/7516464092717699374/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=7516464092717699374' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7516464092717699374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7516464092717699374'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/05/9.html' title='இலக்கு - 9'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-1830334923185337443</id><published>2011-05-08T10:24:00.001-04:00</published><updated>2011-05-08T10:24:00.771-04:00</updated><title type='text'>இலக்கு - 8</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கு - 8&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மனதுக்குப் பிடித்த பாடலைக் கேட்பதில் வரும் சுகத்துக்கும், இந்த குறிப்பிட்ட சில தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளில் (தம்ஸ் அப் படப் புத்தகம், ராமநாதபுரம் கல்கி, ஆனந்த விகடன் படக் கதைகள்) வந்த மகிழ்ச்சிக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு.  இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டு விவரிக்க முடியாத போதிலும் ஒரு விதமான திருப்தியை, முழுமையைக் காரணமாகச் சொல்லலாம்.  நான் இலக்காகத் தேடுவது இந்த இரண்டாம் வகை, முழுமை தரும், திருப்தி தரும் மகிழ்ச்சி.  தினசரி வாழ்க்கையில் சுகங்கள் அதிகமாக வந்தாலும், இது போன்ற நிறைவு தரும் மகிழ்ச்சிகள் அதிகம் இல்லை.  இது புலன்களில் இருக்கிறதா, அல்லது பார்க்கும் (கேட்கும், நுகரும்) பொருளில் இருக்கிறதா, அல்லது புலன்கள் வாயிலாக அறியும், உணரும் அறிவில் இருக்கிறதா?&lt;br /&gt; &lt;br /&gt;வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான வரலாற்றாசிரியர் (William James Durant - 1885 - 1981).  இவருடைய ஒரு படைப்பு கல்லூரியில் படிக்கும் போது எனக்கு அறிமுகமாயிற்று.  இவர் எழுதிய 'நாகரீகத்தின் கதை' - பதினொன்று அத்தியாயங்கள் - ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல்.  இன்னமும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை - ஏழு அத்தியாயங்கள் படித்திருக்கிறேன், மற்றவைகளை முழுவதுமாக முடிக்கவில்லை. அவர் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி விபரமாக எழுதியிருந்தாலும், ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ, குறிப்பிட்ட அந்த அத்தியாய வரலாற்றை ஒட்டி தன் சொந்தக் கருத்துகளை, தன் மன பிரதிபலிப்பை எழுதியிருப்பார்.  அது மிகவும் யோசிக்க வைக்கும் விதமாக இருக்கும்.  அப்படி அவர் எழுதிய ஒரு கருத்து 'அழகு' சம்பந்தப்பட்டது.  ஒரு நாகரீகத்தின் கலை, இசை பற்றி எழுதிவிட்டு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: "ஒரு மலர் அழகாக இருப்பதால் அது நமக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை; மாறாக அம்மலரைப் பார்ப்பதால், நுகர்வதால் நமக்கு வரும் மகிழ்ச்சியின் பொருட்டு அதை அழகு என்று வர்ணிக்கிறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;வெளியுலக பொருள்களைப் பற்றிய அறிவு, அதன் தர நிர்ணயம், அது நமக்கு அளிக்கும் உணர்ச்சி போன்ற எல்லாமே நம் மன உணர்வுகளின் பிரதிபலிப்பால் வருகிறது என்ற கருத்தை இதற்கு முன்னமே பல தத்துவ ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள்.  இது போன்ற கருத்தை பழந்தமிழ் நூல்களிலும் காணலாம். உதாரணமாக திருமூலரின் "மரத்தில் மறைந்தது மாமத யானை" - மனம் மரமாகப் பார்க்கையில் மாமத யானை மறைகிறது; யானையாகப் பார்க்கையில் மரம் மறைகிறது.  அது மரமா, மதயானையா என்பது மனதைப் பொறுத்தது.  மனத்தைப் பொறுத்துத்தான் மற்றவைகள் இருக்கின்றன என்றால், இலக்கான என் மகிழ்ச்சி சரி, தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்காட்லாந்தின் டேவிட் ஹூயூம் (David Hume - தத்துவ ஆசிரியர் 1711 - 1776) எழுதிய "கிளை விதி" (Hume's Fork Principle) பற்றிக் குறிப்பிடலாம்.  அவரின் சித்தாந்தப்படி எந்த ஒரு கருத்தும் மூன்று வகைகளுக்குள் அடங்கும்.  1. அந்த கருத்து சரி, தவறு என்ற நிலை சம்பந்தப்பட்ட நிர்ணய வகை (உதாரணம்: நான் இன்று காலை வாழைப் பழம் சாப்பிட்டேன் - இது ஒரு நடந்த நிகழ்ச்சி - சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம்).  2. அனுபவத்தை ஒட்டிய கருத்துகள் (உம்: எனக்கு இந்த அறை குளிர்ச்சியாக இருக்கிறது) 3. அறிவுக்கு அப்பாற்பட்டவை - இவை நடப்பை ஒட்டிய சரி/தவறு கணிப்பிலோ அல்லது அனுபவத்தை ஒட்டியோ இருக்காது (உம்: ஒற்றைக் கொம்புள்ள குதிரைகளின் கொம்பில் விஷமுண்டு.  இந்த விதமான கருத்து சரி/தவறு என்று சொல்ல முடியாது; அனுபவத்திலும் உணர முடியாது).  என் மகிழ்ச்சி என்பது ஒரு விதத்தில் கருத்து.  அது எந்த வகைப் பிரிவுக்குள் அடங்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;ராபர்ட் பிர்சிக் (Robert M Prisig - Zen and the art of motorcycle maintenance) எழுதிய பிரபலமான புத்தகத்தில் 'சிந்தனையில், கருத்தில் தரம் என்பது என்ன?' என்று ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு பதிலாக விளக்கமும் எழுதியிருக்கிறார்.  அவரின் விளக்கப்படி, சிந்தனையில், கருத்தில் தரம் என்பது சிந்திக்கும் நிலை தாண்டி உணரப்படுவது.  அதனால் இந்தத் தரத்தை சிந்தனையால் வரும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.  இதைப் பற்றி மேலும் எழுதுகையில் இந்த விளக்கத்திற்கும் 'எனக்குத் தெரியாது' என்று சொல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்கிறார்.  இந்த விளக்கம் "தரம்" சம்பந்தப் பட்டது - "மகிழ்ச்சி" பற்றி அல்ல.  இதையும், ஜேம்ஸ் டுரன்ட்டின் 'அழகு' பற்றிய விளக்கத்தையும் சேர்த்துப் பார்த்தால், 'மகிழ்ச்சி'யும் விளக்கம் தாண்டி உணரப்படும் விஷயம் போலத் தோன்றுகிறது.  எனக்கு ஒரு விஷயம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மனதில் இன்பத்தை அளிக்கிறது என்று உறுதியாக முன்னமே விளக்க முடியவில்லை.  இம்மாதிரி மகிழ்ச்சி தந்த கடந்த கால நிகழ்ச்சிகளை 'இந்தக் காரணத்தால் தான் மகிழ்ச்சி வந்தது' என்றும் கணித்துக் கூற முடியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;டேவிட் ஹூம் எழுதிய கிளைத் தத்துவத்தின் படி என்னுடைய 'மகிழ்ச்சி என்கிற கருத்து' சரி/தவறு வகையில் அடங்கும் என்று தோன்றவில்லை.  இது நிச்சயம் அனுபவம் சம்பந்தப்பட்டது; ஆனால் என்னால் விவரிக்க முடியாமல் போவதால், அறிவுதாண்டிய மூன்றாம் பிரிவில் சேருமோ என்றும் கேள்வி வருகிறது.  இது அனுபவம் சம்பந்தப்பட்ட இரண்டாம் பிரிவில் வந்தாலும், அல்லது அறிவு தாண்டிய மூன்றாம் பிரிவில் வந்தாலும், 'சரி/தவறு' என்ற நிர்ணயம் இதற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது.  அதே சமயத்தில் விவேகானந்தர் சொன்ன 'இலக்கு சரி என்ற நிர்ணயம் வந்து விட்டால், இலக்கை அடையும் முறை தான் முக்கியம், இலக்கையே மறந்தாலும் பாதகமில்லை' என்ற வழிமுறையை நடைப்படுத்துவது கடினமாகிறது.  மொத்தத்கில் "என்னுடைய இலக்கு மகிழ்ச்சி என்று நினைப்பது சரியா, தவறா" என்ற கேள்விக்கு என்னிடம் இந்தச் சமயத்தில் தீர்மானமான பதில் இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;கீதையில் இரண்டாம் அத்தியாயத்தில் அர்ஜுனன் 'சிதப்பிரக்ஞன் என்பவனின் விளக்கம் என்ன?' என்று கேட்கையில், கிருஷ்ணன் இம்மாதிரி விடையளிக்கிறார்.&lt;br /&gt;प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान् ।&lt;br /&gt;आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते ॥५५॥&lt;br /&gt;"அர்ஜுனா!  எப்பொழுது இந்த மனிதன் மனதிலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறக்கிறானோ, மேலும் ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ, அப்பொழுது அவன் சிதப்பிரக்ஞன் என்று கூறப்படுகிறான்" (இது கீதாப்ரஸ், கோரக்பூர் வெளியிட்ட தத்வவிவேசனீ தமிழ் விரிவுரையிலிருந்து).&lt;br /&gt;&lt;br /&gt;இதே பாடலுக்கு பாரதியார் தன் மொழிபெயர்ப்பில் இவ்வாறு விளக்கமளித்திருக்கிறார்:&lt;br /&gt;ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களையனைத்தும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளக்கங்களில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன - ஒன்று ஆசையைத் துறப்பது பற்றியது, இரண்டு ஆனந்தமாக இருப்பது.  இந்த விளக்கங்களைப் படித்து நான் உணர்ந்து கொண்டது, ஆனந்தமாக இருப்பது சரி, எப்படி அந்த ஆனந்தம் வருகிறது என்பதுதான் முக்கியம்.  &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய இலக்கான மகிழ்ச்சிக்கும் இங்கு குறிப்பிட்ட ஆனந்தத்திற்கும் என்ன வித்தியாசம்? அடுத்த பதிவில் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-1830334923185337443?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/1830334923185337443/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=1830334923185337443' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/1830334923185337443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/1830334923185337443'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/05/8.html' title='இலக்கு - 8'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-4569522984123090372</id><published>2011-04-15T18:35:00.001-04:00</published><updated>2011-04-15T18:46:59.453-04:00</updated><title type='text'>இலக்கு - 7</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கு - 7&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;வாழ்தலும் மகிழ்தலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன.  வாழ்வதற்காக உணவை உண்டாலும், அதைத் தெரிவு செய்வதில் ருசி, மணம் போன்ற குணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  உணவை எரிபொருள் என்று மட்டும் நாம் நினைப்பதில்லை.  அதனால் மனதிற்கு திருப்தியும், சந்தோஷமும் வருமா என்றும் யோசிக்கிறோம்.  ஆரோக்கியம் மட்டுமே இலக்காகக் கொண்டு எப்போதும் உணவைத் தேர்ந்தெடுப்பதில்லை.  உடம்புக்கு நல்லது; ஆரோக்கியம் தரும் என்று உணர்ந்திருந்தாலும் அதன் சுவை, மணம் காரணமாக உணவைத் தவிர்த்திருக்கிறேன். அதே போல ஆரோக்கியத்துக்கு அவ்வளவாக துணை போகாவிட்டாலும், சுவைக்காக உணவை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.  அனேகமாக எல்லோருமே வாழ்க்கையில் சில சமயங்களில் இந்த மாதிரி சுவையைப் பிரதானமாகக் கருதி உணவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;உலகில் உள்ள பெரும்பான்மையான மதங்களில் உணவைப் பிரதானமாக்கி வந்த பண்டிகைகள் இருக்கின்றன.  இவை உணவை உண்ணும் விதமாகவோ, அல்லது உணவை விலக்கும் விதமாகவோ இருக்கலாம்.  வாழ்தல் பற்றி எழுதுகையில் சேர்க்க வேண்டியவைகளும் (உணவு) விலக்க வேண்டியவைகளும் (விஷம்) ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று குறிப்பிட்டிருந்தேன்.  பெரும்பான்மையான பண்டிகைகள் - அது எந்த மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி - உணவில் எதைச் சேர்க்க வேண்டும், எதை விலக்க வேண்டும், அல்லது எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்று குறிப்பிடும் விதமாகவே இருக்கின்றன.  உணவு சம்பந்தப்படாத பண்டிகைகள் விகிதாசாரப்படி குறைவு.&lt;br /&gt; &lt;br /&gt;எப்படி உணவு வயிற்றுப் பசியைத் தீர்த்து உடல் உறுப்புகளுக்கு சக்தியளிக்கிறதோ, அதே போன்று வேறு விதமான 'உணவுகள்' மற்ற புலன்களின் பசியைத் தீர்க்கின்றன.  உடலின் மகிழ்ச்சியென்பது இம்மாதிரிப் புலன் பசித் தீர்வினால் வருகிறது.  இசை (அல்லது சித்திரம்) காதின் (அல்லது கண்ணின்) பசி தீர்ப்பதால் வரும் உணர்வு மகிழ்ச்சி.    வள்ளுவரின் குறள் நினைப்புக்கு வரலாம்:&lt;br /&gt;செவிக்கு உணவில்லாத போது சிறிது&lt;br /&gt;வயிற்றுக்கும் ஈயப்படும்.&lt;br /&gt;இந்த மகிழ்ச்சியை நாடாதவரை நான் சந்தித்ததில்லை;  நானும் நாடித் தேடுகிறேன்.  இந்த நாட்டம் தவறா?  இந்தக் கேள்விக்கு தீர்மானமாக உடனேயே பதில் அளிக்க முடியும் என்று தோன்றவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் இந்த புலன் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போம்.  இராமநாதபுரத்தில் வடக்கு வீதியில் வசிக்கையில் (முதலாம் வகுப்பு வரை அங்குதான் வாசம்) உணவு (பொரிவகைகள் - முட்டைப்பொரி மற்றும் அரிசிப் பொரி) மற்றும் உறவு (அப்பா, அம்மா, தம்பி, பாட்டி) தவிர்த்து மகிழ்ச்சி தந்த இரண்டு விஷயங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கின்றன.  கதை மற்றும் பாட்டு.  வாராவாரம் வீட்டில் ஆனந்த விகடன், கல்கி வாங்குவார்கள்.  நம் வீட்டில் ஒன்று, அடுத்த வீட்டில் மற்றொன்று.  படித்துவிட்டு மாற்றிக் கொள்வோம்.  எனக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயது.  படத்தோடு இருக்கும் தொடர், துணுக்குகளை எழுத்துக் கூட்டிப் படிப்பேன்.  புரிந்தது என்றும் சொல்ல முடியாது; படித்ததில் அதனால் மகிழ்ச்சி வந்தது என்றும் சொல்ல முடியாது.  பாட்டியைப் படித்துக் காட்டச் சொல்லி பின் கதையாகச் சொல்லச் சொல்வேன்.  கதையில் வரும் பாத்திரங்களைப் போல மரப்பாச்சி பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவேன்.  இந்த மாதிரி கதைகளைக் கேட்டு விளையாடியதில் வந்த சந்தோஷம் மகிழ்ச்சி வித்தியாசமானது; முழுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல சில பாட்டுகள், அம்மா பாடியதாலோ, வீட்டில் வானொலியில் கேட்டதாலோ (காலம் சென்ற MS சுப்புலக்ஷ்மி அவர்களின் பாவயாமி ரகுராமம் மற்றும் பாப்பா பாப்பா கதை கேளு) இன்னமும் நினைப்பில் இருக்கிறது.  இந்தப் பாட்டுகளைக் கேட்டதில், கதைகளைக் கேட்டதில் வந்த ஒரு மகிழ்ச்சி, மற்றும் திருப்தியை வெறும் புலன்களின் பசித் தீர்வு என்று ஒதுக்கி விட முடியவில்லை.  இதே போன்ற சந்தோஷத்தை பின்னாளில் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கும் போதும் அனுபவித்ததுண்டு.  ஆனால் அது திரைப்படப் பாடலிலோ அல்லது கதை கேட்டதிலோ, அல்லது திரைப்படம் பார்த்ததிலோ வரவில்லை.  இந்தியா கிரிக்கட்டில் உலகக் கோப்பையை வென்ற பின் (1983) குளிர்பான (Thumbsup) விளம்பரத்திற்காக படப் புத்தகங்கள் வெளியிட்டது.  சினிமா பிலிம் சுருள் பாணியில் கபில் தேவ் பந்து வீசுவதும், கவாஸ்கர் ஹூக் செய்வதும் ஒவ்வொரு வினாடிப் படங்களாக எடுத்து (கருப்பு வெள்ளை) புத்தகமாக தந்தார்கள்.  உள்ளங்கை அளவே இருக்கும் அந்தப் புத்தகங்களை வேகமாகப் புரட்டிப் பார்க்கையில் நிஜமாகவே ஓடி வந்து பந்தெரிவது போல இருக்கும்.  இந்தப் புத்தகங்களை தினமும் இருபது தடவையாவது பார்த்திருப்பேன் - அப்போது வந்த மகிழ்சியிலும் ஒரு விதமான திருப்தி இருந்தது.  இப்போது தொலைக் காட்சியில் விளையாட்டை வண்ணத்தில் பார்த்தாலும், அந்த கருப்பு வெள்ளை புத்தகத்தைப் புரட்டியதில் வந்த மகிழ்ச்சி, திருப்தி இல்லை.  புலன்களின் பசி தீர்ந்தாலும் மகிழ்ச்சி இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;வளர வளர இந்த மாதிரி முழுமை தந்த திருப்தியான மகிழ்ச்சி வெகு அரிதாகவே வந்தது.  இந்த புலன் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி, அதன் எதிர்பார்ப்பு பற்றி நான் படித்த பகவத் கீதை, பெட்ரண்ட் ரஸ்ஸல், வில்லியம் ஜேம்ஸ் மற்றும் இன்ன பிற படைப்புகளிலிருந்து நான் புரிந்து கொண்டவைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-4569522984123090372?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/4569522984123090372/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=4569522984123090372' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4569522984123090372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4569522984123090372'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/04/7.html' title='இலக்கு - 7'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-8616407164328185678</id><published>2011-03-24T18:18:00.004-04:00</published><updated>2011-03-25T17:41:34.098-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இலக்கு – 6</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கு – 6&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;வாழ உணவு அவசியம்.  உணவில்லாமல் வாழ முடியும் என்று நிரூபித்தவர்களை நான் சந்தித்ததில்லை.  உணவைப் பெற அனேக வழிகள் இருக்கின்றன.  மாதவனூர் வாழ்க்கையோடு ஒப்பிடுகையில் எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான உணவில் பத்து சதவிகிதம் கூட எடிசனில் தயாரிக்கப்படுவதில்லை.  பாலுக்கு மாடு இல்லை; வீட்டைச் சுற்றியுள்ள மரம், செடிகளில் உண்ணபதற்கான காய், கனிகள் இல்லை.  வீட்டில் கிணறு கிடையாது; நெல் வயல் இந்த மாநிலத்திலேயே இல்லை.  ஆனால் உணவைப் பெறும் விதத்தில் வசதிகள், வகைகள் அதிகம்.  இதில் முக்கியமான வசதி நேரம், மற்றும் சக்தி சம்பந்தப்பட்டது.  என்னளவில் நேரம்/சக்தி அதிகம் செலவாகாமல் உணவைப் பெற முடிகிறது.  எனக்கு பதிலாக வேறு சிலருடைய உழைப்பில் தயாரான உணவை, என் சொந்த உழைப்புக்கும் நேரத்திற்கும் பதிலாக, பணத்தை மாற்றாகத் தந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் தேவையான அளவில் பெறுகிறேன்.  இதில் எது சரி, எது தவறு என்று எப்படி நிர்ணயிப்பது?&lt;br /&gt; &lt;br /&gt;சிறு வயதில் உயிரியல் பாடம் படிக்கையில் 'உணவுச் சுழற்சி' பற்றி படித்ததுண்டு.  தாவரங்களைத் தின்னும் விலங்குகள், பறவைகள்; அந்த விலங்குகளை, பறவைகளைத் தின்னும் விலங்குகள், பின் அந்த விலங்குகள் இறந்து அதன் உடல் உரமாக மண்ணுக்கு செல்வது என்றெல்லாம் படமும், அம்புக் குறியும் போட்டு விளக்கியிருப்பார்கள்.  ஒரு விதத்தில் மண்ணும், தாவரமும், விலங்கினமும் ஒன்றையொன்று எப்படிச் சார்ந்திருக்கிறது என்பது அந்தப் பாடம் படிக்கையில் புரிந்தது.  மொத்ததில் மனிதனுக்கு மரத்தைப் போன்று தண்ணீர், சூரியன் தயவோடு மட்டும் உணவைத் தயாரிக்க முடியாது – மற்ற தாவர, விலங்கினத்தைச் சார்ந்து தான் இருக்க முடியும்.  அதனால் நானே பயிரிட்டு உண்பதற்கும், மற்றவர் பயிரிட்டதை பணத்திற்கு மாற்றாகப் பெற்று உண்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே போல தாவரத்தை மட்டும் உண்டு வாழும் மானுக்கும், மானை உண்டு வாழும் புலிக்கும் இடையில் அதன் உணவு உண்ணும் முறையால் மட்டும் சரி, தவறு என்று நிர்ணயிக்க முடியும் என்றும் தோன்றவில்லை.  தாவரத்தை உண்பது மானின் இயல்பென்றால், மானை உண்பது புலியின் இயல்பாகிறது. &lt;br /&gt; &lt;br /&gt;உணவைத் தேர்ந்தெடுக்கும், பெறும் முறையில் எது சரி, எது சரியல்ல என்ற நிர்ணயம் கடினமானதாக இருந்தாலும், உணவை விரயம் செய்வது சரியல்ல என்பது தெளிவு.  அதனால் உணவு விரயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.  உணவு விரயம் பலவகைப்படும்.  சாப்பிட்டு முடித்தவுடன் மிச்சம் மீதி நிறைய இருந்து அதைக் குப்பையில் எறிவதில் விரயம் தெளிவாகத் தெரிந்தாலும், மற்ற வகை விரயங்கள் அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை. சிறு வயதிலிருந்தே வீட்டில் பெரியவர்கள் கண்டிப்பினால் உணவை வீணாக்காமல், சமைப்பதிலும், பறிமாறுவதிலும், அளவு பார்த்து இருக்கக் கற்றுக் கொண்டாலும், வேறு விதமான விரயங்களைப் பற்றி சமீப காலங்களில் தான் யோசனை அதிகரித்திருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;உணவு ஒரு எரிபொருள், சக்தி!  பள்ளியில் படிக்கும் போது, இயற்பியல் பாடங்களில் இந்த "Law of conservation of Energy" (சக்தி பேணுகை விதி?) பற்றி படித்திருக்கிறேன்.  சுருக்கமாகச் சொல்லப் போனால் இதைப் பற்றி நான் புரிந்து கொண்டது இதுதான்.  பிரபஞ்சத்தில் சக்தியை உண்டாக்கவோ, அழிக்கவோ முடியாது. இங்குள்ள மொத்த சக்தியைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.  சக்தியை (அல்லது ஆற்றலை) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும்.  இந்த மாறுதலில் சக்தியின் ஒரு பகுதி உபயோகிக்க முடியாத வெப்பமாகவோ அல்லது வேறு விதமான சக்தியாகவோ வெளிப்படலாம். இதை சக்தி விரயம் என்றழைக்கலாம்.  அந்த மாதிரி விரயமாகும்/மாறும் சக்தியும் பிரபஞ்சத்திலேயே இருப்பதால், மொத்த சக்தியில் கூடுதலோ, குறைவோ இல்லை.  இதைப் படிக்கும் போது கீதா சாரம் நினைவுக்கு வரும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “பொருளும் ஒரு விதமான சக்தியே - Mass is a form of Energy” - என்று நிரூபித்திருக்கிறார்.   ஒரு இயந்திரத்தின் உயர்வு அது எந்த அளவுக்கு சக்தி விரயமில்லாமல் இயங்குகிறது என்பதைப் பொறுத்துத்தான் நிர்ணயிக்கப் படுகிறது.  உதாரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு பத்து கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறத்தை விட, ஐம்பது கிலோமீட்டர் செல்லும் பேருந்தின் திறம் உயர்ந்தது.  ஒரு விதத்தில் அந்த ஒரு லிட்டர் டீசலின் மதிப்பும் ஐம்பது கிலோமீட்டர் சென்ற பேருந்தினால் உயர்கிறது!&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;வாழ்வதற்காக உணவைச் சேர்க்கையிலும் இதே விதிதான் - சாப்பிட்ட உணவின் சக்தி என் மூலமாக வெளிப்படுகிறது.  என் மூலமாக வெளிப்படும் சக்தி எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சாப்பிட்ட உணவின் சக்தியின் வெளிப்பாடு உயர்கிறது.  இல்லையென்றால், அந்த சாப்பாட்டின் சக்தி விரயம்தான்! கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைப்புக்கு வரலாம்:&lt;br /&gt;“தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால், தீபத்தின் பெருமையன்றோ?&lt;br /&gt;தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால், தீபமும் பாவமன்றோ?”&lt;br /&gt; &lt;br /&gt;வாழ்கையை உபயோகமாக எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி எத்தனையோ பெரியவர்கள் எழுதிவிட்டார்கள்; இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  அதில் பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் எழுதிய ஒரு கட்டுரை என்னை நிரம்பவும் யோசிக்க வைத்த ஒன்று.  அதில் ஒரு பகுதியின் தமிழ் மொழியாக்கம் இங்கே: "வாழ்க்கை என்பது வெகு சிலரே அடையக் கூடிய இலக்கை நோக்கிய ஒரு இரவு நேர, கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் சூழ்ந்த, வலி மிகுந்த, களைப்புதரும் நெடுந்தூர நடைப் பயணம்.  இதில் நம்மோடு நடப்பவர்கள் என்றுமிருக்கும் மௌனமான மரண விதியின் ஆணையின் கட்டுண்டு ஒருவர் பின் ஒருவராக நம் கண்ணிலிருந்து மறைவர்.  அவர்களின் சுக துக்கங்களில் உதவ நமக்கிருக்கும் அவகாசம் குறைவு.  அந்த அவகாசத்தை அவர்களுக்கு ஒளிகாட்டுவதற்கோ, கருணையினால் அவர் துயர் துடைப்பதற்கோ, என்றும் தளரா பாசத்தால் மகிழ்விக்கவோ, தளரும் மனத்துக்கு தைரியம் அளிப்பதற்கோ அல்லது நம்பிக்கையூட்டுவதற்கோ பயன்படுத்துவோம்." [Bertrand Russell – &lt;a href="http://www.gutenberg.org/files/25447/25447-h/25447-h.htm"&gt;Mysticism and Logic and Other Essays&lt;/a&gt; – A Free Man’s Worship]&lt;br /&gt; &lt;br /&gt;வாழ்கையை உபயோகமாக நடத்துவது என் உணவின் மதிப்பை உயர்த்தும்; வாழ்தல் என்ற இலக்கை அடைய நான் எடுத்துக் கொண்டிருக்கிற முறை சரியா என்ற நிர்ணயிக்கவும் அது உதவும்.   நான் உண்ட, உண்கிற உணவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறேனா என்று தெரியவில்லை; இருந்தாலும், இந்தக் கேள்வியைக் கேட்க ஆரம்பித்ததே என் வாழ்க்கையின் சுய தேடலில் ஒரு திருப்புமுனை என்று தோன்றுகிறது.  மற்ற புலன்களின் பசித் தேவை பூர்த்தி, அதன் வழிமுறை பற்றி அடுத்த வாரம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-8616407164328185678?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/8616407164328185678/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=8616407164328185678' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/8616407164328185678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/8616407164328185678'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/03/6.html' title='இலக்கு – 6'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-2153736798865217826</id><published>2011-03-10T17:59:00.000-05:00</published><updated>2011-03-10T17:59:01.155-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இலக்கு - 5</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கு - 5&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்குகளை பற்றி நான் முதன் முதலாக யோசிக்க ஆரம்பித்தது கல்லூரியில் படிக்கும் காலத்தில் - இருபது வருடங்களுக்கும் முன்பாக!  இந்த யோசனை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  இன்னும் சில வருடங்கள் கழித்து வேறு ஏதாவது இலக்காகத் தோன்றலாம்; அல்லது இந்த நான்கு இலக்குகளில் சில இல்லாமல் போகலாம்.  இன்றைய தேதியில் இவை நான்கும் என் இலக்குகள்.  இவைகளை நான் தனித்தனியாக நான்கு இலக்குகளாகப் பார்ப்பதில்லை.  ஒருவிதத்தில் இவையனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது.  புரிந்து கொள்ள எளிதாக இருப்பதற்காக நான்காகப் பிரித்து விவரித்திருந்தாலும், இவை நான்கும் ஒரு முழுமையை நோக்கிச் செல்ல உதவுவதாகவே நான் எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் படிக்கும் போது ராமகிருஷ்ணா மடம் பதிப்பித்த விவேகாநந்தர் உரைகளை, புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறேன்.  அவர் 1900ல் அமெரிக்கா வந்த பொழுது தந்த உரைகள் (லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா) ஒன்றில் இந்த மாதிரி குறிப்பிட்டிருக்கிறார்: "பெரும்பான்மையான மக்கள் இலக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  இலக்குதான் முக்கியம்; அதை அடையும் முறை, வழி முக்கியமல்ல என்று கூறுவது தவறு.  சரியான இலக்கை நிர்ணயித்தபின் நாம் அதை அடையும் வழியில், முறையில் கவனம் செலுத்த வேண்டும்.  இலக்கைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் அதை அடையும் வழிமுறையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் இலக்கை அடைய முடியும்.  வழியும், முறையும் சரியாக இருந்தால் இலக்கை மறந்தாலும் பாதகமில்லை; இலக்கைத் தாமாகவே சென்றடையலாம்!".  இது என்னை மிகவும் கவர்ந்த ஒரு விளக்கம்.  பின்னாளில் பகவத் கீதை உரைகளைப் படிக்கையில், சிதப்பிரஞ்ஞன் பற்றிய விளக்கத்தையும் இந்த உரையின் தொடர்ச்சியாகப் பார்க்கத் தோன்றியது.  மூலத்தைப் பொருத்தே விளைவு - பாதையைப் பொருத்தே பயணம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்து தொடர்பான கவியரசர் கண்ணதாசனின் திரைப்பாடல்:&lt;br /&gt;"பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? அதில் &lt;br /&gt;பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்"&lt;br /&gt;(வாணி ஜெயராம் குரலில், எம். எஸ். விஸ்வநாதனின் இசையில், அபூர்வ ராகங்கள் திரைப்படப் பாடல் - முழுப்பாடலும் அருமை!)&lt;br /&gt; &lt;br /&gt;என் வாழ்க்கையின் சுய தேடலில் இரு நிலைகள். என் இலக்கு(கள்) என்ன?  அவை சரியா?  இது முதல் நிலை.  சரியான இலக்குகள் நிர்ணயமான பின் அவைகளை அடையும் முறை, வழி சரியானதா?  இது இரண்டாவது நிலை.  நான் முன்பெழுதிய நான்கு இலக்குகளையும் சரியா என்றும், அதை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற வழிகளைப் பற்றியும் சுயவிசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறேன்.  இந்த சுயதேடல்/விசாரணை இன்னமும் முடியவில்லை; எப்போது முடியும் என்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக 'வாழ்தல்'.  சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வதைப் போல 'நான் வாழ்வது' என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று தோன்றுகிறது.  இதில் சரி/தவறு என்று பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.  இந்த இலக்கு தவறு என்று வாதிட எந்த விதமான காரணமும் எனக்குத் தெரியவில்லை.  ஆனால் இந்த 'வாழ்தலுக்கு' உள்ள முறை பற்றி,  இந்த இலக்கை அடைய நான் எடுத்த, எடுத்துக் கொண்டிருக்கிற முடிவுகளில், வழியில் எது சரி, எது சரியல்ல என்பதில் அனேக குழப்பம்.  இந்த 'வாழ்தல்' இலக்கின் முதல் பாகம் பசித் தேவைப் பூர்த்தி.  உணவைப் பெறும் முறையில் ஏகப்பட்ட மாற்றம்; காலத்தின் போக்கில் இது மாறிக் கொண்டே வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது, எழுபது வருடங்களுக்கு முன் என் தாத்தா, பாட்டி (அம்மா வழி) ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம் அருகிலுள்ள மாதவனூர் கிராமத்தில் வசித்து வந்தார்கள்.  அவர்கள் வாழ்ந்த முறைக்கும் இப்போது எடிசனில் நான் வாழும் முறைக்கும் நிறைய வித்தியாசம் - முக்கியமாக உணவு, வாழ்க்கை வசதி சம்பந்தப்பட்ட விஷயங்களில்.  அப்போது மாதவனூர் கிராமத்தில் மின்சாரம் கிடையாது.  சிறிய தெரு; ஓட்டு வீட்டிற்கு எதிராக மாட்டுத் தொழுவம்.  பாலுக்காக நான்கு, ஐந்து பசு மாடுகள்; வயலுக்கும், வண்டித் தேவைக்கும் சில எருதுகள்.  ஒரு கன்றுக் குட்டியாவது எப்போதும் தொழுவத்தில் இருக்கும்!  வீட்டின் கொல்லையில் மாதுளம், எலுமிச்சை மற்றும் தென்னை மரங்கள்; சில கொடிகள் (பறங்கி, பூசணி, மல்லி), கீரைப்பாத்தி.  கிணறு தாண்டி கத்திரிக்காய் செடி பார்த்ததாக நினைவு.  தெருமுனை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஊரணி (சிறு குட்டை). துணி துவைக்க, மாடு குளிக்க மற்றும் இதர தண்ணீர் உபயோகத்திற்கு.  சமையலுக்கும், குடிநீருக்கும் வீட்டுக் கொல்லைக் கிணறு.  ஊரணிக்கருகே நிறைய கருவேல மரங்கள், சகதி என்று ஒரு குழப்பமான வாசனை.  இன்னமும் கொஞ்ச தூரத்தில் வயல்.  மாதத்தைப் பொறுத்து பச்சை நாற்றுகள் அல்லது முற்றிய கதிர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்குத் தேவையான உணவு அனேகமாக கிராமத்திலேயே உருவானது - கருப்பட்டி உட்பட.  வண்டி கட்டி டவுனுக்கு (தேவிப்பட்டினம் அல்லது எப்போதாவது திருவாடானை) சென்று வருகையில் தாத்தா சர்க்கரை, ஓலைப்பெட்டியில் மிட்டாய்/பட்சணங்கள் அல்லது பிஸ்கட் என்று வாங்கி வருவார்.  வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த உணவுப் பொருட்களை சேகரிப்பது, பெறுவது எப்படி என்றும் தெரியும்.  தாத்தா, பாட்டி இருவருமே பால் கறக்க, பசுவைப் பாதுகாக்க (தவிடு, தண்ணீர் காட்டுவது, பசுவை ஊரணிக்கு ஒட்டிச் சென்று குளித்து விடுவது) எல்லாம் தெரியும்.  சிறு வயதில் தாத்தா வயலிலும் வேலை செய்திருப்பதாகச் சொல்லக் கேள்வி.  மாச்சட்டியில் விளக்கெண்ணை விளக்கு வைத்து, மை தயாரித்த கதையும் பாட்டி/அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  மொத்தத்தில் என் கணிப்பில் கிட்டத்தட்ட 75 சதவீத உணவுத் தேவைகளை கிராமத்திலேயே அவர்களே தயாரித்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவில் தொடர்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-2153736798865217826?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/2153736798865217826/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=2153736798865217826' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/2153736798865217826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/2153736798865217826'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/03/5.html' title='இலக்கு - 5'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-7082145450840725547</id><published>2011-02-26T08:25:00.001-05:00</published><updated>2011-02-26T08:26:45.868-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இலக்கு - 4</title><content type='html'>இலக்கு - 4&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை என்று பார்க்கும் போது இதன் ஆரம்பமும், முடிவும் இங்குதான் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  மருத்துவப் பார்வையில், அல்லது ஒரு நாட்டு சட்ட ரீதியாக ஒரு உயிரின் தொடக்கமும், முடிவும் (இறப்பு) வரையறுக்கப்பட்டு விவரிக்கப்பட்டாலும், அது முழுமையான ஒன்று என ஒப்புக்கொள்ள முடியவில்லை.  சிவவாக்கியர் அந்நாளில் கேட்டது:&lt;br /&gt;"பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?&lt;br /&gt;பிறந்து மண்ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?"&lt;br /&gt;&lt;br /&gt;அவரே வேறொரு பாட்டில் இன்னமும் சொல்கிறார்:&lt;br /&gt;"உடம்பு உயிர் எடுத்ததோ, உயிர் உடம்பு எடுத்ததோ &lt;br /&gt;உடம்பு உயிர் எடுத்தபோது, உருவம் ஏது செப்புவீர்&lt;br /&gt;உடம்பு உயிர் இறந்தபோது உயிர் இறப்பது இல்லையே&lt;br /&gt;உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!"&lt;br /&gt;&lt;br /&gt;வளர்வதில் திறன் சம்பந்தப்பட்ட அறிவு வளர்ச்சியையும் சேர்த்துப் பார்த்தாலும், அதையும் தவிர பேரறிவாய், ஞானத்தைத் தேடும் எண்ணம் வருகிறது.  இதை வளர்ச்சி என்று கூறி நிறுத்த முடியவில்லை.  இந்தப் பேரறிவு வாழ்தல், மகிழ்தல், வளர்தல் இவைகளைப் பற்றி மட்டுமல்லாமல் இவைகளையும் தாண்டி ஒரு முழுமையை நோக்கிச் செல்லும் விஷயமாகவே எண்ணத் தோன்றுகிறது.  ஒரு உயிரின் பயணம் இந்த பூமியில் பிறப்பதில் தான் ஆரம்பிக்கிறது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை.  அதே போல அந்தப் பயண முடிவும் இறப்பில் நின்று விடுகிறது என்றும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.  இந்தப் பயணத்தில் ஒரு துண்டு, பகுதி 1968ல் பிறந்து ஆரம்பித்து இருக்கிறது.  அதற்கு முன்னம் செய்த பயணம் நினைப்பில் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிப் படிப்பு முடிந்து இந்துஸ்தான் லீவரில் பணிபுரிய ஆரம்பித்த காலத்தில் அலெக்ஸ்பாண்டியன் தயவில் 'பெரி மேசன்' கதைகள் அறிமுகமாயிற்று.  அதில் ஒரு கதையில் 'பிறப்பு-இறப்பு' தொடர்பாக பேசிக் கொண்டு வருகையில், எப்படி நினைப்பு இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் பெரி மேசன் விளக்குவதாக வரும்.  அந்தக் கதை (பெயர் உட்பட) மறந்து விட்டாலும், இந்தப் பகுதி மட்டும் நன்றாக நினைப்பில் இருக்கிறது.  நாம் தூங்கி எழுகையில் நம் தூக்கத்துக்கு முன்னால் நடந்த அனைத்து விஷயங்களும் மறந்து விடும் என்று ஒரு வைத்துக் கொள்வோம்.  அப்படி நடந்தால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு பிறப்பு போலத் தெரியும்.  கற்றுக் கொண்ட விஷயங்களையே மறுபடி கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.  அதே போல ஒரு உயிர்  பிறக்கும் போது முன் பயணங்களைப் பற்றி மறந்து விடுகிறது என்பது போல இந்தப் பகுதியில் விளக்கம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் வந்த இந்தப் பகுதியால் பின்னாளில் நிறைய யோசித்திருக்கிறேன் - அதைப் பற்றி பின்னால்.  இந்த யோசனைகளில் ஒரு குறிப்பிட்ட விஷயம், நினைப்பு, அதன் முக்கியத்துவம்.  வளர்ச்சியில் ஒரு திறனைக் கற்றுக் கொள்ளுகையில், அது கார் ஒட்டுவதாக இருக்கலாம், அல்லது பியானோ வாசிப்பதாக இருக்கலாம், அந்தத் திறனைப் பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூளை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறது.  இதற்கு புலன்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம்.  பியானோ வாசிக்கையில், வரும் ஒலியை தரம் பிரித்து உணரவே பயிற்சி வேண்டியிருக்கிறது, முதல் மாதத்திலிருந்து இரண்டாம் மாதத்திற்கு என் செவியில் பெரிய வளர்ச்சி இல்லை; ஆனால் இந்தப் பயிற்சியில் செவியும், மூளையும் சேர்ந்து ஒலியின் தரம் பிரிப்பதில் முன்னேற்றம் அடைகிறது.  நினைப்பு என்று ஒன்று இல்லையென்றால் இந்த தரம் பிரிக்கும் அறிவு தேக்கி வைக்கப்பட்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;நினைப்பு திறனைப் பற்றிய அறிவை தேக்கி வைக்கும் பாத்திரம்.  அந்தப் பாத்திரத்தில் எதைத் தேக்கி வைப்பது என்பது என் முடிவைப் பொறுத்தது. இது வளர்ச்சிக்கு முக்கியம்.  அதே சமயத்தில் என் முடிவோடு சம்பந்தப்படாமல் என் உடல் இயங்கத் தேவையான திறனை, அறிவை அதுவாகவே சேர்த்து வைத்திருக்கிறது, எனக்குத் தெரியாமலேயே - உதாரணம்: என் இதய இயக்கம்.   இருதயம் பற்றி அறிந்து கொண்டதே பள்ளியில் படிக்கும் போதுதான்.  இப்போது அதன் இயக்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, இருந்தும் இயங்கம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.  எனக்குள் இயல்பாக இயங்குவதைப் பற்றி அறிந்து கொள்ளவும் என் முயற்சி தேவையாயிருக்கிறது.  ஒரு இருதய மருத்துவர், இருதயத்தைப் பற்றி அறிந்து கொள்ள நான்கிலிருந்து எட்டு வருடங்கள் ஆகின்றன.  இதேபோல மூளை, கண், கால் என்றெல்லாம் அறிந்து கொள்ள நிறைய வருடங்கள் ஆகும்.  என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவே என் வாழ்நாள் போதாது.  இத்தனையும் சேர்த்து வைக்க என் நினைப்பு பாத்திரமும் போதாதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.  அறிவை, திறனைப் பெருக்கிக் கொள்வதில் நேரம், முயற்சி என்று எத்தனை செலவழித்தாலும், ஒவ்வொரு அறிவும் நிச்சயமாகத் தரும் பாடம் 'எனக்கு அறிந்து கொள்ள வேண்டியது அதிகம்' என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இது எல்லாமே தெரிந்து கொண்டு விடுகிறேன் என்றூ ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம்.  அப்படித் தெரிந்து கொண்டாலும் முழுமை வரும் என்று தோன்றவில்லை.  கவிஞர் கண்ணதாசன் சொன்னது:&lt;br /&gt;"ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்&lt;br /&gt;மனிதன் இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்".&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரகிரியார் சொன்னது: &lt;br /&gt;“ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்&lt;br /&gt;நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்?”&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திறன் சம்பந்தமான அறிவுகளையெல்லாம் தாண்டி, மூல காரணத்தை, இந்த 'ஏன்' என்ற கேள்விக்கான விடை தரும் அறிவை ஞானம் என்றழைக்கலாம்.  இந்த மூலத்தை, அறிந்தே அறியும் அறிவை, அறிந்து கொள்ள ஆசை!  மீண்டும் பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல்களில் இருந்து ஒரு பாடல்:&lt;br /&gt;&lt;br /&gt;“அறிவை அறிவால் அறிந்தே அறியும் அறிவுதனில் &lt;br /&gt;பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம்?”&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் அந்த ஞானம் வரவில்லை - அதனால் இந்த &lt;strong&gt;'அறிதல்'&lt;/strong&gt; என்னுடய இலக்குகளில் ஒன்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-7082145450840725547?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/7082145450840725547/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=7082145450840725547' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7082145450840725547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7082145450840725547'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/02/4.html' title='இலக்கு - 4'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-6980931260840859262</id><published>2011-02-18T21:50:00.000-05:00</published><updated>2011-02-18T21:56:37.652-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இலக்கு - 3</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கு - 3&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;"வாழ்தல்", "மகிழ்தல்" இலக்குகளைப் பற்றி விபரமாக எழுதுவதற்கு முன்னால் அடுத்த இலக்குகளைப் பற்றியும் சொல்லி விடுகிறேன்.  பிறப்பதற்கு முன்னாலேயே கருவிலேயே தொடங்குகிற ஒரு செயல் வளர்ச்சி.  விந்துவும், முட்டையும் ஒன்றாகி வந்த ஒரு செல், இரண்டாகி, நான்காகி, வளர ஆரம்பிக்கிறது.  பிறந்த பின்னும் தொடர்கின்ற இச்செயல் இறப்பு வரை நடக்கின்ற விஷயந்தான்.  உடலளவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சி, ஒரு நிலையில் அறிவு, திறன், கலை என்றெல்லாம் உள்ளடக்கி பெரிதாகிறது.  உலகில் உள்ள உயிரனைத்திற்கும் வளர்ச்சி பொது.  வளர்ச்சியே வளர்ந்து வரும் திறத்தை, தன்னளவில் வளர்வதோடு மட்டுமல்லாமல் தன் இனமே வளர்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதை, பரிணாம வளர்ச்சி என்றழைக்கிறோம்!&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு உயிர் உருவாகிப் பின் பிறந்ததே கரு வளர்ச்சியில் வந்ததுதான்.  இந்த ஆரம்ப வளர்ச்சியில் அந்த உயிரின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.  கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது:&lt;br /&gt;    "நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா?&lt;br /&gt;      இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?"&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் "வாழ்தல்" ஆரம்பித்த பிறகு காலம் செல்லச் செல்ல நானெடுக்கும் முடிவுகள், என் செயல்களின் விளைவுகள் என் வளர்ச்சியை, அதன் திசை, வேகத்தைப் பாதிக்கிறது என்று தெரிகிறது.  அது மழையில் நனைந்தால் ஜலதோஷம் வருவதில் ஆரம்பித்து, உணவில், உடற்பயிற்சியில் ஒழுங்கில்லாத காரணத்தால் சக்கரை வியாதி வருவது வரை அனேக விஷயங்களில் வெளிப்படுகிறது.  அதே சமயத்தில் என் முடிவுகளோ, விருப்பங்களோ நேரடியாக சம்பந்தப்படாமல் வளரும் விஷயங்களும் இருக்கின்றன.  குழந்தையாயிருக்கையில் நான் முடிவெடுத்து என் முடி வளரவில்லை; இப்போது நான் விரும்பினாலும் வளர மாட்டேன் என்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் என்ன வித்தியாசம்?  ஏன் இரண்டு இலக்குகளாகப் பார்க்க வேண்டும்?  இவ்வுடலைப் பொறுத்தவரை வாழ்தல் இல்லாமல் வளர்தல் இல்லை.  வாழ்வதற்காக நாம் எடுக்கும் முடிவுகளில், செயல்களில் வளர்ச்சி தானாக வருகிறது. உதாரணம் - வாழ்வதற்காக உணவு வேண்டும்; உண்பதனால் உடல் தானாக வளருகிறது.  உடலைப் பொறுத்தவரை வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் வித்தியாசம் அதிகமாகத் தெரியாவிட்டாலும், அறிவு, திறன் சம்பந்தப்பட்ட விஷங்களில் வித்தியாசம் நிச்சயம் தெரிகிறது.  ஒரு திறனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதை செயலாக்குவதாலேயே வளர்ச்சி வருகிறது.  வெறுமனே வாழ்வதற்கு அந்தத் திறன் தேவையில்லாமல் இருக்கலாம்; அந்தத் திறனைக் கற்க வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ காரணமாக இருக்கலாம்!&lt;br /&gt; &lt;br /&gt;இந்த வளர்ச்சியில் முக்கியமான ஒரு விஷயம் காலம், நேரம்.  எப்படி காலம் ஒரு அம்பு போல முன்னோக்கி மட்டும் செல்கின்றதோ அதே போல வளர்ச்சியும் ஒரே திசையிலேயே நடக்கிறது.  பள்ளியில் படிக்கையில் மனப்பாடம் செய்து (பரீட்சைக்கு கட்டாயம் வரும்!) எழுதிய இரண்டு உயிர் வளர்ச்சி பற்றிய பாடங்கள் இன்னமும் நினைப்பில் இருக்கிறது.  ஒன்று கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சி ஆவது; இரண்டு தவளையில் வளர்ச்சிப் பருவம், நிறைய படங்களுடன் (அதனால் ஐந்து அல்லது பத்து மதிப்பெண் கேள்வியாக வரும்).  முட்டை, தலைப்பிரட்டை, வாலுள்ள தவளை, பெரிய வாலில்லாத தவளை எல்லாம் ஒரு குட்டையைச் சுற்றி இருப்பதாக வரைந்திருக்கிறேன் (தவளை உருளைக்கிழங்கு போலத் தான் தெரியும், நான் வரைந்தால்). இதில் முட்டை காணோம், தலைப்பிரட்டை காணோம் என்று ஒவ்வொரு பருவத்தை மட்டும் பார்த்தால் வளர்ச்சியில்லை; மொத்தமாக முட்டையிலிருந்து தலைப்பிரட்டை, அதிலிருந்து தவளை என்று பார்த்தால் வளர்ச்சி தெரியும். &lt;br /&gt; &lt;br /&gt;வண்ணத்துப் பூச்சி, தவளையைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி, உடல் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.  புழுவாக கூட்டில் வாசம் செய்ய ஆரம்பித்தாலும், வண்ணங்கள் நிறைந்த இறக்கைகளுடன் பூச்சியாக வெளியே வருகிறது.  கால்களில்லாமல், நீரில் நீந்திவந்த தலைப்பிரட்டை, நீரிலும், நிலத்திலும் வாசம் செய்யவும், நீந்தவும், தவ்விச் செல்லவும் கால்களோடு தவளையாக வளர்வதும் பிரமிக்க வைக்கும் அதிசயம்தான்.  இந்த மாற்றத்தில், வளர்ச்சியில் ஒரு நோக்கம், முழுமை தெரிகிறது.  என் உடல் வளர்ச்சியில், மாற்றத்தில் இந்த மாதிரி பிரமிக்க வைக்கும் விதமாக மாற்றம் வந்ததில்லை.  அதே சமயத்தில் இது வரை அனுபவித்து, உணர்ந்து, அறிந்து கொண்ட விஷயங்களை, என் அறிவில், மனதில் வந்த வளர்ச்சியை சற்று பின் தள்ளி நின்று மொத்தமாகப் பார்க்கையில் நிச்சயம் பிரமிப்பு வருகிறது.  இன்னமும் வளர வேண்டும் என்கிற உந்துதலும் இருக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;குழந்தையாக இருக்கையில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வயது ஆக ஆக மாறுகின்றதோ, அதே போன்ற மாற்றம் வளர்ச்சிக்கும் வருகின்றது.  இந்த மாற்றம் ஒரு விதமான இழப்பை ஒத்திருக்கிறது.  எப்படி வண்ணத்துப்பூச்சி புழுவை இழக்கிறதோ, தவளை தலைப்பிரட்டையை இழக்கிறதோ, அதே போல நானும் என் வளர்ச்சியில் நிறைய இழந்திருக்கிறேன்.  அறிவால், அறியாமையை, அந்த அறியாமை தந்த வெகுளித்தனத்தை இழப்பதையும் இந்த வகையில் சேர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்துப் பார்க்கையில் இழப்பதற்கு தைரியம் இல்லாத போது வளர்ச்சிக்கான வாய்ப்பும் குறைகிறது.  முதன் முதலில் பள்ளியில் விட்டு விட்டு அம்மா வீடு திரும்பிச் சென்றவுடன் மனதில் வந்த பயம் தொடர்ந்திருந்தால், படிப்பு என்பதே ஒரு மாதிரியாகத் திரும்பியிருக்கும். வாழ்தலுக்கும், வளர்தலுக்கும் இந்த 'இழக்கும் தைரியம்' ஒரு முக்கியமான வித்தியாசம் என்று கருதுகிறேன்.  'வாழ வேண்டும்' என்று நோக்குகையில் இம்மாதிரியான 'இழக்கும் தைரியம்' தேவையாயிருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.  ஆனால் வளர்வதற்கு இது தேவையான ஒன்றாகி விடுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;சுற்றுப்புற சூழ்நிலைகள் காலப் போக்கில் மாறிக் கொண்டே வருகிறது.  இது வரை கற்ற கல்வியும், திறனும், அறிவும், காலம் முடியும் வரை துணைக்கு வரும் என்று முடிவெடுத்து நிறுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது.  இவை வளரவில்லை என்றால் வாழ்தலும் பாதிக்கப்படும்.  அதனால் வளர்ச்சி என்பது எனக்கு மட்டுமல்ல, என் சந்ததிக்கும் அத்தியாவசமாகி விடுகிறது.  இந்த வளர்ச்சியில் என்னுடைய ஆக்கபூர்வமான சம்பந்தம், முடிவுகள் பெரும் பங்கு வகிப்பதால், “வளர்தல்” என் இலக்குகளில் ஒன்று.&lt;br /&gt; &lt;br /&gt;மேலும் அடுத்த வாரம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-6980931260840859262?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/6980931260840859262/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=6980931260840859262' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/6980931260840859262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/6980931260840859262'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/02/3.html' title='இலக்கு - 3'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-1131770052209325917</id><published>2011-02-11T18:15:00.001-05:00</published><updated>2011-02-11T18:22:07.619-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இலக்கு - 2</title><content type='html'>&lt;strong&gt;இலக்கு - 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே குழந்தை பசி நீங்கியபின் தெரிவிக்கும் உணர்வு சந்தோஷம் - சிரிப்பின் மூலமாக.  வளர வளர பசி நீங்கியதால் மட்டும் அது சிரிப்பதில்லை.  ஒரு கிலுகிலுப்பை, பொம்மை என்றெல்லாம் அதன் தேவை வளர ஆரம்பிக்கிறது.  யோசிக்க, பேச தெரிய ஆரம்பிக்கும் முன்னமே, பசி நீங்கியவுடன் வேறெதையோ தேட ஆரம்பிக்கும் தன்மை வந்து விடுகிறது.  தன்னைத் தூக்கி கொஞ்ச வேண்டும், பாட்டு கேட்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுக் கேட்கத் தொடங்கும் முன்னமே அதன் புலன்களுக்கு சுகம் தரும் விஷங்களைத் தேடத் துவங்குகிறது.  இந்த 'சுகம் தேடல்' புலன்களில் ஆரம்பித்தாலும், வளர வளர புலன்களைத் தாண்டி, சிந்தனை, நினைப்பு  போன்ற மனது/மூளை சம்பந்தப்பட்ட சமாசாரங்களையும் உள்ளடக்க ஆரம்பிக்கிறது.  இந்த மாதிரி 'சுகம் தேடல்' தேவைகளின் பூர்த்தியில் கிடைக்கும் உணர்வை "மகிழ்ச்சி" என்று சொல்லலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியின் முதலாவது நிலை புலன்கள் தெரிவிக்கும் உணர்ச்சிகளால் வரும் சுகம், இதம். பண்டைய நூல்களில் நம் உடம்பின் ஐந்து புலன்களை ஞானேந்திரியம் என்றும் (செவி, கண், மூக்கு, நாக்கு, மெய்), இந்தப் புலன்கள் மூலமாக அறியப்படும் உணர்வுகளை தன்மாத்திரை (சப்தம், ரூபம், கந்தம், ரசம், ஸ்பரிசம்) என்றும் குறிப்பிடுகிறார்கள்.  ஞானேந்திரியங்களின் வேலை, எந்தப் பொருளையும், தன்மாத்திரைகளாக விவரித்து மூளைக்கு அனுப்புவதுதான்.  ஒரு உயிருக்கு ஒரு சமயத்தில் எந்த தன்மாத்திரை இதம் அளிக்கிறதோ, அதுவே 'மகிழ்ச்சியின்' காரணமாகிறது.  சிலருக்கு சில புலன்களின் உணர்ச்சி தரும் சுகம், மற்ற புலன்களின் உணர்ச்சிகளால் வரும் சுகத்தை விட அதிகமாக இருக்கும்; அதனால் முக்கியத்துவமும் மாறலாம். சிலருக்கு சங்கீதம், சிலருக்கு சாப்பாடு - சந்தோஷம் எதில் தான் வரும் என்று சொல்ல முடியாது! இந்த சுகங்களில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது என்றெல்லாம் தரம் பிரிக்க முடியாது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது "மகிழ்ச்சி" என்பது ஒரு கூட்டுப் பொருள் - இதற்கு புலன், புலனுக்கு இதம் தரும் மற்றொரு பொருள், புலனின் உணர்வைப் புரிந்து கொண்டு ரசிக்கும் மனம்/மூளை, என்று மூன்றும் சேர்ந்தால் தான் மகிழ்ச்சி. இந்த மூன்றும் ஒருவருக்கு எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல இந்த மூன்றும் இரண்டு மனிதர்களுக்கு ஒன்றே போல இருப்பதில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்து இது மாறுபடும்.  சிறுவயதில் மன்னார்குடியில் கோடையில் பனிக்கட்டியைக் கையில் எடுக்கையில் வந்த சுகம், மகிழ்ச்சி இப்போது முழங்கால் அளவு பனியை வீட்டு வாசலில் இருந்து எடுத்துப் போடுகையில் எனக்கு நிச்சயமாக இல்லை!  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முதல் நிலை மகிழ்ச்சியிலும் இரு பிரிவுகள். ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்பட்டுத் தரும் தன்மாத்திரை மகிழ்ச்சி - ஒரு பிரிவு, ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத மகிழ்ச்சி - மற்றொரு பிரிவு. சுருக்கமாக சொல்லப்போனால், ஞானேந்திரியங்களின் நேரடியான துணையில்லாமல் தன்மாத்திரைகள் தரும் இதத்தை மூளை அடைந்தால் வரும் மகிழ்ச்சி, முதல் மகிழ்சியின் ஒரு மாறுபட்ட பிரிவு. உதாரணமாக நல்ல பாட்டைக் கேட்கையில் வரும் மகிழ்ச்சி முதலாம் பிரிவு - காது கேட்டு, பொருள் புரிந்து, மனம் மகிழ்கிறது.  இரவு படுக்கையிலே விளக்கணைத்து விட்டு, உறக்கம் வரும்முன், கேட்ட பாட்டில் மனதைக் கவர்ந்த இடங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வது இரண்டாம் பிரிவு.  காது கேட்பதற்கு பாட்டு இல்லையென்றாலும், கேட்ட போது ஏற்பட்ட உணர்வை மனது/மூளை நினைவாலே வரவழைக்கிறது.  ஞானேந்திரியம் நேரடியாக சம்பந்தப்படாத தன்மாத்திரை உணர்வு!&lt;br /&gt;&lt;br /&gt;நேரடியாக சம்பந்தப்படாது போனாலும், ஞானேந்திரங்கள் இல்லாமல் தன்மாத்திரை பற்றி மூளை தாமாக அறிய முடியாது. தன்மாத்திரை உணர்வை மூளை அடைய வேண்டுமானால் ஞானேந்திர்யங்கள் அவசியம் தேவை.  நினைப்பாலே மூளை தன்மாத்திரை தரும் உணர்ச்சியை புதிதாக உண்டு பண்ண முடியாது; ஏற்கனவே அனுபவித்திருந்த ஒரு உணர்வின் நினைப்பிலிருந்துதான் உருவாக்க முடியும். ஞானேந்திரியம் இல்லையென்றால் தன்மாத்திரையும் இல்லை.  இந்த ஞானேந்திரியங்கள், அவை உணரும் பொருள்கள் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன - ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை - ஒரு உயிருக்கு.  இந்த சம்பந்தம் பற்றி நான் எழுதிய ஒரு கவிதை இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணமிங்கு இலையென்றால் பார்வை தேவையில்லையே  &lt;br /&gt;பார்வையிங்கு இல்லையென்றால் வண்ணமுந்தான் இல்லையே&lt;br /&gt;&lt;br /&gt;சப்தமிங்கு இலையென்றால் செவியின் தேவையில்லையே&lt;br /&gt;செவியுமிங்கு இல்லையென்றால் சப்தமுந்தான் இல்லையே&lt;br /&gt;&lt;br /&gt;வாசமிங்கு இலையென்றால் நாசியின் தேவையில்லையே&lt;br /&gt;நாசியிங்கு இல்லையென்றால் வாசமுந்தான் இல்லையே&lt;br /&gt;&lt;br /&gt;சுவைகளில்லை என்றுபோனால் நாவின் தேவையில்லையே&lt;br /&gt;நாவுமிங்கு இல்லையென்றால் சுவைகளுந்தான் இல்லையே&lt;br /&gt;&lt;br /&gt;தீண்டப்பொருளும் இல்லையென்றால் உணர்வின் தேவையில்லையே&lt;br /&gt;உணர்வும்  அற்றுப்போனாலே தீண்டுதலிங்கே இல்லையே&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியின் இரண்டாவது நிலை எந்தப் புலனுமே சம்பந்தப் படாத - வெறும் நினைவு/மூளை/மனது சம்பந்தமான விஷயம். அதாவது, தன்மாத்திரை தாண்டிய சுகம், மகிழ்ச்சி.  உதாரணம் - ஒரு கடினமான புதிரை மனதினுள் ஆராய்ந்து, விடை கண்டுபிடிக்கையில் வரும்  மகிழ்ச்சி. ஒருவிதத்தில் இது வசதியான மகிழ்ச்சி - காரணம் இதிலிருக்கும் சுதந்திரம்.  புலன்கள் தாமாக மகிழ்சியைத் தர முடியாது - அதற்கு இதம் தரும் பொருளும் வேண்டும்.  பொருள் மட்டும் இருந்தால் போதாது, அதை உணரும் புலனும் வேண்டும்.  ஆனால் மனதிலே நினைவாலே தோன்றும் மகிழ்ச்சிக்கு நம் நினைவு, மனம் மட்டும் போதும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சிவவாக்கியர் சொன்ன சொல் நினைப்புக்கு வருகிறது:&lt;br /&gt;என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே&lt;br /&gt;என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்&lt;br /&gt;என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ&lt;br /&gt;என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முக்கியத்துவம் மாறுபட்டாலும், சுகத்தை, மகிழ்ச்சியை மொத்தமுமாகத் துறந்தவர்களை நான் பார்த்ததில்லை.  புலன்கள் சம்பந்தப்படாத மனது, நினைவு தொடர்பான சுகங்களை அறிந்து கொள்ள ஆரம்பிக்கையில், புலன்கள் சம்பந்தமான தேவைகளில், சுகங்களில் செலவிடும் நேரம் குறைகிறது.  இருந்தாலும் இந்த "மகிழ்ச்சி தேடுதல்” (சுருக்கமாக “மகிழ்தல்” என்று அழைக்கலாம்) இறப்பு வரை ஒருவருக்கு உந்துதலாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் என்னளவில் "மகிழ்தல்" வாழ்வின் இரண்டாம் இலக்கு.  இதைப் பற்றி மேலும் அடுத்த வாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2011/02/1.html"&gt;இலக்கு - 1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-1131770052209325917?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/1131770052209325917/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=1131770052209325917' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/1131770052209325917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/1131770052209325917'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/02/2.html' title='இலக்கு - 2'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-4550881370209959476</id><published>2011-02-04T18:15:00.000-05:00</published><updated>2011-02-04T18:18:21.494-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இலக்கு - 1</title><content type='html'>&lt;strong&gt;இலக்கு - 1&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான இலக்குகள் இருக்கலாம்; இருக்கின்றன.  தினசரி வாழ்க்கையில் அன்றாட காரியங்களில் ஆரம்பித்து (ஏழு மணி வண்டி பிடிக்க வேண்டும்) வார/மாத/தொலைநோக்கு பார்வைவரை (ஒருமுறையாவது தாஜ்மகால் பார்க்க வேண்டும்), பல விதமான இலக்குகள். ஆனால் மொத்த வாழ்க்கைக்கும் இலக்கு என்ன என்று யோசித்தால் வெகு சிலருக்கே விடை கிடைக்கிறது.  இதிலும் இரு நிலைகள் - என் ஒருவனுடைய வாழ்விற்கு என்ன இலக்கு? மொத்த மனித வர்க்கத்திற்கு/பிறவிக்கு ஒரு இலக்கு உண்டா?  அல்லது இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தானா?  நாளாக நாளாக கேள்விகள், அதுவும் சமீபகாலத்தில் இந்த மாதிரிக் கேள்விகள் தொடர்பான யோசனைகள் அதிகமாகி விட்டன.  இதை மத்திய வயதுப் பிரச்சனை – mid life crisis – என்று கருதி ஒதுக்க முடியவில்லை.  இந்தத் தொடரில் என் யோசனையில் தோன்றிய எண்ணங்களை, பிரதிபலிப்புகளைப் பதிய உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் வாழத் தேவையான விஷயங்கள் (காற்று, உணவு போன்ற சமாசாரங்கள்) இல்லை (அல்லது குறைவு) என்றால் இந்த 'இலக்கென்ன?' கேள்விக்கு விடை எளிது.  அந்த மாதிரி சமயங்களில் வாழ்க்கையின் இலக்கு 'உயிர் வாழத் தேவையான விஷயங்களைப் பெறுவது'. எப்போது ஒரு விஷயம் 'தேவை' என்று நினைக்கிறோமோ அப்போது அது இலக்காகிறது. இந்த தேவைகளைப் பற்றி மாஸ்லோ என்பவர் ஒருவிதமான வகைப்படுத்திய &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81#.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AE.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.A9.E0.AE.AE.E0.AF.8D"&gt;சித்தாந்தத்தைச்&lt;/a&gt; சொல்ல, அதைப் பற்றி நிறையப் பேர் எழுதிவிட்டார்கள்.  இதில் அந்த சித்தாந்தம் சரி என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்; சரியல்ல என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்!  தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதில் எனக்கு அதிக நாட்டமில்லை.  வகைப்படுத்துவதால் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும், இந்த வகைகள் எல்லொருக்கும் தொடர்ச்சியாக வருவதாகத் தோன்றவில்லை.  தேவைகளை இந்த மாதிரி வகைப்படுத்துவதற்கு பதிலாக மனதில் தோன்றும் உணர்வுகளை வைத்து விவரித்தால், 'இலக்காக எதை நினைக்கிறோம்' என்பது புரிபடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையாய் பிறக்கையிலே இருக்கும் உணர்வுகள், வளர்ந்து மனிதனாக மாறுகையில் நிச்சயமாக மாறுபடுகின்றன.  குழந்தையாய் இருக்கையிலே பசிக்காக அழுவது இயல்பாக வருகிறது.  குழந்தைக்கு தேவை என்ன என்று பகுத்தறிந்து சொல்ல வராவிட்டாலும், அதன் உடலில், மூளையில் இருக்கும் இயல்பான செயல்பாடு அழுகையை வரவழைத்து தனக்கு வேண்டிய தேவையை ஒருவிதமாய் தெரியப் படுத்துகிறது.  இந்த பசி விஷயம் பிறந்ததில் ஆரம்பித்து, இறக்கும் வரை தொடர்கிறது - இதனால் ஒரு விதத்தில் முதல் இலக்காக, தேவையாக, 'பசி' வந்து விடுகிறது.  இங்கே பசி என்பதை 'உணவுத் தேவை' என்பதோடு மட்டும் நிறுத்தாமல், உயிர் வாழ அத்தியாவசியமான எல்லாவிதமான தேவைகளையும் - காற்று, நீர் உட்பட -  உணர்த்தும் விதமாகவே உபயோகிக்கிறேன்.  இதனால் என் கருத்தில் “பசித் தேவை பூர்த்தியே” முதலாவதாக வரும் இலக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை வளர வளர சுற்றுப்புற சூழ்நிலைகள் புரிய ஆரம்பிக்கின்றன.  தன் உடலுக்கு எதெது தீங்கு விளைவிக்கும் என்றும் புரிய ஆரம்பிக்கிறது.  பசிக்கு பால் தேவை, ஆனால் பால் சூடாக இருந்தால் ஒரு உறிஞ்சலுக்குப் பிறகு நிறுத்திவிடத் தெரிகிறது.  வாழ்க்கையில் உடலுக்கும், உயிருக்கும் வரக்கூடிய அபாயங்கள் புரியப் புரிய அந்த அபாயங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தேவையும் தெரிய ஆரம்பிக்கிறது.  இவைகளை தனியாக வகைப்படுத்தாமல் 'பசித் தேவை பூர்த்தி'யின் ஒரு பாதியாகவே கருதுகிறேன்.  எப்படி தேவை என்று கருதி "சேர்க்க வேண்டியவை" பட்டியலிட ஆரம்பிக்கிறோமோ, அதே போல "சேர்க்கக் கூடாதவை" என்று ஒரு பட்டியலும் தயாரிக்க ஆரம்பிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பட்டியல் வாழ்க்கையில் நம் அறிவும் அனுபவமும் வளர வளர பெரிதாகிக் கொண்டே வருகிறது.  சேர்க்க வேண்டியது - உணவு; விலக்க வேண்டியது - விஷம்; என்ற ரீதியில் உடல், உயிர் காக்கும்/ தாக்கும் சமாசாரங்களை நம் அறிவு நினைவில் தேக்க ஆரம்பிக்கிறது.  உடலுக்கும், உயிருக்கும் வரும் அபாயமெல்லாவற்றையுமே 'விலக்க வேண்டியவை' என்ற பட்டியலில் சேர்க்கலாம்.  ஒரு தேவையை முழுதாகப் புரிந்து கொள்ள சேர்க்க வேண்டியதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது; விலக்க வேண்டியவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  சேர்ப்பதும், விலக்குவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல.  உணவு சேர்க்க வேண்டியவை பக்கம் இருந்தாலும், அளவு அதிகமானாலோ, தரம் குலைந்து போனாலோ அதே உணவு விலக்க வேண்டியவை பக்கம்  தானாக சென்றுவிடும்.  வளர வளர இந்த "பசித் தேவை பூர்த்தி" இலக்கு மாறாவிட்டாலும், இந்தத் தேவையின் புரிதல் பெரிதாகி முழுமையை நோக்கி வளர்கிறது.  இந்தப் புரிதல் இறக்கும் வரை தொடர்கிறது.  இதையே "வாழ வேண்டும்" அல்லது சுருக்கமாக "வாழ்தல்" என்றழைக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் (அல்லது இயற்கை) வீணாக எதையும் செய்வதாகத் தோன்றவில்லை.  ஒரு உயிரைப் பிறக்க வைத்ததற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.  அதனால் இந்த வாழ்க்கை என்பது இலக்கற்ற, ஒருவிதமான வேதியல், உயிரியல் சம்பந்தப்பட்ட பரிணாம வளர்ச்சி மட்டும்தான் என்று எண்ணி வாழ முடியவில்லை. என் பிறப்பின் காரணம் தெரியவில்லை. அந்தக் காரணம் தெரிந்தால் இவ்வாழ்கையின் முக்கியமான இலக்கும் தெரிந்துவிடும்.  அந்தக் காரணம் தெரியும் வரை, பிறந்த அந்த உயிரை தொடர்ந்து வாழ்ந்திருக்க என்ன தேவையோ அதுவே முதல் இலக்காகிறது.  அதனால் என்னளவில் முதல் இலக்கு "வாழ்தல்"!&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு எழுதிய ஒரு &lt;a href="http://pranganathan.blogspot.com/2005/07/blog-post_24.html"&gt;கவிதையின்&lt;/a&gt; சில வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கை நோக்கிப் பயணித்தேன்&lt;br /&gt;பயணத்தில் வந்தது தெளிவு&lt;br /&gt;இப்போது பயணமே இலக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் தொடர்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-4550881370209959476?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/4550881370209959476/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=4550881370209959476' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4550881370209959476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4550881370209959476'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/02/1.html' title='இலக்கு - 1'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-5352058777771203953</id><published>2011-01-28T12:01:00.001-05:00</published><updated>2011-01-28T12:04:01.645-05:00</updated><title type='text'>மறு பிரவேசம்</title><content type='html'>தந்தனத்தோம் கோமாளி (மறுபடி) வந்தேனுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வருடங்களுக்கு முன்னால் (2006ல்) லாவோட்ஸேயின் கவிதைகள் மூலத்தை தமிழில் எழுத ஆரம்பித்தேன்.  மொத்தம் 81 கவிதைகள் - 51 கவிதைகள் முடிந்த சமயத்தில் வேலை மாற்றம் - எழுத நேரம் குறைந்து போய், இந்த மொழி மாற்ற வேலை நின்று போயிற்று.  சென்ற வருட இறுதியில் மறுபடி வேலை மாற்றம்.  மறுபடி கொஞ்சம் நேரம் கிடைக்க முனைப்பாக மீதம் இருக்கும் கவிதைகளையும் மொழி மாற்றம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.  வாரம் ஒன்றாக பதிய உத்தேசம்.  இன்று ஆரம்பித்தாகிவிட்டது - '&lt;a href="http://tseiching.blogspot.com/"&gt;வழி&lt;/a&gt;' தளத்தில். இன்னும் முப்பது வாரத்தில் மொத்தமும் முடிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்று பார்த்து, படித்து எப்படியிருக்கிறது என்றூ சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-5352058777771203953?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/5352058777771203953/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=5352058777771203953' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5352058777771203953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5352058777771203953'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2011/01/blog-post.html' title='மறு பிரவேசம்'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-2534661323121542002</id><published>2010-10-09T17:50:00.000-04:00</published><updated>2010-10-09T17:51:59.469-04:00</updated><title type='text'>மதமும் மானுடமும்</title><content type='html'>&lt;strong&gt;மதமும் மானுடமும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதந்தழுவா மனிதர்களும் வாழ்கையிலே&lt;br /&gt;மனிதர்சேரா மதங்களிங்கே வாழ்ந்ததில்லை&lt;br /&gt;&lt;br /&gt;மதம்வாழ மானுடமும் தேவையென்றால்&lt;br /&gt;மதியுரைத்தேன் மானுடமே மேன்மையென்று.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு உணவாகும் மாக்களுமே&lt;br /&gt;மனிதர்வாழ உதவிடுமே தன்னுழைப்பால்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்வாழ மாக்களுதவி தேவையென்றால்&lt;br /&gt;மனந்தெளிந்தேன் மாக்கள்தானே மேன்மையென்று&lt;br /&gt;&lt;br /&gt;மாக்களுக்கு மானுடமும் தேவையில்லை&lt;br /&gt;மரம்செடி புல்பூண்டு போதுமிங்கே&lt;br /&gt;&lt;br /&gt;மாக்கள்வாழ தாவரமும் தேவையென்றால்&lt;br /&gt;மரமன்றோ மாக்களினும் மேன்மையிங்கே!&lt;br /&gt;&lt;br /&gt;மரம்செடியும் வளர்வதுவும் புவியின்மேலே&lt;br /&gt;மண்ணதனனின் வளத்தாலே செழிக்குமிங்கே&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணதனின் துணையன்றி மரமில்லையென்றாலே&lt;br /&gt;மண்ணன்றோ மற்றதைவிட மேலிங்கே!&lt;br /&gt;&lt;br /&gt;மரமதுவும் வளர்ந்திடவே மாரியோடு&lt;br /&gt;மாருதமும் ஆதவனும் வேண்டுமிங்கே&lt;br /&gt;&lt;br /&gt;மற்றதெல்லாம் பஞ்சபூதம் தந்ததென்றால்&lt;br /&gt;மதம்காக்க மரணிப்பது மடமையன்றோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-2534661323121542002?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/2534661323121542002/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=2534661323121542002' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/2534661323121542002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/2534661323121542002'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2010/10/blog-post.html' title='மதமும் மானுடமும்'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-9043011403812160393</id><published>2009-09-27T14:54:00.001-04:00</published><updated>2009-09-27T14:57:09.489-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொ.போ.பொ.'/><title type='text'>சரியா? சந்தோஷமா?</title><content type='html'>&lt;strong&gt;சரியா? சந்தோஷமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரமாக வேலை அதிகம். இணையத்தில் படிக்க நேரமில்லை; பதிய இன்னமும் அதிகம் நேரம் தேவையாதலால் பதியவும் இல்லை.  இந்த இரண்டு வார வேலை பளுவில் அதிக நேரம் மத்தியஸதம் செய்வதிலும், மாறுபட்ட இலக்குகளுக்கிடையே ஒரு விதமான சமரசம் செய்வதிலும் செலவானது.  அப்போது தோன்றிய ஒரு பொ.போ.பொ. (பொழுது போகாத பொம்மு) சிந்தனைதான் இது.  நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொ.போ.பொ. பிரபலம் - ஒரு பிரதானமான வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன்.  குமுதமா அல்லது விகடனா என்று நினைவில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரச்சனைகள் இருக்கின்றன.  அவை அனைத்திற்கும் ஒரே விதமான விடை கிடையாது.  எல்லா பிரச்ச்னைகளையும் ஒரே விதமாக வகைப்படுத்தவும் முடியாது.  ஆனால் பெரும்பான்மையான சச்சரவுகள் ஒரே விதமான மூல காரணத்தினாலேயே வருகிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்தே ஒரு விஷயம் சரியானதாக இருப்பதே நம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ற பாடம் பதிந்துவிட்டது.  உதாரணமாக பரீட்சையில் விடை  சரியாக இருந்தால், மதிப்பெண் வரும், அதனால் மகிழ்ச்சி.  அதனால் நம் மனதில் நம் எண்ணம், நம் கோணம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக சக்தி செலவழிக்கிறோம்.  எப்போது நம் கருத்து நமக்கு சரி எனப் பட்டு மற்றவரோடு அது ஒத்துப் போகவில்லையோ அப்போது சச்சரவுதான்.  நாம் நம்முடைய விடை சரி என்று முழு மதிப்பெண் எதிர்பார்த்து இருக்கையில், விடை திருத்தும் ஆசிரியர் நம் எதிர்பார்ப்போடு ஒத்துப் போகாமல் மதிப்பெண் குறைத்துப் போட நமக்கு வருவது கோபம், வருத்தம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் ஆசிரியர் ஒருவிதமான விடையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து விட்டால், நமக்கு சரி என்று தோன்றுவதை எழுதாமல், ஆசிரியர் எது சரி என்று எதிர்பார்ப்பார் என்று புரிந்து கொண்டு அதை எழுதி மதிப்பெண் வாங்க முயற்சிப்போம்.  அந்த சிறு வயது பக்குவம் வயது ஆக ஆக குறைந்துவிடுகிறது.  நம் கருத்து சரி என்று அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை வந்து விடுகிறது.  மற்றவர் கருத்து நம்முடைய கருத்தோடு ஒத்துப் போகாத போது, அது தவறு என்று உடனேயே முடிவெடுத்து, தவறான கருத்தை திருத்த வேண்டும் என்ற ஒரு வேகம் வந்து விடுகிறது.  அது மட்டுமல்ல, இந்த திருத்தும் முயற்ச்சியை ஏதோ ஒரு பொது நலத்துக்காக செய்வது போல கற்பனை பண்ணிக் கொண்டு, "என்னதான் இருந்தாலும் ஒரு principle வேண்டும்" என்றெல்லாம்  நம் கருத்தை நியாயப்படுத்தி விடுகிறோம்.&lt;br /&gt; &lt;br /&gt;இதை ஈகோ என்றும் சொல்லலாம்; பிடிவாதம் என்றும் சொல்லலாம்.  அலுவலகத்தில் நான் பார்த்த எந்தப் பிரச்சனையையும் உயிரையும் விடத் தகுந்த உயர்ந்த குறிக்கோள் என்று சொல்ல முடியாது.  இருந்தாலும், அனைவருக்குமே இந்த ஈகோ பிரச்சனையால் தேவையில்லாத விரயம்.  என் கருத்தை மற்றவர் தவறு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, 'சொன்னால் சொல்லட்டுமே' என்று திரும்பிப் போகக் கற்றுக் கொண்டாலே பாதி சச்சரவு போய் விடும்.  அப்படி திரும்பிப் போவதால் இரு தரப்பிலும் மகிழ்ச்சிதான்.  பள்ளியில் படிக்கும் போது இயல்பாக வந்த இந்தத் தன்மை எப்படி தொலைந்து போனது என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம்  யோசித்தால் இந்த ஈகோவிற்காக நம் மகிழ்ச்சியைத் துறக்கக் கூடத் தயாராக இருக்கிறோம்.  இன்னமும் சொல்லப் போனால் தங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் கூட தியாகம் செய்து தம் கருத்து சரி என்று வாதிடுகின்ற மக்களை இப்போதும் நாம் பார்க்கிறோம்.  ஒரு கருத்துக்காக உயிரைக் கூட விடுகின்ற மக்களை சமயத்தில் நாமே ‘தியாகி’ என்றெல்லாம் உயர்த்திப் பேசுகிறோம்.  அந்த அளவிற்கு நம் வளர்ப்பில், வாழ்க்கை முறையில் கருத்துக்கு உயர்ந்த இடம் கொடுத்து, அதன் பொருட்டு கஷ்டத்தையோ, துயரத்தையோ ஏற்பது கூட உன்னதமானது என்று ஆதி காலம் தொட்டு பாடங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை.  உயர்ந்த குறிக்கோளுக்காக உயிரையும் விடலாம் என்ற ரீதியில் நிறையப் படித்தாலும், எது உயர்ந்தது என்ற நிர்ணயம் செய்வது அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை.  அரசியல் தலைவர்கள் கைதுக்கெல்லாம் தீக்குளிக்கும் செய்தியைப் படிக்கையில் இது சுத்தப் பைத்தியக்காரத்தனமான விஷயம் என்று தோன்றுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர் என் கருத்து தவறு என்று சொல்வதைக் கேட்டு வாதம் செய்யக் கிளம்பால் இருந்தாலே மகிழ்ச்சி தானாக வரும் என்றுதான் தோன்றுகிறது.  என் கருத்து சரியாக இருப்பதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டுமா?  அல்லது எனக்கும் மற்றவருக்கும் சந்தோஷமும் திருப்தியும் வேண்டுமா? என்று கேட்டால் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன்.  இந்த ஞானோதயம் இப்போதுதான் வந்திருக்கிறது; நடைமுறையில் எப்படி செயலாகிறது என்று கொஞ்ச நாள் கழித்துத்தான் தெரியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-9043011403812160393?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/9043011403812160393/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=9043011403812160393' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/9043011403812160393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/9043011403812160393'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/09/blog-post.html' title='சரியா? சந்தோஷமா?'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-5180188610882735505</id><published>2009-09-03T20:25:00.008-04:00</published><updated>2009-09-06T15:22:07.214-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குப்பை - 4</title><content type='html'>&lt;strong&gt;குப்பை - 4&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி வீட்டின் குப்பை எது என்பதில் அவ்வளவாகக் குழப்பம் இல்லை; இந்த மனக்குப்பை, இணையக் குப்பை எது என்று கேட்டால் (வல்லியம்மாவின் கேள்வி - சென்ற பதிவிற்கு) எப்படி பதில் சொல்வது? வில்லியம் ஜேம்ஸ் டுரன்ட் என்ற தத்துவ ஆசிரியர் மலர் - அழகு பற்றி எழுதியதை கல்லூரியில் படித்ததுண்டு. "மலர் அழகாயிருப்பதால் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை; அது சந்தோஷத்தைத் தருவதால் அதை அழகு என்கிறோம்" - என்பதுதான் அது. அதே போலத்தான் இந்தக் குப்பை அடையாளமும். எனக்குள் ஒருவிதமான 'நெகட்டிவ்' உணர்வை - அது வெறுப்பு, கோபம், அமைதியின்மை அல்லது அருவெறுப்பு போன்ற உணர்ச்சிகளாக இருக்கலாம் - ஏற்படுத்தும் எந்த செய்கையும், எழுத்தும், படமும் என்னைப் பொருத்தவரை குப்பை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளக்கம் எனக்குத் தெளிவாக இருந்தாலும், இதில் சில நடைமுறைப் பிரச்சனைகள். ஒரு வார்த்தை அல்லது படத்திற்கு எனக்கு வரும் உணர்வும் மற்றவர்களுக்கு வரும் உணர்வும் ஒரே விதமாக இருக்காது. எது எனக்கு குப்பை எனத் தோன்றுகிறதோ அது மற்றவருக்கும் பொருந்தாது. உதாரணமாக ஆத்திகருக்கு நாத்திகம் குப்பை; நாத்திகருக்கு ஆத்திகம் குப்பை. நான் என் உணர்வை பிராதனமாக்கி 'குப்பையை ஒழிப்பேன்' என்று கிளம்பினால் அது மற்றவரோடு சச்சரவைத்தான் உண்டு பண்ணும். அதனால் இந்த விளக்கம் நடைமுறைக்கு 'குப்பையை ஒழிக்க' உதவாது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல - ஒரே எழுத்து சிலருக்கு கோபத்தையும் சிலருக்கு சிரிப்பையும் வரவழைத்தால் அந்த எழுத்தை குப்பை என்று என் உணர்வை மட்டும் பிராதனாமக வைத்து சொல்வது சரியாகத் தோன்றவில்லை. வீரமணி என்ற பெயரைப் பார்த்தவுடன் நாத்திகம் நினைப்புக்கு வருகிறதா அல்லது அய்யப்பன் பாடல் நினைப்புக்கு வருகிறதா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்திருக்கிறது. 'கடவுள் இல்லை' என்ற வாக்கியத்தைப் பார்த்தவுடன் பெரும்பான்மையான ஆத்திகருக்கு கோபமும், நாத்திகருக்கு மகிழ்ச்சியும் வருவது இயற்கை. அதே சமயத்தில் 'அவன் இல்லை என்று சொல்வதற்குக்கூட அவனை முதலில் சொல்லாமல் இருக்க முடியாது' என்று இந்த வாக்கியத்தைப் பார்த்து மகிழ்ந்த சிவபக்தரைப் பார்த்திருக்கிறேன். 'இல்லை என்பதை எப்படிக் குறித்து இல்லை என்று சொல்லமுடியும்? இதுவே பகுத்தறிவுக்குப் புறம்பானது' என்று இதே வாக்கியத்தைப் பார்த்து கோபப்பட்ட நாத்திகரையும் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் குப்பை அதிகம், அதனால் என் நினைப்பில் குப்பை வந்து விட்டது என்று சொல்வது, 'கல் தடுக்கி விட்டது' என்று நாம் சொல்வது போலத்தான். நாம் பார்க்காமல் கால் தடுக்கி விழுந்துவிட்டு ஏதோ நகர்ந்து வந்து கல் நம் காலை வாரி விட்டது போல சொல்வது எப்படிப் பொருந்தாத ஒன்றோ, அதே போல ஒரு எழுத்தை, படத்தை, செய்கையை குப்பை என்று சொல்வது உண்மையில் 'இதைப் பார்த்து படித்ததால், என்னுள்ளே குப்பையான உணர்வுகள் வந்து விட்டன' என்று தான் சொல்வதாக அர்த்தம். நான் 'குப்பை' என்று சொல்வது என்னுணர்வையும், அந்த எழுத்தின் (அல்லது படத்தின், செய்கையின்) வகைப்பாடையும் தான் குறிக்குமே தவிர, அதன் தரத்தைக் குறிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயத்தில் ஒரு எழுத்து பெரும்பான்மையான மக்களுக்கு ஒரே விதமான உணர்வைத் தந்தால், அந்த எழுத்தும் அந்த உணர்வோடு ஒன்றாகிப் போகிறது. மக்களை ஒரு சங்கடத்தில் ஒன்று சேர்த்து எழுப்பிவிட்ட பேச்சுகளை (உதாரணம்: காந்திஜியின் தண்டி யாத்திரை, மார்ட்டின் லூதர் கிங் பேச்சு) வரலாற்றின் அதிகம் காணலாம். அதே போல பெரும்பான்மையான மக்களுக்கு அருவருப்பைத் தரும் எழுத்தை குப்பை என்று சொல்வது தவறாகத் தோன்றவில்லை. எப்படி ஒரு எழுத்து எனக்குள் உணர்வைத் தூண்டுகிறதோ, அதே போல என் உணர்வுதான் எழுத்தாக என்னிடமிருந்து வருகிறது. என் உணர்வு குப்பையாயிருந்தால், என் எழுத்தும் அதை பிரதிபலிக்கும். மற்றவரைப் பற்றி தரக் குறைவாக எழுதுகையில் உண்மையில் என் உணர்வு குப்பை என்றுதான் நான் பறை சாற்றுகிறேன். இது புரிந்துவிட்டால் நான் குப்பை போடப் போவதில்லை. இது இணையத்தில் எழுதும் அனைவருக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் எப்படி குப்பையைக் குறைப்பீர்கள் என்று கேட்டால், நான் குப்பை போடாமல் இருக்கப் போகிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடியும். என் வீடு சுத்தமாயிருப்பதைப் பார்த்து அடுத்த வீட்டிலும் குப்பை குறைந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி. சாதத்தில் கல், உமி வருவது சகஜம். அது குப்பைதான்; எடுத்து எறிந்துவிட்டு சாப்பிடத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் சாதம் எடுத்து வந்த பிளாஸ்டிக் டப்பா தவறி தரையில் விழுந்து மண்ணோடு கலந்துவிட்டால், சாதத்தைத் தூக்கிப்போட்டு விட்டு டப்பாவை அலம்பி எடுத்து வந்து விடுகிறோம். குப்பை அதிகமாகி வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவையே நாறடித்துவிட்டால், டப்பாவோடு சேர்த்து எறிந்து விடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஸ்டிக் டப்பாவை குப்பையில் போடாமல் அதை மீள்சுழற்சி மூலம் மற்றுமொரு டப்பாவாக செய்ய முடியும்; செய்கிறார்கள்.  மனதில் வரும் கோபத்தை, அந்த வேகத்தை, வெறியை, ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று திருப்ப முடியும்.  என்னளவில் கொஞம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.  கோபமே இல்லாமல் இருப்பதென்பது முடியாது போலத் தோன்றுகிறது; ஆனால் கோபம் வருகையில், வெளியில் புல்லை வெட்டவோ, அல்லது தரையை அழுத்திச் சுத்தம் செய்யவோ ஆரம்பித்தால், அந்த கோபத்தில் வரும் வேகம் ஒருவிதமாகத் தணிந்து போகிறது (புல்லும் வெட்டப்பட்டு விடுகிறது, தரையும் சுத்தம்!).&lt;br /&gt;&lt;br /&gt;என் மனமும் இந்த சாதம் வைத்த பிளாஸ்டிக் டப்பா போலத்தான். அவ்வப் போது குப்பை வருகிறது - எடுத்துப் போடுவதற்காக மற்ற நல்ல உணர்வு தரும் விஷயங்களில் நேரத்தை செலவழிக்கிறேன். குப்பை தேங்க ஆரம்பித்தால், நானும் குப்பைத் தொட்டியாகிவிடுவேன் என்று தெரியும். அளவு ரொம்பவும் அதிகமானால் குப்பைத்தொட்டியே குப்பையாகிவிடுவதைப் பார்த்ததால், அளவு மீறக் கூடாது என்று தீர்மானம். இல்லையென்றால் யாராவது படையப்பா ஸ்டைலில்:"நேற்று வரைக்கும் குப்பைத் தொட்டியப்பா; இன்று முதல் நீ குப்பையப்பா" என்று பாடிவிடுவார்கள். எதோ ஒரு காரணத்துக்காக ஆண்டவன் (அல்லது இயற்கை) என்னைப் படைத்திருக்கிறான்; அது குப்பையாக மாற அல்ல என்று மட்டும் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு வேறு ஏதாவது வழியில் குப்பையை குறைக்க, அல்லது தேங்காமல் இருக்க வைக்க முடியும் என்று தோன்றினால் அவசியம் சொல்லவும். என்னாலான வழியில் நிச்சயம் முயற்சிப்பேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-5180188610882735505?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/5180188610882735505/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=5180188610882735505' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5180188610882735505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5180188610882735505'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/09/4.html' title='குப்பை - 4'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-4901728839291077283</id><published>2009-08-29T18:44:00.002-04:00</published><updated>2009-08-29T21:10:51.679-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குப்பை - 3</title><content type='html'>குப்பை - 3&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொடர் எழுத ஆரம்பிக்கையில் எனக்குள்ளே நிறைய கேள்விகள். அதில் ஒன்று: 'உண்மையிலேயே சிறு வயதில் வீட்டில் குப்பை இல்லாமல் இருந்ததா?; அல்லது நானும் என் பாட்டி அடிக்கடி சொல்லி வந்தது போல "அந்தக் காலம் போல இல்லை" என்ற ரீதியில் பழையதை மிகைப்படுத்தி, நிகழ்வைப் புறக்கணிக்கிறேனா' என்பது தான். நன்கு ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பட்டுக்கோட்டையிலும், மன்னார்குடியிலும் வீட்டின் பின்புறம் இருந்த சாக்கடை நினைவுக்கு வந்தது. அவை எல்லோருக்கும் தெரிகிறமாதிரி திறந்த வெளிச் சாக்கடைகள். தண்ணீரில் அடித்துச் செல்லப் படும் வீட்டுக் குப்பைகள் எல்லாம் அதில் தான் சென்று சங்கமித்தன. கரையாத திடக் குப்பைகளுக்கு அங்கு இடமில்லை. தப்பி யாராவது அந்த மாதிரி குப்பையைப் போட்டால், சாக்கடை தேங்கி நாற்றம் மட்டுமல்லாமல் கொசுவும் சேர்ந்து அனைவருக்கும் தொந்தரவு. அதனால் அனைவருமே இந்த எழுதாத சட்டத்தைப் பின்பற்றி, சாக்கடை ஒடுகிற மாதிரியே வைத்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக் குப்பைகள் இப்படி என்றால், வெளியே மனக் குப்பைகளைத் தூண்டும், சேர்க்கும் விஷங்களிலும், ஒரு விதமான் அளவுத் தடுப்பு இருந்தது. அப்போதெல்லாம் வீட்டில் வானொலி மட்டும்தான்; தொலைக் காட்சி இல்லை. இது இயல்பிலேயே ஆபாசக் குப்பைகள் வருவதைக் குறைத்தன. வெளியே சினிமா போஸ்டர்கள், தெருவில் எழுதப்பட்ட கரி வாசகங்கள் கொஞ்சம் குப்பைகளைக் கொடுத்தாலும், சுவர்கள் எண்ணிக்கைகளில் அளவு இருந்ததால், இந்த மாதிரிக் குப்பைகள் அளவிலே குறைவாக இருந்தன. மொத்த நகரத்தில் இருந்த சுவர்களில் வித விதமான கருத்துகள் - அது ஜவுளிக் கடை விளம்பரமாகட்டும், அல்லது அரசியில் கட்சியின் பிராசரமாகட்டும் (தேர்தல் சமயத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகும்), அல்லது முனிசிபாலிடியின் சுகாதாரப் பிரசாரமாகட்டும் - மொத்தத்தில் தகவல் தெரிவிக்கும் விதமாகவே இயங்கி வந்ததால், அதிகம் குப்பைகள் இல்லை. பைபிள் போதனைகளைச் சொல்லும் பெண்கள் பள்ளியின் சுவரை பார்க்கையில், மனது கொஞ்சம் சமனப்பட்டுப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் அரிதாக சுவற்றில் குப்பைகளையும் பார்க்கலாம் - ஒரு ஜாதியைத் திட்டியோ, அல்லது ஒரு வர்கத்தை, கட்சி/அரசியல்வாதியைத் திட்டியோ எழுதப்பட்டிருக்கும். என் வகுப்பில் கூடப் படித்த இராஜகோபாலுக்கும், கருணாநிதிக்கும் இடையில் இந்தமாதிரி ஒரு குப்பை சுவர் வாக்கியம்தான் அவர்களின் நட்புக்கு இடையில் வந்தது. ஊர் முழுதும் இருக்கும் சுவரொட்டிகள், சுவர் வாசகங்களில் இந்த மாதிரி குப்பைகள் விகிதாசாரப்படி மிகக் குறைவு; ஆனால் ஒரு குப்பைச் சுவரால் வந்த தீங்கை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய காலத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியால் சில மாற்றங்கள். வீட்டில் இருக்கும் தண்ணீர்க் குப்பைகளை நகர பொதுக் கழிவுக் குழாய்களுக்கு பூமிக்கடியில் மறைத்து எடுத்துச் செல்வதால் அதன் அளவோ, அதிலுள்ள மற்ற சங்கடங்களோ (தேக்கம், அதனானால் வரும் நாற்றம், கொசு) தெரிவதில்லை. சங்கடங்கள் குறைவு என்பதால் இதை முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும். அதே தொழில்நுட்பம் தொலைக்காட்சி மற்றும் இணையத்தைத் தந்திருக்கிறது. வானொலி அதிகம் கேட்பதில்லை; அதனால் அதில் எந்த அளவு குப்பை இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரியாது. எப்போதாவது காரில் செல்கையில், சில 'டாக் ஷோ' என்று சொல்லப் படும் பேச்சு மேடைகளில் பேசப் படுவதை கேட்ட போது, குப்பைகள் வானொலியிலும் வந்து விட்டன என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக் காட்சியைப் பற்றி சொல்ல வேண்டாம்; அது சினிமாவினால் உந்தப் பட்டு, வரும் பொருளாதாயத்தால் நிலை தடுமாறி, குப்பைகளை விகிதாசாரத்தில் அதிகமாகவே தருகிறது. வெளியே சுவரில் எழுத செலவு அதிகம்; அதனால் அந்த மாதிரிக் குப்பைகள் குறைவு. மாற்றாக வந்தது இணையம். இது ஒரு விதமான பெருச்சுவர்; அளவில் குறைவில்லை. அது மட்டுமல்ல - அனைவர் கைகளிலும் எழுத எடுக்க எடுக்க குறையாமல் வரும் கரித்துண்டுகள். மொத்தத்தில் இயற்கையாக இருந்த சுவர் எண்ணிக்கைத் தடை இப்போது இல்லை - கணினி மூலமாகச் சென்றால் உலகச் சுவர் அனைத்தும் தெரியும். இதில் கரித் துண்டால் மற்றவரைத் திட்டி எழுதியதையும் படிக்கலாம்; அல்லது அழகான வண்ணத்தோடு வரைந்த ஓவியங்களையும் பார்க்கலாம். வரைவது கடினம்; திட்டுவது சுலபம். அதிகப் படியான பக்கங்கள் சுலபமாக வருவதையே தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இணையப் பக்கங்கள் நிரந்தரமாக நின்று விடுகின்றன. பொங்கலுக்கு முன் வெள்ளையடித்து, குப்பைகளை அழிக்க முடியவில்லை. மன்னார்குடியில் ஒரு குப்பைச் சுவரால் வந்த கேடு இன்னமும் நினைவில் இருக்கிறதால், இந்த இணையச்சுவர்களால் எத்தனை கேடு வருமோ என்று பயம் வருகிறது. சிறு வயதில் இருபது சுவர்களில் தொடர்ச்சியாக பைபிள் வாசகம் இருந்தாலும், கரித்துண்டால் அசிங்கமான படம் வரைந்து திட்டி எழுதப்பட்ட ஒரு சுவரைத்தான் பார்க்க ஆவல் (curiosity) இருந்தது. இப்போதும் அதே போல அதிகமான் மக்கள் ஒருவிதமான் ஆவலால் இந்த இணையக் குப்பைச் சுவர்களைப் பார்க்கிறார்கள்; படிக்கிறார்கள். இந்தச் சுவர்கள் நிரந்தரமாக இணையத்தில் நிற்பதால், குப்பைகள் தேங்க ஆரம்பித்து விட்டது. ஒரு பழைய திரைப் பாடலில் சொன்னது:&lt;br /&gt;"தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ?&lt;br /&gt;தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ?"&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் தமிழ் மூலமாக வரும் குப்பைகளைப் படிக்கையில் தமிழும் பாவம்தானே என்று வருத்தம் வருகிறது. "தமிழினிய தெய்வதமே" என்று பெருமையோடு பாடியவர் இப்போது கணினியில் பதியப்படும் குப்பைகளைப் படித்தால் தன்னுயிரை விட்டுவிடுவார்.  இந்தக் குப்பைகள் தேங்காமல் எப்படி வெள்ளையடித்து சுவரைச் சுத்தம் செய்வது? எனக்குத் தோன்றியதை அடுத்த பதிவில் எழுதி, தொடரை முடிக்க உத்தேசம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-4901728839291077283?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/4901728839291077283/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=4901728839291077283' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4901728839291077283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4901728839291077283'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/08/3.html' title='குப்பை - 3'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-7416553042406499189</id><published>2009-08-20T19:12:00.006-04:00</published><updated>2009-08-23T18:47:38.908-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குப்பை - 2</title><content type='html'>குப்பை - 2&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா இது ஒரு குப்பை விஷயத்துக்கு தொடரா'ன்னு நினைக்க வேண்டாம். இந்த 'குப்பை' வேறு விதமானது. வீட்டில் இருக்கும் பொருள் குப்பைகள் (புறக் குப்பைகள்) எப்படி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறதோ அதே போல வளர்ந்து வருகையில், மனதிலும் குப்பைகள் (அகக் குப்பைகள்) பின்னிப் பிணைந்திருக்கின்றன. என் வாழ்க்கையில் புறக் குப்பைகள் எப்படி மாறி வளர்ந்தனவோ, அதே போலத்தான் அகக் குப்பைகளும் மாறி வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் வீட்டில் குப்பை பார்த்ததாக நினைவில்லை; மனதிலும் மற்றவரைப் பற்றிய பொறாமை, வன்மம், இன்னபிற கெட்ட எண்ணங்கள் இருந்ததாக நினைவில் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின், சண்டை, கோபம் நிச்சயமாக வந்தன; ஆனால் அவைகள் நினைத்து நிற்கவில்லை. எப்படி பட்டுக்கோட்டையில், மன்னார்குடியில் வீட்டுக் குப்பைகள் தினமிருமுறை வெளியே சென்றனவோ, அதேபோல மனதிலும் கோபம், வருத்தம், போன்ற குப்பைகள் சீக்கிரம் காலியானது.  தாமரை இலை தண்ணீர் போல உடனே கோபம் வெளியேறிப் போனது.  நினைப்பிலும் தங்காமல், அது மனதில் ஊறி வன்மம், பொறாமை என்றேல்லாம் உருவேறாமல், காணாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மட்டுமல்ல, கூடப் படித்த அனைவருமே கிட்டத்தட்ட அதே போலத் தான்.  'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' - சொல்லுக்கு அவசியம் இல்லாமல் போனது - அனைவருக்குமே 'உள்ளே' அதிகமாக ஒளித்து வைக்க குப்பைகள் இல்லாததால். வளர்ந்து கல்லூரிக்கு செல்கையில், கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகள் அதிகமானது.  விடலைப் பருவ எண்ணங்கள் இப்போது யோசிக்கையில் குப்பைதான்; அப்போது அவை முக்கியமான விஷயம்! மூளையில் நினைவில் தேக்கி வைக்க விரும்பிய குப்பைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி நகரத்தில் வாசம் செய்கையில் குப்பைகள் சில மணி நேரம் அதிகம் வீட்டில் இருந்தனவோ, அதே போல வளர வளர கோபம், பொறாமை, கடுப்பு என்றெல்லாம் குப்பைகள் மனதிலும் நினைவிலும் அதிக நேரம் இருக்க ஆரம்பித்தன. குப்பைகள் அதிக நேரம் குப்பைத் தொட்டியில் தங்கி, வீட்டின் வாசம் கெட, குப்பைத்தொட்டியை மாற்ற வேண்டியிருந்தது.  பழைய பிளாஸ்டிக் தொட்டியைத் தூக்கியெறிந்து விட்டு, முதிதாக மாற்றவும் முடிந்தது.  ஆனால் இந்த மனக்குப்பைகளை வைத்திருக்கும் மனக் குப்பைத்தொட்டியை தூக்கியெறிந்து புதிதாக மாற்ற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் செல்ல ஆரம்பித்தவுடன் கற்றுக் கொண்ட முதல் பாடம் 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்' கலை!  மனதில் குப்பைகள் இருக்கும்; வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்ற பாடம்தான் சரி என்று நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் ஒத்துக் கொள்ளவும் நாளாகினாலும், கடைசியில் அது தான் பாடமாகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நாடு விட்டு நாடு வந்ததில் வீட்டில் வாரக் குப்பை; அதற்காக பள பள தொட்டி, வாசனைப் பை என்றெல்லாம் உபயோகிக்கையில் மனதின் குப்பைகளுக்கும் இதே போல ஒப்பனை செய்யும் நாகரீகமும், வார்த்தை ஜாலமும் அத்தியாவசியமாகிப் போனதை நினைத்து வருத்தம் தான் வருகிறது.  மறுபடியும் குப்பைகளில்லாத சிறுவயதுக் குழந்தை, சிறுவர் காலத்திற்கு செல்ல மாட்டோமா என்ற ஏக்கமும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் பேசும் பேச்சைக் கேட்கையில் குப்பைகளை தேக்காமல் அவர்களால் இருக்க முடிகிறதே என்ற சந்தோஷம் வருகிறது. அதே சமயத்தில் அவர்கள் பேசும் பேச்சு 'மற்றவர்களுக்குப் பிடிக்காது, பின்னாளில் சமூகத்தில் அவர்கள் இயங்குவதற்கு தடையாகும்' என்று நினைத்து பெற்றோர்கள் (நான் உள்பட) 'பண்பாகப் பேச' கற்றுக் கொடுப்பதைப் பார்க்கையில் நாமே குப்பைத்தொட்டியை வளர்க்கிறோமோ என்ற குற்றவுணர்வும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைகளே இல்லாமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அது தேங்கி, மற்றவற்றையும் நாசம் செய்யாமல், தேங்காமலாவது இருக்கட்டுமே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-7416553042406499189?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/7416553042406499189/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=7416553042406499189' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7416553042406499189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7416553042406499189'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/08/2.html' title='குப்பை - 2'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-400100878330770354</id><published>2009-08-11T19:11:00.003-04:00</published><updated>2009-08-16T09:42:12.379-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குப்பை - 1</title><content type='html'>குப்பை – 1&lt;br /&gt;&lt;br /&gt;இது உண்மையிலேயே 'குப்பை/குப்பைத் தொட்டி' பற்றிய பதிவுதான். சிறு வயதில் பார்த்ததெல்லாம் தெருவில் ஒரு சிமென்ட் சிலின்டர். மூலையில் நிறுத்தி வைத்திருப்பர்கள். வாரம் ஒரு முறை முனிசிபாலிடி குப்பை வண்டி வந்து அந்த சிமென்ட் குழாயைச் சாய்த்து விட்டு, கூடையில் சேர்த்து, வண்டியில் (மாட்டு வண்டி) போட்டு எடுத்துச் செல்வார்கள். மன்னார்குடியில் நாங்கள் இருந்த தெருவில் புழுதி அதிகம்; குப்பை வண்டி வந்து போகும் போது தெரு முழுதும் ஒரே தூசி படலம் தான். காரணம் அந்த தொழிலாளர்கள் துடைப்பத்தால் - நீண்ட கழியின் முனையில் முக்கோண வடிவில் சிறு தட்டி - பெருக்கி குவித்தபடியே போவார்கள்; பெண் தொழிலாளிகள் அதையும் எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டே தொடர்வார்கள். வீட்டின் அருகிலேயே குப்பைத்தொட்டி இருந்ததால், வீட்டிற்குள் குப்பை சேகரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது வட நாட்டில் (சண்டீகர்/தில்லி) வாசம் செய்த போது 'கூடா'வாக மாறியது. ப்ளாட்டில் இருந்ததால், வீட்டிற்குள்ளேயே ஒரு சிறு குப்பைத் தொட்டியில் முதலில் சேகரம்; தினமும் காலையில் அந்த ப்ளாட்டுகளுக்குப் பொதுவான ஒரு 'கூடா' சேகரம் பண்ணும் பணியாளர் வந்து தன்னுடைய பெரிய பிளாஸ்டிக் கூடையில் ஒவ்வொரு வீட்டு 'கூடா'வையும் போட்டு எடுத்துச் செல்வார். அது ஒரு பெரிய வண்டிக்கு (இது இயந்திர வண்டி; மாடு தப்பித்தது) மாறி நகரத்தை விட்டு வெளியே செல்லும். 'கூடா' மனிதர் வராத நாளில் (அது வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள்), வீட்டுக் குப்பை அளவு அதிகமாகும்.  ஆக ஒரு விதமான கிராம/நகர இடத்திலிருந்து மாநகரத்துக்கு மாறுகையில், வீட்டுக் குப்பை அதிகமாயிற்று. வீட்டிலே குப்பை சேகரத்திற்கென்று தனியான குப்பைத் தொட்டி - பிளாஸ்டிக்கில்! குப்பையை வீட்டிலே சேமித்து வைப்பது, முன்னேற்றத்திற்கு அடையாளமானது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் நாடு விட்டு நாடு வந்து அமெரிக்க வாசத்தில் வீட்டுக் குப்பை தொட்டி அளவிலே பெருத்தது - காரணம், இங்கு தினந்தோரும் வீட்டுக் குப்பையை யாரும் எடுத்துச் செல்வதில்லை. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை - இரண்டுக்கும் தனித் தனிக் கட்டணம். அதிலும், நேரத்திற்கு (முதல் நாள் மாலையே) குப்பைத் தொட்டியை வீட்டு வாசலில், அதற்குறிய இடத்தில் வைக்க வேண்டும். வேளை தப்பினால் வீட்டிலே இருவாரக் குப்பை. எடுத்துச் செல்லும் இயந்திர வண்டி (பெரிய லாரி), தன் இயந்திரக் கரத்தால் குப்பைத் தோட்டியைத் தூக்கி, கவிழ்த்து குப்பை வண்டியில் விழுந்த பின், தொட்டியை வைத்துவிட்டு செல்லும். அதனால் தொட்டி எந்தப் பக்கம் பார்த்து இருக்கிறது என்றெல்லாம் சரிபார்த்து வைக்க வேண்டும்! இல்லையென்றால் பாதி குப்பை பெட்டிக்குள்ளேயே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெரிய குப்பைத்தொட்டி அனேகமாக எல்லா வீட்டு காரேஜிலோ அல்லது வீட்டுப் பின்புறமோ தனியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விட்டிற்கு வெளியே வந்து குப்பையைப் போடுவது இயலாத ஒன்று - அதுவும் பனி பெய்யும் குளிர் காலத்தில். அதனால் வீட்டிற்குள்ளே சிறு குப்பைத் தொட்டிகள். அதுவும், குப்பை வாரியாக - சமையலறை குப்பைத் தொட்டி தனி விதம்; குளியலறை குப்பைத்தொட்டி வேறு விதம்; தவிர பாட்டில், காகிதம் என்று மறுசுழற்சி (recycle) செய்யும் பொருள்களுக்கான குப்பைத் தொட்டி வேறு.  நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு, தட்டில் உள்ள கருவேப்பிலை, முருங்கைக்காய் சக்கை எல்லாம் தட்டைக் கழுவும் தொட்டியில் போட முடியாது - அங்கு 'garbage dispenser' இருந்தாலும் கூட. முருங்கைக்காய் தொட்டியில் மாட்டிக் கொண்டு அதை சுத்தம் பண்ணுவதற்கு முன் பசி வந்து இன்னுமொரு முறை சாப்பிட வேண்டிருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, இந்தக் குப்பைத் தொட்டி மூன்று-நான்கு நாட்களுக்கான குப்பை சேகரம் பண்ணுவதால், அளவிலும் பெரிதாக இருக்க வேண்டும், மூடியோடு கூட வேறு இருக்க வேண்டும் – இல்லையென்றால் நம் சுவாசம் பாதிக்கும்! குப்பையை நேரடியாக பெட்டியில் போடவும் முடியாது; அப்புறம் பெட்டியை யார் அலம்பி சுத்தம் செய்வது?  இதற்கென்று ஒரு பிளாஸ்டிக் பை! அதிலும் வகை வகையாய் இருப்பதால் (நல்ல வாசனையோடு இருக்கும் பைகளும் உண்டு), கடையில் இதைத் தெரிந்தெடுக்கவே நேரமாகும். இதெல்லாம் போதாதென்று குப்பைத் தொட்டியை இளப்பமாகவும் வாங்க முடியாது - வீட்டிற்கு ஏற்ற சமையலறை; சமையலறைக்கேற்ற குப்பைத் தொட்டி. இந்தியாவில் இருக்கையில் உபயோகித்த பிளாஸ்டிக் போய் பள பளபளவென்றிருக்கும் எவர்சில்வர் குப்பைத் தொட்டி வாங்கியாகிவிட்டது. அனேகமாக முக்கால்வாசி வீட்டில் இது தான் சமையலறையில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்ட கையோடு மூடியைத் திறக்க முடியாதென்று, தொட்டியின் அடியில் ஒரு பெடல். அழுத்தினால் மூடி திறக்கும். நம்மூரில் பிளாஸ்டிக் பெட்டி அதிக நாள் வராது; உடைந்து போகும், வேறு வாங்க வேண்டும். இங்கு நிறைய நாள் உபயோகிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அழுத்தும் பெடல் - பிளாஸ்டிக். கொஞ்ச நாளில் உடைந்து போகும் - அப்போது மூடியை கையால் தான் தூக்க வேண்டும். தூக்கிப் போட்டு புதிது வாங்கி விட மனசு வரவில்லை. நான் வளர்ந்த விதம் தனி! பள பளவென்றிறுக்கும் இதை தூக்கிப் போடுவதா என்று யோசனை. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பெடல் இல்லாத தொட்டி. சரி நாம் தான் இப்படி என்றால் ஒரு நண்பர் (அவரும் நம்மூரிலிருந்து குடி பெயர்ந்தவர்) வீட்டுக்குப் போயிருந்த போது அவர் வீட்டு சமையலறையிலும் இதே போன்று ஒரு பெடல் இல்லாத எவர் சில்வர் தொட்டி!!&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஒரு பொது விஷயம் இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருந்தோம். இந்த குப்பைத் தொட்டி தயாரிக்கும் நிறுவனங்களை திட்டினோம் - வருமானத்துக்காக வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களே என்று. வீட்டிற்கு வந்திருந்த மூன்றாவது நண்பர் - அவரும் நம்மூர் தான் - புதிதாக எவர்சில்வர் பெடலோடு வந்த தொட்டி வாங்கியதாகவும், அதுவும் கொஞ்ச நாளில் உடைந்து போய் விட்டது (காரணம் பெடலை தொட்டியோடு இணைக்கும் கம்பி பிளாஸ்டிக்!!) என்றும், அந்தப் பெடல் எவர் சில்வர் என்பதால் அதை தூக்கிப் போடாமல் கராஜில் வைத்திருப்பதாகவும் சொன்னார்! சரி நாமே தேவலை என்றுதான் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் அதிக விஷயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் இந்த குப்பை மட்டும் முந்நாளை விட இந்நாளில் ரொம்பவும் நெருங்கி இருப்பதை நினைக்கும் போது மனது கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறு வயதில் சராசரியாக வீட்டில் இருந்த குப்பையை விட, இப்போது மூன்று அல்லது நான்கு மடங்கு - அதுவும் மிக அருகே! இது ஒரு விதமான பின்னிறக்கம் தான்!!  தொடர்ச்சி அடுத்த பதிவில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-400100878330770354?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/400100878330770354/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=400100878330770354' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/400100878330770354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/400100878330770354'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/08/1.html' title='குப்பை - 1'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-274552280123626674</id><published>2009-08-08T17:46:00.002-04:00</published><updated>2009-08-08T17:56:44.308-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பார்வை வேறு, கோணம் வேறு.</title><content type='html'>&lt;strong&gt;பார்வை வேறு, கோணம் வேறு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மேக மூட்டம் இல்லாத நாளில் இங்கிருந்து பார்க்கையில் அமெரிக்கா தெரியும்", எங்கள் பேருந்தில் இருந்த ஸ்பீக்கரில், பயண கைடு வர்ணித்துக் கொண்டு வந்ததை "ஓ" என்று பஸ்ஸின் பின்புறத்தில் இருந்து ஒரு வந்த சப்தம் பாதியில் நிறுத்தியது.  கூட வந்திருந்த ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா - ஒரு பத்து வயது பையனோடு வந்திருந்தார்கள்), அப்பா மெதுவாக அந்த சிறுவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.  தடங்கலுக்குப் பிறகு - முன்னால் அமர்ந்திருந்த சில தலைகள் திரும்பிப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டன -  வர்ணனை தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் விடுமுறைக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளாக எண்ணம்; இப்போதுதான் நிறைவேறியது. இருவருக்கும் வேலை வேலை என்று ஓடி, கொஞ்சம் அலுப்பும் சேர, திடீரென்று ஒரு விடுமுறை யோசனை தோன்றியதில் இந்தப் பயணம்.  விடுமுறையில் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் யாராவது வண்டி ஒட்டி எல்லா இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதலிலேயே முடிவெடுத்து வந்து விட்டோம் - தினசரி வாழ்க்கையில் அதிகமான நேரம் டிராபிக்கில் கார் ஒட்டியதால், ஒரு வாரம் சும்மா சுற்ற வேண்டும் என்றுதான் தீர்மானம். சப்தம் இல்லாமல், அதிக வேலை இல்லாமல் நாளைக் கழிப்பதே இந்த வார இலக்கு எங்களுக்கு! &lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தின் மூன்றாவது நாள் - குபெக்.  மான்டிரியாலில் இருந்து ஒரு மூடிய ஏ.ஸி. பஸ்ஸில் வந்து, பின் ஒரு திறந்த பஸ்ஸில் குபெக்கிற்குள் சுற்றி வந்து கொண்டிருந்தோம்.  பயண ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் செய்கைகளும், சப்தங்களும் தொந்தரவாகவே இருந்து வந்தன.  பஸ் மலையில் ஏறி நிறுத்தத்தில் நின்றது - எங்களைப் போன்று வந்திருந்த பிற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க, சிரம பரிகாரம் செய்து கொள்ள.  இறங்குகையில் சப்தம் போட்ட சிறுவனையும், அந்த குடும்பத்தையும் ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே இறங்கினேன், மற்ற பயணிகளைப் போலவே.  அதிக காசு கொடுத்து கொஞ்சம் ஜாலியாக சுற்றலாம் என்று வந்தால் இத்தனை இடைஞ்சலா என்று தோன்றினாலும்,  இதற்கு முன் சொந்தக் காரர் ஒருவர் வீட்டுப் பிள்ளையையும் இதே போல பார்த்ததால் எங்களுக்கு அவர்கள் மேல் கொஞ்சம் பரிதாபம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் சீட்டுக்கு முன்னாலிருந்த ஒரு முதிர் தம்பதியினர் இதை தங்களுக்குள் வெளிப்படையாகவே கொஞ்சம் கடுப்போடு (மற்றவர்களுக்கு கேட்காத மாதிரிதான்) பேசிக்கொண்டு வந்தார்கள்.  பஸ் கிளம்பும் நேரம் வந்தது; பயணிகள் அனைவரும் வந்து விட்டார்கள் அந்த ஒரு குடும்பத்தைத் தவிர.  ஐந்து நிமிட தாமத்திற்குப் பிறகு அவர்களையும் ஏற்றிக் கொண்டு மற்ற பயணிகளின் முணுமுணுப்புகளோடு வண்டி கிளம்பியது. &lt;br /&gt;&lt;br /&gt;மலையிலிருந்து இறங்குகையில் சப்தம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது அந்த சிறுவனிடமிருந்து.  நல்ல வேளையாக பஸ்ஸில் காலி இடம் கொஞ்சம் இருந்தது.  எல்லா பயணிகளும் பஸ்ஸின் முன்புறம் உள்ள சீட்டுகளுக்கு மாற, அந்தக் குடும்பமும் கடைசி சீட்டுக்கு மாற, நடுவில் இரண்டு/மூன்று வரிசை காலி சீட்டுகளோடு வண்டி சென்றது.  பஸ்ஸில் கைடு உட்பட அனைவர் முகத்திலுமே கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது - இந்த குடும்பத்தைப் பார்க்கையில்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிறுத்தம் குபெக்கிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்க்க.  அங்கிருந்த விஞ்ச் மூலமாக மலைக்கு செல்ல வேண்டும்.  விஞ்ச்சில் அதிகபட்சம் ஆறு அல்லது எட்டு பேர்தான் செல்ல முடியும்; அதனால் பஸ்ஸின் பயணிகளை இரண்டு/மூன்று குழுவாகப் பிரித்து விஞ்சில் அனுப்பிக் கொண்டிருந்தார் கைடு. எங்கள் முறை வருகையில் நாங்களும், அந்தக் குடும்பமும் மட்டும்.  விஞ்சில் செல்கையில் எங்கள் பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் அப்பா சொன்னார் - சிறுவனுக்கு Autism என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பேசிக் கொண்டே வந்தோம்; பின் திரும்பி வருகையிலும், மற்ற பயணிகள் கொஞ்சம் விலகிச் செல்ல, நானும் என் மனைவியும் இவர்களோடேயே விஞ்சில் வந்து, பஸ்ஸில் ஏறினோம்.  இம்முறை அவர்களுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தோம்; அந்த அம்மாவின் முகம் 'நன்றி' என்று பார்வையில் சொன்னது. பஸ்ஸில் முன்னாலிருந்த பயணிகள் முகத்தில் கேள்வி - எங்களைப் பார்க்கையில், 'ஏன் முன்னால் அமரவில்லை' என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மான்டிரியால் திரும்புகையில் சிறுவன் உறங்கி விட, அவர்களோடு பேசிக் கொண்டே வந்ததில் அந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்தது.  மனைவி ஒரு டாக்டர்.  கணவர் நல்ல வேலையில் இருந்து விட்டு, வீட்டு நிலைமைக்காக வேலையை விட்டு விட்டார். விடுமுறைக்காக கனடா வந்திருக்கிறார்கள். பையனுக்கு வயது பத்தாகி விட்டாலும், மனதளவில் ஒன்றரை வயது; பேச்சு வரவில்லை; இன்னமும் Diaper தான் உபயோகிக்கிறான் (அதனால் தான் குபெக்கில் ஐந்து நிமிட தாமதம்). மான்டிரியாலில் இறங்குகையில் அவரிடம் ஆறுதலாகச் சொன்னேன் "உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் உங்களை சோதித்திருக்க வேண்டாம்" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அது வரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் முகத்தில் வருத்தம்.   "நீங்கள் எனக்கு ஆறுதல் என்ற முறையில்தான் சொல்கிறீர்கள்; ஆனால் அடிப்படையில் நீங்களும் மற்ற பயணிகளும் இதை ஒரே மாதிரி தான் பார்க்கிறீர்கள்.  என் மகனை கடவுள் எங்களுக்கு அளித்த சோதனையாகவோ, தண்டனையாகவோ நாங்கள் கருதவில்லை.  என் மகனுக்கு கடவுள் எங்களைப் பரிசாக அளித்திருக்கிறர், அதை எந்த விதத்திலும் குறைத்துவிடக் கூடாது; அவனுக்கு கிடைத்த உயர்ந்த பரிசாக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதுதான் எங்கள் நோக்கம்.  தயவு செய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்", என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற பயணிகள் முகத்தில் தெரிந்த எரிச்சலையும், கடுப்பையும் குறையாக நினைத்து என்னை அவர்களை விட உயர்வாக நினைத்த எனக்கு அவர் சொன்னது ஆழமாகப் பதிந்தது.  அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் நிச்சயம் அவர் மகனுக்கு உயர்ந்த பரிசுதான் என்று சொல்லி, மனைவியுடன் ஓட்டல் திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிகு:&lt;br /&gt;இது என் நூறாவது பதிவு.  ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று போராடி சொல்வது என்று தீர்மானித்து பதிந்திருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-274552280123626674?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/274552280123626674/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=274552280123626674' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/274552280123626674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/274552280123626674'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/08/blog-post.html' title='பார்வை வேறு, கோணம் வேறு.'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-9056322854748941074</id><published>2009-07-20T17:02:00.001-04:00</published><updated>2009-07-20T17:03:37.646-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொ.போ.பொ.'/><title type='text'>யோசிக்கும் மொழி - 2</title><content type='html'>யோசிக்கும் மொழி - 2&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக அல்லது தினசரி வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்கும், குழந்தை பசி பற்றி யோசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.  முதலாவதற்கு மொழி அவசியம் தேவை; இரண்டாவது வகைக்கு பேசும் மொழி தேவையில்லை.  உடல் உறுப்புகள் தங்களுக்குள் ஏதோ ஒரு வகையில் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டிருக்கிறது.  அது எந்த மொழி என்று தெரியவில்லை; ஆனால் இது நாடு, மதம் பொறுத்து மாறாமல், உலகம் முழுதும் உள்ள மனித வர்கத்திற்கு பொதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது.  இது மற்ற விலங்குகளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அசை போடும் வகையில் நினைப்பில் வெறும் வார்த்தைகள் மற்றும் வருவதில்லை.  என் அனுபவத்தில் நினைப்பில், ஸ்பரிசம், வாசனை, வெப்பம்/குளிர் போன்ற மற்ற புலன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன.  ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட புலன்களின் அனுபவம், அதே உணர்ச்சியினை அனுபவிக்கும் போது அந்த நினைப்பைக் கொண்டு வருகிறது. இதில் மொழியும் அடங்கும்; ஆனால் நினைப்புக்கு மொழி அத்தியாவசியம் என்று தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை கொஞ்சம் சுவாரசியமானது.  இதில் கொஞ்சம் விடை தேடும் வகையில் யோசனையும் சேர்ந்தே இருப்பதால், மொழி தேவைப்படுகிறது.  ஆழ்ந்த வினாக்கள் மேலறிவுக்கு மட்டும் புலப்படுவதில்லை; இந்த அடித்தள அறிவு (குழந்தையின் பசி அழுகை போல) மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது.  நான் படித்த வரையில் (நிச்சயம் கொஞ்சம் தான்), ஞானிகளின் அனுபவங்கள் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாததாகவே இருக்கிறது.  உதாரணமாக, இந்த சுயதரிசனம், சுயவிமர்சனம் பற்றி ஆராய்ந்து எழுதிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கு நேர்ந்த அனுபவங்களை முழுவதுமாக விபரிக்க கடினமாகவே இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மட்டுமல்ல, மற்ற ஞானிகளுக்கும் அனுபவங்களை விபரிப்பது கடினமாகவே இருந்திருக்கிறது.  மொழியால் விபரிக்க முடியாத அளவுக்கு, இவர்கள் எவருக்கும் மொழிப்பிரச்சனை இருந்ததில்லை; காரணம் அனுபவத்தை விபரிக்கும் வகையில் எந்த மொழியுமே இன்னமும் வளரவில்லை என்றுதான் நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;பழங்கதைகளில், அது இந்திய புராணங்களாகட்டும் அல்லது கிரேக்க மற்று ஐரோப்பியக் கதைகளாகட்டும், பறவை - விலங்குகளோடு பேசும் சக்தி படைத்த மனிதர்களைப் பற்றி அதிகம் கதைகள் உண்டு.  இந்த விலங்கு மொழியும் ஒரு விதமான புலன்களின் தகவல் பறிமாற்றமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.  கருத்துகளை, எண்ணங்களை மற்ற சக மனிதர்களோடு பறிமாறிக் கொள்ள உதவும் வாய் மொழியில் அதிக சக்தி செலவழித்ததால், மனிதர்களுக்கு இந்த புலன்களின் தகவல் பறிமாற்ற மொழி மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் மனித மூளை இயக்கத்திற்கு வாய்மொழி அவசியம் இல்லை; அதே சமயத்தில் விடை தேடும் வகையில் வரும் யோசனைகளுக்கு வாய் மொழி நிச்சயம் உதவுகிறது (தேவை) என்பது என் கணிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குத் தோன்றுவதை கருத்தாகப் பதியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு.: சென்றவாரம் பிட்ஸ்பர்க் சென்று பாலாஜி தரிசனம் செய்ததால், இணையத்தில் பதியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-9056322854748941074?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/9056322854748941074/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=9056322854748941074' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/9056322854748941074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/9056322854748941074'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/07/2.html' title='யோசிக்கும் மொழி - 2'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-7930826918508135241</id><published>2009-07-05T22:04:00.000-04:00</published><updated>2009-07-05T22:06:14.906-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொ.போ.பொ.'/><title type='text'>யோசிக்கும் மொழி</title><content type='html'>&lt;strong&gt;யோசிக்கும் மொழி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோசனை என்பது ஒருவிதமான கற்பனையே.  மூளையில் ஏதோ ஒரு மூலை, நாம் யோசிக்கும் போது இயங்குகிறது.  யோசனைகள் பல வகை.  என் கணிப்பில் இவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. விடை தேடும் வகை 2. அசை போடும் வகை 3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை.  ஒரு பிரச்சனையை தீர்க்க, வழிதேட முயல்கையில் வரும் சிந்தனைகள், ஒரு நல்ல நிகழ்ச்சி, திரைப்படம் பற்றி நினைத்து  அசைபோட்டு இன்பமுறுகையில் வரும் சிந்தனையை விட வித்தியாசமானது.  இதிலும், ஒரு சுய படைப்பில், அது கதையோ, கவிதையோ வரும் சிந்தனை கிட்டத்தட்ட ஒரு பிரச்சனையைத் தீர்க்க வரும் சிந்தனை போலிருந்தாலும், கொஞ்சம் மாறுபட்டது.  படைப்பைப் பற்றி, அல்லது இயற்கையைப் பற்றி வரும் யோசனைகள், சிந்தனைகள் இந்த மாதிரியே.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் என் யோசனைகளில் அதிகமான நேரம் இந்த கற்பனை, ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகையிலும், விடை தேடும் வகையிலும் சென்றது.  வளர்ந்து படிக்கும் காலத்தில், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்திற்கருகில் விடை தேடும் வகையிலேயே அதிக நேரம் சென்றது.  இப்போதெல்லாம், அசைபோடும் வகையில் அதிக நேரமும், கொஞ்சம் பிரதிபலிப்பிலும் செல்லுகிறது.  இதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்த பல பேர்கள் இது போன்றே நேர விகிதாசார வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த யோசனையில் ஒரு வித்தியாசத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன்.  சிறு வயதில் சிந்தனைகள் தமிழிலேயே இருந்தன.  அயல்நாட்டு வாசம், வேலை காரணமாக ஆங்கிலம் அதிகமாக பேசப் போக, இப்போதெல்லாம் சில விதமான சிந்தனைகள் - முக்கியமாக அலுவலக சம்பந்தமான விடை தேடும் வகையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே வருகிறது.  இதுவும் நாடு விட்டு நாடு வந்த அனைவரும் உணர்ந்ததுதான் என்று நினைக்கிறேன்; நிச்சயமாகத் தெரியவில்லை.  சமீப காலமாக அசைபோடும் கற்பனைகள் தவிர, மற்ற அனைத்து சிந்தனைகளும் ஆங்கிலத்திலேயெ இருப்பதைப் பார்க்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் (இந்த யோசனையே ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகைதான்) தோன்றிய கேள்விகள் - யோசனைக்கு மொழி தேவையா? எந்த மொழி சிந்தனைக்கு அதிகம் உதவும்?  இந்தக் கேள்விகளைப் பற்றி நான் ஆராய்ந்ததே இந்தப் பதிவும், இதன் தொடர் பதிவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நான் யோசனை, சிந்தனை, நினைப்பு என்ற வார்த்தைகளை ஒன்றே போல பாவித்து, மாற்றி மாற்றி எழுதியிருந்தாலும், இவற்றுக்குள் வித்தியாசம் இருக்க வேண்டும்.  குழப்பத்தைக் குறைப்பதற்காக, இந்தப் பதிவில் இதற்குப் பின் ஒவ்வொரு வகைக்கும் தனி வார்த்தையை உபயோகித்திருக்கிறேன்:&lt;br /&gt;1. விடை தேடும் வகை – Problem solving - யோசனை;&lt;br /&gt;2. அசை போடும் வகை – Thought/memory - நினைப்பு&lt;br /&gt;3. ஆராய்ந்து பிரதிபலிக்கும் வகை – Reflection/analysis - சிந்தனை&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் யோசனை: இந்த வகைக்கு முக்கிய தேவை ஒரு பிரச்சனை அல்லது தீர்க்க வேண்டிய புதிர்.  வாழ்க்கையில் பெரும்பான்மையான சமயம் இந்த பிரச்சனையே ஒரு மொழி மூலமாகத் தான் நம் மூளைக்குத் தெரிய வருவதால், அது சம்பந்தமான யோசனையும் அந்த மொழியிலேயே வருவது இயல்பு.  சிறுவயதில் நான் தமிழ்நாட்டில் தமிழிலேயே பேசி, கல்வி கற்றதால், அப்போது தமிழில் இந்த யோசனை இருந்ததும், இப்போது அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே பேசி பணிபுரிவதால், இப்போது ஆங்கிலத்தில் இந்த யோசனை வருவதும் இயல்பே. மொத்தத்தில் பிரச்சனை எந்த மொழியோ அந்த மொழியே யோசனைக்கும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு சங்கடம்.  குழந்தையாக இருந்த போதும் பிரச்சனைகள் இருந்திருக்கும், உ.ம். பசி.  அப்போது மூளையில் யோசனை இருந்ததா?  குழந்தை அழுது பால் குடிக்கையில் நிச்சயம் யோசனை இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது.  ஆனால் குழந்தைக்கு மொழி தெரியாதே - யோசனை எந்த மொழி?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் தொடர்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-7930826918508135241?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/7930826918508135241/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=7930826918508135241' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7930826918508135241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7930826918508135241'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/07/blog-post.html' title='யோசிக்கும் மொழி'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-4849488361376075018</id><published>2009-06-28T13:47:00.000-04:00</published><updated>2009-06-28T13:49:18.363-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரயில் - 8</title><content type='html'>&lt;strong&gt;இரயில் - 8&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ரயில் பயண உறவுகள் என்றவுடன் முன்பு தொலைக்காட்சியில் வந்த 'ரயில் சினேகம்' போன்ற ஏதாவது கதை இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.  ரயில் பயணங்களில் பார்த்த, பேசிய மனிதர்கள் நிறைய பேர்களை பயணம் முடிந்த சில நாட்களில் (பல சமயம் சில நிமிஷங்களுக்குள்) மறந்திருக்கிறேன்.  அபூர்வமாக சில முகங்கள், வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கின்றன.  அனேகமாக இந்த மாதிரி பாதித்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் பெயர் தெரியாது; அல்லது மறந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ரயில் பயண சந்திப்புகள் இரண்டு வகை:  தொலைதூர பயணத்தில் - குறைந்தது ஒரு நாள், ஒரு இரவு - அதே பெட்டியில் கூட வருபவர்களோடு நடக்கும் சம்பாஷணைகள், முதல் வகை.  குறைந்த தூர, ஆனால் தினப்படி நடத்தும் பயணங்களில் (உதாரணமாக அலுவலகம் சென்று வர) சந்திப்புகள், கருத்துப் பறிமாறல்கள் - இரண்டாம் வகை.  முதலாம் வகை பெரும்பான்மையாக ஒரு வித கட்டாயத்தால், பொழுது போக வழியில்லாமல் நடப்பவை.  இது ஒரு விதமான புகைப்படம் போல - படம் அழகாயிருந்தால், வித்தியாசமாக இருந்தால் நினைப்பில் இருக்கும்.  இரண்டாம் வகையில் ஒரு விதமான தொடர்ச்சி, வளர்தல், மாற்றம் உண்டு; கிட்டத்தட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் போல. பிடிக்கவில்லை என்றால் பெட்டி, நேரம் மாற்ற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;விபரம் புரியாத (நான் மூன்றாவது அல்லது நான்காவது படித்த போது என்று நினைக்கிறேன்) வயதில் எழும்பூர்-தாம்பரம் தடத்தில், மின் வண்டியில் என் வயதே ஒத்த ஒரு சிறுவன், கண்ணில்லாத ஒரு பெண்மணியுடன் (அம்மா?), பாடிக் கொண்டே மற்றவர்களிடம் காசுக்காக டப்பாவை குலுக்கிக் கொண்டே போனது இன்னமும் நினைவில் இருக்கிறது (பாட்டு:அச்சமயம் புதிதாக வந்த 'மேலும் கீழும் கோடுகள் போடு, அதுதான் ஓவியம்').  இப்பவும் அந்தப் பாட்டு கேட்கையில் மனதில் ஒரு விதமான குழப்பம் கேள்விதான் – “ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? என்ன காரணம்?” என்று!  இன்னமும் விடை கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;93 - 96 வட நாட்டு வாசத்தில் வருடா வருடம் சென்னை-டில்லி ரயில் பிரயாணம் இரு முறையாவது வரும்.  நடுப் பயணத்தில் (வண்டி அனேகமாக நாக்பூருக்கு அருகே இருக்கும்), கால் நடக்க முடியாத (போலியோ) வாலிபர் ரயில் பெட்டி தரையை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்து காசு கேட்பார் - சலனம் அதிகம் இல்லாத முகம், தாடி; சோகம், வருத்தம் தெரியாது; ஒரு விதமான 'கடமையைச் செய்கிறேன்' என்பது போல பாவம்.  பெயர் தெரியாது; அதே பிரயாணங்களில் காப்பி, வடை போன்று சாப்பாடு கொண்டு வரும் ஊழியர் ஒருவருடைய முகமும் நினைப்பில் இருக்கிறது. நெற்றியில் விபூதி, சிறிய மீசை, எப்போதும் சிரித்த முகம்; சில்லறை இல்லாவிட்டாலும் கடுப்படிக்காமல், நினைவில் வைத்துக் கொண்டு பாக்கி கொண்டு கொடுப்பது இல்லை, வந்து பாக்கி காசை வாங்கிக் கொள்வது என்று பொறுமையாக செய்பவர்.  இருவருமே கீதையில் வரும் சிதப்பிரஞ்ஞன் சுலோகம் நினைப்புக்கு வரவழைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2003ல் பிரிட்ஜ்வாட்டர் நிலையத்திலிருந்து நூவர்க் செல்கையில் தினமும் பார்த்த ஒரு வித்தியாசமான பேர்வழி.  பெட்டியில் யாராவது தும்மினால், இருமினால் கோபம் பொத்துக் கொண்டு வரும் இவருக்கு (சுத்தம், சுகாதாரத்தில் அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லலாம்).  இவரைப் பற்றி தெரிந்தவர் எவரும் அருகே அமர மாட்டார்கள்.  அது மட்டுமல்ல, வண்டி நூவர்க் நிலையம் அருகே செல்கையில் அந்தப் பெட்டியில் முதல் ஆளாக இறங்க வேண்டும் என்பதற்காக முன்னமேயே எழுந்து கதவருகே நின்று கொள்வார்.  ஒரு முறை இன்னுமொரு பிரயாணி தெரிந்தோ, தெரியாமலோ முதலில் சென்று நின்று கொள்ள, இவர் முகத்தைப் பார்ர்க சகிக்கவில்லை (உண்மையில் கொஞ்சம் பயமே வந்தது; ஏதாவது இசகு பிசகாக செய்து வைக்கப் போகிறாரே என்று).&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் ரயில் என்ற வாகனம் என் வாழ்க்கையில், சிந்தனையில் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று.  தில்லி ரயில் மியூசியம், மற்றும் லண்டன் அறிவியல் மியூசியம் என்று சென்று பார்த்து மகிழ்ந்த நினைப்புகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது. ரயில் பற்றிய இந்தப் பதிவும் நிலையத்திற்கு வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் வேறு விஷயம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பதிவுகள்:&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/1.html"&gt;இரயில் - 1&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/2.html"&gt;இரயில் - 2&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/3.html"&gt;இரயில் - 3&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/4.html"&gt;இரயில் - 4&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/5.html"&gt;இரயில் - 5&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/5.html"&gt;இரயில் - &lt;/a&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/5.html"&gt;6&lt;/a&gt;  &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/06/7.html"&gt;இரயில் - 7&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-4849488361376075018?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/4849488361376075018/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=4849488361376075018' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4849488361376075018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/4849488361376075018'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/06/8.html' title='இரயில் - 8'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-9179670012029362019</id><published>2009-06-21T10:06:00.002-04:00</published><updated>2009-06-21T10:10:48.645-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரயில் - 7</title><content type='html'>&lt;strong&gt;இரயில் - 7&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;டீசலோடு கிரசின் கலந்து புகை கக்கும் லொட்டை பேருந்துகள் தரும் எரிச்சலோடு கலந்த வாசனையைத் தவிர பேருந்து நிலையத்திற்கு என்று தனித்த வாசனை இல்லை. ஆனால் ரயில் நிலைய மணமே தனி.  இந்த மணத்தை விபரிப்பது கடினம்; இருந்தாலும் முயற்சிக்கிறேன்.  மூடிய, பெரிய நிலையங்களில் இந்த மணம் தூக்கலாக இருக்கும்.  அதிலும் கரி வண்டிகள் அதிகமாக இருந்தால் இதை சுலபமாக உணரலாம்.  உதாரணமாக திருச்சி ஜங்க்ஷன் நிலையத்தில் இருக்கும் மணம் (இது திறந்த வெளி நிலையமாக இருப்பினும்), கொஞ்ச தொலைவில் இருக்கும் பேருந்து நிலைத்தில் இருக்காது. இது கொஞ்சம் கொல்லப் பட்டறை வாசனை, குமிட்டி அடுப்பு வாசனை (அதிலும் கரிதான்) எல்லாம் கலந்து இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் எழும்பூர் நிலையமானாலும் சரி அல்லது சென்ட்ரல் நிலையமாக இருந்தாலும் சரி, மணம் ஒன்று தான்.  இந்த மணத்தில் ஒரு விதமான 'ரேஞ்ஜ்' - விகிதாசார வித்தியாசம், இருக்கும்.  சென்ட்ரல் அல்லது எழும்பூர் நிலையத்தில் நிற்கும் எந்த தொலைதூர பயண ரயிலிலும் இதை நீங்கள் உணர முடியும்.  ரயில் கிளம்பும் முன் பிளாட்பாரத்தில் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை நீங்கள் நடக்கையில் இந்த வித்தியாசத்தை உணரலாம்.  அதிலும் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு நடந்தால் அதிகமாகவே இந்த வாசனை வித்தியாசம் தெரியும்.  எது மேலாவது இடித்துக் கொண்டு விழுந்தால் நான் பொருப்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்ஜினைக் கடக்கையில் வரும் கொல்லப் பட்டறை வாசனை, நீராவி அல்லது வெப்பம் தரும் வாசனை வித்தியாசம், சரக்குப் பெட்டியைத் தாண்டும் போது வரும் வாசனை (அதிலும் மீன், கருவாடு போன்ற சரக்கு இருக்கையில் வரும் வாசனை), சமையல் வண்டியைத் (அல்லது பிளாட்பாரத்தில் இருக்கும் சாப்பாட்டுக் கடையைத்) தாண்டுகையில் வரும் வாசனை, குளிர் பதன பெட்டியைத் தாண்டுகையில் மட்டுப் படும் வாசனை என்றெல்லாம் வகை பிரித்து உணர முடியும்.  அதிலும் இரவு நேர ரயில் நிலைய வாசனை, தூக்கலானது. காரணம் சப்தம் குறைவு; வெப்பம் குறைவு என்று என் ஊகம். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை வித்தியாசம் சரக்கு ரயிலில் வராது.  அதில் வரும் வாசனை பெரும்பான்மையாக அதில் வரும் சரக்கைப் பொருத்தது.  உரங்கள் ஏற்றி வரும் சரக்குப் பெட்டிக்கும், இரும்பு சாமான்கள் கொண்டு வரும் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்சம் அருகே சென்றால் தான் தெரியும்.  ரயில் பெட்டிக்குள் ஏறினால் ரயில் இருக்கும் இடம், பருவம் பொருத்து வித்தியாசம் வேறுபடும்.  உதாரணமாக குளிர்காலத்தில் தெற்கே (தமிழ்நாட்டில்) ரயில் பெட்டியின் வாசம், வடக்கே (சண்டீகர்) இருக்கும் வாசத்தில் இருந்து அதிகம் வேறுபடும்.  மத்தியப் பிரதேசத்தில் தகிக்கும் கோடையில் குளிர் பதனப் படுத்தப் படாத பெட்டியில் பிரயாணம் செய்தால் வியர்வை வாசனை தவிர வேறு எதுவும் தெரியாது.  அதே வண்டி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் உலவுகையில் வரும் வாசனை - சுகந்தம்!!&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் தான் இப்படி என்றால் நிலையத்தின் வாசனை வேறுபாடுகள் அருமை.  அதிலும் சாப்பாட்டுக் கடைகள், உணவு வாசனைகள் மிகவும் ரசிக்க வேண்டியவை.  சிலருக்கு சில வாசனைகள் பிடிக்காது; அதனால் வாசனை மட்டம், கெட்ட வாசனை என்பார்கள்.  நானும் அப்படித்தான் பேசியிருக்கிறேன்.  ரொம்ப வருடம் கழித்து அரிசோனா பீனிக்ஸில் வியட்நாமிலிருந்து குடிபெயர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் "வாசனையில் நல்லது கெட்டது இல்லை. உனக்கு சில வகை பிடித்திருக்கிறது; சில வகை பிடிக்கவில்லை.  வாசனையில் மொத்தம் இரண்டு வகை தான் - இருக்கிறது; இல்லை - No good or bad smell; just there is smell or no smell" என்றார்.  அது மனதில் ஆழமாகப் பதிந்து போனது.  அதனால் தான் இந்தப் பதிவில் வியர்வையும், கருவாடும் 'வாசனை'!&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் கிடைக்கும் பூரி-உருளைக் கிழங்கு வாசனை, சென்னை-தில்லி தடத்தில் ரயிலில் கிடைக்கும் மசால் வடை வாசனை, பீகார் ரயில்களில் கிடைக்கும் குடுவை டீ வாசனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்தியாவில் அனுபவித்த வித்தியாசமான அனேக வாசனைகளை நியூயார்க் ரயில் நிலையங்களில் என்னால் உணர முடியவில்லை.  அனைத்து வண்டிகளும் குளிர் பதனப் படுத்தப் பட்டு, மூடியே இருக்கின்றன.  சரக்கு ரயிலை தூர இருந்து தான் பார்க்க முடிகிறது.  என் கணிப்பில் அறிவியல் ஆராய்ச்சியில் கண், காது புலன்கள் சம்பந்தப்பட்ட விஷங்களுக்கு தந்த முக்கியத்துவம் மூக்கு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இல்லை.  அதனால் என்னால் முடிந்த தொண்டு, வாசனைக்கென்று ஒரு பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவில் ரயில் பயணத்தில் பார்த்த, பாதித்த உறவுகள் பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பதிவுகள்:&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/1.html"&gt;இரயில் - 1&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/2.html"&gt;இரயில் - 2&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/3.html"&gt;இரயில் - 3&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/4.html"&gt;இரயில் - 4&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/5.html"&gt;இரயில் - 5&lt;/a&gt; &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/06/6.html"&gt;இரயில் - &lt;/a&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/06/6.html"&gt;6&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-9179670012029362019?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/9179670012029362019/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=9179670012029362019' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/9179670012029362019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/9179670012029362019'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/06/7.html' title='இரயில் - 7'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-240000439887576720</id><published>2009-06-14T10:24:00.006-04:00</published><updated>2009-06-14T11:17:18.134-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரயில் - 6</title><content type='html'>இரயில் - 6&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் என்ற வார்த்தை எனக்கு உணர்த்திய இன்னுமொரு பரிமாணம் 'வலிமை'. ரயில் சம்பந்தப்பட்ட (பெரும்பான்மையான) பொருள்கள் திடத்தில், சக்தியில் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். உதாரணமாக வீட்டில் இருக்கும் மின் விளக்கு/மின் விசிறியின் சுவிட்சை இயக்க (அழுத்த) வேண்டிய விசையை விட, ரயில் பெட்டியில் இருக்கும் சுவிட்சை இயக்க அதிக விசை தேவை. வீட்டில் நாற்காலியில் இடித்துக் கொண்டால் வரும் வலியை விட, ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையிலோ அல்லது ரயில் பெட்டியிலுள்ள இருக்கையிலோ இடித்துக் கொண்டால் வரும் வலி அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலை போட உபயோகிக்கும் சரளைக் கல்லை விட ரயில் தண்டவாளம் போட உபயோகிக்கும் சரளைக் கல் வலிமை அதிகம். ஜன்னல் கம்பியிலிருந்து ஆரம்பித்து தண்டவாளம் வரை கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் அதை ஒத்த மற்ற வாகன பாகங்களோடு பார்க்கையில் பெரிதாகவோ, வலிமையாகவோ தான் இருக்கும். ஐம்பது சரக்குப் பெட்டிகளை இரண்டு டீசல் என்ஜின்கள் இழுத்துச் செல்வதைப் பார்க்கையில் அந்த வலிமையை நினைத்து வியந்தது அதிகம். இந்த வலிமை சம்பந்தமான ஒரு கதை என் அப்பா சொன்னது (அவருக்கு அவர் தாத்தா சொன்னது).&lt;br /&gt;&lt;br /&gt;கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒப்பிலியப்பன் கோவிலின் மூலவர் விக்கிரகம் முதலில் அத்தி மரத்தில் செய்ததாம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், ஒப்பிலியப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பவுண்டரீகபுரம் கிராமத்தில் இருந்த அண்ணு அய்யங்கார் கனவில் ஒப்பிலியப்பன் வந்து தான் மயிலம் பக்கத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வந்து நிர்மாணிக்க வேண்டும் என்று கட்டளையிட்டாராம். மயிலம் உளுந்தூர்பேட்டைக்கும், விழுப்புரத்திற்கும் இடையே உள்ள இடம்; அப்போது விருத்தாசலம் அருகே இருந்த இரயில் நிலையம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரும் கொஞ்சம் பணம் சேர்த்து மயிலம் சென்று அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் குளத்திலிருந்த கல்லை எடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் சென்றார். வழியில், கல்லின் கனம் தாளாமல், பல முறை வண்டியின் அச்சு முறிந்து போக, புது வண்டி, புது அச்சு என்றெல்லாம் மாற்றி மாற்றி மிகவும் சிரமப்பட்டு விருத்தாசலம் வந்தடைந்தார். நடந்த கதையெல்லாம் சொல்லி ரயில் பார்சல் ஆபீசில் கல்லை கும்பகோணம் அனுப்பி வைத்து விட்டு, இவரும் ஊர் வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பகோணம் வரும் வழியில், ரயில் சரக்குப் பெட்டியும் கல்லின் கனம் தாளமல் சக்கர அச்சு முறிந்து போக, ரயில்வேயிலிருந்து இவருக்கு ஆயிரக் கணக்கில் அபராதத் தொகையுடன் நோட்டீசு வந்து விட்டது. இது நடந்தது சுதந்திரத்திற்கு முன்னால்; ரயில் நிர்வாகம் ஆங்கிலேய அரசின் கையில். வட்டாரத் தலைமயகம் திருச்சியில், ஒரு ஆங்கிலேயர் தான் தலைமை. இவரிடமோ கையில் அபராதத் தொகை கட்ட பணமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணு அய்யங்காரும் திருச்சிக்கு சென்று நிலைமையை விளக்கினார். விருத்தாசலம் ரயில் நிலையம் வருவதற்குள் பலமுறை மாட்டு வண்டி அச்சு முறிந்ததையும், இதை விபரமாக விருத்தாசல ரயில் நிலையத்தில் விளக்கியதையும் சொல்லி, ஒரு சரக்கு ரயிலின் வலிமையை, அதன் பளு தாங்கும் திறமையை, கிராமத்தில் வசிக்கும் தம்மால் எப்படி ஊகிக்க முடியும் என்று கேட்டாராம். இதை வட்டார அலுவலக நிர்வாகியும் ஒப்புக் கொண்டு, அபராதத் தொகையை ரத்து செய்ததோடு இல்லாமல், கல்லை கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதினாராம்.  இப்பொதும் ஒப்பிலயப்பன் கோவில் சென்று வழிபடும் போதெல்லாம், இந்தக் கதை நினைப்புக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் நிலையம் சம்பந்தமான வாசனை பற்றிய விஷயங்கள் அடுத்த பதிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பதிவுகள்:&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/1.html"&gt;இரயில் - 1&lt;/a&gt;          &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/2.html"&gt;இரயில் - 2&lt;/a&gt;           &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/3.html"&gt;இரயில் - 3&lt;/a&gt;       &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/4.html"&gt;இரயில் - 4&lt;/a&gt;        &lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/5.html"&gt;இரயில் - 5&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-240000439887576720?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/240000439887576720/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=240000439887576720' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/240000439887576720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/240000439887576720'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/06/6.html' title='இரயில் - 6'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-7475667379160333937</id><published>2009-06-07T20:41:00.001-04:00</published><updated>2009-06-07T20:44:46.227-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரயில் – 5</title><content type='html'>இரயில் – 5&lt;br /&gt;&lt;br /&gt;வில்லிவாக்கத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு தேவர் தெருவிலிருந்து, தாமோதரப் பெருமாள் காலனிக்கு மாற்றி வந்தோம்.  அதிலும், வீட்டிற்குப் பின்புறம் தண்டவாளங்கள் தான்.  அதிலும் அம்பத்தூர் செல்லும் பாதை தவிர, பாடி வீல்ஸ் இன்டியா தொழிற்சாலையை ஒட்டி, ரயில் வண்டிகளுக்கு பூச்சு அடிக்கும் நிலயத்திற்கு செல்வதற்கான இன்னுமொரு பாதையும் உண்டு.  இந்த பெயிண்ட் அடிக்கும் நிலையத்திற்கு செல்வதற்காக முழுவதும் முடிக்கப்படாத வண்டிப் பெட்டிகளை அழைத்துச் செல்வதற்காக சின்ன டீசல் இன்ஜின்கள் இயங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இன்ஜின்கள் மொத்தம் இரண்டு வகை (அப்போது). டீசல் மற்றும் கரி.  டீசலில் பெரிசு, சிறிசு உண்டு.  இந்த சிறிசு அம்பத்தூர் - பீச் லோகல் வண்டிக்கு அதிகம் உபயோகிப்பார்கள்.  கரி இன்ஜினில் இரண்டு வகை - முகம் தட்டையான வகை; மற்றும் முகம் ஒரு கூம்பு போல முடிந்த வகை.  மின் வண்டி அப்போது இந்த தடத்தில் கிடையாது.  ஒவ்வொரு இன்ஜின் சப்தமும் தனி.&lt;br /&gt;&lt;br /&gt;கரிவண்டி நிலையத்தை விட்டு கிளம்புவது, ஒரு அழகான கர்நாடக சங்கீதப் பாட்டின் ஆரம்பம் போல.  ஸ்வரம் நிதானமாக ஆரம்பித்து, ஒரு சீராக வேகம் எடுக்கும்.  நிலையத்தின் வெளியே கொஞ்ச தூரத்தில் சாலை தண்டவாளத்தைக் கடக்கும்; அதற்கு முன்பாக அனேகமாக அனைத்து வண்டிகளும், ஓசை (விசில்) எழுப்பி விட்டுத்தான் செல்லும்.  இந்த விசிலும் ஒரு விதமான தாளத்தோடுதான் - கரிவண்டிகள் அனேகமாக இரண்டு விசில் அடிக்கும், ஒரு சின்னது, தொடர்ந்து கொஞ்சம் நீளமான விசில். இந்த சின்ன விசில் முடிவதற்கு முன் பெரியது ஆரம்பித்துவிடும் - இரண்டுக்கும் நடுவில் நிசப்தம் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இன்ஜின் சக்கரங்கள் அளவும், சக்கரங்களுக்கு இடையே உள்ள தூரமும் வண்டிப் பெட்டிகளில் இருக்கும் சக்கரங்களை விட மாறுபட்டது.  நீராவிப் பெட்டியிருந்து (அதான் பிஸ்டன் இருக்கும் டப்பா) வரும் இரும்பு உருளை இரண்டு அல்லது மூன்று பெரிய சக்கரங்களோடு (ஆரங்கள் உள்ள சக்கரங்கள்) இணைந்திருக்கும்.  நீராவி இந்த இரும்பு உருளையைத் தள்ளும் போது அந்த விசை ஒரு சக்கரத்திற்கு மட்டும் செல்லாமல் இந்த இரண்டு/மூன்று சக்கரங்களுக்கும் செல்லத்தான் இந்த அமைப்பு.  இதில் சமயத்தில் நிலையத்திலிருந்து கிளம்புகையில் இன்ஜின் சக்கரத்தில் தண்டவாளத்தோடு அதிக பிடிப்பு இல்லாமல், சக்கரம் ஒரே இடத்தில் வேகமாகச் சுற்றுவதைப் பார்க்கலாம்.  அப்போது வரும் சப்தம் (கிட்டத்தட்ட அபஸ்வரம்) நிச்சயாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நான்கு வருடங்களில் வெவ்வேறு விதமான சப்தங்களையும் அந்த வண்டிகளையும் கேட்டு/பார்த்து, அடையாளம் காண்பதில் தேர்ச்சி வந்தது.   அதிலும் தாமோதரன் காலனி வீட்டில் மொட்டைமாடி - அதனால் வண்டிகளைப் பார்ப்பதும் கேட்பதும் அதிகமானது.  அப்போது நாங்களாய் தென்னங் குறும்பையில் இரண்டு தென்னங்குச்சியை சொருகி (ஒரு பெரிய குச்சியை வளைத்து - ஆங்கில தலைகீழ் U, நடுவில் இரண்டாவது சின்ன குச்சியை சொருகி, மூன்றாவது குச்சியை இந்த குறும்பைக் குச்சிகளுக்கு இடையே நுழைத்து சுழற்றினால் ஒரு விதமான கிலுகிலுப்பை சத்தம் - Rattler) சுழற்றினால் வரும் சத்த தாளத்தை ரயில் வண்டியின் தாளத்தை ஒட்டி வரவழைப்பது ஒரு விளையாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர ஒரு ஊதல் - புல்லாங்குழல் போல.  அதில் ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி, தண்ணீரில் நனைத்து, அந்த குச்சியை குழலின் உள்ளே மேலும் கீழும் அசைத்து, ஊதலின் சப்தம் மாறுவதை (சப்தம் கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி என்று மாறும்) கேட்போம். இந்த மேலிருந்து கீழ் அசைவை ஒரு தாள வேகத்தோடு செய்தால் கரிவண்டிகள் எழுப்பும் முன்னால் சொன்ன அந்த இரண்டு விசில் போல வரும்.  இந்த விசில் சப்தம் ஏன் அளவில் வேறுபடுகிறது என்று புரிந்தது, மன்னார்குடியில் திரு ஸ்ரீதரன் அவர்கள் இசைக் கவை பற்றி சொல்லிக் கொடுத்த போது கொஞ்சம் புரிந்தமாதிரி இருந்தது.  ஊதுபத்தி டப்பாவை (ஒரு உருளை அட்டை) காதில் வைத்து ரயில் ஊதலைக் கேட்கையில் தெரிந்த வித்தியாசத்த்தை விவரிப்பது கடினம்; இசைக் கவைப் பாடம் நிச்சயம் உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பதிவுகள்&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/2.html"&gt;இரயில் - 1&lt;br /&gt;இரயில் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/4.html"&gt;இரயில் - 3&lt;br /&gt;இரயில் - 4&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-7475667379160333937?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/7475667379160333937/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=7475667379160333937' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7475667379160333937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/7475667379160333937'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/06/5.html' title='இரயில் – 5'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-5684774164079458406</id><published>2009-05-31T11:08:00.001-04:00</published><updated>2009-05-31T11:12:07.327-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரயில் - 4</title><content type='html'>&lt;strong&gt;இரயில் - 4&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு விஷயத்தை உணர்ந்து அனுபவிக்க, அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருந்தால் உதவியாக இருக்கும்.  அதே சமயத்தில் அந்த அறிவு, அல்லது ஞானம் கொஞ்சம் அதிகமாக இருந்துவிட்டால் சமயத்தில் அந்த ஞானமே அனுபவ முழுமைக்குத் தடையாக இருந்துவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் ரயில் செல்லும் ஓசையை நான் அனுபவித்து ரசித்திருக்கிறேன்.  பார்க்காமலேயே வண்டி கொரட்டூர் பக்கத்திலிருந்து பெரம்பூர் செல்கிறதா, அல்லது பெரம்பூர் பக்கத்தில்ருந்து கொரட்டூர் செல்கிறதா என்று சொல்வது கொஞ்சம் சுலபம். திசை மட்டுமில்லாமல், இது கூட்ஸ் (சரக்கு ரயில்); இது பாசஞ்சர்; இது எக்ஸ்ப்ரஸ்; இது பெரிய கூட்ஸ் பெட்டி; இது சிறியது என்றெல்லாம் சொல்லி தம்பியையும், அக்கம் பக்கத்து சிறுவர்களையும் போட்டி விளையாட்டுக்கு அழைத்திருகிறேன். அனேகமாக நான் தான் வெல்வேன்; அதனால் யாரும் அதிகமாக இந்த விளையாட்டுக்கு வர மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது யாராவது என்னை 'எப்படி உன்னால் பார்க்காமலே சரியாகச் சொல்ல முடிகிறது' என்று கேட்டிருந்தால், எனக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்காது.  பின்னால், மன்னார்குடியில் படிக்கையில், டாப்ளர் விதி பற்றி திரு சேதுராமன் சொல்லிக் கொடுக்கையில் - இந்த வில்லிவாக்க விளையாட்டு நினைப்புக்கு வந்து 'அட இதானா அது' என்று புரிந்தது.  தண்டவாள துண்டுகளுக்கு இணைப்பு கொடுக்கையில் விடும் இடைவெளியில் (வெப்பத்தில் இரும்பு விரியும் போது ரயில் தடம் புரளாமல் இருக்க), சக்கரம் செல்லும் போது வரும் ஓசை ஒருவிதமான தாளம்.  ரயில் பெட்டிகளின் சக்கர அமைப்பு - இரண்டு இரண்டாக இருக்கும் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரம் எப்போதும் ஒரே அளவில் இருக்கும்.  முதல் பெட்டியின் கடைசி சக்கரத்திற்கும், இரண்டாம் பெட்டியின் முதல் சக்கரத்திற்கும் இடைய உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும்.  இதனால் ரயில் செல்லும் போது சீரான தாள கதியில் ஓசை வருகிறது.  'தடக்-தடக்' என்னும் இந்த சுருதி, தம்புராவில் இரண்டு மீட்டுதல்களை ஒத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய சரக்குப் பெட்டியில் முன்-பின் சக்கர தூரம், சிறிய சரக்குப் பெட்டியிலிருப்பதை விட அதிகம் - அதனால் இந்த தாள அமைப்பு சற்று மாறும்.  முதல் 'தடக்-தடக்'க்கும் இரண்டாம் ‘தடக்-தடக்'கிற்கும் அதிக இடைவெளி இருந்தால் அது பெரிய பெட்டி; இல்லையென்றால் சிறிய பெட்டி.  திறந்த பெட்டியில் காற்று புகுந்து செல்லும் விதமும், மூடிய சரக்குப் பெட்டியைத் தாண்டி வரும் விதமும் பயணிகள் ரயிலுக்கும், சரக்கு ரயிலுக்கும் ஓசை வித்தியாசம் ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி சீரான தாள ஓசைகளை கேட்க வேண்டும் என்று ஒரு வெறி; அளவு கடந்த ஆர்வம்.  வீட்டின் பின்புறம் குடித்தனம் இருந்தவர்கள் தயிர் கடைய ஒரு தூணில் கயற்றை வளையமாகக் கட்டி, அதில் மத்தை வைத்து, மத்தை மற்றொரு கயற்றால் சுழற்றி தயிரை கடைவார்கள்.  தச்சர்கள் மரத்தில் துளை போட இதே போன்று கயற்றால் சுழற்றி இயக்குவதைப் பார்த்திருக்கிறேன்.  இவை அனைத்திலுமே ஒரு சீரான தாள அமைப்பைக் கேட்கலாம்.  எங்கள் வீட்டில் மத்தை அம்மா கையால் சுழற்றுவார்கள்.  அதில் ஓசை சீராக வரவில்லை என்றால், அம்மாவை 'நீ சரியாக சுற்றவில்லை' என்றெல்லாம் சொல்லி வெறுப்பேத்தியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை என் அம்மா கொஞ்சம் அதிகமாகவே பொறுமை சாலியாக இருந்ததால், இந்த ஆர்வம் எந்த விடத்திலும் தடங்கலில்லாமல் அதிகமான அனுபவத்தைப் பெற முடிந்தது.  இந்தக் காலத்தில் இருக்கும் 'அறிவும்' 'ஞானமும்' இருந்திருந்தால், எனக்கு 'OCD – Obsessive Compulsive Disorder' இல்லை ‘ADD – Attention Deficit Disorder’ என்றெல்லாம் சொல்லி 'தெரபி' கொடுத்திருப்பார்கள். இப்படியெல்லாம் செய்யாமல், பொறுமையுடன் என்னை வளர்த்த அம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு சேதுராமன் அறிவியல் வகுப்பில், டாப்ளர் விதியையும், அதன் சமன்பாடுகளையும் ரொம்பவும் விபரமாக பாடம் நடத்திய போது, அதை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியது இந்த சிறுவயது 'உணர்தல்' தான்.  அந்த அனுபவம் இல்லாமல் இந்த விதியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்க முடியாது.  அறிவியலால் புரிந்தது பத்து வருடங்களுக்குப் பின்னால்; ஆனால் சிறுவயதில் இந்த வித்தியாசத்தை உண்ர்ந்ததோடு அல்லாமல் அதை அடையாளமும் கண்டு கொண்டதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.  சமீபத்தில் வேலை விஷயமாக வில்மிங்டன் செல்ல 'Acela’ எக்ஸ்ப்ரசில்  போகையில், பெட்டியின் வாசலில் கண்ணை மூடிக் கொண்டு நின்று கொண்டு இந்த தாளத்தை ரசிக்கையில், அம்மாவின் மத்தும், டாப்ளர் விதியின் சமன்பாடும், வில்லிவாக்க ரயில் நிலையமும் தான் நினைப்புக்கு வந்தது. அனுபவத்தையும், அறிவியலையும் முழுமையாக உணர வைத்தை அம்மாவிற்கும், ஆசிரியருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;முந்தைய பதிவுகள்&lt;/u&gt;&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/1.html"&gt;இரயில் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/2.html"&gt;இரயில் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/3.html"&gt;இரயில் - 3&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-5684774164079458406?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/5684774164079458406/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=5684774164079458406' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5684774164079458406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5684774164079458406'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/05/4.html' title='இரயில் - 4'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-5421824898903821222</id><published>2009-05-23T16:16:00.003-04:00</published><updated>2009-06-28T13:50:29.526-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரயில் - 3</title><content type='html'>&lt;strong&gt;இரயில் - 3&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நான் வளர்ந்த காலத்தில் விளையாட்டு பொம்மைகள் வீட்டில் அதிகம் கிடையாது. வாங்கித்தந்த பொம்மைகளைவிட நாங்களாய் உருவாக்கிக் கொண்ட விளையாட்டு பொம்மைகளைத் தான் அதிகம் விரும்பி உபயோகித்தோம் - நான் மட்டுமல்ல, தெருவில் வசித்த முக்கால் வாசி சிறுவர்கள் வீட்டு நிலைமையும் இதே போலத்தான். மொட்டைமாடியில் நின்று பட்டம் (வீட்டில் வரும் செய்தித்தாளில் செய்தது) விடுவது, மற்றும் விதவிதமான வண்டிகள் செய்து விளையாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி - பட்டமோ, வண்டியோ, செய்தது நாம் தானே! விளையாடுவதை விட செய்த பொருள் நன்றாக இயங்கினால் சந்தோஷம் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டம் அனேகமாக கோடையில்தான். ரயில் வண்டி செய்வது அதிகமாக மழைக்காலத்தில் - வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடைந்து கிடக்கையில் சிகரெட்டு டப்பா, தீப்பெட்டி கொண்டு வண்டிகள் செய்வோம். தீபாவளி சமயத்தில் அதிகம் தீப்பெட்டி கிடைக்கும். உள்ளிருக்கும் பெட்டியை பாதி திறந்து அடுத்த தீப்பெட்டியுடன் இணைத்தால் தொடர் வண்டி ரெடி. துணி தைக்கும் ஊசியால் (ஊசி முக்கியம்; குச்சியால் நேரடியாக ஓட்டை போட முயன்றால், பெட்டி உடைய வாய்ப்பு உண்டு) தீப்பெட்டியில் ஓட்டை போட்டு, தென்னங்குச்சியை நுழைத்து (அது தான் ஆக்சில் - Axle) சக்கரத்துக்கு எது கிடைக்கிறதோ - அது வெண்டைக்காயின் காம்பாக இருக்கட்டும், அல்லது சப்போட்டா பிஞ்சு இல்லை தென்னங்குறும்பை! - அதை இரண்டு பக்கங்களிலும் சொருகி எந்த வண்டி வேகமாகப் போகிறது என்று போட்டி போட்டுக் கொண்டிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை பள்ளியில் சாக்பீஸ் டப்பா ஒன்று - தக்கையான மர டப்பா - கிடைக்க, அதிலும் இதே போன்ற வித்தை காட்டி வண்டி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இந்த வண்டி விளையாட்டில் நிஜத்தை பிரதிபலிக்க சேர்த்த டிக்கட், வண்டியின் டிரைவர் வண்டி நிற்கும் நிலையப் பெயர் சொல்வது (வரிசையான பெயர்கள் - அது எழும்பூர் - தாம்பரம், அல்லது அம்பத்தூர் - பீச் வழித்தடமாக இருக்கும்) என்றெல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தி விளையாடினோம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை - 75ல் என்று நியாபகம் - வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு ரயில் புத்தக நிலையம் ஒன்று வந்து ஒரு வாரம் இருந்தது. இரண்டு/மூன்று பெட்டிகளை ஒரு புத்தகக் கடை போல மாற்றி ஒரு வாரம் நிலையத்தில் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பா எங்களை அழைத்து சென்று புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். அதில் ஒன்று 'யார் அதிக பலசாலி?' - பத்து/பதினைந்து பக்கங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம், ஒரு சிறுவன் அப்பாவிடம் 'உலகிலேயே யார் அதிக பலசாலி' என்று கேட்க, அப்பா ஒவ்வொரு இடமாக ஆழைத்துச் செல்வது போல கதை - முதலில் யானை, பஸ், பின் ரயில் நிலையம், கிரேன், கப்பல் என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசில் இதை எல்லாம் இயக்கும் மனிதன் தான் அதிக பலசாலி என்று முடியும்.. அங்கு வாங்கின இன்னுமொரு புத்தகம் உள்ளங்கை அளவுதான் - ஆனால் நிறைய பக்கங்கள். எல்லாமே பாட்டுதான் - ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இல்லை நான்கு வரிகள். அதில் படித்த ஒரு ரயில் பாட்டு இன்னமும் நினைவில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலே ரயிலே ரயிலே&lt;br /&gt;ரயிலும் சிறிது வேகமாய்ப் போனால்&lt;br /&gt;மெயிலே மெயிலே மெயிலே&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கட் டிக்கட் டிக்கட்&lt;br /&gt;டிக்கட் இன்றி பயணம் சென்றால்&lt;br /&gt;இக்கட் இக்கட் இக்கட்&lt;br /&gt;&lt;br /&gt;பாலம் பாலம் பாலம்&lt;br /&gt;பாலத்தின் மேல் பாராது போனால்&lt;br /&gt;ஓலம் ஓலம் ஓலம்&lt;br /&gt;&lt;br /&gt;என்று ஆரம்பிக்கும் - மொத்தம் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒரு பாட்டுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலைப் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அந்த அனுபவத்தை பின்னாளில் பள்ளி/கல்லூரியில் படித்த பாடங்களோடும், புத்தகங்களோடும் பொருத்தி புரிந்து கொண்டதையும் அடுத்த பதிவில் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பதிவுகள்&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/1.html"&gt;இரயில் – 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/2.html"&gt;இரயில் – 2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-5421824898903821222?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/5421824898903821222/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=5421824898903821222' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5421824898903821222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5421824898903821222'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/05/3.html' title='இரயில் - 3'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-3565372142537545143</id><published>2009-05-16T10:49:00.003-04:00</published><updated>2009-05-23T15:54:31.173-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரயில் – 2</title><content type='html'>&lt;strong&gt;இரயில் – 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதபுரத்தில் வீடு இரயில் நிலையம் அருகில் இல்லை; அதனால் பார்ப்பதே அபூர்வம். அனேகமாக வீதியில் (வடக்கு வீதி) செல்லும் மாட்டு வண்டிதான். எப்போதாவது கார், ஜீப். திண்ணையில் உட்கார்ந்து அதிகம் பார்த்தது சைக்கிள் தான். அதே தெருவில் எங்கள் பெரியப்பாவும் இருந்தார்; அவரிடம் ஒரு ஜீப் இருந்தது (உப்பளத்துக்கு சென்று வர). அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது போல கற்பனை செய்து விளையாடுவது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வந்து முதலில் குடிபுகுந்தது, வில்லிவாக்கம் தேவர் தெருவில். அந்தத் தெருவின் வடக்கு வரிசையில் எங்கள் வீடு - வீடு என்றால் ஒரு வீட்டில் வீட்டுக்காரரையும் சேர்த்து நான்கு குடித்தனங்கள்; அதில் நாங்களும் ஒன்று. வீட்டிற்கு கொல்லைப்புறம் ஒரு பாதை; அதைத் தாண்டி இரயில் நிலையம். வீட்டுக்காரருக்கும் மற்றுமொரு குடித்தனக்காரருக்கும் இந்திய ரயில்வேயில் தான் வேலை - பெரம்பூர் லோகோவொர்க்ஸ். இருவரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி நடந்தே வேலைக்குச் செல்வார்கள். வீட்டின் கொல்லையில் சில தென்னை மரங்கள், ஒரு மாமரம் (சின்னது) இரண்டு பெரிய சப்போட்டா மரங்கள், ஒரு பவழ மல்லி, மற்றும் சில பெயர் தெரியாத சில்லறை மரங்கள். இதைத் தவிர கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு புதர் போன்ற பெரிய செடி/மரம் - பேரெல்லாம் நினைவில்லை. யாராவது கேட்டால் பெரிய மரம், சின்ன மரம் என்றுதான் சொல்லத் தெரியும் - டெனிஸ் த மெனஸ் கார்ட்டூனில் டெனிஸ் சொல்வது போல! அங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இரயிலை வேடிக்கை பார்ப்பது ஒரு விளையாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் இரயில் எண்ணிக்கை அதிகம் கிடையாது; மொத்தமாக நான்கு அல்லது ஐந்து, இல்லை அதிக பட்சம் ஆறு இரயில் தான் பார்க்க முடியும் மாலை வேளையில். அதிலும் இரண்டு சரக்கு வண்டியாக இருக்கும். அதில் என்ஜினையும், கார்டு பெட்டியையும் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. ஆனால் எண்ணிக்கை அதிகம்; அதிலும் எப்போதாவது ஒரு டாங்கரோ, அல்லது இராணுவ வண்டிகளை ஏற்றி செல்லும் திறந்த வெளிப்பெட்டிகள் (open carriages) வந்தால் ஒரு குஷி.&lt;br /&gt;&lt;br /&gt;என் அப்பாவிற்கு பாரிஸ் கார்னர் அருகே அலுவலகம்; அதனால் வில்லிவாக்கத்தில்ருந்து இரயில் பிடித்து 'பீச்' நிலையம் போவார். எனக்கும் என் தம்பிக்கும் காலை அவர் கிளம்பும் ரயிலை கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டும். ஒரு வருடம் கழித்து அவர் வேலை நேரம் இரண்டாவது ஷிப்ட் மாற, அவர் போவதும் தெரியாது, வருவதும் தெரியாது! நாங்கள் பள்ளியில் இருக்கையில் அவர் வீட்டிலிருந்து புறப்படுவார். எட்டு அல்லது எட்டரைக்கு நாங்கள் தூங்கிவிடுவோம்; அவர் வருவதோ 'அறிவாளி' படத்தில் தங்கவேலு மனைவி சொல்வது போல 'பேய் அலையற' நேரம்!&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் உறவினர்கள் அதிகம்; மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது விசேஷம்! அவர் எங்களை குடும்பத்தோடு குரோம்பேட்டை, அல்லது நங்கநல்லூர், மாம்பலம் என்று அழைத்து செல்வார். ரயில் - பஸ் என்று மாற்றி மாற்றி அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லிவிடுவோம் - அப்போது தானே நிறைய டிக்கட் கிடைக்கும். டிக்கட் சேர்ப்பதில் எனக்கும் என் தம்பிக்கும் போட்டி வேறு உண்டே! எங்களுக்காக பேருந்தில் வில்லிவாக்கத்திலிருந்து எழும்பூர் (பல்லவன் - எண் பதினாறு); எழும்பூரிலிருந்து மாம்பலம், மீனம்பாக்கம் (அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் வரவில்லை) அல்லது கிரோம்பேட்டை (ரயில் நிலையத்தில் 'கி', கடைகளில் 'கு' - இப்பவும் இந்த பெயர் குழப்பத்தைப் பார்க்கலாம்) வரையில் மின் வண்டியில் செல்ல வேண்டும்! எனக்கும் என் தம்பிக்கும் எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை உள்ள அனைத்து ரயில் நிலையப் பெயர்களும் வரிசையாக அத்துப்படி. எங்கள் ரயில் விளையாட்டில் நிஜத்தைப் பிரதிபலிக்க இது உதவியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தீப்பெட்டி, சிகரெட் டப்பா ரயில் வண்டிகள் செய்த கதைகளையும் டிக்கட் சம்பந்தமான அனுபவத்தையும் (பாட்டு கூட உண்டு) அடுத்த வார பதிவில் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பதிவு&lt;br /&gt;&lt;a href="http://pranganathan.blogspot.com/2009/05/1.html"&gt;இரயில் – 1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-3565372142537545143?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/3565372142537545143/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=3565372142537545143' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/3565372142537545143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/3565372142537545143'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/05/2.html' title='இரயில் – 2'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-5167354154935907171</id><published>2009-05-09T10:14:00.001-04:00</published><updated>2009-06-28T13:50:09.447-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இரயில் - 1</title><content type='html'>இரயில் - 1&lt;br /&gt;&lt;br /&gt;ரயில், ரெயில், ரயிலு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊர்தி என்னை மிகவும் கவர்ந்த வாகனம். சிறு வயதில் என் கற்பனையெல்லாம் என்ஜினில் - அதுவும் கரி வண்டியில் - ஒரு தடவையாவது சவாரி செய்ய வேண்டும் என்பதுதான். இன்று வரை நடக்கவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் இந்த கரி வண்டியே காணாமல் போகும்; அதற்கு முன் ஒரு தடவையாவது அதில் ஏறி விட வேண்டும் என்று ஆசை. காபி, தேனீர் வரிசையில் இரயிலைப் பற்றி எழுத வேண்டும் என்று ரொம்ப நாளுக்கு முன்னால் யோசித்து வைத்திருந்தேன். இப்போது ஆரம்பித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் பாலகுமாரன் கல்கியில் "இரும்பு குதிரைகள்" எழுத ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் வருத்தம் - லாரியை இரும்பு குதிரையாக எழுதுகிறாரே; ரயிலை விட்டு விட்டாரே என்று. இந்த ரயில் மோகம் எனக்கு வந்தது நாங்கள் வில்லிவாக்கத்தில் வசித்த காலத்தில் (என்னுடைய ஆறிலிருந்து பத்து வயது வரை). வீட்டிற்கு பின்புறம் வில்லிவாக்கம் ரயில் நிலையம். வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு ரயில் போவதை வேடிக்கை பார்ப்பது ஒரு முக்கியமான விளையாட்டு (அப்போது தொலைக்காட்சி இல்லை).&lt;br /&gt;&lt;br /&gt;என் முதல் நியாபகம், இராமனாதபுரம் ரயில் நிலையம்தான். அதிலும் கண்ணால் பார்த்து நினைவில் இருக்கும் சித்திரத்தை விட, நுகர்ந்து அனுபவித்த மணம் தான் இன்னமும் பசுமையாக இருக்கிறது. என் தந்தைக்கு உத்தியோக மாற்றம்; இராமனாதபுரத்திலிருந்து சென்னைக்கு. வங்கியில் மாற்றல் ஆனதால், முதல் வகுப்பில் பயணம். மேலிருக்கும் மெத்தைக்கு செல்ல ஜன்னலுக்குப் பக்கத்தில் கால் வைத்து ஏற ஒரு இரும்புப் படி - மூடியிருந்தது. எனக்கு ஐந்தரை வயது; அதை திறக்க முயற்சிக்க, வலு இல்லாததால், அது சடக்கென்று மூடி என் கை விரல்களை பதம் பார்க்க, அப்பா திட்டுவாரே என்று பயந்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டது இன்னமும் நினைவில் இருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இரயில் மெதுவாகக் கிளம்பி பின் வழியில் பரமக்குடி நிலையத்தில் நின்றது. பரமக்குடி தான் நான் பிறந்த ஊர்; என் பெரியம்மா வீட்டில். அவர்கள் குடும்பத்துடன் இரயில் நிலையத்திற்கு வந்து எங்களை வழியனுப்பியதும், வண்டி கிளம்புகையில் என் அம்மாவும் பெரியம்மாவும் அழுததும் இன்னமும் நினைப்பில் இருக்கிறது. என் அம்மா பள்ளியில் படித்தது, வளர்ந்தது என் பெரியம்மா வீட்டில் தான்; அதனால் இருவருக்கும் ஒட்டுதல் அதிகம். பெரும்பான்மையான பயணம் முழுதும் இரவில் இருந்ததால், அப்பா ஜன்னலை எல்லாம் மூடிவிட, கரு நீல இரவு விளக்கைப் பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்; என் தம்பி முதலிலேயே தூங்கிவிட்டான். இப்பவும் எனக்கு அந்த கருநீல விளக்கைப் பார்த்தால் ஒரு இனம் புரியாத சோகம் வருகிறது - காரணம் அந்தப் பயணம் தானோ என்னவோ!&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மதிய வாக்கில் சென்னை வந்து கருப்பு டாக்சியில் ஏகப்பட்ட சாமானோடு (கூரையில், பின் டிக்கியை மூட முடியாமல் கயற்றால் கட்டி) வில்லிவாக்கம் (இன்னுமொரு பெரியம்மா வீடு) வந்து சேர்ந்தோம். வில்லிவாக்க வாசம், ரயில் மோக வளர்ச்சி பற்றி அடுத்த வாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிகு:&lt;br /&gt;பின்னாளில் பட்டுக்கோட்டை தமிழ் ஆசிரியர் இரயில் என்றுதான் எழுத வேண்டும் (என் பெயரையும் அவர் அரங்கநாதன் என்று தான் வகுப்பு பதிவேட்டில் எழுதி முதல் வரிசையில் உட்கார வைத்தார், பெயர் 'அ'வில் ஆரம்பித்ததால்) என்று சொன்னதால் தலைப்பில் இரயில் என்று எழுதினாலும், பழக்கம் விடாமல் பதிவு முழுதும் ரயில் என்றே எழுதியிருக்கிறேன். தமிழாசிரியர் மன்னிக்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-5167354154935907171?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/5167354154935907171/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=5167354154935907171' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5167354154935907171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5167354154935907171'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/05/1.html' title='இரயில் - 1'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-5029768639877558408</id><published>2009-05-03T10:53:00.001-04:00</published><updated>2009-05-03T10:54:58.615-04:00</updated><title type='text'>தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!</title><content type='html'>&lt;strong&gt;தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது நான் இணையத்தில் பதிந்து.  முக்கிய காரணம் 2007ல் வேலை மாற்றம் (அதே அலுவலகம்; பணி வேறு).  ஒரு வருடத்திற்குள் வேலை புரிந்து போய், அலுவலகத்தில் செலவழிக்கும் நேரம் குறைந்து போனாலும், திரும்பி வராததற்கு காரணம் சோம்பல்.  தவிர என் இணைய விடுப்பு யாருக்கும் பெரிய இழப்பாகத் தெரியவில்லை.  இந்த இரண்டு வருடத்தில் அதிக பட்சம் ஐந்து அல்லது ஆறு விசாரணைகள் - ஏன் எழுதுவதில்லை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் ரொம்பவும் வற்புறுத்தினார்கள் - அவர்கள் சொன்ன காரணங்கள் நிறைய இருந்தாலும், ஒரு காரணம் நிரம்பவும் ஆழமாக இருந்தது. "முயற்சி செய்யாத போது நூறு சதவீத வாய்ப்பையும் இழக்கிறாய்" என்பது தான் அது.  You miss 100% of shots you don’t take!  அதனால் தான் இந்த மறு நுழைவு!&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த வாழ்க்கையில் இந்த இரண்டு வருடங்களில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை.  அதே வீடு, வேலை (ஆண்டவன் புண்ணியத்தில் இன்னமும் வேலை இருக்கிறது!), தினசரி வாழ்க்கை.  பிள்ளைகள் பெரிதாகி வருகிறார்கள் - அதில் அனேக மாற்றங்கள்; வாழ்க்கையில் பெற்றோர் பணி சம்பந்தமான கல்வி இன்னமும் தொடருகிறது - பிள்ளைகளின் தயவால்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே மாற்றங்கள் அதிகம் - புது ஜனாதிபதி இங்கே!  உலகமும் முழுவதும் இந்த "எகானமி" படுத்தும் பாடு தாங்கவில்லை.  பொருளாதாரத்தில் (பொருள் + ஆதாரம்) - பொருளும் இல்லை; ஆதாரமும் இல்லை போல் தெரிகிறது.  இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விண்கலத்தில் ஏறி 'வியாழன்' கோளுக்குச் (குரு - ஜாதக கணிப்பில் அவர் தான் செல்வத்தை குறிப்பவர்) சென்று, இப்போது திரும்பினால், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமி அப்படியே தான் இருப்பது போல் தெரியும்.  இந்த இரண்டு வருடங்களில் புதிதாக பெரிய மலையோ, கடலோ வரவில்லை - இயற்கையின் செயலில் இரண்டு வருடங்களில் பெரிய மாற்றம் இல்லை; குரு தந்த செல்வத்தில் குறைவு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனித இனத்தால் உருவாக்கப் பட்ட இந்த பொருளாதரம், பணம் என்ற விஷயங்களில் தலைகீழ் மாற்றம்.  மொத்த உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள்.  எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.  கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது&lt;br /&gt;எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது&lt;br /&gt;எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்&lt;br /&gt;உன்னுடையதை எதை நீ இழந்தாய்?  எதற்காக நீ அழுகிறாய்?&lt;br /&gt;எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?&lt;br /&gt;எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?&lt;br /&gt;எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.&lt;br /&gt;எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது&lt;br /&gt;மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்!&lt;br /&gt;இந்த மாற்றம் உலக நியதியாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-5029768639877558408?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/5029768639877558408/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=5029768639877558408' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5029768639877558408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/5029768639877558408'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2009/05/blog-post.html' title='தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-116757390460645496</id><published>2006-12-31T09:03:00.000-05:00</published><updated>2006-12-31T17:40:58.790-05:00</updated><title type='text'>ஒரு இரயில் பயணத்தில் - 3</title><content type='html'>“அப்படி இப்படின்னு 2006 முடிஞ்சு போச்சு.  இந்த வருஷத்திலதான் எத்தனை மாற்றம்.  வருஷ ஆரம்பத்துல டெஸ்ட்ல ஹாட்ரிக் எடுத்த பதான் வருஷ முடிவுல டெஸ்ட் டீம்லேயே காணோம்.  சென்னையில, பங்களூரில வருஷ ஆரம்பத்தில ஆட்சி செஞ்சவங்க இப்ப இல்ல. நாம கூட வருஷ ஆரம்பத்துல அமெரிக்கா வருவோம்ன்னு நினைக்கல. இப்ப என்னடான்னா குளிர்ல நியூயார்க்ல எக்கச்சக்கத்துக்கு துணி போத்திக்கிட்டு வேலைக்கு ஓடறோம். ”&lt;br /&gt;&lt;br /&gt;“நிறைய விஷயம் மாறவே இல்லையே.  பதான் இருந்த அந்த டெஸ்ட்லயும் தோல்வி; இல்லாத வருஷக் கடைசி டெஸ்ட்லயும் தோல்வி.  வருஷ ஆரம்பத்துல கர்நாடகாவோடதான் தண்ணிச் சண்டை; இப்போ கேரளாவோட கூட.  எனக்கு வருஷ ஆரம்பத்துல இருந்த கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை"&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படி என்ன சந்தேகம் உனக்கு?”&lt;br /&gt;&lt;br /&gt;“குழந்தை பிறந்ததும் பெற்றவங்களை அம்மான்னு கூப்பிடறோம்.  இதே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையில், முட்டை இட்டவுடன் அம்மாவாகுமா இல்லை முட்டை பொரிஞ்சு குஞ்சு வந்தவுடன் அம்மாவாகுமா?  அதே மாதிரி முதலில் இட்ட முட்டையிலிருந்து வருவது அண்ணா/அக்காவா இல்லை முதலில் பொரியும் முட்டையில் இருப்பது அண்ணா/அக்காவாகுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“மூளையை எதுக்குத்தான் செலவழிக்கறதுன்னு உனக்கு புரிய மாட்டேங்குது.  இப்போ இது ரொம்ப முக்கியமா? ஒரு வருஷமா இந்தக் கேள்வியத்தான் யோசிச்சியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு; அதை விட்டுட்டு ஏன் கேள்வி கேட்கிறேன்னு விதண்டாவாதம் பண்ணாதே”&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியலைப்பா; ஆளை விடு.  எனக்கு வர சந்தேகம், கேள்வியெல்லாம் இல்லாத ஒண்ணைப் பத்தி யோசிக்கிற விதம் இல்லை.  இருக்கிற  விஷயங்களிலே வர கேள்விக்கே உனக்கு பதில் தெரிய மாட்டேங்குது.  இந்த அழகுல - முட்டை வந்தா அம்மாவா?  முட்டை பொரிஞ்சா அம்மாவா? - இப்படி ஒரு கேள்வி”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ அப்படி என்ன கேள்வி கேட்டே எனக்கு பதில் சொல்ல வராத மாதிரி?”&lt;br /&gt;&lt;br /&gt;“பாட்டுல ராகம் எப்படி கண்டு பிடிக்கறதுன்னு கேட்டேன்ல?  நீ என்ன சொன்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு பாடிக் காமிச்சு, என் MP3 ப்ளேயரும் கொடுத்து கேட்கச் சொன்னேனே?  இன்னுமா விளங்கல?”&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படித்தான் நீ சொல்லிட்டுப் போயிடுவே.  உன்னை நம்பி, உன் MP3 ப்ளேயர்ல ஒரே ராகத்துல இருக்கற பாட்டா செலக்ட் பண்ணி கேட்டேன்.  எல்லாப் பாட்டும் வித்தியாசமாத்தான் இருக்கு - ரெண்டு பாட்டு கூட ஒரே மாதிரி தெரியலே"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ராகத்துல கேட்டே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ராகமாலிகா.  உங்கிட்ட இருக்கிறதுல அதிகமான பாட்டு அந்த ராகத்துல தான் இருக்கு. ராகமாலிகா ராகம் ரொம்ப பாப்புலரா?” &lt;br /&gt;&lt;br /&gt;"தெரியலேன்னா கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.  இப்படி லூசாட்டம் ஏதாவது சொல்லக்கூடாது.  ராகமாலிகா ராகம் இல்ல.  அது நம்ப ஊர்ல சொல்ற கதம்ப மாலை மாதிரி.   கதம்பம்ன்னு பூ கிடையாது.  நிறைய பூக்களை கலந்து மாலையா கட்டினா கதம்பம்.  அதே மாதிரி நிறைய ராகங்களை உபயோகிச்சு ஒரு பாட்டு பாடினா அது ராகமாலிகா"   &lt;br /&gt;&lt;br /&gt;"ஓகோ - காலைல குடிக்கிற பஞ்ச் மாதிரியா?  பஞ்ச்ன்னு ஒரு பழம் கிடையாது - ஆனா பஞ்ச்க்குள்ள நிறைய பழரசம் – சரிதானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு சாப்பாட்டு உதாரணம் தான் கொடுக்கணும்.  சரி பஞ்ச் இல்ல கதம்ப சாதம் மாதிரின்னு வச்சுக்கோயேன்.  பாட்டுல இருக்கிற வெவ்வேறு பகுதியை வெவ்வேறு ராகத்துல பாடினா அது ராகமாலிகா."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா - 'ராகம்: ராகமாலிகா' அப்படின்னு போட்டா வேற என்னன்னு நினைச்சுக்கிறது.  பேசாமா ‘கதம்பம்’ன்னு போடலாம்ல?  இதெல்லாங்கூட என்னை மாதிரி ஒரு அறிவுஜீவி வந்து தான் சொல்ல வேண்டியிருக்கு.  நீ என்னடான்னா, முதலில் வந்த முட்டை அண்ணாவா, இல்லை முதலில் பொரிஞ்ச முட்டை அண்ணாவான்னு கேள்வி கேக்கற!"&lt;br /&gt;&lt;br /&gt;“யோசிச்சுப் பாரு மனுஷங்க மட்டும் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் வகையா இருந்திருந்தா எத்தனை குழப்பம், கேசு வந்திருக்கும்?"&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் இந்தக் கேள்வியோடு நிறுத்திட்டே?  மனுஷனுக்கு கொம்பு முளைச்சா எப்படி இருக்கும்? அப்படின்னு ஆராய்ச்சி பண்ண வேண்டியதுதானே?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதைப் பத்தியும் யோசிச்சிருக்கேனே.  கொம்பை வளர்க்கலாமா இல்லையா என்பதில ஒவ்வொரு மதமும் ஒவ்வோண்ணு சொல்லும் - சில பேர் கொம்பு சாத்தானோட வடிவம்ன்னு சொல்லி வெட்டிப்பாங்க, சிலர் அது ‘கடவுள் தந்தது; வெட்டக்கூடாது’ அப்படின்னு சொல்லி வளர்ப்பாங்க.  ஒரு மதம் கொம்பை மூடணும்ன்னு சொல்லும், இன்னொரு மதம் கடவுள் தந்ததை மூடக்கூடாதுன்னு சொல்லும்.  மதச் சண்டைகள் வருவதற்கு இன்னுமொரு காரணம் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் கொம்புக்கு நெயில் பாலிஷ் மாதிரி கொம்பு பாலிஷ் போட்டுப்பாங்க.  சிலர் கொம்புக்கு தங்கம், வெள்ளில நகை பண்ணிப் போட்டுப்பாங்க. தொப்பி வகையில நிறைய மாற்றம் வரும்; விளையாட்டுகளில், முக்கியமா ரக்பில, ஹெல்மெட் வித்தியாசமா இருக்கும்.  ஸ்பெயின்ல மாட்டைக் கத்தியால குத்தி கொல்றத்துக்கு பதிலா, கொம்பால முட்டிக் கொல்லும் விளையாட்டு வரலாம்.  பேப்பர்ல 'கொம்பால் குத்திக் கொலை'ன்னு தலைப்பு வரும்.”&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.  உன்னைப் போய் கேள்வி கேட்டேனே!  நல்ல வேளை ஸ்டேஷன் வந்தாச்சு.  இறங்கலாம் வா."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-116757390460645496?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/116757390460645496/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=116757390460645496' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116757390460645496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116757390460645496'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2006/12/3.html' title='ஒரு இரயில் பயணத்தில் - 3'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-116707842454957400</id><published>2006-12-26T16:45:00.000-05:00</published><updated>2007-01-01T11:12:31.903-05:00</updated><title type='text'>ஒரு இரயில் பயணத்தில் - 2</title><content type='html'>"சும்மா சொல்லக்கூடாது, இந்த குளிர் விடுமுறையும், சின்ன வயசில நாம பள்ளியிலே படிக்கறச்சே அனுபவிச்ச கோடை விடுமுறை மாதிரி நல்லாவே இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.  ரயில்ல உட்கார இடம் கிடைக்குது; அலுவலகத்தில ஆள் இல்ல.  என்ன எக்கச்சக்கமா கோட், மப்ளர், ஸ்வெட்டர்ன்னு ஒரு குட்டி பீரோ துணி போட்டுக்கிட்டு போக வேண்டியிருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப அலுத்துக்காதே.  வெள்ளிக்கிழமை மீட்டிங்ல என்ன சொன்னாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங் - சொல்ல மறந்துட்டேனே.  இந்த வார மீட்டிங்ல பாதுஷா சூப்பர்!"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொன்னாங்கன்னுதானே கேட்டேன்; என்ன மென்னாங்கன்னா கேட்டேன்?  அது சரி உனக்கு சாப்பாட்டப் பத்தி யோசிக்காம இருக்க முடியாதே.  டோனட்ன்னு சொல்லேன்; பாதுஷாவாம்!"&lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டையும் ஒரே மாதிரி தான் செய்யறாங்க.  என்ன பாதுஷா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்; டோனட் கொஞ்சம் லேசு.  எதோ நட் போல்ட திங்கறா மாதிரி சொல்ல வேண்டாமேன்னு பாதுஷான்னு தமிழ்ல சொல்றேன்.  மீட்டிங்ல ஒண்ணும் பெரிசா சொல்லல.  வழக்கம் போல 'ஹாப்பி ஹாலிடேஸ்; சீ யூ இன் த நியூ இயர்' அப்படின்னு சொன்னாங்க.  ஏன் கேக்கற?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல செலவக் குறைக்க நம்ம மாதிரி கான்ட்ராக்டருக்கெல்லாம் கட்டாய விடுமுறை தரப் போறாங்கன்னு ஒரு வதந்தி இருந்தது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா அக்குறும்பு.  இவங்களுக்குத்தானே பண்டிகை; நமக்கு இல்லையே?  நமக்கு ஆபீஸ் வந்தாத்தானே துட்டு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் தெரியுமே.  ஆபீஸ்ல இவங்க ஆளே இருக்கறதில்லே; நம்மை மாதிரி கான்ட்ராக்டர் வேலை செய்யாம சம்பளம் வாங்கறதப் பார்க்க பொறுக்கலே!"&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வளவு சந்தேகமா இருந்தா இவங்கள்ல நாலு பேர் வேலைக்கு வரட்டுமே.  நானா வேணாங்கறேன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி அதை விடு.  இந்த வருடம் இந்த மாதிரி ஏதும் பண்ணலை.  அடுத்த வருடம் நாம் இங்க இருக்கமோ இல்லையோ!"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னுமொரு முக்கியமான விஷயம்.  அடுத்த மீட்டிங்ல இருந்து 'சுகர் ப்ரீ' சாமானும் இருக்குமாம்!  நம்ம டிப்பார்ட்மென்ட்ல புதுசா வந்திருக்கற மக்கள்ல யாருக்கோ சுகர் இருக்காம்.  கேட்டவுடனே இனிமே பத்திய மீட்டிங்தானோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். அதனாலே நைசா விசாரிச்சுட்டேன்; நல்ல வேளை சக்கரை சாமானும் உண்டு."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னதான் இருந்தாலும் இந்த ஊரிலே எல்லாரையும் அனுசரிச்சுத்தான் போறாங்க.  மற்றவங்களோட சாப்பாட்டுப் பிரச்சனைகளையும் யோசிக்கிறாங்க.  அப்படி இருக்கறப்பவே, காப்பியை மேல கொட்டிக்கிட்டு கம்பெனி மேல கேஸ் போடறாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"கேஸ்னு சொன்னதும் நினைவுக்கு வருது.  &lt;a href="http://www.smh.com.au/articles/2006/12/20/1166290613406.html"&gt;இங்கிலாந்துல&lt;/a&gt;  ஒரு வேர்ஹவுஸ்ல  வேல செஞ்ச மனுஷன் தலையில அடிபட்டிடுச்சாம்.  அதுக்கப்புறம் அந்தாளு  பலான படம் பார்க்கறது, பொண்ணுங்கள டாவடிக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டானாம்.  இந்த மாதிரி பண்ணத்துக்கு காரணமே தலைல அடிபட்டதுதான், அதனால கம்பெனிதான் நஷ்ட ஈடு கொடுக்கணும்னு கேசும் போட்டு ஜெயிச்சுட்டானாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி.  இவன் டாவடிக்கறத்துக்கு இவன் காரணம் இல்லையா?  இது மட்டும் நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிஞ்சது, போச்சு.  பண்ற அத்தனை அயோக்கியத்தனத்துக்கும் காரணம் நான் கீழ விழுந்து அடி பட்டுக்கிட்டதுதான் காரணம்னு சொல்லி தப்பிச்சுக்குவாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் அரசியல்வாதிகளை மட்டும் சொல்ற.  வீட்டில சின்னப்பசங்கள்ல இருந்து கிழங்கட்டை வரை எல்லோரும் ‘தலைல இடிச்சுக்கிட்டேன்; அதனால நான் காரணம் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு எல்லா விதமான தப்பும் பண்ணுவாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி அதை விடு.  சுக்வீந்தர ஏன் பிராஜக்ட்லேர்ந்து எடுத்துட்டாங்க?  இத்தனைக்கும் அவனுக்கு இங்க்லீஷ் நல்லா பேச/எழுத வரும்l தவிர அவனுக்கு ரிகொயர்மென்ட்டெல்லாம் நல்லாப் புரியுமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா கோடெழுத வரலையே?  கோடும் எழுதாம, நல்லாவும் பேசினா இவனுக்கு கோடெழுத தெரியலங்கறது மத்தவங்களுக்கு நல்லா தெரிஞ்சுடுதே! நம்ம இர்பான் பதான் மாதிரி தான்.  போலிங் போட டீம்ல எடுத்தா 'நான் நல்லா பேட் பண்றேன்' அப்படின்னு சொன்னா வச்சுக்குவாங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலாம் வா."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-116707842454957400?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/116707842454957400/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=116707842454957400' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116707842454957400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116707842454957400'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2006/12/2.html' title='ஒரு இரயில் பயணத்தில் - 2'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-116666543893377252</id><published>2006-12-24T10:43:00.000-05:00</published><updated>2006-12-25T08:56:05.810-05:00</updated><title type='text'>படம் எங்கே போச்சு?</title><content type='html'>ஒவ்வொரு புது பெற்றோருக்கும் தன் குழந்தையை எப்படி ‘ஐடியலாக’ (IDEAL) வளர்க்க வேண்டும் என்று நிச்சயம் எண்ணம் இருக்கும்.  குழந்தை வளர்ந்து பெரிதாகும் போது அவர்களுடைய ‘வளர்க்கும் முறை’ அந்த ‘வளர்க்கும் தர’த்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும்.  இரண்டு (அல்லது மூன்று/நான்கு) குழந்தைகளுக்குப் பின் இந்த ‘தரம்’ மொத்தமும் மாறியிருக்கும்.  எனக்கும் இந்த மாதிரி நிறைய விஷயங்களில் ஒரு ‘தரம்’ வைத்திருந்து அவைகள் மாறி வருவதைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.  இது அவ்வளவு சுவையாக இல்லை.  பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் சொன்ன பொன் மொழி நினைவுக்கு வந்து படுத்துகிறது:  'வாழ்க்கை என்பது அனேகம் பேருக்கு இலட்சியத்திற்கும் நடைமுறைக்கும் நடக்கும் சமரசம்.'  &lt;br /&gt;&lt;br /&gt;Real life is, to most men, a perpetual compromise between the ideal and the possible – Bertrand Russell.&lt;br /&gt;&lt;br /&gt;‘சிறு வயதில் குழந்தைகள் தெரிந்து கொள்வது அவர்கள் கேட்கும் கேள்வியில்தான் உள்ளது; அந்த ஆவலை (CURIOSITY) தடை செய்யக் கூடாது, அவர்களுக்கு உண்மையான பதிலை சொல்வதன் மூலம் அவர்களுடைய அறிவை வளர்க்க முடியும்’, என்றெல்லாம் எனக்கு ஒரு தீர்மானமான எண்ணம்.  ஆதலால் என் மகள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உண்மையான விளக்கம் தர வேண்டும், அரை குறை பதில் சொல்லி சமாளிக்கவோ, அல்லது கோபிக்கவோ கூடாது என்றும் அவள் பேச ஆராம்பிப்பதற்கு முன் உறுதியாய் இருந்தேன்.  இதற்கு சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது நான் அதிகம் கேள்வி கேட்கிறேன் என்று சில ஆசிரியர்கள் என்னை கேள்வியே கேட்கக் கூடாது என்று படுத்தியதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;என் மகள் சிறு குழந்தையாய் பேச ஆரம்பித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தபோது முதலில் அதிகம் கேட்ட கேள்வி ‘எங்கே?’ என்பது தான்.  ‘ஏன்’ ‘எப்படி’ என்பதெல்லாம் பின்னால் தான் வந்தது.  அவள் கேட்ட நிறைய ‘எங்கே?’ கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.  முடியவில்லை என்பதில் இரண்டு வகை – ஒன்று எனக்குத் தெரியும் என்று நான் நினைத்துக் கொண்டு அவளுக்கு புரிகிற மாதிரி விடை சொல்ல ஆரம்பித்து, அவளையும் குழப்பி, நானும் குழம்பியது; மற்றொன்று எனக்கு விடையே தெரியாத கேள்விகள்!&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக 'சூரியன் எங்கே போச்சு?' என்ற கேள்விக்கு, விபரமாக பந்தை வைத்து பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றெல்லாம் சொல்ல ஆரம்பிக்க அவளைக் குழப்பி வெறுப்பேற்றியதுதான் மிச்சம்.  இது முதல் வகை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வகையில் - அதாவது எனக்கு உண்மையில் விடையே தெரியாத வகையில்,  சில கேள்விகளுக்கு கொஞ்சம் பொய் கலந்து சொல்லி சமாளிக்க  ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கையில் சாலையில் போன காரைப் பார்த்து ‘கார் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு  உண்மையில் எனக்கு பதில் தெரியாது; இருந்தாலும் ‘வீட்டுக்கு போச்சு’ என்று சொல்வேன் (பொய்தான் – இருந்தாலும் பாதகமில்லை என்ற நினைப்பு).  இது வானத்தில் பறக்கும் பறவைக்கும் (‘அது தன்னோட கூட்டுக்கு போச்சு’) பொருந்தும்.  அந்த சமயத்தில் உண்மையாக இல்லாவிட்டாலும் இந்த மாதிரி விடைகள் பொருத்தமானவையாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலேயே கடினமான கேள்விகளை என் மகள் கேட்க ஆரம்பித்த போதுதான் பிரச்சனையே வந்தது எனக்கு.  வீட்டில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தவுடன் ‘படம் எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை.  என் மண்டைக்குள் அந்தக் கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது. படம் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளி பரப்பப் படும் போது அலைகள் ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  அதைப் பார்க்க எனக்கு தொலைக்காட்சி பெட்டி தேவை.  நான் தொலைக்காட்சி பெட்டியை அணைப்பதன் மூலம் படம் இல்லாமல் போய் விடுகிறதா என்ன?  இது பூனை கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடும் என்பதைப் போல இருக்கிறது.   ‘எங்கே போச்சு?’ என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை.  என் மகளிடம் 'தெரியாது' என்று சொன்னால், நான் பதில் தெரிந்து கொண்டே அவளுக்கு சொல்லவில்லை என்று கோபம் - அழுகை.  வழக்கம் போல் என் மனைவி ‘காணாமல் போச்சு’ என்று பதில் சொல்லி அவளை சமாதானப் படுத்தினாள்.  இருந்தாலும் எனக்கு இந்தக் கேள்வி ஒரு புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது.  உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் என் மகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை என் மனைவியிடமே விட்டு விட்டேன். இதே போல எனக்குள்ளேயே நிறையக் கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன.  உதாரணமாக இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடக் காலண்டரை மாட்டி, '2006 எங்கே போச்சு?' என்று யோசித்தால் பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை.  வயது ஆக ஆக எனக்குத் தெரியாதது அதிகமாவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.  'எங்கே?' கேள்விகளுக்கே இப்படி என்றால், 'ஏன்?' என்ற கேள்விக்கு நிச்சயமாக நான் அம்பேல்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-116666543893377252?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/116666543893377252/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=116666543893377252' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116666543893377252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116666543893377252'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2006/12/blog-post_24.html' title='படம் எங்கே போச்சு?'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-116666518398779116</id><published>2006-12-20T20:38:00.000-05:00</published><updated>2006-12-25T08:00:44.126-05:00</updated><title type='text'>ஓணான் வாயில் புகையிலை - ஏன்?</title><content type='html'>மன்னார்குடியில் பள்ளியின் பெரிய விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அருகில் இல்லாமல் கொஞ்சம் தொலைவில் இருக்கும்.  எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; கிரிக்கெட் விளையாட மைதானத்துக்குப் போக வேண்டும் என்றால் நிறையப் பேர் கும்பலாக நடந்துதான் போவோம்.  சந்தடியான தெருவெல்லாம் தாண்டி, அதிகம் ஆள் நடமாட்டமில்லாத பாதையில் போகும் போது, சிலருக்கு ஒரு முக்கியமான விளையாட்டு ஓணானைப் பிடித்து, அதன் வாயில் கொஞ்சம் புகையிலையோ அல்லது கீழே கிடக்கும் பீடி/சிகரெட்டின் தூளையோ (அதுவும் புகையிலைதானே) போட்டு, ஓணான் தள்ளாடுவதைப் பார்ப்பது.  இதை செய்யும் தைரியம் சிலருக்குத்தான் உண்டு; எனக்கு அதைப் பார்க்கக் கூட அவ்வளவாக வராது.  கொஞ்சம் ஒதுங்கியே சென்று விடுவேன்.  அப்போதெல்லாம் தோன்றிய கேள்வி 'இதை ஏன் செய்கிறார்கள்?' என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களிடம் கேட்டால் வந்த பதிலெல்லாம் 'என் அண்ணன் செய்தேன் என்று சொன்னான்; நானும் அதேபோல விளையாடுகிறேன்' என்ற ரீதியிலேயே இருந்தது.  அண்ணன்களைக் கேட்டால், அவர்களும் 'முந்தைய தலைமுறையில் செய்ததாக சொன்னார்கள்; அதான் நானும் செய்தேன்' என்றுதான் சொல்லுவார்கள்.  இருபது வருடங்களுக்கும் மேலாக பதில் தெரியாத இந்தக் கேள்விக்கு இந்த வாரம் எதிர்பாராத விதமாக ஒரு பதில் கிடைத்தது.  அதைத்தான் இங்கு பதிகிறேன்.  இந்த பதில் எத்தனை தூரம் சரி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  இந்தக் கதை ஆப்ரிக்கப் பழங்குடியினரிடமிருந்து வந்தது.  ஸூலூ இன மக்களிடையே இந்தக் கதை பழங்காலந்தொட்டு சொல்லப்பட்டு வருகிறது என்று 1913-ல் வெளியான ‘The Belief in Immortality and the Worship of the Dead, Volume I’ என்ற புத்தகத்தில் சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ப்ரேசர் (Sir James George Frazer) சொல்லியிருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;வெகுகாலத்துக்கு முன்னால் கடவுள் (உன்குலுன்குலு - UNKULUNKULU) பூமிக்கு ஒரு ஓணனை அனுப்பி மக்களிடையே அவர்கள் இறக்காமல் இருக்குமாறு சொல்லச் சொன்னாராம்.  ஓணானும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்ததாம்.  வழியிலே அங்கும் இங்கும் அலைந்து விட்டு பழங்களைச் சாப்பிட்டு படுத்துக் கொண்டிருந்ததாம்.  இதற்கிடையே கடவுளும் யோசித்து, ஒரு பல்லியையும் அனுப்ப, அது மக்களிடத்திலே வந்து ‘நீங்கள் இறக்குமாறு கடவுள் சொன்னார்’ என்று சொல்லியதாம்.  இகைக் கேட்ட மக்களும் இறக்க ஆரம்பித்தனராம்.  கொஞ்ச நாள் கழித்து ஓணானும் மெதுவாக வந்து ‘கடவுள் உங்களையெல்லாம் இறக்காமல் இருக்கச் சொன்னார்’ என்று சொன்னதாம்.  ஆனால் மக்களோ ‘உனக்கு முன்பாகவே பல்லி வந்து எங்களை இறக்கச் சொல்லிவிட்டது’ என்று சொல்லி – தொடர்ந்து இறக்க ஆரம்பித்தார்களாம்.  அவர்களுடைய சந்ததியினர் எல்லாம் இதனாலேயே தாமதமாக வந்த ஓணானைப் பழிவாங்க, அதன் வாயில் புகையிலையைப் போட்டு அதைத் துன்புறுத்துகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஊரிலே மட்டும் தான் இந்த மாதிரி செய்கிறார்கள் என்று நினைத்தால், காலங்காலமாக ஆப்ரிக்காவிலும் இதே போல செய்திருக்கிறார்கள், மற்றும் ஒரு கதையும் இருக்கிறது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது.  உங்களுக்கு இது போல ஏதாவது கதை தெரியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-116666518398779116?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/116666518398779116/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=116666518398779116' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116666518398779116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116666518398779116'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2006/12/blog-post_20.html' title='ஓணான் வாயில் புகையிலை - ஏன்?'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-116561392418410152</id><published>2006-12-08T16:55:00.000-05:00</published><updated>2006-12-24T22:23:14.576-05:00</updated><title type='text'>ஒரு இரயில் பயணத்தில்...</title><content type='html'>ரயிலில் நியூயார்க் வரும் போது கணிப்பொறித் துறையில் வேலை செய்யும் இரு தமிழ் பேசும் வாலிபர்கள் என் காதில் விழுகிற மாதிரி பேசிக் கொண்டு வந்த உரையாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்சம் முன்னாலேயே கிளம்பலாம்னு இதுக்குதான் சொன்னேன்.  இப்படி மூச்சு வாங்க ஓடி வரவேண்டாமில்லையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்சம் வேகமா நடந்தாக் கூட ஒனக்கு மூச்சு வாங்கும்; ஒழுங்கா சாப்பிட்டாத்தானே?”&lt;br /&gt;&lt;br /&gt;“சாப்பாட்டைப் பத்தி பேசி  வெறுப்பேத்தாதே.  அந்தக் குழந்தையைப் பாரு; நம்மைப் பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு”. &lt;br /&gt;&lt;br /&gt;“அழகா இருக்குல்ல – அது சிரிக்கறச்சே.  நல்ல ஆப்பிள் மாதிரி கன்னம்”&lt;br /&gt;&lt;br /&gt;“மறுபடியும் சாப்பாடா?  ஏன் கன்னத்தில 440-ஸ்டிக்கர் ஒட்டிருக்கா?” &lt;br /&gt;&lt;br /&gt;“ஆங் – ஆப்பிள்ன்ன ஒடனே நினைவுக்கு வருது, சப்ஜி மண்டில இனிமே 440 வாங்க கூடாது – ஒரு பவுண்டு 99 சென்ட்; இருந்தாலும் ஆப்பிள் ஒரே மாவா இருக்கு.  பவுண்டுக்கு 1.19 கொடுத்தாலும், 460 தான் வாங்கணும்”.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு தெரிஞ்சு கடையில இருக்கிற காஷியரத் தவிர இந்த லேபிள் ஸ்டிக்கர் எல்லாம் பார்க்கிற ஒரே ஆள் நீதாம்ப்பா.  எப்படித்தான் சாப்பாட்டு விஷயத்தில மட்டும் இதெல்லாம் கரெக்டா நினைப்புல வச்சுக்கறயோ?”&lt;br /&gt;&lt;br /&gt;“பின்ன – உன்னோட ஒரே ரூம்ல இருந்தா யாருக்குத்தான் சாப்பாடு விஷயம் மறக்கும்.  காலைல பிரேக் ஃபாஸ்ட்ன்னு சொல்லிட்டு, அரை டம்ளர் ஜூஸ் – அதுவும் எல்லாப் பழத்தையும் ஒண்ணா போட்டு கலக்கி கொடுக்கற பன்ச்.  அப்புறம் சீரியல்ன்னு சொல்லிட்டு சோளச் சீவல்.  கொஞ்சம் ஏமாந்தா வெறும் டப்பாவைக் காட்டியே அனுப்பிடுவே”&lt;br /&gt;&lt;br /&gt;“கார்ன்பிளேக்குன்னு சொல்லேன் - சோளச்சீவல்ன்னு சொன்னா குழப்பமா இருக்குல்ல?”&lt;br /&gt;&lt;br /&gt;“கார்ன்பிளேக்குன்னு சொன்னா ரொம்ப பெரிசா ஏதோ சாப்பிடறா மாதிரி தோணும்.  சோளச்சீவல்ன்னு சொன்னாத்தான் அது சாப்பிடப் பத்தாதுன்னு புரியும்”&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க இருக்கப்போறது ஐந்து மாசமோ அல்லது ஆறு மாசமோ.  கொஞ்சம் காசு சேர்த்தால் ஊருக்கு போய் செலவழிக்கலாம் இல்லையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்குன்னு இப்படியா? ஒரு டோஸ்ட், பேகல் இல்ல மப்பின் இப்படின்னு எதையாவது சாப்பிடலாம்ல”&lt;br /&gt;&lt;br /&gt;“நீயும் நானும் சைவம்.  மத்தியானத்துக்கு காண்டீன்ல சான்ட்விச்னு இதே பிரட்டும், தக்காளி வெங்காயமும்தான்.  அதை காலையிலயும் சாப்பிடணுமா? சரி விடு.  எப்பப் பார்த்தாலும் நீ சாப்பாட்டைப் பத்தி மட்டும் தான் யோசிக்கற.  ஆமா நேத்து மத்தியானம் உன் சீட்டுக்கு வந்தப்போ நீ இல்லையே – ஓபியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதெல்லாம் இல்லை, நம்ப சுக்வீந்தருக்கு கோடெழுத கொஞ்சம் ஹெல்ப் பண்ண போயிருந்தேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ அவனுக்கு கோடெழுத போனியா?  நீயே காப்பி-பேஸ்ட் கேசு – சொந்தமா என்னிக்கு கோடெழுதியிருக்கே?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னோட பாலிசியே ‘DON’T REINVENT THE WHEEL’ தான்.  எவ்வளவு அழகா நான் ரீயூஸ் பண்றேன்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா – எல்லாத்தையும் வகைக்கு தகுந்தா மாதிரி வோர்டுல காப்பி-பேஸ்ட் பண்ணி வச்சுருக்கே.  அதைத் தவிர்த்து கூகுள்ல தேடி கோடு சேக்கற! கேட்டா ‘பெஸ்ட் பிராக்டீஸ் லைப்ரரின்னு’ பந்தவா சொல்றே. அதுவும் ஒரு பிளாஷ் டிரைவ்ல வேற.  டிப் டாப்பா பேன்ட், சட்டை, கோட்டு.  அவனவன் ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு வந்து நிக்கறான்.  எல்லாம் நேரம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆள் பாதி ஆடை பாதின்னு நீ கேட்டதில்லையா?  ஆமா நீ ஏன் ரெகுலரா ஷேவ் கூட பண்ணறதில்லை?  காசு செலவாயிடுமின்னா? இல்ல காதல் தோல்வியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“கிண்டலா?  நான் ஷேவ் பண்ணாததற்கு ரெண்டு காரணம்.  ஒண்ணு குளிர் – காலங்கார்த்தால எவன் சில்லுன்னு தண்ணிய மூஞ்சில அப்பிக்கறது? இரண்டாவது – நீ சொன்ன மாதிரி ‘ஆள் பாதி ஆடை பாதி’ - வேலைக்கு ஏத்த ஒப்பனை”&lt;br /&gt;&lt;br /&gt;“வேலைக்கு ஏத்த ஒப்பனையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா – நான் பண்றது டெஸ்டிங்.  ஒன்னை மாதிரி காப்பி-பேஸ்ட் கோடன்க கிட்ட போய் ‘நீ பண்ணது தப்பு’ன்னு சொல்லற வேலை!  அப்ப போய் டிப்-டாப்ப ஷேவ், டிரஸ் பண்ணிக்கிட்டு ‘ஹாய்!, உன் கோடுல மிஸ்டேக்’ன்னு சொன்னா அவனவனுக்கு பத்திக்கும்.  அதுக்காகத்தான் நானே ரெண்டு நாள் தாடியோட போயி ‘தப்பு நடந்துடுச்சுன்னு’ சோகமா சொன்னா, என்னை திட்ட மாட்டானுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏதோ இஷ்டத்துக்கு பீலா வுடரே – காலையில பாத்ருமுக்குள்ள போனா வர ஒரு மணி நேரம் ஆவுது வெளிய வர.  ஆனா ஷேவ் பண்ண தண்ணி சில்லுன்னு இருக்குன்னு ரீல் விடர”&lt;br /&gt;&lt;br /&gt;“சத்தமா பேசாத; அந்த சின்னப் பையன் நம்மையேபாத்து சிரிச்சுக்கிட்டு இருக்கான்”&lt;br /&gt;&lt;br /&gt;“யாரு அந்த ஆப்பிள் கன்னமா”&lt;br /&gt;&lt;br /&gt;“மறுபடியும் சாப்பாடா?”&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் நியுவர்க் நிலையத்திற்கு வந்து சேர, அவர்கள் இருவரும் இறங்கினார்கள்.  மறுமுறை அந்த இருவரையும் பார்த்தால் சொல்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-116561392418410152?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/116561392418410152/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=116561392418410152' title='22 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116561392418410152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116561392418410152'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2006/12/blog-post.html' title='ஒரு இரயில் பயணத்தில்...'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-116544436237975401</id><published>2006-12-06T17:32:00.000-05:00</published><updated>2006-12-06T23:09:30.336-05:00</updated><title type='text'>தேநீர் – 13</title><content type='html'>இந்த இறுதிப் பகுதியில் தேநீர் பற்றிய சில பொது விஷயங்களைத் தந்திருக்கிறேன்.  முதலில் வடுவூர் குமாரின் கேள்வி பற்றி.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் டீ ஏலம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பு.  இந்த அமைப்பில் பங்கேற்க சில சட்ட திட்டங்கள் உண்டு – ஏலம் எடுப்போரும், டீயை விற்போரும் இந்த சட்ட திட்டத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும்.  யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம், இந்த சட்ட திட்டங்களௌக்கு உட்பட்டு இருக்கும் வரை.  ஏலம் எடுத்தவருக்கும், விடுபவருக்கும் சில பொறுப்புகள் உண்டு – ஏலம் விடுபவர், குறிப்பிட்ட அளவு தேயிலையை ஏலம் எடுத்தவருக்கு இத்தனை நாட்களுக்குள் (சாதாரணமாக 72 மணி நேரம்; ஏலம் எடுப்பவருடன் பேசி ஒத்துக்கொண்டால் இந்த கால நிர்ணயம் மாறலாம்) கொடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட அளவு அபராதம் கட்ட வேண்டும்.  அதே போல ஏலம் எடுத்தவர்,  அதே போல குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணத்தையும் செலுத்த வேண்டும் – தவறினால் அதற்கும் அபராதம் (வட்டி) உண்டு.  ஏலம் நடத்தும் அமைப்பு இதையெல்லாம் அதன் செயல்பாட்டு ஆவணங்களில் விபரமாக விளக்கியிருக்கும்.  ஏதாவது பிரச்சனை வந்தால் ஆர்பிட்ரெஷன் (Arbitration) என்று சொல்லப்படும், ஒரு நடு நிலை வகிப்பவர் கூறும் தீர்ப்பை இரு தரப்பாரும் ஏற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய டீ பொட்டலங்கள் எப்போது விற்பனையாகிறது என்பது மிக முக்கியம்.  தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட தேயிலையின் சுவை, ருசி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் – இது இயற்கை.  முதலில் தோட்டத்தில் டீத் தூளாக்கப் பட்டு, ஏலத்தின் மூலமாக தொழிற்சாலைக்கு வந்து, பொட்டலமாகி, மொத்த வினியோகஸ்தரிடம் வந்து, பின் அங்கிருந்து சில்லறை வினியோகஸ்தர்கள் மூலமாக உங்கள் தெருமுனை கடைக்கு வருகிறது.  பின் நீங்கள் வாங்கி தினம் இரண்டு-நான்கு ஸ்பூன் கணக்கில் டீயாக அருந்தப் படுகிறது.  இதில் நேரம் முக்கியம் – இரண்டு காரணங்களால்.  ஒன்று டீயின் சுவை குறைவு.  இரண்டாவது நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்த 72 மணி நேரத்தில் பணத்தை கொடுத்தாக வேண்டும்.  நம் போன்ற உபயோகிப்பவர்கள் டீ வாங்கி பணம் கொடுக்கும் வரை நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் – காலம் அதிகமாக முதலுக்கு வட்டியும் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனங்களே உங்களுக்கு விற்பது என்று எடுத்துக் கொண்டால் ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும்.  ஆதலால் அவர்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு தன் பொட்டலங்களை விற்று விடுவார்கள்.  அந்த மாதிரி விற்கும் போதே பணமும் நிறுவனத்துக்கு வந்து விடும்.  முக்கால் வாசி நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களிடம் இருந்து நிறுவனத்தின் பெயரில்  முன்னமேயே கையொப்பமிட்ட காசோலைகளை வங்கி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.  மொத்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பொட்டலங்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப் படும் போது இந்த காசோலைகள் வங்கிகளில் நிறுவனங்கள் கணக்கில் போடப்படும்.  பொருளை காசு கொடுத்து வாங்கி கடைகளுக்கு விற்பதால் இந்த சில்லறை வினியோகஸ்தர்களுக்கு வரும்படி வேண்டும்; அதே போல் தெரு முனையில் இருக்கும் கடைக்காரரும், தன் சொந்தக் காசைப் போட்டு பொட்டலம் வாங்குவதால் அவருக்கும் வரும்படி வேண்டும்.  இதை எல்லாம் கணக்கில் வைத்து, கடையில் நீங்களும் நானும் வாங்கும் விலையிலிருந்து, கொஞ்சம் குறைவாகவே நிறுவனக்கள் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு விற்கும்.  இது போதாதென்று, நிறுவன இருப்பு அதிகமானால் ‘தற்காலிக விலைக் குறைப்பு’, மற்றும் ‘சிறப்புத் தள்ளுபடி’ என்றெல்லாம் சொல்லி நிறுவனக்கள் விற்பனையைப் பெருக்க முயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமல்லாமல் இந்த பொட்டலங்களை ஒவ்வொரு இடமாக அனுப்பி, ஏற்றி இறக்குவதால் வரும் சேதம், நாள் கடந்து போனதால் விற்க முடியாமல் திரும்பி வரும் சரக்கு (அனேகமாக அனைத்து நிறுவனங்களும், கடைக்காரர்களிடம் இருந்து இதை ஏற்றுக் கொள்ளும்; இதை கமிஷனாக (அளவைப் பொறுத்து) கடையிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளும் சில்லறை வினியோகஸ்தர்களுக்கு நிறுவனங்கள் தந்து விடும்),  என்றெல்லாம் வேறு செலவு.  உற்பத்தி செய்யும் செலவோடு, இவற்றையெல்லாம் அனுமானித்து, விற்கும் விலையை நிர்ணயிப்பது அவ்வளவு சுலபமல்ல.  அடிக்கடி விலயையும் மாற்ற முடியாது.  ஒட்ட வேண்டிய லேபலில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.  இத்தனையும் மீறி இந்த வியாபாரத்தில் பணம் பண்ணுவதற்கு கொஞ்சம் திறமை வேன்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பயிற்சியின் போது இரண்டு வாரங்கள் விற்பனைப் பிரிவில் இருந்தேன்.  விற்கும் அதிகாரியுடன் (Sales Manager) மொத்த வினியோகஸ்தர் (C&amp;FA), சில்லறை வினியோகஸ்தர் (Distributor), மற்றும் கடைகள் (Shops) எல்லாம் போயிருக்கிறேன்.  இந்த அதிகாரி அவர்களோடு விற்பனைக்காக ஹிந்தியில் பேசுவதை (மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல், புகழ்ச்சி, பேரம் - எல்லாம் உண்டு) கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன்.  அவரோடு சேர்ந்து டீ விளம்பரத் தோரணம் (YELLOW LABEL) கட்டியிருக்கிறேன்.  அவர் தொலைபேசியில் உயர் அதிகாரிகளுடன் தற்காலிக விலைக் குறைப்புக்காக போராடியதைக் கேட்டிருக்கிறேன் (உயர் அதிகாரி மறுத்தது வேறு விஷயம்; போதாக் குறைக்கு உங்களுக்கு - என்னையும் சேர்த்துத்தான் - விற்கத் தெரியவில்லை என்று அவர் கோபிக்க வேறு செய்தார்).  இந்த இரண்டு வார பயிற்சி முடிந்ததும் எனக்கு நிச்சயமாய் தெரிந்த ஒரு விஷயம் - என்னால் இந்த விற்பன வேலையை செய்ய வராது, முடியாது என்பதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் தேயிலை உற்பத்தி கிட்டத்தட்ட 9 லக்ஷம் மெட்ரிக் டன் (90,00,00,000 கிலோ -  90 கோடி கிலோ).  2003-ம் வருடத்தில் வட இந்தியாவில் 66.36 கோடி கிலோவும், தென் இந்தியாவில் 19.34 கோடி கிலோவும் விளைந்தது (மொத்தம் 85.7 கோடி கிலோ).  இதில் பெரும்பான்மை சதவீதம் ஏலத்தின் மூலமாகத் தான் விற்பனையாகின.  கிட்டத்தட்ட 20 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டது.  இந்த விற்பனை முறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.  எத்தனையோ சின்னச் சின்ன மாற்றங்கள் வந்தாலும், இந்த அடிப்படை விற்பனை முறை நூறு வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருக்கிறது.  அதே போல தேயிலையிலிருந்து டீத் தூள் செய்வதிலும் மிகப் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை –  க்ரீன் டீ என்று சொல்லப்படும் நீராவி மூலம் பதப்படுத்தப்படும் முறையைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது – முப்பது வருடங்களுக்கு முன் இந்தியா உலகிலேயே அதிக டீ உற்பத்தி பண்ணும் நாடாகவும், ஏற்றுமதி பண்ணும் நாடகவும் இருந்தது.  சமீப காலங்களில் கென்யா, இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன.  2004ல் இந்தியாவின் டீ உற்பத்தி 4.3% குறைந்திருக்கிறது – முக்கிய காரணங்கள் தட்பவெப்ப நிலை மாறுதல் மற்றும் அஸ்ஸாமில் கிட்டத்தட்ட 70 தோட்டங்கள் மூடப்பட்டது.  ஏற்றுமதியில் க்ரீன் டீ உற்பத்தியினால் சீனா முன்னணிக்கு வந்திருக்கிறது.  விபரங்களுக்கு &lt;a href="http://www.fao.org/newsroom/en/news/2005/105404/index.html"&gt;இங்கே&lt;/a&gt;. இந்தியாவில் விளையும் டீ உலக உற்பத்தியில் கால் பங்குக்கும் சிறிது அதிகம்.  இணையத்தில் டீ பற்றி அனேகச் செய்திகள் இருக்கின்றன.  உதாரணத்துக்கு டீ பற்றிய ஒரு &lt;a href="http://www.kakuzo.com/tea_blog/"&gt;ப்ளாக்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமையாக இத்தனை பதிவையும் படித்தவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றி :-).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/12/12.html"&gt;தேநீர் – 12&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/11.html"&gt;தேநீர் – 11&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/10.html"&gt;தேநீர் – 10&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/9.html"&gt;தேநீர் – 9&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/8.html"&gt;தேநீர் – 8&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/7.html"&gt;தேநீர் – 7&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/6.html"&gt;தேநீர் – 6&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/5.html"&gt;தேநீர் – 5&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/4.html"&gt;தேநீர் – 4&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/3.html"&gt;தேநீர் – 3&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/2.html"&gt;தேநீர் – 2&lt;/a&gt;;  &lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/1.html"&gt;தேநீர் – 1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-116544436237975401?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/116544436237975401/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=116544436237975401' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116544436237975401'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116544436237975401'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2006/12/13.html' title='தேநீர் – 13'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-116488829117045956</id><published>2006-12-03T10:15:00.000-05:00</published><updated>2006-12-06T12:35:00.020-05:00</updated><title type='text'>தேநீர் – 12</title><content type='html'>மார்க்கெட்டிங்&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டத்தில் வளரும் செடியிலிருந்து இலையைப் பறித்து டீத் தூளாகவும் செய்து தருவது டீ எஸ்டேட் என்று சொல்லப்படும் தோட்டங்களே.  இருபது வருடங்களுக்கு முன்பு வரை, தோட்டங்களே நேரடியாக டீயை பருகும் மக்களுக்கு விற்பனை செய்ததில்லை.  தோட்டங்கள் ஏலத்தின் மூலமாக டீத்தூள்களைக் கலந்து பொட்டலம் கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு விற்பதை மட்டுமே செய்து வந்தன.  இந்த பொட்டலம் கட்டுவது தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய விஷயம் என்று சொல்ல முடியாது.  இதைப் புரிந்து கொண்ட தோட்டங்கள், இந்த டீத்தூளை நாமே ஏன் பொட்டலம் போட்டு நேரடியாக விற்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தன.  இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் டீத்தூள் பொட்டலம் போடும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரிய அளவில் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள்; பிராண்டு என்று பார்த்தால் இருபது/முப்பது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எத்தனையோ வகைகள் வந்து விட்டன.  நிறைய தோட்டங்கள் ‘தோட்டத்து தேயிலையின் புத்துணர்வு’ என்று தங்களிடமே தோட்டம் இருக்கிறது என்ற ஒரு விஷயத்தை வித்தியாசமாகக் காட்ட ஆரம்பித்தன.  பொட்டலம் போடும் வியாபாரம் இருக்க முக்கிய காரணம், இயற்கையின் படைப்பில் வரும் வித விதமான தேயிலைகளை இன்னமும் அதிகமான எண்ணிக்கையில் கலவையாக்க முடியும் என்பதால் தான்.  இரண்டே தோட்டங்கள் இருந்தால் கூட, இந்த இரண்டையும் எத்தனை விகிதாசாரத்தில் கலக்கிறோம் என்பதிலேயே நாம் நிறைய வகைகளை (பிராண்ட்) உருவாக்க முடியும்.  இந்த ஒரு சமாசாரத்தில் தான் மொத்த பொட்டல வியாபாரமும் அடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று, நான்கு தோட்டத்திலிருந்து தேயிலையை வாங்கி கலந்து கொடுக்கிறேன் என்று நான் சொன்னால் யாரும் என்னிடம் வர மாட்டார்கள்.  அதற்காக எனக்கு மார்க்கெட்டிங் பிரிவின் ‘அறிவு’ தேவை.  அவர்கள் உங்களிடம் வந்து இந்த டீ குடித்தால் களைப்பு போகும், புத்துணர்வு வரும், என்று சொன்னால், நீங்கள் வந்து கொஞ்சம் போணி பண்ணுவீர்கள்.  அதற்காகத்தான் இந்தப் பிரிவு.  &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுதானா என்று நினைக்க வேண்டாம்.  ஒரு பெரிய நிறுவனத்திற்கு பத்து, இருபது பிராண்டு தேவை.  இவைகளுக்குள் முரண்பாடு வராத மாதிரி, அதே சமயம் ஒவ்வொரு வகையும் (பிராண்டு) ஒரு தனி விசேஷத்தை சொல்வது போலவும் கதை கட்டுவது அவ்வளவு எளிதல்ல.  முடிந்தால் மற்ற நிறுவன பிராண்டை கொஞ்சம் மட்டம் தட்டி, சொந்த பிராண்டை கொஞ்சம் தூக்கிப் பேசினால் விற்பனை பெருகலாம்.  இதற்காக இவர்கள் செய்யும் செலவுதான் எத்தனை.  இந்தப் பிரிவு மட்டும் இல்லையென்றால், நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் இருக்கும் – அது சுவரில் டீப்பொட்டலப் படம் வரைபவரிலிருந்து, வீட்டில் நீங்கள் டீ குடித்துக்கோண்டே ஆவலாகப் பார்க்கும் தொலைக்காட்ச்சித் தொடர் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கலவைக்கு எந்த மாதிரி குணம் இருக்கிறது என்பதை நிர்ணயித்து (குணம் என்பது பொதுவான சொல் – அது சுவை, மணம், நிறம், அது தரும் உணர்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), அந்த குணத்தை மக்கள் மனதிலே பதியுமாறு விளம்பரங்கள் தயாரிப்பது, போட்டிகள் நடத்துவது போன்றவை மார்க்கெட்டிங் பிரிவின் வேலை.  இந்த விளம்பரங்களுக்கு வெளி நிறுவனங்களை அணுகி, அங்கு இருக்கும் கவிஞர்கள், கலைஞர்களின் திறமையால் ஒரு துண்டுப் படத்தையோ, பாடலையோ, அந்தக் கலவையின் குணத்தை பறைசாற்றும் விதமாக தருவிப்பது என்பது ஒரு பெரிய விஷயம்.  அது டீத்தோட்டத்தில் ஓடும் பி.டி. உஷாவா (கண்ணன் தேவன் டீ), அல்லது தபலா வாசிக்கும் ஜாகீர் ஹூசேனா (தாஜ் மஹல் டீ) என்றெல்லாம் நிர்ணயிப்பது இவர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இதில் ஒரு பெரிய வித்தியாசம், இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை.  ஒரு விளம்பரம் முக்கியமான மொழிகள் அத்தனையிலும் வருவது நலம் - அது செலவையும் குறைக்கும், இந்தியா முழுவதும் டீயை விற்க உதவும்.  இந்த மாதிரி ஒரு பிரச்சனை அனேகமாக மற்ற நாடுகளில் கிடையாது.  பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்க உதவுமாறு ஒரு சிறு கவிதை எழுதுவது ரொம்பவும் கஷ்டம்.  இதற்காகவே இந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமயத்தில் சில விளம்பரங்கள் ஒரு மொழியில் மட்டும் பிரபலமாவதும் உண்டு.  இதில் எனக்குப் பிடித்த ஒரு விளம்பரக் கவிதை:&lt;br /&gt;&lt;br /&gt;Dip – Dip&lt;br /&gt;Add the Sugar; and the milk &lt;br /&gt;And its ready to sip&lt;br /&gt;Do you want it stronger? Dip a little longer&lt;br /&gt;Dip – Dip – Dip &lt;br /&gt;And its ready to sip&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குப் பிடித்த டீ விளம்பரங்களை பின்னூட்டமிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பதிவுகள்&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/11.html"&gt;தேநீர் – 11&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/10.html"&gt;தேநீர் – 10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/9.html"&gt;தேநீர் – 9&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/8.html"&gt;தேநீர் – 8&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/7.html"&gt;தேநீர் – 7&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/6.html"&gt;தேநீர் – 6&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/5.html"&gt;தேநீர் – 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/4.html"&gt;தேநீர் – 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/3.html"&gt;தேநீர் – 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/2.html"&gt;தேநீர் – 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/1.html"&gt;தேநீர் – 1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-116488829117045956?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/116488829117045956/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=116488829117045956' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116488829117045956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116488829117045956'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2006/12/12.html' title='தேநீர் – 12'/><author><name>ரங்கா - Ranga</name><uri>http://www.blogger.com/profile/13239952029231528768</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13220802.post-116422894473615378</id><published>2006-11-29T23:20:00.000-05:00</published><updated>2006-11-29T23:37:48.146-05:00</updated><title type='text'>தேநீர் – 11</title><content type='html'>தொழிற்சாலையில் இருந்து மொத்த வினியோகஸ்தர்களுக்கு பொட்டலங்களை அனுப்புவதும் ஒரு கலை தான்.  இதில் இருப்பவர்களை தூங்க விடாமல் பயமுறுத்தும் விஷயம் ஒன்றுதான்: போக்குவரத்து நிறுத்தம் (TRANSPORT STRIKE).  இதைத் தவிர இவர்கள் கவலைப்படுவது பொட்டல இருப்புக்கு மட்டும்தான்.  ஆனால் முதன் முதலாக இந்தப் பிரிவில் தொழில் கற்ற பொழுது நான் நிரம்பவும் யோசித்து ஆச்சரியமாகப் பார்த்தது இவர்கள் ஒரு வண்டிக்கு (சின்ன லாரி, டிரக், பெரிய லாரி என்று பல வகை உண்டு) தகுந்த மாதிரி எத்தனை விதமான பொட்டலங்களை அனுப்ப முடியும் என்று வெகு எளிதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த வழியாகப் போனால் அதிகமான மொத்த வினியோகஸ்தர்களை குறைந்த தூரத்தில், சீக்கிரமாக அடையலாம் என்றும் சொன்னதுதான்.  கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலையில் பொட்டலங்களை அட்டை டப்பாவில் போட்டுத்தான் (CARTONS) அனுப்புவார்கள்.  இந்த அட்டை டப்பாக்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது – உயரம், அகலம், நீளம் எல்லாமே வெவ்வேறு வகை.  ஒவ்வொரு வண்டிக்கும் சில குணங்கள் உண்டு.  இத்தனை உயரத்துக்கு மேல் போகக் கூடாது; இத்தனை எடைக்கு மேல் போகக் கூடாது என்றெல்லாம் விதிகள் உண்டு.  ஒரு மொத்த வினியொகஸ்தர் கேட்கும் வகைகள் இந்தமாதிரி அட்டை டப்பா கணக்கில் தான் இருக்கும்.  இதில் பெரிய வினியொகஸ்தர்கள் சமயத்தில் ஒரு லாரி டீ கேட்பார்கள். அது ரொம்ப சுலபம்; ஏற்றி அனுப்ப வேண்டியதுதான்.  ஆனால் அதிகபட்சமான ‘தேவை சீட்டுகள்’ (DEMAND SHEETS) கால் வண்டி, அரை வண்டிதான் வரும்.  குறைந்த செலவில் இதை அனுப்ப வேண்டுமென்றால், இரண்டு, மூன்று வினியொகஸ்தர்களுக்கான டீயை ஒரு பெரிய வண்டியில் அனுப்பி, ஒவ்வொரு இடத்திலும் அவர்களுக்கு வேண்டியதை இறக்கிவிடுமாறு பார்த்துக் கொள்வது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்க எளிதாக இருந்தாலும், செய்வது அவ்வளவு சுலபமாக இதை செய்ய முடியாது. எந்த வினியொகஸ்தர்களுக்கு முதலில் அனுப்புவது, இரண்டாவது எங்கே?  போன்ற கேள்விகளுக்கு விடை தேவை.  இதைப் பொறுத்து வண்ண்டியில் டீயை ஏற்ற வேண்டும்.  கடைசியாக நிறுத்தும் இடத்திற்கான பொட்டலங்களை முதலில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் முதல் இடத்தில் உள்ள பொட்டலங்களை இலகுவாக இறக்கலாம்.  ஓவ்வொரு இடத்திலும், தேவையில்லாமல் அட்டைப் பெட்டிகளை இறக்கி ஏற்றினால் செலவும் அதிகம், நேரமும் விரயம்.  டீசல் விற்ற (விற்கிற) விலையில் செல்லும் வழியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், செலவைக் குறைக்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அத்தனை வினியோகஸ்தர்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது.  எதையாவது குறைக்க நேரிடும்.  அவர்கள் கேட்கின்ற வகை இருப்பில் இருக்காது; இரண்டு நாள் கழித்துத்தான் பொட்டலம் போடுவதாக திட்டம் இருக்கும்.  அல்லது வண்டியின் உயரத்தாலோ, அல்லது எடையாலோ சில டப்பாக்களை ஏற்ற முடியாமல் போகலாம்.  எதை விடுப்பது அல்லது எடுப்பது என்ற முடிவும் அவ்வளவு சுலபமானதல்ல.  விற்பனைப் பிரிவைப் பொறுத்தவரை எதையுமே விட முடியாது.  டீ இருப்பில்லை என்று சொல்வது பொட்டலப் பிரிவுக்கு பிடிக்காது.  இந்த அனுப்பும் பிரிவில் இருப்பவர்களுக்கு உயரத்தாலோ, எடையாலோ அனுப்ப முடியவில்லை என்று சொல்லப் பிடிக்காது.  காரணம் அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தன்மானப் பிரச்சனை - வண்டியைத் தேர்வு செய்வது அவர்கள் கையில்தானே இருக்கிறது.  மற்றவர்கள் அவர்களைக் கேட்கலாமே 'ஏன் பெரிய வண்டியை எடுக்கவில்லை?' என்று!  ஆகையால் வண்டியின் அளவு சரியில்லை என்று சொல்ல மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையும் ஒரு மாதிரி சமாளித்து அனுப்ப நினைக்கையில் அவர்களுக்கு அதிகம் வெறுப்பேற்றும் விஷயம் - ஆலையில் உள்ள கணக்கர்கள்.  அவர்கள் இந்தப் பயணத்துக்கு தேவையான சீட்டு மற்றும் இதர ஆவணங்களைப் பெற்றுத்தான் வண்டியை அனுப்ப வேண்டும்.  இல்லையென்றால் ஏதாவதொரு செக் போஸ்டில் வண்டியை நிறுத்திவிடுவார்கள்; சேதம் அதிகமாகி விடும்.  வண்டியில் எந்த டப்பாவை ஏற்றுவது என்ற முடிவை சரியான நேரத்துக்குள் தெரிவிக்கவில்லை என்றால் கணக்கர்கள் வீட்டுக்கு சென்றுவிட வாய்ப்பு உண்டு.  இதுவும் ஒரு பிரச்சனை.  &lt;br /&gt;&lt;br /&gt;'ஏன் வண்டி வரவில்லை' என்று தொலைபேசியில் கத்தும் விற்பனைப் பிரிவு, 'வண்டியில் ஏற்ற சில வகைகள் இன்னமும் தயாரில்லை' என்று சொல்லும் பொட்டலப் பிரிவு, 'வண்டியில் என்ன ஏற்றப்போகிறாய்? நான் வீட்டுக்குப் போக வேண்டாமா?' என்று கோபிக்கும் கணக்கர், இவர்களுக்கிடையே, வண்டியின் உயரம்/கொள்ளளவு பற்றியும், போகும் வழி பற்றியும் யோசித்து 95% சரியான சமயத்திற்குள் டீயை அனுப்பும் இந்தப் பிரிவில் உள்ளவர்களையும் நான் மதிப்போடுதான் பார்த்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய பதிவுகள்&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/10.html"&gt;தேநீர் – 10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/9.html"&gt;தேநீர் – 9&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/8.html"&gt;தேநீர் – 8&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/7.html"&gt;தேநீர் – 7&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/6.html"&gt;தேநீர் – 6&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/5.html"&gt;தேநீர் – 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/4.html"&gt;தேநீர் – 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/3.html"&gt;தேநீர் – 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/2.html"&gt;தேநீர் – 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=" http://pranganathan.blogspot.com/2006/11/1.html"&gt;தேநீர் – 1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13220802-116422894473615378?l=pranganathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pranganathan.blogspot.com/feeds/116422894473615378/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13220802&amp;postID=116422894473615378' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116422894473615378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13220802/posts/default/116422894473615378'/><link rel='alternate' type='text/html' href='http://pranganathan.blogspot.com/2006/11/11.html' title='தேநீர் – 11'/><autho
